-
நினைப்போம்.மகிழ்வோம்-86
"ஆலயமணி."
"சட்டி சுட்டதடா" பாடல்.
வாழ்க்கையில் பட்டுத் தெளிந்த
மனச்சூழல்.
அலைகள் ஆக்ரோஷமாய் மோதும் ஓர் உயரப் பாறையில்
இருக்கை.
உரக்கப் பாடும் தத்துவம்.
"எறும்புத் தோலை உரித்துப்
பார்க்க யானை வந்ததடா."
-என்று பாடும் போது, ஞானம்
பெற்று விட்டதின் அடையாளமாய் கைகொட்டிச்
சிரிக்கும் பாவனை.
-
-
-
-
-
-
-
-
-
நினைப்போம்.மகிழ்வோம்-87
"திரிசூலம்."
நீண்ட காலத்திற்குப் பிறகு,
தான் விட்டுப் பிரிந்த மனைவியுடன் தொலைபேசியில் பேசுகிற
வாய்ப்புக் கிடைத்து பேசிக்
கொண்டிருக்கையில், மனைவி
வெகுகாலத்திற்குப் பிறகு
பேசுகிற ஏக்கத்தில் "என்னாங்க" என்க, அழுகையும், சிரிப்புமாய்க்
கேட்பாரே...
"என்னம்மா?"