-
#புரட்சித்தலைவர்னா #யாரு???
சுதந்திரப் போராட்டத் தியாகி கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்னும் "ஜீவா" அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக அறிந்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு மழைநாளில் எம்ஜிஆர், ஜீவாவைக் காண அவரது குடிசைக்குள் நுழைந்தார்.
தாமரை ஏட்டிற்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருந்த ஜீவா, எம்ஜிஆரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியுற்று, வரவேற்று ஒரு பாயில் அமரவைத்தார்.
குடிசையின் கோலத்தைக் கண்டு எம்ஜிஆர் மனமுருகிவிட்டார்...
"இன்னும் எத்தனை நாட்கள் இப்படி துயரப்படப்போகிறீர்கள்? ஒரு சிறிய வீடாவது கட்டித் தருகிறேனே..."
என்றார் எம்ஜிஆர்...
"இங்குள்ள புத்தகங்களைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு ஒரு வீடு வேண்டும். ஆனால் எல்லோருக்கும் வீடு வரும்போது நாமும் கட்டுவோம்..." என்றார் ஜீவா. ஆனால் எம்ஜிஆர் விடுவதாக இல்லை..
அதற்கு ஜீவா..."எங்கள் கட்சியைக் கலந்து கொண்டு சொல்கிறேன்" என்று கூறிவிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஜீவாவின் கோரிக்கையைப் பரிசீலித்து...
"ஜீவாவிற்காக நாம் எதுவும் செய்யமுடிவதில்லை. அதனால் எம்ஜிஆர் செய்வதைத் தடுக்கவேண்டாம்" என்று அனுமதியளித்தது. புரட்சித்தலைவரா? அப்படின்னா யார் என கூறித் திரியும் எதிரிகளுக்கு பதிலாக இது ஒன்று போதாதா?
தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, பல சிம்மாசனங்கள் சிதறுண்டு விட்டன. ஆனால்,ஜீவாவிற்காக புரட்சித்தலைவர் கட்டித்தந்த வீடு இன்னமும் தாம்பரத்தில் உயர்ந்து நிற்கிறது...
ஜீவாவின் மனதில் ஒரு விஷயம் நிழலாடிக்கொண்டேயிருந்தது. தனது நண்பர் செல்வராஜிடம் அடிக்கடி உருகிக் கூறுவார்...
"இதோ, நானும் நகம் முளைத்த நாள் முதலாய், உள்ளங்கால் தேய்ந்தது தான் மிச்சம். ஜெயில் இல்லையேல் ரயில் என்றாகிவிட்டது என் வாழ்க்கை. எனக்கென்று ஒரு வீடு கட்டித்தரவேண்டும் என்று எவராவது நினைத்தார்களா ???"
"அந்த எண்ணம் எம்ஜிஆருக்குத் தானே ஏற்பட்டது..."........... Thanks...
-
1967. ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி.மு.க முதல் முதலாக புரட்சித் தலைவர் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது என்பது எல்லோரும் அறிந்தது
அண்ணா ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களில் முதன்மையான திட்டம் சிறு சேமிப்பு திட்டம்
இத்திட்டம் கொண்டுவந்தபோது பல்வேறு தலைவர்கள் ஆதரவு தந்தனர் அண்ணாவை புகழ்ந்தனர் அவரவர் கருத்துக்கள் கூறினர்
புரட்சித்தலைவர் வெளிபுறப்படப்பிடிப்பில் இருந்ததால் அவர் கருத்தை அறிய பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர்
படப்பிடிப்பு முடிந்து விமான நிலையம் வந்த புரட்சித்தலைவரை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துக்கொண்டு சிறு சேமிப்பு திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன அதன் விளக்கம் என்ன என்று??? கேட்டனர்?
கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களைப்பார்த்து புரட்சித்தலைவர் கேட்டார்
உங்களில் யாருக்காவது எதாவது தீய பழக்கம் உண்டா என்று கேட்டார்?
ஒருபத்திரிக்கையாளர் எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு என்றார்
உடனே புரட்சித்தலைவர் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பிர்கள் என்றார்.?
பத்திரிகையாளர் ....ஒரு பாக்கெட் அல்லது 12 சிகரெட் என்றார்
அதற்கு புரட்சித் தலைவர் கூறினார் அதிலே பாதி பாக்கெட் பயன்படுத்துங்கள்
மீதி பாதி பாக்கெட் சிகரெட் பணத்தை சிறுசேமிப்பில் சேர்த்து வையுங்கள்
இதனால் உங்களுக்கு இரண்டு வகையில் நன்மை
ஒன்று சிகரெட் பழக்கம் குறையும் சேமிப்பு சேரும்
மற்றொன்று உடல் ஆரோக்கியம் ஆகும் சேமிப்பு பணம் பிறர்க்கு தருமம் செய்யலாம் நீங்கள் இதைசெய்தால் உங்களை.பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவார்கள் என்று கேள்வி கேட்ட பத்திரிக்கையார் மூலம் பதிலளித்தார்.
இதை கேட்டவுடன் சுற்றியிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் கைத்தட்டினர் இதைவிட சிறுசேமிப்புக்கு தெளிவாக விளக்கம் சொல்லமுடியாது என்று கூறி பாரட்டினர்
இதுவே மறுநாள் பல பத்திரிகையில் சிறுசேமிப்புக்கு எம். ஜி. ஆர் தந்த.விளக்கம்
என்று தலைப்பு செய்தியாக வந்தது
சட்டசபையில் இதே விளக்கத்தை அண்ணா கூறி புரட்சித்தலைவரைப்பாரட்டினார்
எல்லோரும் என்னை புகழ்ந்தார்கள் சிறுசேமிப்பு திட்டத்தை வரவேற்றார்கள் தவிர
யாரும் அதற்கு தெளிவாக விளக்கம் கூறவில்லை ஆனால் நேற்று எம். ஜி. ஆர் அவர்கள் தந்த விளக்கம் பத்திரிகையாளர்களையே மெய் சிலிக்க. வைத்தது இதை விட தெளிவான விளக்கம் தேவையில்லை என்று கூறி பாரட்டினார்............. Thanks...
-
��☘��☘��☘��☘��☘��☘
*��மலரும் நினைவுகள்....*
*மற்றவர்களுக்கு உதவு..*
*மகிழ்ச்சி தானாகவே வரும்..!!*
*விகடன் : -*
உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி
வாரி வாரி வழங்கிக் கிட்டே இருக்கீங்களே,
அதற்கு என்ன காரணம்?
*எம்.ஜி.ஆர் :-*
சொத்துக்கள் கடைசி வரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன்முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன்.
என்னை விட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது.
ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?
அது மாத்திரமல்ல.
இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்தது தானே? அவர்கள் தந்ததிலிருந்து தான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக் கூடிய மகிழ்ச்சியை விட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.
*- விகடன் பொக்கிஷம்*.......... Thanks...
-
இனிய காலை வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
#திருமணம்_அழைப்பு
எம்.ஜி.ஆர் தன் அண்ணனுடன் வாழ்ந்தபோது யாராவது திருமணம் என்று அழைப்பு வைத்தால் அவர் தன் அண்ணனிடம் பணத்தைக் கொடுத்து அவர் கையால் பெற்றுக்கொள்ளுங்கள் என்பார். அவர் உள்ளேயே இருந்துவிடுவார். அண்ணன் சக்ரபாணி வந்து பணம் கொடுப்பார். நடிகர் சந்திர பாபு துணை இயக்குநர் இடிச்ச புளி செல்வராஜ் வசனகர்த்தா ரவீந்தர் போன்றோர் எம்.ஜி.ஆர் கையால் பெற முடியவில்லையே என்று வருந்தியதுண்டு. அதற்கு எம்.ஜி.ஆர் எனக்குப் பிள்ளையில்லை. என் அண்ணன் பிள்ளைகுட்டிக்காரர் அதனால் அவர் கையால் உனக்குத் தருகிறேன் என்று சமாதானம் சொல்வார். தனக்குப் பிள்ளையில்லாவிட்டாலும் தன்னைத் திருமணத்துக்கு அழைப்பவர்கள் பிள்ளை பாக்கியம் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்கு இருந்தது.
நிஜத்திலும் படத்திலும் எம்.ஜி.ஆருக்கு நல்ல பழக்க வழக்கங்களும் நல்ல எண்ணமும் இருந்ததால் அவரை இன்று வரை மக்கள் மறக்காமல் நினைவில் வைத்துப் போற்றுகின்றனர்....... Thanks...
-
உலகையே உலுக்கும் கொரோனா தொற்று காலத்தில் வீட்டை விட்டே வெளியில் வரக்கூடாது என்கிற நிலை. வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துவிடலாம். ஆனால் பசி. அதற்கு வழி. பிதுங்குமா இல்லையா விழி..?
அந்த பிதுங்கும் விழிகளுக்கு வழி சொல்லியிருக்கிறது நம்ம ரேஷன் கடைகள். மொத்தம் கிட்டத்தட்ட 35000 நியாயவிலை கடைகள். ஏழு கோடி தமிழ்மக்கள். கிட்டத்தட்ட 2 கோடி ரேஷன் அட்டைகள்.
நம்ப முடிகிறதா இப்படிப்பட்ட சூழலை இன்றைய அரசு இலகுவாக சமாளிக்கக் காரணம் ஒரு மாமனிதன். அம்மாமனிதனின் தொலைநோக்கு பார்வை. அந்த மனிதனின் பசியறிந்த மனசு.
யார் அவர்..?
ஆம். புரட்சித்தலைவர் எம்ஜியார்.
இந்த சினிமாரக்காரனுக்கு என்ன தெரியும் நிர்வாகம் பற்றி..? அந்தாளு கூட ஒரு நூறு விசிலடிச்சான் குஞ்சுகள் சுத்திகிட்டு திரியுவானுக அவனுகளுக்குலாம் அரசு நிர்வாகம் ன்னா என்னான்னு தெரியுமா..? அதுவுமில்லாம அந்த நடிகன் கூட இருப்பவனெல்லாம் படிக்காத ஆட்கள். இதுகளை லாம் வச்சிக்கிட்டு இந்தாளு எண்ணத்தப் பண்ணிடுவான்னு பார்த்திடுவோம்.
இப்படி எல்லாம் விமர்சனத்துக்கு உள்ளானவர் வேறுயாருமல்ல நம்ம மக்கள் திலகம் எம்ஜியார் தான்.
அப்படிப்பட்டவர் தான், 1980 இல் ஒரே ஒரு கையெழுத்தில் 22000 கடைகளை திறந்தார். இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு கடை என்பதை இலக்காக கொண்டு இந்த structure ஐ மிகச்சிறப்பாக உருவாக்கி, அவசர காலத்திற்கு தமிழனுக்கு உணவாக்கிய, உன்னதமான மனசு நம் தலைவருடையது.
அது மட்டுமா தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் PHC மருத்துவமனைகளை ஏற்படுத்திய சாதனைகளுக்கும் சொந்தக்காரரும் அவரே.
சுமார் 40 ஆண்டுகாலத்திற்கு முன்பே இதன் முக்கியத்துவம் அறிந்து செயலாற்றியவர்
மக்கள் திலகம். அதனால் தான் அவர் மக்களின் திலகம்.......... Thanks...
-
எம்ஜிஆர் பக்தர்களே
1974 ஆம் ஆண்டு நடந்த அற்புதம்
அண்ணன் சிவாஜி அவர்களின் அதிகபடங்களுக்கு கதைவசனம் எழுதிய வர்
A.L.நாராயணன்
இவர் MGR அவர்கள் நடித்த அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில்
உதவி வசனகர்த்தாவாக அறிமுகமானவர்
A.L. நாராயணன் எழுதி வெளியிட்ட
அவர்வாழ்க்கை வரலாறு புஸ்தகத்தில்
இந்த செய்தி வந்துள்ளது
இந்த செய்தியை நம்பாதவர்கள்
இப்போது உயிரோடு உள்ள
A.L.நாராயணனிடம் கேட்டுக்கொள்ளவும்
/////////////////////////////////////////////$$$$/////
நான் வசனம் எழுதியபடம் ஒன்று சத்தியாஸ்டுடியோவில் படம்எடுத்துக்கொண்டுஇருந்தனர்
ஆகவேநான் அங்கு சென்றுஇருந்தேன் .
MGR அவர்கள் கட்சி ஆரம்பித்த புதிது
வெளியூர் சென்று கூட்டத்தில் பேசிவிட்டு
அன்று சத்தியா ஸ்டுடியோ வந்திருந்தார்
இதையறிந்த நான்
MGR அவர்களைசந்திக்க. அவருடைய அறைக்குசென்று அவருடன் பேசிக்கொண்டுஇருந்தேன்
அப்போது வெளியூரில் இருந்து வந்த தந்தையும் மகனும்
MGR அவர்களை சந்தித்தார்கள்
தந்தைஅவர்கள் எம்ஜிஆர் அவர்களிடம் என்னுடைய மகன் அதிகமார்க் எடுத்துள்ளான்
மெடிக்கல் காலேஜில் இவனுக்கு இடம்தரமறுக்கிறார்கள் /
ஆகவே நீங்கள் என்மகனுக்கு டாக்டர் சீட் வாங்கித்தரவும்
என்று கூறினார்/
அதற்கு MGR அவர்கள் மெடிக்கல்காலேஜில்
சீட்கிடைத்தாலும் 5 வருடம் ஹாஸ்டலில்
தங்கி படிக்க வேண்டும் அதற்கு சில லட்சம்
செலவு ஆகும் பணத்திற்க்கு என்ன. செய்வீர்கள்என்றுகேட்டார் அதற்கு அந்த தந்தை எங்களுக்கு ஒருவீடுஉள்ளது
அதைவிற்றும் கடனை வாங்கியும்படிக்க வைக்கிறேன் என்று கூறினார்
பிறகு MGR அவர்கள் அந்த மாணவனின்
மார்க்லிஸ்டைப்பார்த்தார் பிறகு பல மெடிக்கல்கல்லூரிக்கு போண்செய்தார்
கடைசியில் அந்த மாணவனுக்கு சீட்
கிடைத்துவிட்டது இதை அறிந்த மாணவனும் / தந்தையும் MGR அவர்களுக்கு
நன்றி சொல்லிவிட்டு அறையைவிட்டுவெளியேரினார்கள்
உடனே MGR அவர்கள் சத்யாஸ்டுடியோ முன் கேட்டில் உள்ள காவலாளியை
இண்டர்காம்போண் மூலம் அழைத்து
தந்தையும் மகனும் வெளியே வருகிறார்கள்
அவர்களிடம் நான் சொல்லுகின்ற செய்தியைசொல்லிவிடுங்கள்
இந்த மாணவனின் 5 வருட மெடிக்கல் காலேஜின் / புஸ்தக சிலவு சாப்பாட்டு சிலவு
ஹாஸ்டல்பீஸ் அனைத்தையும்
MGR அவர்கள்
ஏற்றுக்கொண்டார்என்று சொல்லிவிடுங்கள் இதைகேட்டவுடன்
என்னைசந்தித்து நன்றிசொல்ல என்னிடம் அவர்கள் வருவார்கள்
அவர்களை என்னிடம் வர விட வேண்டாம்
அவர்களிடம் உங்கள் மகன்
டாக்டரானவுடன் வந்து MGR பார்க்க சொன்னார் ஆகவே நீங்கள் உங்கள் ஊருக்கு
செல்லுங்கள் என்று சொல்லிவிடவும் எண்று
MGR கூறினார்
இதைக்கேட்டவுடன் நான்
அசந்துவிட்டேன்
இதனால்தான் தமிழ்
நாட்டுமக்கள்இவரை தெய்வமாக நினைத்து
முதலமைச்சர்பதவியில் அமர்த்தினார்கள்
இவ்வாறு AL நாராயணன் எழுதிஉள்ளார்....... Thanks.........
-
திரை உலகில் எல்லா தரப்பினராலும் ரசிக்கப்பட்ட நாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
எம்ஜிஆர் படங்கள் என்றாலே முதலில் அவருடைய பாடல்கள் .
எம்ஜிஆரின் புதுமையான சண்டை காட்சிகள் .
எம்ஜிஆரின் இனிமையான காதல் காட்சிகள் .
எம்ஜிஆரின் மாறு பட்ட நடிப்பு.
எம்ஜிஆரின் அறிவுரை காட்சிகள்.
எம்ஜிஆர் படம் என்றால் பொழுது போக்கு படமாகவும் , மக்களின் மன மகிழ் படமாகவும் சமுதாய சீர்திருத்த படமாகவும் இருந்தது .
எம்ஜிஆரின் கொள்கை - பிரகடனங்கள் .
1947 முதல் 1978 வரை வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களை எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டுமன்றி எல்லா கட்சியினரும் , பெண்களும் பார்த்து மகிழ்ந்தனர் .
எம்ஜிஆர் படங்களுக்கு repeated audience ஏராளம் . எனவேதான் அவருடைய பல படங்கள் மறு வெளியீட்டில் மகத்தான சாதனைகள் நிகழ்த்தியது .
எம்ஜிஆரின் சினிமா - அரசியல் வெற்றிகளை ஏற்று கொள்ள முடியாதவர்களின் வாதங்கள் எம்ஜிஆர் என்ற பிம்பத்தின் முன் மங்கி விட்டது .
எம்ஜிஆரின் செல்வாக்கு - புகழ் இரண்டையும் சரியாக பயன் படுத்தி கொண்டு வெற்றி பெற்றவர்கள்காங்கிரஸ் முதலாளிகள் .அவரை வைத்து படம் எடுத்து வெற்றி பெற்றர்கள்.கட்சியில் கூட்டு வைத்தும் வெற்றி பெற்றார்கள் .
தோல்விகளுக்கு ஆயிரம் கரணங்கள் கூறலாம் . வெற்றிக்கு ஒரே காரணம் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் ...... Thanks...
-
எங்களையும் நல்வழிக்கு திருப்பிய நாடோடி மன்னனே - வாழ்க உங்கள் புகழ்
சமீபத்தில் "நாடாளுமன்றத்தில் வைகோ"என்ற நூலைப் படித்தபோது,
முதலமைச்சராக இருந்தபடி எம்.ஜி.ஆர்.எடுத்த ஒரு முக்கிய நிலைப்பாட்டை நூலாசிரியர் திரு.மு.செந்திலதிபன் மிக செறிவாகப்
பதிவு செய்திருப்பதைப் பார்த்தேன்.
இராமேஸ்வரத்திலிருந்து ஈழத்திற்கு ஆயிரம் இளைஞர்களுடன் படகில்
செல்லப்போவதாய் திரு.பழ.நெடுமாறன் அறிவித்தார். அவர் புறப்படும்
இடத்தில் கைதாவார் என்றும் இராமேஸ்வரத்தில் கைதாவார் என்றும்
வதந்திகள் உலவின. இராமேஸ்வரம் கடற்கரைக்கு நெடுமாறன் குழுவினர்
சென்று நின்றபோது கரையில் ஒரு படகைக்கூட காணோம். போராட்டக்
குழுவினர் திரும்ப நேர்ந்தது.
இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தபோது எம்.ஜி.ஆர் தந்த
பதில் இது: " அன்னை இந்திராகாந்திக்கு ஓர் ஆபத்து நேர்ந்தபோது,
அவர் உயிரைக் காத்தவர் மாவீரர் நெடுமாறன்.ஆனால் கடலில் போகும்
வேளையில் அவர் உயிருக்குப் பாதுகாப்பு உண்டா?எதிரிகள் வந்து சுட்டால் அவரால் தன்னை தற்காத்துக் கொள்ள முடியுமா? ஒரு நெடுமாறனை இழந்தால் இன்னொரு நெடுமாறனை உருவாக்க முடியுமா?
அதனால்தான் படகுகளை அப்புறப்படுத்தச் சொன்னேன்.
ஆனால் மக்கள் நடுவே இனவுணர்வை மேம்படுத்த அவர் செய்து வரும்
பிரச்சாரம் விலைமதிப்பில்லாதது.ஒரு முதலமைச்சராக இருப்பதால் நான்
செய்ய முடியாத பிரச்சாரத்தை அவர் செய்கிறார். எனவே அவரைக் கைது
செய்ய வேண்டாமென்று சொன்னேன்"என்றாராம் எம்.ஜி.ஆர்.
படகோட்டிகளை அப்புறப்படுத்தியதிலும் அந்தப் படகோட்டி
வித்தியாசமாகத்தான் சிந்தித்திருக்கிறார்.
தமிழக அரசியலில் மறக்க முடியாத எழுத்தாளர் சோலை!- சில நினைவுகள்
எம்ஜிஆருடன் அறிமுகம்
நிலம் பற்றிய சோலையின் கட்டுரை ஒன்று ஜீவானந்தம் அவர்களை வெகுவாக கவர்ந்தது. ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட் கோட்பாடுகளின் ஈடுபாடினால் அமரர் ஜீவானந்தம் அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஜீவானந்தம் எளிமையானவர் என்பது ஊரறிந்த ஒன்று. அவருடன் பழைய தாம்பரத்தில் ஒரு ஓலை குடிசையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு முறை அமரர் எம்.ஜி.ஆர்., ஜீவானந்தம் அவர்களைச் சந்திக்க வந்தபோது, சோலையை யாரென கேட்டறிந்தார்.
ஜீவானந்தம் மறைந்த பின், உதவியாளரை அனுப்பி சோலையை அழைத்து வரச் சொன்னார். திருசெந்தூர் தேர்தலுக்கு ஒரு வேனில் பயணிக்கும்பொழுது, எம்.ஜி.ஆர்., சோலையின் கையைப் பிடித்து, "கடைசி வரை என்னுடன் இருப்பாயா?" என கேட்டார். பல முறை அரசியலில் இக்கட்டான சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் சோலைதான்.
எம்ஜிஆரின் பெருந்தன்மை
எம்.ஜி.ஆர். அவர்கள் அண்ணா பத்திரிகை ஆரம்பிக்க முடிவு செய்து, அண்ணா பத்திரிக்கை விளம்பரத்தில் ஆசிரியர் சோலை என வெளிவந்தது. விளம்பரத்தை எடுத்துக்கொண்டு நேராக எம்.ஜி.ஆர். அவர்களிடம் சென்று, ஆசிரியர் என உங்கள் பெயர் போடுவதுதானே சரி என கேட்டார் . அதற்கு எம்.ஜி.ஆர்.,"வாசகர்களுக்கு எம்.ஜி.ஆர்.ஐ விட சோலைதான் நம்பிக்கையான பத்திரிகையாளர்" என கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். அவர்களின் கையில் இருந்த காகிதத்தை வாங்கி, ஆசிரியர் எம்.ஜி.ஆர்., துணை ஆசிரியர் சோலை என எழுதி கொடுத்துவிட்டு சென்றார். அனால் விளம்பரத்தில் துணை ஆசிரியருக்குப் பதில் இணையாசிரியர் சோலை என்றே போடச் சொன்னார் எம்ஜிஆர்.
வினோபா பாவேயின் சீடருக்காக
எண்பதுகளின் துவக்கத்தில், காந்தியவாதி வினோபா பாவே பூதான இயக்க தமிழக வாரிசு ஜெகநாதன் அவர்களின் குரல் நக்சல் இயக்கத்திற்கு ஆதரவானது என கருதி தருமபுரி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டார். இதை கேள்விப்பட்ட எனது அப்பா, எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்திக்க ஆற்காடு முதலி சாலைக்குச் சென்றார். எப்பொழுது வேண்டுமானாலும் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்கக்கூடிய நபராக இருந்தாலும் முன் அழைப்பு இல்லாமல் அதற்கு முன் வரை சென்றதில்லை. ‘‘அறவழியில் யாத்திரை சென்ற ஒரு காந்தியவாதி தாக்கப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதல் உங்கள் மீதும், உங்கள் ஆட்சியின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிகையை தகர்க்கும்,'' என தன் உள்ளக் குமுறலை வெளிபடுத்தினார்.
சோலையின் மற்றுமொரு முகத்தை கண்ட எம்.ஜி.ஆர். சாப்பிடக் கூட மனமின்றி அடுத்த நாளே தருமபுரியில் இருந்த அதிகாரிகள் அத்தனை பேரையும் வரவழைத்து காந்தியவாதி ஜெகநாதன் அவர்களை அழைத்து அடையாளம் காட்டச்சொன்னார். ஆனால் ஜெகநாதன் அவர்களோ, "நடவடிக்கை வேண்டாம், எச்சரிக்கை செய்து அனுப்பிவிடுங்கள்" என கூறியுள்ளார். ஏனெனில் அடித்த அதிகாரி, ஜெகநாதன் அவர்களின் உதவியால் படித்து முன்னுக்கு வந்தவர் என்ற தகவலையும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் பகிர்ந்து கொண்டார். அய்யா ஜெகநாதன் அவர்களின் துணைவியார் கிருஷ்ணம்மாள் அவர்களுக்கு சமீபத்தில் விஜய் தொலைகாட்சி "சிறந்த பெண்மணி" விருது கொடுத்து கௌரவித்தது.
எம்ஜிஆர் தந்த வீடு
ஒரு முறை எம்.ஜி.ஆர். எனது தந்தையை அழைத்து பெரியகுளம் தொகுதி தேர்தலில் நிற்கச் சொல்லி வற்புறுத்தியும் திட்டவட்டமாக மறுத்து, அவர் நண்பருக்கு அந்த தொகுதியைப் பரிந்துரை செய்ய, அந் நண்பரும் அத்தேர்தலில் வெற்றி கண்டார்.
அப்பாவுக்கு சொந்த ஊரில் வீடு இல்லை என அறிந்த எம்.ஜி.ஆர், பொருளுதவி செய்து, புதுமனை புகுவிழாவிற்கு தனது அமைச்சர்கள் புடை சூழ வந்து வாழ்த்தினார்.
எங்களது குடும்ப நபர்கள் சென்னையில் இருத்த சமயம் என்பதால், அந்த விழாவிற்கு, அவ்வூரிலிருந்த தனது தங்கையை தவிர யாருக்கும் தெரிவிக்க வில்லை. நானோ எனது உடன் பிறந்தவர்கள் யாரும் அந்த நிகழ்வில் பங்கேற்க வில்லை. எத்தனையோ அரசியல் பிரமுகர்கள் அவரைச் சந்திக்க வந்ததுண்டு , அனால் குடும்பதினர் யாரையும் எந்த ஒரு அரசியல் பிரமுகருக்கும் அறிமுகப்படுத்தியது இல்லை என் தந்தை. வார்டு கவுன்சிலர்கூட தனது அதிகார வட்டத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரத்தை பயன்படுத்தும் சூழ்நிலையில், தனது செல்வாக்கை தானும் பயன்படுத்தியதில்லை, தனது குடும்பத்தினரையும் பயன்படுத்த அனுமதித்ததில்லை.
அ தி மு க முதன் முதலில் ஆட்சி அமைத்த மாநிலம் தமிழகம் கிடையாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ?
அ தி மு க வின் முதல் முதல்வர் மக்கள் திலகம் கிடையாது , அதன் முதல் முதல்வரின் பெயர் எஸ் . ராமசாமி .
ஆமாம் , அ தி மு க தோன்றிய , பின்னர் , முதன் முதலில் ஆட்சி அமைத்தது புதுச்சேரியில் தான் 1973 ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது , அதில் கட்சி துவங்கி 1 வருடம் கூட நிறைவு செய்யாத அ தி மு க வும் போட்டியிட்டது ,
அப்பொழுது அந்தத் தேர்தலில் , புதுச்சேரியின் 30 சட்ட மன்றத் தொகுதிகளில் 12 இடங்களை அ தி மு க பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது , எனினும் ஆட்சி அமைக்க அதற்கு பிற கட்சிகளின் ஆதரவு தேவைப் பட்டது . அங்கே இந்திரா காங்கிரசுக்கு 7 இடங்களும் , ஸ்தாபன காங்கிரசுக்கு 5 இடங்களும் , இந்திய கம்மியூனிஸ்ட் கட்சியும் தி மு க வும் தலா 2 தொகுதிகளும் , மார்க்சிஸ்ட் கம்மியூனிஸ்ட் 1 தொகுதியும் , தி மு க ஆதரவு சுயேச்சை 1 தொகுதியும் என்று முடிவுகள் அமைந்தது .
இந்தியா கம்மியூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்ம்யூநிஸ்ட் கட்சிகளின் ஆதரவை எடுத்துக் கொண்டாலும் கூட 15 இடங்கள் தான் அ தி மு க வுக்கு ஆதரவாகக் கிடைக்கும் அதில் ஒருவர் சபாநாயகர் ஆகிவிட்டால் , 14 என்று அந்த எண்ணிக்கை குறையும் . அதனால் இந்திரா காங்கிரசின் ஆதரவை கோரினார் மக்கள் திலகம் .
இதற்காக டெல்லி வந்திருந்த மக்கள் திலகத்திடம் அன்றைய பிரதமரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான இந்திரா காந்தி அவர்களை சந்தித்தார் . ஆதரவு தருவதாக உத்திரவாதம் அளித்த இந்திரா காந்தி , அதற்கு பதிலாக ஒரு உதவியை கேட்டார் , அப்பொழுது மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து சுயேச்சையாக போட்டியிட்ட அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் அதிபர் ரங்கநாதனுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கப் போவதாகவும் , அ தி மு க வும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் ....
கழகத்தின் ஆட்சி முதன் முதலில் அமைய வேண்டும் என்றால் இந்திராவின் கோரிக்கை ஏற்கப் பட வேண்டும் என்பதை புரிந்துக் கொண்ட மக்கள் திலகமும் அதற்குச் சம்மதித்தார் , ரங்கநாதனும் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார் , ஆனால் புதுச்சேரியில் எஸ் ராமசாமியின் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்த பொழுது .
தி மு க வுடன் சேர்ந்துக் கொண்டு இந்திரா காந்தி வாக்குறுதிக்கு மாறாக காங்கிரஸ் அ தி மு க வை எதிர்த்து வாக்களிக்கத்ததால் , அந்த அரசாங்கம் கவிழ்ந்தது ....... Thanks...
-
நீங்கள் அறிமுகமான திரைப்படத்தில் இருந்து கடைசி படம் வரை
திரைப்படங்களில் கெட்டவன் கதா பாத்திரங்களை ஏற்காதவர்
திரைப்படங்களில் கெட்ட பழக்க வழக்கங்களை கற்பிக்காதவர்
உத்தமனாக -ஒழுக்க சீலனாக மட்டுமே திரைப்படங்களில் தோன்றியவர்
தாய் - தந்தை சொல்லை தட்டாமல் மதித்து நடக்க கற்று தந்தவர்
தீய சக்திகளை எதிர்த்து நம்நாடு முன்னேற நன்றாக பாடுபட்டவர்
குடியையும் - புகை பிடிப்பதையும் அறவே தவிர்த்தவர்
வரதட்சணை வாங்குபவரை மதிக்காதவர்
வசனங்களாலும் - பாடல்களாலும் உழைப்பின் மேன்மையை உயர்த்தியவர்
கொள்கை பாடல்களால் தொண்டர்கள் மனதில் உற்சாகத்தை விதைத்தவர்
தனக்கு நிகரான நடிகர்களுடன் சண்டை காட்சிகளில் மோதியவர்
உடன் நடித்த நடிகர்களுக்கு உடனே ஊதியம் கிடைத்திட செய்தவர்
தரக்குறைவான வசனங்களை பேசாதவர்
எதிரியை கூட ஏறிட்டு நோக்கி நண்பனாக்கி கொண்டவர்
இமாலய வெற்றிகள் தேடிவந்த போதும் இறுமாப்பு கொள்ளாதவர்
இப்படி நல்லவராக நடித்து நல்லவராக வாழ்ந்து ....
நல்லதொரு தலைவராய் ,நல்லதொரு முதல்வராய் மக்கள் மனதில் பதிந்து...... Thanks...
-
திராவிட இயக்க வரலாற்றில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் புரட்சித்தலைவர் ஆற்றிய பங்கு மகத்தானதாக உள்ளதால், இந்த திரியினை மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் இணை திரியாக உருவாக்கி அதில் பதிவுகள் பதிவிடுவது தான் சாலப்பொருந்தும் என்ற எண்ணத்தில் தான் இதனை ஆரம்பிக்கிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் பங்கு மகத்தானது என்று கூறியதில் பலருக்கும் சிறு சந்தேகம் தோன்றலாம். 1971-76 கால கட்டத்தில், கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையிலான தி. மு. க. ஆட்சி செய்தபோது, ஊழல், லஞ்சம் பெருகி விட்டதை கண்டு, மக்கள், ஆட்சி மாற்றம் காணும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது, தி. மு. க. விற்கு மாற்றாக காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு முன்னுரிமை அளித்து வாக்களிக்க தயாராகி வந்த காலத்தில் மக்களின் மன ஓட்டத்தை நன்கு புரிந்து கொண்டு தக்க சமயத்தில், நம் புரட்சித்தலைவர் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரில் புதிய கட்சி ஆரம்பித்து, அவரின் திருவுருவத்தை கட்சி கொ டியில் பதித்து, கட்சியின் கொள்கைக்கு அண்ணாயிசம் என்றும் பெயரிட்டு, மூச்சுக்கு மூச்சு,, பேச்சுக்கு பேச்சு பேரறிஞர் அண்ணா அவர்களை குறிப்பிட்டு, மக்களை திராவிட இயக்கத்தின் பால் கொண்ட ஈர்ப்பினை தக்க வைத்தார். உரிய நேரத்தில், நம் மக்கள் திலகம் கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தால், கலைஞர் தலைமையிலான தி. மு. க. வெறுப்புணர்ச்சியில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வந்திருப்பர் மக்கள்.
இன்றும், அவர் ஆரம்பித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் ஆட்சி செய்து வருகிறது. அவர் தோற்றுவித்த இரட்டை இலை சின்னம் தான் வெற்றி பெற்று வருகிறது.
கலைஞர் அவர்களோ 1980 சட்டமன்ற தேர்தலின் போது, காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு, கூட்டணி ஆட்சி என்ற நிலையை முன் வைத்து காங்கிரஸ் கட்சியை நிலை நிறுத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால், நம் புரட்சித்தலைவர் அவர்கள் இந்த கூட்டணி ஆட்சி கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு, திராவிட இயக்கம் தான் இந்த தமிழகத்தில், தனியாட்சி செய்திட வேண்டும் என்று தீரமனமாக சொல்லி,, அதனை செயலிலும் நிரூபித்தார் மக்களின் மாபெரும் ஆதரவுடன்.
எனவே தான், திராவிட இயக்கத்தின் போர் வாளாக, பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் புரட்சித்தலைவர் விளங்கினார், திராவிட இயக்கம் வளரவும், அது இன்றளவும் செழித்து நிற்பதற்கும் , சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம். ஜி ஆர். தான் காரண கர்த்தா என்று அறுதியிட்டு உறுதிபட ஆணித்தரமாக, ஆதாரப்பூர்வமாக அடித்து கூறுகிறேன். அதில் தவறு ஏதுமில்லை என்றும் உணர்கிறேன்......... Thanks....
-
எம்.ஜி.ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.
சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்
’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.
புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.
ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”
சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்
சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’
நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”
கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
வேலாடுது”
பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:
திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”
பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”
காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”
பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
( மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர் மேனரிசம் தான். ’ஜாரி’ மிரண்டு ஓடும்!)
கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.
solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
’உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக’
'அன்னை மடியை விரித்தாள் எனக்காக' எனும்போது கைகளை விரித்துகாட்டுவார்!
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
(என்னைப் பெற்றுக்கொள்வதற்காக என் தகப்பனுக்கு மடியை விரித்தாள்
பிரசவத்தின் போதும் நான் பிறப்பதற்காக தன் மடியை விரித்தாள்.)
உலகம் பிறந்ததும் எனக்காக பாடலில் நதி,மலர்கள், நிலவு, குயில்கள்என்றும் பெற்ற தாய் பற்றியும் கலந்தே எழுதப்பட்டது.கவித்துவமாக அன்னை மடியை விரித்தாள் என்பதில் அன்னையை ’இயற்கை’யின் படிமம் எனவும் கொள்ளலாம்.
‘நெல்லின் மணி போல்’ என்ற (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார்.
கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.
”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.
நான் ஏன் பிறந்தேன் பாட்டில் புலியூர் சரோஜா மகனிடம் “ பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்.உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றிப்படவேண்டும்.கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் வரவேண்டும், உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழவேண்டும்” வாத்தியார்! அப்போது அவர் முகம் காட்டும் உருக்கம்.
’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’
உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.
”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”
”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”
“தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”
அதே போல உற்சாகத்தையும்.
”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”
“முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”
”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.
வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்.”
குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”
சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடப்பிறந்தவளே ஆடி வா!’
‘நான் செத்துப் பிழைச்சவண்டா
எமனை பாத்து சிரிச்சவன்டா’
சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார். விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.
மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.
தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர் பாடல்கள்:
“ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்
”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.
தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது
‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
அவளே என்றும் என் தெய்வம்’
’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’
’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’
காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’
ரொமான்ஸ்
‘காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் சென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’
’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’
‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’
‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’
டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”
”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”
“நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
தலைவன் வாராது காத்திருந்தாள்”
ஜேசுதாஸ் பாடல்கள்
”விழியே கதையெழுது
கண்ணீரில் எழுதாதே’
”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”
”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.
”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”
எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்.இசையமைப்பாளர்களுக்கு ’பென்டு’ கழண்டுவிடும்!...... Thanks......
-
எஸ்! வீ!! சேகர்!!
--------------------------
மனித நேயத்தின் பொருளைப் பார்த்தோம் என்றால்-
தானம்,,தர்மம்,,கொடை,,உதவி--இப்படிப் பலவகை நற்காரியங்களுக்கும் அடிப்படை மனித நேயேம் தான்!
அதாவது ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மேல் காட்டும் அன்பு என்றாலும்-
எந்தவித பிரதியும் எதிர் நோக்காமல்,,அதே சமயம் அடுத்தவர் மீது அன்பு காட்டுதலையும் மீறி,,அவரைத் தானாக நினைத்துக் கொண்டு அவருக்கு உதவுவது மனித நேயம்!! அந்த மனித நேயம் புரிவதில்-
இன்றைய உதாரணமாகத் திகழும் மிகச் சிலரில் எஸ்.வி.சேகரையும் கொள்ளலாம்!
கொரானா வில் பாதி இறந்து,--
குரானில் நல்வழித் தேட விழையும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு கஞ்சி ஊற்றும் மார்க்கமாக ஒரு குடும்பத்துக்கு 25 கிலோ என்ற வகையில் நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு உதவி வருகிறார், எஸ்.வி.சேகர்!
மதம் பார்த்துப் பழகினால் வம்பு!
மனம் பார்த்துப் பழகினால் அன்பு!!--இந்த இலக்கணத்தை இனிய முறையில் பேணுபவர்களில் நமக்குத் தெரிந்து சேகரும் ஒருவர்!
இந்த உதவி மட்டும் என்றில்லாமல்--
வருடந்தோறும் மாணவர்கள் சிலருக்கு மடிக் கணிணி,,
அவர்கள் படிப்புக்கான நிதி உதவி..
மாற்றுத் தொழிலாளிகள் சிறக்க,,அவர்களுக்குப் பொருளுதவி--இப்படிப் பல வகையிலும்,,தமது அறக்கட்டளை மூலம் உதவி வருகிறார். அதையும் சத்தம் இல்லாமல் செய்கிறார்!!
உங்களுக்கு இப்படி உதவுவதில் உந்து சக்தி யார் என்று கேட்டால்--
WHETHER EAST OR WEST
M.G.R. JS THE BEST!!--என்று சொல்லி சிரிக்கிறார்!!
அ.தி.மு.க அரசின் இன்றைய செம்மையான ஆட்சியைப் பாராட்டும் அதே சமயம்--
தி.மு.க என்ற தீய சக்தியைக் களத்திலிருந்தே அப்புறப்படுத்த வேண்டும். அதை அ.தி.மு.க வால் மட்டுமே செய்ய முடியும்-- அதற்கு அக்கட்சி,,
எம்.ஜி.ஆர்,,ஜெ இருவரை மட்டுமே கட்சியில் முன்னிலைப் படுத்திக் கொண்டு செல்லவேண்டும் என்று அழுத்தமாகக் கூறுகிறார்.
அ.தி.மு.கவுடனான புரிதலுடன் கூடிய இவரது தொடர்பைப் பதிவிலுள்ள படத்திலிருந்து அறியலாம்!
மனதில் எதையும் வைத்துப் பழகத் தெரியாதவர் மேடம் என்பது இவரது அனுபவம் உரைக்கும் வார்த்தை/
சோவுக்கும்,,ஜெவுக்கும் சரியானப் புரிதல் இல்லாமல் இடைப்பட்ட சிறிது காலம் இருந்தபோது இருவரிடமும் தைரியமாகத் தமது கருத்தை உரிமையுடன் கூறி,,அவர்கள் இருவரும் இணையப் பின்புலமாக இவர் செயல்பட்டதைக் கேட்கும்போது பிரமிப்பாகவும் இருக்கும். பெருமையாகவும் இருக்கும்!
அந்த நிகழ்வை அப்படியே இங்கே விவரிக்க இயலாத நிலை?
எல்லாரும் சொல்றா மாதிரி இல்லே,
மேடத்துக்கிட்டே ரொம்ப தைரியமா யாரு வேணாப் பேசலாம். ஆனா நம்ம மனசுல ஏதாவது குறுக்கு புத்தி இருந்தா தான் பிராப்ளம்! அவங்க ரொம்ப ஷார்ப். ஈஸியா கண்டு பிடிச்சுடுவாங்க என்று சர்ட்டிஃபிகேட் தரும் சேகரின் வார்த்தைக்கு உதாரணம்--
திரு சைதையாருக்குக் கிடைத்த மேயர் பதவி!
மேடம்,,சைதையார் மாதிரியான சீனியர்களுக்கு உரிய பதவி கொடுத்தா நன்னாயிருக்கும் என்று சைதையாருக்காக,,ஜெ விடம் துணிச்சலாகப் பேசினாராம் சேகர்??
இதை நம்மிடம் சேகர் சொல்லவில்லை.
சைதையாரே நம்மிடம் தெரிவித்தது இது!!
திட்டம் போட்டு வருஷக் கணக்காக் காத்திருந்து வேலை செய்ய ஒரு கூட்டமே மேடத்துக்குப் பின்னால் வேல செய்யும்போது நம்ம மாதிரியான ,,,நேராப் பேசறவங்களுக்கு சங்கடம் தானே?
சேகர் வைக்கும் பொடியில் காரமும் சாரமும் இருக்கத் தான் செய்கிறது!
தேசத்தைப் பத்தி உண்மையாக்க் கவலைப்படும் மனிதர்கள் தாம் இப்போதைய இந்திய அரசியலுக்குத் தேவை!!
சேகர் மாதிரியானவர்களை மத்திய அரசோ,,மானில அரசோ உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நம் அவா!!
இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இன்ன பிறர்க்கும் சேகர் செய்து வரும் உதவிகளுக்காக அவரைப் பாராட்டலாம் தானே பாச உறவுகளே???!!!........ Thanks.........
-
தற்போது சன் தொலைக்காட்சி புதிய படம் தனுஷ், சினேகா நடித்த பட்டாசு படம் ஒளிபரப்பாகிறது... ஒரு காட்சியில் சினேகா தனுஷிடம் "எம்.ஜி.ஆர்." மாதிரி மாப்பிள்ளை பார்க்க போகிறோம் என சொல்லும் காட்சி வருகிறது... மக்கள் திலகம் பெயர் வராத புது படமா?! என்ன?......
-
1957 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தலைவர் ஒரு ஜோடி சிங்கம் வாங்கினார்...அவை ஸ்வஸ்திக் பிலிம்ஸ் அரங்கில் பராமரிக்க பட்டன...
ஒரு மதியம் பள்ளி விட்டு வந்த பெரியவர் சக்கிரபாணி அவர்களின் குழந்தைகள் அந்த சிங்கங்களை பார்க்க அழைத்து செல்ல பட்ட போது அப்படி ஒரு துர்நாற்றம் அங்கே.. அவர்கள் வாந்தி எடுத்து விடுகின்றனர்.
சிறிது நாட்கள் கழித்து ஒரு பெரிய கூண்டு தயார் ஆகி அவை அங்கே அடைக்கப்பட்டன. நம்மவர் போய் அடிக்கடி பார்வையிட்டு வந்தார்...
ராஜா ராணி என்று அந்த சிங்கங்களுக்கு பெயர் வைக்க பட்டன.
தோட்டகாரர் மணி சமையல் வேலைகள் தவிர அந்த சிங்கங்களுக்கு நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட்ட ஆட்டு இறைச்சியை அவைகளுக்கு உணவாக கொடுத்து பராமரித்து வந்தார்.
ஒரு நாள் பவானி என்ற படத்தின் படப்பிடிப்பு அந்த ஸ்வஸ்திக் அரங்கில் மாடியில் நடைபெறும் போது சிங்கங்களை நடைப்பயிற்சி போல அழைத்து கொண்டு வாசல் கேட் அருகில் சங்கிலிகளுடன் அழைத்து கொண்டு மணி வர.
ராணி சிங்கத்தின் சங்கிலி சற்று தளர்ந்து இருக்க ராஜா சிங்கத்தின் கண்ணில் ஏதோ காயம் போல இருக்க அதை மணி அவர்கள் பார்த்து கொண்டு இருக்கும் போது.
சற்றே திறந்து இருந்த வாசல் கேட் வழியாக ராணி சிட்டாய் வெளியே ஓடி எதிர் பக்கம் ஒரு கம்பில் கட்ட பட்டு இருந்த ஒரு எருமை மாட்டை முழு பலம் கொண்டு ராணி அறைய.
நகங்கள் வெட்டப்பட்டு இருந்ததால் அந்த மாடு தப்ப மாடு முழுபலம் கொண்டு கட்ட பட்டு இருந்த கம்பை பிடுங்கி கொண்டு ஓட்டம் பிடிக்க.
படப்பிடிப்பில் இருந்த நடிகர்கள் மேலே இருந்து பார்த்து கொண்டு இருக்க இரண்டு வீடுகள் தள்ளி ராவ் பகதூர் ராம சாஸ்திரி வீட்டில் சிங்கம் நுழைய.
அவர் தங்கை அலறி வீட்டுக்குள் ஓடி கதவை மூடி கொள்ள...சிங்கம் கதவை சுரண்ட...அதற்குள் ராஜாவை கட்டி போட்டு வந்த மணி ராணி அருகில் போக ராணி அவர் மேல் பாய இருவரும் உருண்டு புரண்டு தன் கையில் கொண்டு வந்த ஒரு சுருள் கம்பி போல இருந்ததை கொண்டு ராணி வாயில் நுழைக்க அதன் இரண்டு பற்கள் தெறித்து கீழே விழ.
பின் ஒருவழியாக அந்த ராணியை தூக்கி கொண்டு கூண்டில் கொண்டு மணி போட்டு காயம் கண்ட இடத்தில் ரத்த கசிவு நின்ற பின் உணவு கொடுக்கப்பட்டது.
சில மாதங்களில் ராஜா இறந்துவிட 6 மாதங்கள் கழித்து பதப்படுத்தப்பட்ட அதன் உடலை முதலில் லாயிட்ஸ் சாலை வீட்டிலும் பின் தலைவரின் ராமாவரம் வீட்டில் தலைவர் மாடிக்கு போகும் படிகள் இருக்கும் அறையில் அந்த ராஜா வைக்க பட்டு பின் தலைவரின் நினைவு இல்லத்தை இன்றும் அலங்கரித்து கொண்டு இருக்கிறது.
கொஞ்ச காலம் கழித்து மூர் மார்க்கெட் அருகில் முதலில் இருந்த மிருகக்காட்சி அரங்கில் விட பட்ட ராணி பின் சென்னை வண்டலூர் zoo வில் விடப்பட்டு அங்கே இறந்தது.
தலைவர் நடித்த அடிமைப்பெண் சிங்கத்துக்கும் தலைவர் நினைவு இல்லத்தில் இருக்கும் சிங்கத்துக்கும் தொடர்பு கிடையாது என்பதை தெளிவு படுத்தவே இந்த பதிவு.
சிங்கம் வளர்த்த தங்கம் எம்ஜியார் புகழ் வாழ்க
நன்றி...தொடரும்....உங்களில் ஒருவன் நெல்லை மணி...
மேலே சொல்லப்பட்ட ராஜா ராணி சிங்கங்கள் தலைவரின் நாடோடிமன்னன் படத்தில் நடிக்க வாங்க பட்டு பின் முடிவுகள் மாற்றி கொள்ளப்பட்டன.......... Thanks Nellai Mani...
-
"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!"
# இது எப்போதோ ஒருமுறை நான் எழுதியது...!
ஆனால் இப்போதும் , எம்.ஜி.ஆர்.பற்றி என் கண்ணில் படும் ஒவ்வொரு செய்தியும் , நான் எழுதியதை மேலும் மேலும் உறுதி செய்கின்றன..!
# இதோ , ஒரு வெண்பொங்கல் செய்தி..!
# அந்தக் கால தேர்தல் பிரச்சார சமயங்களில் , அண்ணா - காமராஜர் – கருணாநிதி - எம்.ஜி.ஆர். போன்ற அரசியல் தலைவர்கள் , முக்கியமான நகரங்களில் , ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து பிரச்சாரம் செய்து விட்டுப் போவார்களாம்..!
அவர்கள் பேச்சைக் கேட்பதற்காக அன்று மாலை முதலே பக்கத்து கிராமங்களில் இருந்து , மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து , கூட்டம் கூட்டமாக காத்துக் கிடப்பார்களாம் !
ஒரு வழியாக நள்ளிரவில்தான் தலைவர்கள் மேடைக்கு வந்து சேருவார்களாம்..!
அவர்கள் பேசி முடித்து விட்டுப் போன பிறகு , அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அங்கேயே....அந்த பிரச்சார திடலிலேயே துண்டை விரித்துப் போட்டுத் தூங்கி விடுவார்களாம்..! வேறு என்ன செய்வது..? விடிந்த பிறகுதான் ஊருக்குப் போக முதல் பஸ் வரும்..!
எந்தத் தலைவர் வந்து பேசி விட்டுப் போனாலும் , இதுதான் நிலைமை..!
வருவார்கள்...பேசுவார்கள்...செல்வார்கள்..!
ஆனால் ..ஒரே ஒரு தலைவர் மட்டும் , நள்ளிரவில் வந்து பேசி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போகும் முன் , தன் கட்சியை சேர்ந்த அந்த ஏரியாவின் பொறுப்பாளரைக் கூப்பிட்டு , திடலில் தங்கி இருக்கும் மக்கள் அனைவருக்கும் , காலை எழுந்தவுடன் சுடச்சுட சாப்பிட வெண்பொங்கல் கொடுத்து அனுப்ப ஏற்பாடு செய்ய சொல்லி விட்டு , அதற்கான செலவையும் கொடுத்து விட்டுத்தான் போவாராம்..!
அவர்.....வேறு யாராக இருக்க முடியும்..?
எம்.ஜி.ஆர்.!
சில வேளைகளில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் கூட , எம்.ஜி.ஆரின் இந்த வெண்பொங்கலை சாப்பிட்டு விட்டு , எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்களாக மாறிய அனுபவங்களும் உண்டாம்..!
# எண்ணிப் பார்க்கிறேன்...!
என்ன அவசியம் வந்தது எம்.ஜி.ஆருக்கு...?
மற்ற தலைவர்களைப் போலவே ..வந்தோமா..? பேசினோமா..? புறப்பட்டுப் போனோமா? என்று இல்லாமல் , எதற்காக அங்கே இருக்கும் மக்களின் அடுத்த நாள் காலை பசியைப் பற்றி கவலைப்பட வேண்டும்..?
அதனால்தான் மீண்டும் அழுத்தமாக சொல்கிறேன்..!
"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!"......... Thanks...
-
"கண்ணில் பட்ட 'அது'... கொதித்தெழுந்த எம்.ஜி.ஆர்!" - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
அத்தியாயம் : 7
நடிகர்கள் பொதுவாக உணர்ச்சியவயப்படுபவர்கள். நாடகத்தின் பெயர் கதர் பக்தி; கதாநாயகன் காந்தியின் கொள்கைகளை கொண்டாடுபவன். மதுவிலக்கை வலியுறுத்தி பக்கம் பக்கமாய் வசனங்கள்... கதாநாயகன் ராம்சந்தரின் மனசுக்குள் காந்தி வந்து அமர இது போதாதா?! காங்கிரஸின் காலணா உறுப்பினராகும் அளவு அவரது காந்தியப்பற்று வளர்ந்தது. காந்தியையும் நேரிலும் தரிசித்திருந்ததால் அது இன்னும் உச்சத்திற்கு போனது.
அப்போதெல்லாம் கள்ளுக்கடை மறியல் போராட்டங்கள் தீவிரமாக காங்கிரஸ் மற்றும் பல அமைப்புகளால் நடத்தப்பட்டு வந்தன. மறியல் நடப்பதும் அதை போலீஸார் தடியடி நடத்தி கலைப்பதும் வாடிக்கையாக இருந்த காலம். மறியல் போராட்டங்களில் சாரிசாரியாக இளைஞர்கள் சிறையில் அடைபட்டு வந்தனர். யானைக்கவுனியில் ராம்சந்தர் வீடருகே, இயங்கிவந்த கள்ளுக்கடை முன் காங்கிரஸ் தொண்டர்கள் அன்று மறியல் செய்ய இருப்பதாக சொல்லப்பட்டது. “என்னண்ணே உங்க தம்பி கூட மறியல்ல கலந்துக்க போறாமே! தேசபக்தி முத்திடுச்சா” - போகிற போக்கில் ஒரு நடிகர், சக்கரபாணியிடம் சொல்லிவிட்டுப் போனார்.
ராம்சந்தராவது போராட்டத்தில் கலந்துகொள்வதாவது என மனதிற்குள் சிரித்துக்கொண்டு வேறு வேலையில் ஈடுபட்டார் சக்கரபாணி. தகவலை அவர் உறுதிபடுத்தாதற்கு காரணம் சத்தியபாமா. வறுமையினால் ஊர் விட்டு ஊர் வந்து படிப்பையும் துறந்து நாடகத்தில் நடிக்கும் தம் பிள்ளைகள் சுதந்திரப்போராட்ட உணர்வுகளுக்கு ஆட்படுவதை அவர் ஆரம்பத்திலிருந்தே விரும்பவில்லை. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த ஒரு தாயின் கவலை அது. தனது கவலையை தொடர்ந்து பிள்ளைகளிடம் அவர் வலியுறுத்திவந்திருக்கிறார். இதனால் அம்மாவின் பேச்சுக்கு மாறாக ராம்சந்தர் அப்படிப்பட்ட விஷயங்களில் ஈடுபடமாட்டான் என்பதில் சக்கரபாணிக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது.
நாடக கொட்டகைக்கு கிளம்பிவந்தவர் ஒத்திகையில் மூழ்கினார். ஆனால் கொஞ்சநேரத்தில் மனதில் ஏதோ நெருடியது. வீட்டிலிருந்து தனக்கு முன்பு கிளம்பிய தம்பி எங்கே? ....மனது தேடத்துவங்கியது. கொட்டகையில் விசாரித்ததில் எல்லோரிடமும் ஒரே பதில் “ராம்சந்தரா... காலையிலிருந்தே அவனைப் பார்க்கலையே...” பகீர் என்றது சக்கரபாணிக்கு. 'நமக்கு வந்த தகவல் உண்மைதானா...' பதறியபடி மறியல் நடந்த கள்ளுக்கடைக்கு விறுவிறுவென சென்றார்.
சந்தேகம் உறுதியானது. மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீஸார் ஜீப்பில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அவர்களின் மத்தியில் குல்லா போடாத ஒரு இளைஞனும் வண்டியில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தான். அது ராம்சந்தரேதான்.
வண்டி புறப்பட்டது. அதை பின்தொடர முடியவில்லை. கடைசியில் ராம்சந்தரை பூக்கடை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றதாக தெரிந்து அங்கு சென்றார் சக்கரபாணி. காவல்நிலையத்தில் சிரித்தபடி நின்றிருந்தார் ராம்சந்தர். “ஏண்டா உனக்கு இந்த வேலை...அம்மா சொன்னதைப்பற்றி கொஞ்சமும் கேட்கலை இல்லையா? ...சரி வா பெயில் எடுக்கிறேன்” என கடுங்கோபத்துடன் அவரை திட்டினார். “தேவையில்லை ஏட்டா... அவ்வளவு பெரிய பெரிய தலைவர்களாலேயே இன்னும் சுதந்திரம் வாங்க முடியலை...நீ போராடி என்னத்தை வாங்கப்போறே” என இன்ஸ்பெக்டர் கேஸ் எழுதாமல் தன்னை வெளியே அனுப்பிவிட்டதை ராம்சந்தர் சொல்ல... அத்தனை மணிநேர பதற்றத்தை மீறி சிரிக்கத்துவங்கினார் சக்கரபாணி.
ராம்சந்தரின் மதுவிலக்குப் போராட்டம் அத்துடன் முடிவுக்கு வந்ததா என்றால் இல்லை!..மதுவிலக்குக்காக தெருவில் இறங்கி ஒரு பக்கம் ராம்சந்தர் கொடிபிடித்துக்கொண்டிருக்க, அவருக்கு அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று அவரது வீட்டிலேயே பல மாதங்களுக்குப்பின் நடந்தது. ... அப்போது சக்கரபாணிக்கு திருமணமாகிவிட்டிருந்தது. ஒருநாள் செலவிற்கு பணம் இல்லாமல் வீட்டில் துழாவிக்கொண்டிருந்தார் ராம்சந்தர். வழக்கம்போல அம்மாவின் பீரோவிலும் தேடியபோது துணி அடுக்கவைக்கப்பட்ட அடுக்கில் துணிகளுக்கு மத்தியில் ஏதோவொன்று அவர் கைக்கு தட்டுப்பட்டது.
வழக்கத்துக்கு மாறான பொருளாக தென்படவே, ஆவலுடன் அதை உள்ளேயிருந்து எடுத்த ராம்சந்தர் அதிர்ச்சியின் விளிம்புக்கே சென்றுவிட்டார்... அது பாதி குடிக்கப்பட்டு மீதம் இருந்த ஒரு மது பாட்டில். மதுவிலக்கை வலியுறுத்தி நாடகங்களும், தெருவில் இறங்கி போராட்டங்களும் நடத்திவர, சொந்த வீட்டிலேயே மது பாட்டில் இருந்தது கோபத்தை உண்டுபண்ணியது. மூக்கை பரபரபரவென தேய்த்துவிட்டுக்கொண்டு வீட்டின் நடுஹாலுக்கு வந்தார்.
அங்கே தாயும் அண்ணியாரும் பிறந்த குழந்தையான மணியை கொஞ்சிக்கொண்டிருந்தனர்.
“ யாரு இங்க மது குடிச்சது...”உச்சஸ்தாயியில் கத்தினார் எம்.ஜி.ஆர். ஒருவரிடமும் பதிலில்லை. என்னடா இது இப்படி அசிங்கமா சத்தம் போடறே... அக்கம்பத்தினர் கேட்டா என்ன நினைப்பாங்க... போய் வேலையைப் பாரு....” - சத்தியபாமாவின் பேச்சு இன்னும் கொதிப்பை ஏற்படுத்த, “ஓஹோ குடிக்கிறது தப்பு இல்லை. அது மத்தவங்களுக்கு தெரியறதுதான் உங்களுக்கு பிரச்னையா” - பதிலுக்கு எகிறினார் ராம்சந்தர்.
“இது உன் அண்ணன் வாடகை தர்ற வீடு... உனக்கு பெரியவனே சும்மா கிடக்கான். நீ என்னமோ எகிறுறியே.. இஸ்டமிருந்தால் இரு இல்லேன்னா வெளியே போ...”சத்தியபாமா மகனுக்கு சளைக்காமல் குரலை உயர்த்திப் பேசினார். தாயின் பேச்சில் கொதிப்படைந்த ராம்சந்தர், கையிலிருந்த பாட்டிலை தரையில் ஓங்கி அடித்துவிட்டு சட்டையை மாற்றிக்கொண்டு ஒரு முடிவோடு விறுவிறுவென
தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்... அவரது கால்கள் கடற்கரையை நோக்கி நடந்தன...
தொடரும்...
Posted : M.G.Nagarajan
1 May 2020 6:56 PM
Thanks for :
Published : Naveenan
Vikatan Vanna Thirai
யாழ் இணையம்......... Thanks...
-
ஊழலை எதிர்த்து உழைப்பை மதித்து உழைப்பவர்களை பாதுகாத்திட உழைப்பவர்களை உயர்த்திட.....
பல தியாகிகளின் ரத்தம் சிந்தி ஆரம்பித்த கட்சி....
நமது புரட்சித்தலைவர் ஊழலை இல்லாமல் லஞ்சம் இல்லாமல் மக்களை வைத்து பணம் பார்க்காமல் அவரு உழைப்பால் சம்பாதித்த அவரது சொத்தையும் மக்களுக்காகவே அள்ளிக்கொடுத்த நாம் நேரில் பார்த்து பழகிய வள்ளல்...
நமது புரட்சித் தலைவர் ஆட்சியில் லஞ்சம் இல்லை ஊழல் இல்லை ஏன் நமது புரட்சித்தலைவர் இருக்கும் வரை எதிர்க் கட்சி கருணாநிதி அவர்கள் மெரினா பீச்சில் ஓய்வெடுத்தார்...
புரட்சித்தலைவர் மறைந்த பிறகு கருணாநிதி அவர்கள் முதலமைச்சரான பிறகு கண்ணில் எண்ணெய் ஊற்றி புரட்சித்தலைவர் ஆட்சியில் ஊழல் நடந்ததா என்று தனி படையை வைத்து தேடிப்பார்த்தேன் அலசி ஆராய்ந்து பார்த்தால் அதில் அவருக்கு கிடைத்த தகவல் நமது புரட்சித்தலைவர் உழைத்து சம்பாதித்த அவரது சொத்துக்களை விற்றதாக தான் அவருக்கு தகவல் கிடைத்தது தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை ஏன் நமது புரட்சித் தலைவர் ஆட்சியில் இருந்தபோது எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் யார் மேலேயும் குற்றம் சாட்ட முடியவில்லை.
1987 வரலாறு மாறியது இதை யாராலும் மறுக்க முடியாது....
இன்று உழைப்பாளர் தினத்தன்று தலைவர் சொன்னது போல் உழைப்பவரே உயர்ந்தவர் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு 2021 இதுவும் மாறும் என்று எதிர்பார்ப்போம்......... Thanks.........
-
தற்போது (01-05-2020) இரவு 7 மணி முதல் புதுயுகம் டிவியில் "பெற்றால் தான் பிள்ளையா" திரைப்படம் ஒளிபரப்பாகி கொன்டிருக்கிறது
அடுத்த வாரம் சன் லைப் டிவியில் மக்கள் திலகத்தின் காவியங்கள் திரைப்படங்கள்
O3 - 05-2020 திங்கள் காலை 11 மணிக்கு "நாளை நமதே "
05-05-2020 புதன் காலை 11 மணிக்கு "வேட்டைக்காரன்"
O7-05 2020 வெள்ளி காலை 11 மணிக்கு "ஆனந்த ஜோதி " ஆகிய திரைப்படங்களை கண்டு மகிழவும்
தகவல் : மதுரை ராமகிருஷ்ணன்....... Thanks...
-
வரும் வாரம் சன் டிவியில் இரவு காவியங்கள் ஒளி பரபாகும் விபரங்கள்... மே 5ம் தேதி "ரிக்க்ஷாக்காரன்"......... மே 7ம் தேதி "குடியிருந்த கோயில்".........
-
ஆமாம். யாரையும் கூட்டி கட்சி ஆரம்பிக்கலாமா? வேண்டாமா! இது சரியாக வருமா?! முதல்வர் பதவி யாருக்கு?! என்றெல்லாம் ஆலோசிக்காமல் தலைவர் நீதான் கட்சி இதுதான் என்று ரசிகர்களாகிய தொண்டர்களால் துவங்கப்பட்ட கட்சி இது. உலக அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றது இல்லை. இதுவே சரித்திரம், சாதனை, சகாப்தம்......... Thanks to mr.Thiagarajan.........
-
எங்கவீட்டுப்பிள்ளை அடைந்த மிகப்பெரிய வெற்றிக்கு பின் அதன் வெளியீடு உரிமையை ஒரு சில இடங்களுக்கு வாங்கி இருந்த தலைவர் மிக பெரிய லாபம் பெற்றார்.
நடித்த சம்பளம் போக அதிலும் பணம் கொட்டியதால் ஒரு நாள் 5 லட்சம் ரூபாயை தயாரிப்பாளர் நாகிரேட்டி அவர்களிடம் சேரும் படி கொடுத்துவிட.
இரு நாட்களுக்கு பின் 5 லட்சத்தி ஒரு ரூபாய் பணத்தை இது உங்களையே சேரும் என்று அவர் திருப்பி கொடுத்து விட.
அப்படி நல்லவர்கள் இருந்த சினிமாத்துறை இன்று...
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி...உங்களில் ஒருவன்...நெல்லை மணி........ Thanks...
-
"எம்.ஜி.ஆரின் பலமே; அண்ணன் எம்.ஜி.சக்கரபாணிதான்".
சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் நினைவு நாளை ஒட்டி எம்.ஜி.ஆரின் விசுவாசி ஒருவர், அன்றைய நாளிதழில் வெளியான செய்தியை பகிர்ந்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் பலமே அவருடைய அண்ணன் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி தான். அவர் சொன்னதை தட்டாமல் கேட்பவர். எம்.ஜி.ஆரின் வெற்றியில் பெரும்பங்கு இவருக்குண்டு. சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் தன் அண்ணனைத் தான் எல்லாமுமாக நினைத்து வந்தார் எம்.ஜி.ஆர்.
தன் அண்ணனின் திடீர் மறைவை எம்.ஜி.ஆரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தன்னுடைய பலம் அத்தனையும் திடீரென காணாமல் போய்விட்டது போல் உணர்ந்தார். அதன் காரணமாகவோ என்னவோ அண்ணன் மறைந்த ஒரு வருடத்திலேயே தானும் விண்ணுலகை அடைந்துவிட்டார்.
எம்.ஜி.ஆரின் அண்ணன் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி மறைந்த அன்று ஒரு பத்திரிக்கையில் வெளியான செய்தியை எம்.ஜி.ஆரின் விசுவாசி இப்போது வெளியிட்டுள்ளார். அதில்:
முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் அண்ணன் திரு. எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் கடந்த சில மாதங்களாகவே உடல் நலமின்றி இருந்தார். ஒருவாரத்திற்கு முன்பு சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னும் உடல் நிலை சீரடையாமல் 1986 ஆகஸ்ட் 17ஆம் நாள் இரவு 12.00 மணி அளவில் உயிர் பிரிந்தது.
அண்ணனின் உடல்நிலை மோசமடைந்ததை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர் தன் மனைவி ஜானகி அம்மையாருடன் அன்று இரவு 8 மணிக்கு மருத்துவமனை வந்தடைந்தார். அண்ணன் உயிர் பிரியும்போதும் அருகிலேயே இருந்த எம்ஜிஆர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
எம்.ஜி.ஆருடன், சக்கரபாணியின் மனைவி மீனாட்சி அம்மாளும், அவர்களது மகன்கள் மற்றும் மகள்களும் கதறி அழுதனர். சற்று நேரத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையிலிருந்த சக்கரபாணியின் இல்லத்திற்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு எம்ஜிஆர் ஒரு பெரிய மலர் மாலையை தன் அண்ணனின் உடல்மேல் சார்த்திவிட்டு மீண்டும் கதறி அழுதார். கவர்னர் குரானா எம்ஜிஆரை தேற்றினார். பின் எம்.ஜி.ஆரை அருகில் உள்ள அறையில் அமர வைத்தனர்.
மறுநாள் உடல் அடக்கத்தின் போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும் வந்தனர். திரு.கருப்பையா மூப்பனார் அவர்கள் எம்ஜிஆருடனேயே கடைசி வரை இருந்தார். இறுதிச் சடங்கின் போது சக்கரபாணிக்கு வாய்க்கரிசி போடும் நிலையில் எம்.ஜி.ஆர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார்.
அவர் கையிலிருந்த அரிசியை அண்ணனின் வாயில் போட எம்.ஜி.ஆரால் இயலவில்லை. சூழ்நிலையை உணர்ந்த மூப்பனார் அவர்கள், எம்.ஜி.ஆரின் கையை பிடித்து தட்டிவிட அரிசி அண்ணனின் வாயில் விழுந்தது. பிறகு எம்ஜிஆரை கைத்தாங்கலாக அழைத்துச்சென்றனர்.
Posted : M.G.Nagarajan
1 May 2020 9:31 PM
Thanks for : Vinoth R
Film beat Tamil News
Published : 19:10 IST...... Thanks...
-
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும.........
மூன்று எழுத்து நாவிலிருக்கும்........
பேரில் என்ன இருக்கிறது என்பார்.........
சேக்ஸ்பியர்.
சமீபத்தில் கோவைக்கு ஒரு கல்லூரியில் உரையாற்ற சென்று விட்டு சென்னை திரும்புவதற்கு கோவை ரயில் நிலையத்தில் அமர்ந்து இருந்தேன்.
புகை வண்டிகள் வருவதற்கான அறிவிப்பு வருகிறது உன்னிப்பாக கவனித்து கேட்டேன் "புரட்சி தலைவர் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் நிலையம்" செல்லும் கோவை விரைவு வண்டி 3 ம் நடைமேடையில் வரவிருக்கிறது...
மறுபடியும் அறிவிப்பு. ஆங்கிலத்தில் ஹிந்தியில் மூன்று முறை வருகிறது.
ஒவ்வொரு தொடர்வண்டிக்கும்
ஒவ்வொரு அறிவிப்பிலும் தலைவர் பெயர் உச்சரிக்கப் படுகிறது .
இங்கு ஒரு சிறிய கணிதம்...
எம்ஜிஆர். சென்ட்ரலில் இறங்கி நிலைய அதிகாரி யிடம் சென்று
விவரங்கள் சேகரித்து ஒரு சிறிய கணக்கு போட்டேன்...
சென்னை எம் ஜிஆர் சென்ட்ரலிருந்து கிளம்பும் இரெயில் வண்டிகள்: 103
103 வண்டிகளும் வழிதடத்திற்கேற்ப 2லிருந்து 40ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
(உதாரணமாக சென்னையிலிருந்து மும்பைக்கு 11வண்டிகள் செல்கின்றன . ரயில்வே அட்டவணை படி
சென்னைக்கும் மும்பைக்கும் நடுவில்
10 இரயில் நிலையங்களில் நிற்கும்...
9 அறிவிப்புகள் சென்னையில் ஒலிக்கும்.
9 அறிவிப்புகள் மும்பையில் ஒலிக்கும்.
10 இடைப்பட்ட ரயிலில்வே நிலையங்களில் (நின்று செல்லும்.)
ஒவ்வொரு நிலையத்திலும் 9அறிவிப்புகள் ஒலிக்கும்.
ஒவ்வொரு அறிவிப்பிலும் தலைவர் பெயர் ஒலிக்கும் ...
போகும் போதும் ஒலிக்கும்.
வரும் போதும் ஒலிக்கும்.
மொத்தம். 1*9*12*2தடவை தலைவர் பெயர் ஒலிக்கும்...
சராசரி யாக 20 நிலையங்களில் ஒரு வண்டி நின்று செல்கிறது என்று வைத்து கொள்வோம்.
மொத்த அறிவிப்புகள் 103*20*9*2
இந்த கணக்குப்படி...
ஒருநாள் இந்தியா முழுவதும் 40ஆயிரம் தடவைகள் தலைவர் பெயர் உச்சரிக்க படுகிறது.
ஒரு மாதத்தில் இந்தியா முழுவதும் 12(1.2 மில்லியன்) லட்சம் தடவைகள் தலைவர் பெயர் உச்சரிக்க படுகிறது.
ஒரு வருடத்தில் இந்தியா முழுவதும் ஒன்றை கோடி(1.5) தடவைகள் தலைவர் பெயர் உச்சரிக்க படுகிறது...
இதைவிட பேர் வலிமைக்கு என்ன உதாரணமாம் வேண்டும்...
தலைவர் பேர் வைப்பதற்கு காரணமான அனைவருக்கும் கோடானுகோடி நன்றி.................. Thanks.........
-
#இறப்பு #உண்டா???
ஒரு ரசிகனின் நெகிழ்ச்சியான நினைவுகள்...
#யாழ்ப்பாணத்திலிருந்து
மக்கள் திலகத்தின் '#ஒளிவிளக்கு' திரைப்படம் 'யாழ்' ராஜா திரையரங்கில் வெளிவந்து 169 நாட்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்ற படம். பின்னர் இரண்டாவது முறையும் எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்து மீண்டும் நூறு நாட்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது. இரண்டாவது தடவை வெளிவந்து 100 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருந்த சமயம் மாணவர்களான நாங்கள் (நானும் நண்பர்கள் சிலரும்) மூன்று நாட்களாக முயன்று டிக்கட் கிடைக்காத நிலையில்,
நான்காவது நாள்...
காலைக் காட்சியின்போது 'பால்கனி' டிக்கட் பெற்றுப் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு காட்சியில்.. மரணப்படுக்கையிலிருக்கும் எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கடவுளை வேண்டி செளகார் ஜானகி 'ஆண்டவனே உன் பாதங்களைக் கண்ணீரால் நீராட்டுவேன்' என்று பாடுவார். அப்பாடலின் இடையில் 'உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை, விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?' என்று வரிகள் வரும்.
அச்சமயத்தில் 'பால்கனி'யிலிருந்து பலர் விசும்பி அழத் தொடங்கினார்கள். அழுதவர்கள் அனைவரும் எம்ஜிஆரின் தீவிர பக்தர்களான ஆண் இரசிகர்கள் தான். பொதுவாக சிவாஜியின் திரைப்படங்களைப் பார்த்துப் பெண்கள் மூக்குச்சிந்தி அழுவதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் எம்ஜிஆரின் படமொன்றிற்கு அதுவும் ஆண் இரசிகர்கள் அழுததை அப்பொழுதுதான் பார்த்தேன்.
இதன் காரணமாகவே அந்தப் பாடலும், செளகார் ஜானகியும், எம்ஜிஆரும், அழுத இரசிகர்களும் என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமொன்றின் பங்காளிகளாகி விட்டார்கள். அப்பொழுது நாங்கள் நினைப்போம்...! உண்மையிலேயே
எம்ஜிஆர் இறந்தால் என்ன நடக்கும்? அவருக்கு 'இறப்பு' என்பது உண்டா? அந்த வயதில் எங்களால் எம்ஜிஆர் இறப்பதைப் பற்றி கற்பனை கூடச் செய்ய முடியாமலிருந்தது?.......... Thanks...
-
"என் புள்ளய பாக்க நான் கூலி வாங்கனுமா... பொன்மனச்செம்மல் நமது எம்.ஜி.ஆரிடம் பணம் வாங்க மறுத்த மூதாட்டி".
சென்னை: எம்.ஜி.ஆர், மூதாட்டிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த போது வாங்க மறுத்து, உனக்கு அம்மான்னா உசுராமே, தாய், தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன, வச்சுக்கோ, ஆண்டவன் கொடுக்குறது போதும், என்றார் அந்த மூதாட்டி இதைக் கேட்ட மக்கள் திலகம் வாயடைத்துப் போனார்.
ஃபிலிமி சீட்டில் வந்த துணுக்கு செய்தி.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐,
எம்.ஜி.ஆர் ஒரு முற்றுப் பெறாத புத்தகம் தான். ஒவ்வொரு பக்கத்தையும் புரட்ட புரட்ட, பக்கங்கள் வளர்ந்து கொண்டே போகும். அவரைப் பற்றி எத்தனையோ வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வந்தபோதும், அந்த புத்தகங்களில் இல்லாத, ஏதாவது ஒரு சுவராஸ்யமான விசயத்தை யாராவது தினசரி சொல்லிக்கொண்டும், அது பற்றிய செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் அன்றாட வாடிக்கைதான். அது மாதிரி தான் இன்றைக்கு, ஃபிலிமி சீட்டில் வந்த குறுஞ்செய்தியை; பொன் மனச்செம்மளின் பாசமிகும் நட்புகளுடன் பகிர்ந்து கொள்ள பிரியப் படுகிறேன்.
தலைவரை பற்றி வேறு என்ன பதிவு போடலாம் என நான் இணையத்தில் தேடியபோது. இது என் கண்ணில் பட்டது.
எம்.ஜி.நாகராஜன். 1 மே 2020 11:06 pm.,...... Thanks...
-
"துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன்"
"துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன் என்பது இறைவனுக்கு மட்டுமல்ல, எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்தபோதும், முதல்வரான பிறகும் தன்னை வளர்த்து விட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்கு கஷ்டம் என்றாலும், அந்த தகவல் அவரது கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து காக்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாக தெரிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ( ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த ஆண்டுகளில்) சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக் கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி, எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று அவர் நம்பியிருந்தார். இதுபோன்ற நம்பிக்கை பலருக்கு இருந்திருக்கிறது.
நடிகை என்ற ஓரு காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது, அவர்களை அந்த கயவர்களின் பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம்.
இவரும் நடிகைகளிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொண்டார் என்பதற்கு சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தை காக்கவேண்டிய சந்தர்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.
Posted : M.G.Nagarajan
2 May 2020 12:10 AM
Thanks for :
Published : Naveenan
Vikatan Vanna Thirai
யாழ் இணையம்....... Thanks...
-
எம்.ஜி.ஆர் குடும்பத்திற்குப் பால்யத்தில் உதவிய அந்தத் தாய்!
https://www.thaaii.com/?p=36251
“ஐந்து வயது ஆனவுடனேயே குழந்தைகளைக் கட்டாயப் பள்ளியில் சேர்த்துவிட வேண்டும்.
தவறினால் பெற்றோருக்குத் தண்டனை உண்டு’’- இது ‘நாடோடி மன்னன்’ படத்தில் இடம் பெற்ற வசனம்.
இப்படித் திரையில் முக்கியத்துவம் கொடுத்த எம்.ஜி.ஆர் படித்த பள்ளி கும்பகோணத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்தபோது, இந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும்.
எளிமையான இந்தப் பள்ளியில் அவருடைய ஆறாவது வயதிலிருந்து ஒன்பதாவது வயது வரை படித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
அவர் படித்திருப்பதை நினைவூட்டும் ரிக்கார்டுகள் இன்னும் இங்கிருக்கின்றன.
அதன் படி அவர் இங்கு சேர்ந்த தேதி 22.03.1922.
பள்ளியிலிருந்து விலகிய தேதி 27.07.1925.
அதன் பிறகு தான் ஆரம்பித்தது அவருடைய பாய்ஸ் கம்பெனி நாடக வாழ்க்கை.
தமிழக முதல்வரான பிறகு இதே பள்ளிக்கு வருகை தந்திருக்கிற எம்.ஜி.ஆர் தன்னுடைய கும்பகோணத்து பால்ய வாழ்க்கை பற்றியும், பக்கத்து வீட்டிலிருந்த பெண்மணியிடம் அரிசி வாங்கிச் சாப்பிட்ட காலத்தையும் பற்றியும் குறிப்பிட்டுவிட்டுப் பேசியிருக்கிறார்.
“அன்றைக்கு நாங்கள் பசியில் வாடியபோது, அந்தத் தாய் எங்கள் அம்மாவிடம் அரிசி கொடுத்திருக்கா விட்டால், நாங்கள் உயிரோடு இருந்திருப்போம் என்று எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்?’’
பசியைப் பற்றிய நினைவுகள் கூட எப்போதும் வெப்பமானவை தான்....... Thanks...
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 18 வெள்ளி
இந்தப்படம் ராமாவரம் தோட்டத்தில் எடுக்கப்பட்டது
இன்று உழைப்பாளர் தினம்
பாட்டாளி மக்களோடு அமர்ந்து உணவு அருந்தும்
MGR
எம்ஜிஆர் அவர்கள் சினிமாவில் நடித்த காலத்திலிருந்து
முதலமைச்சராக அமர்ந்து மரணமடையும் வரை தான்
உழைத்து
சம்பாதித்த. பணத்தை ஏழை எளிய மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்த நடிகர் இந்த உலகத்தில் யாரும் இல்லை
உலகத்திலுள்ள எந்த முதலமைச்சரும் எம்ஜிஆரை போல் மரணமடையும் வரை ஏழை மக்களுக்கு தன்னுடைய சொந்த பணத்தை வாரி வழங்கியவர்கள் யாரும் கிடையாது........ Thanks...
-
தாயைக் காத்த தனயன் !
_______________________
காதலன் என்ற வார்த்தை
கணவன் என்று மாறி வரும் !
மங்கையென்று சொன்னவரும் மனைவியென்று சொல்லவரும் !
கனவுகளை யதார்த்தங்களாக மாற்ற துடிக்கும் காதலர்கள் !
இப்பாடல் காட்சியை பார்க்கும் வன்முறையாளனும் வாழ்க்கையின் வசந்தத்தை காண துடிப்பான் !....... Thanks...
-
-
நாளை நமதே !
_________________
மக்கள் திலகம் கட்சி தொடங்கிய நேரம் இரவும் பகலும் சந்து முனைகளில் கூட தொடர் கூட்டங்கள் ஆளுங்கட்சியின் இரும்புக்கரங்கள், சொல்லொண்ணா தொல்லைகள் !
மக்கள் திலகத்திற்கு பணநெருக்கடி , வன்முறையால் தொண்டர்கள் மீது இரக்கமற்ற தடியடிகள்
பாதித்த தொண்டர்களை காண தொடர் ஓட்டம் அப்பப்பா இயந்திரத்தை மீறிய கடும் உழைப்பு , தாங்க முடியாத மனஉளைச்சல் !
இன்று தி மு க , அ தி மு க வில் உள்ள அனைத்து பதவிகளில் மக்கள் திலகத்தின் இரத்தம் உள்ளது !
தி மு க , அ தி மு க வை சேரந்த அனைவரின் முன்னேற்றங்களுக்கும் மக்கள் திலகத்தின் உழைப்பே காரணம் இது சத்தியனான உண்மை !
இத்தனை இடர்பாடுகளிலும் அவரால் சினிமாவில் கவலைகளின் ரேகைகள் தென்படாமல் நடித்துள்ளார் என்றால் இது நிச்சயம் உலக சாதனையே ! அதுவும் நாளை நமதே என்ற பாடல் உலகபிரசித்தி பெற்றது நீங்களும் பாருங்கள் ........ Thanks.........
-
கருணை உள்ளமே .....புரட்சித்தலைவரின் உள்ளம் !!
கிராமப்புறத்தில் பெண்கள் நீர் நிலைகளில் குளித்துவிட்டு , தங்களிடம் உள்ள "ஒரே" சேலையை பாதி அணிந்துகொண்டு மீதியை " வெயிலில்" நின்று காயவைத்து பின் அணிந்து கொள்கிறார்கள் என்பதால் முதல்வர் "மக்கள் திலகம்" MGR அவர்கள் , பண்டிகை நாட்களில் பெண்களுக்கு " இரண்டு சேலைகள் " வழங்க ஆணை பிறப்பித்தார்கள் ....
#இனிய காலை வணக்கம்........ Thanks...
-
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
நமது மக்கள் திலகம் முதல்வராக பதவியேற்ற புதிதில் 1977 ல் சென்னை கன்னிமாரா ஓட்டலலில் சில வெளிநாட்டு பிரமுகர்களை கௌரவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் விருந்தும் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து தலைவர் வீட்டுக்கு புறப்பட இரவு 11 மணி ஆகிவிட்டது. காரில் போய்க்கொண்டிருக்கும் போது டிரைவரிடம் " நீ சாப்பிட்டியா " என கேட்க அவரும் சாப்பிட்டேனய்யா என பதில் கூற அவர் சொன்ன பதிலால் சந்தேகம் வரவே என்ன சாப்பிட்ட சொல்லு என கேட்க டிரைவர் சில உணவுகளைச் சொல்ல .இந்த உணவு இன்றைய டின்னரில் பரிமாறவே இல்லையே உண்மையைச் சொல் சாப்பிட்டாயா இல்லையா என சற்று கோபத்துடன் கேட்க இல்லிங்கய்யா சாப்பிடலை எனக் கூற மற்ற டிரைவர்கள் சாப்பிட்டார்களா எனக்கேட்க "யாருமே சாப்பிடலய்யா "ஏன் அதற்கு பாதுகாப்பு அதிகாரி அரசு சார்பில் விழா நடந்தால் டிரைவர்களுக்கு சாப்பாடு கிடையாது எனக்கூற அவ்வளவு தான் முகம் கோபத்தில் ரத்த சிவப்பாகி மறுநாள் காலை தலைமச் செயலகம் வந்து எல்லா அலுவல்களையெல்லாம் ஒத்திப் போட்டு பொதுத்துறை, நிதித்துறை அதிகாரிகளை கூப்பிட்டார். முக்கிய பிரமுகர்கள். அதிகாரிகள். விருத்தினர்களுக்கு மட்டும் தான் வயிறு இருக்கிறதா? டிரைவர்களுக்கு இல்லையா ? அவர்களுக்கு பசிக்காதா? இது என்ன உத்தரவு ? யார் போட்டது? எனக் கேட்க அதிகாரிகள் விளக்க நேற்றைம விருந்தின்படி நபர் 1க்கு ரூ 256 மட்டுமே அனுமதி விருந்துக்கு வந்தவரை தவிர மற்றவர்கள் சாப்பிட முடியாது என தயங்கியபடியே சொல்ல இதை கேட்டும் சமாதானமடையாமல், இனி இதுமாதிரி விழா நடந்தால் டிரைவர்களுக்கும் உணவுக்கு வழி செய்திட வேண்டும் இந்தச் செலவுகளை அரசின் கணக்கில் எழுத முடியாதென்றால் கூறிவிடுங்கள் எனது சொந்த பணத்திலிருந்து கொடுக்கிறேன் இது முடியாதென்றால் என்னை அழைக்காதீர்கள் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார் இந்த சம்பவத்துக்கு பின் அரசாங்க டிரைவர்கள் விருந்துக்கு வந்தால் அவர்கள் தனியே சாப்பிடலாம் எனவும் அவ்வாறு சாப்பிடலைன்னா அந்த உரிய தொகை படியாக வழங்க முடிவு செய்யப்பட்டது. தங்களுக்காக முதல்வரே வாதாடினார் எனக் கேட்ட டிரைவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லேயே இல்லை. [நாளை போடப் போறேன் சட்டம் பாரு அது நாடு புகழும் திட்டம்] .எவ்வளவு தீர்க்கதரிசி நமது தெய்வம்........ Thanks..........
-
உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி
==================
#இனிய மதிய வணக்கம் ,
#என் இரத்தத்தின் இரத்தங்களே... Thanks...
-
இதோ புரட்சித்தலைவர் பேசுகிறார்
============================
பேரன்பு கொண்ட தாய்மார்களே, பெருமைக்குரிய தமிழ் பெருமக்களே, என்ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அமரர் அண்ணா அவர்கள். அதைதான் மக்கள் ஆட்சி தத்துவமாக அறிவித்தார்கள் அரசியல் அறிஞர்கள் . மக்களுக்காக மக்களால் மக்களே அமைத்து கொள்கின்ற ஆட்சி மக்கள் ஆட்சி. அந்த மக்கள் ஆட்சிக்கு அஸ்திவாரம் போன்றதுதான் மக்களின் வாக்குரிமை. அந்த வாக்குரிமையின் மீது எழுப்பப்படும் அற்புதமான மாளிகைதான் நல்லரசு. அந்த அரசு நடத்தும் ஆட்சிதான் மக்கள் ஆட்சி. அத்தகைய ஆட்சி நடத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் வல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. நல்லவர்களாகவும் இருக்க வேண்டும். நா நயம் மிக்கவர்களாக இருந்தால் மட்டும் போதாது, நாணயம் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும். நெஞ்சுரம் கொண்டவர்களாக இருந்தால் மட்டும் போதாது, அன்புள்ளம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். மக்களின் மீது அதிகாரம் செலுத்துபவர்களாக மட்டும் அமைய கூடாது. இப்படி மக்களின் பிரதிநிதிகளாக ஆட்சிக்கு வருபவர்கள், அரசில் இடம் பெறுபவர்கள் தூய்மை உள்ளவர்களாக, தொண்டுள்ளும் கொண்டவர்களாக, ஏழை எளிய மக்களின் தோழர்களாக, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசாதவர்களாக, அரசியல் அதிகாரம் என்பது மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பே தவிர மக்களை ஆட்டி படைக்கும் உரிமையை தரும் சாதனமாக கருதாதவர்கலாக, மக்களோடு மக்களாய், மக்களின் தொண்டர்களாய் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதுதான் அமரர் பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்கு அளித்த அரசியல் நெறியாகும்..........👌 Thanks...
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாக.ம்* 26-ஐ* துவக்கி வைத்துதிரியை*பயணிக்க வைக்கும்*நண்பர் திரு.சுகாராம் அவர்களுக்கு பாராட்டுக்கள் /நல்வாழ்த்துக்கள்.,*
-
திரையில் மட்டும்தான் நடிப்பு
அரசியலில் இல்லை.
போலி நாத்திகன் போர்வையில் இருந்தது கிடையாது.
பெரியாரின் நெறியிலே
அண்ணாவின் வழியிலே
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் அவரின் நம்பிக்கை
இனம், மதம், மொழி என அனைத்திற்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் தூக்கி வைத்து கொண்டாடிய திராவிடத் தலைவன்.
தன்னை எதிர்த்தவருக்கும் ஏற்றத்தை மட்டுமே பரிசாய் அளித்த ஏழைப் பங்காளன்.
தான் வாழ்ந்த காலத்தில் இவர் எப்படி வாழ்ந்திருப்பார் என்பதற்கு இன்று அவரின் நினைவு தினத்தில் ரோட்டோரங்களிலும், ஆட்டோ ஸ்டெண்ட்களிலும், தொழிலாளர் கூடங்களிலும் அவரின் புகைப்படம் வைக்கப்பட்டு அதற்கு கடந்த 32 ஆண்டுகளாக எரிந்து வரும் விளக்கும் ஊதுபத்தியுமே சாட்சி.
லோகநாதன் சேகர்
#என்றும்எம்ஜிஆர்..... Thanks...
-
விண்ணும் அழுதது , மண்ணும் அழுதது
மன்னவன் மறைகையிலே - நகக்
கண்ணும் அழுதது , கவிதையும் அழுதது
காவலன் பிரிகையிலே .......
இப்படி ஒருவன் பிறந்ததில்லை
இனியும் ஒருவன் பிறப்பதில்லை !
சந்திர , சூரியர் வாழ்கின்ற வரையிலும்
சந்திரன் புகழ் இருக்கும் ;
ராமச்சந்திரன் என்னும் பேருக்குள்ளே
சரித்திரம் ஒளிந்திருக்கும் !
#மறக்க முடியாத மாமனிதரை
வணங்குகிறேன்.......... Thanks...
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 33 வது ஆண்டு தொடக்கம் .... .
கடத்த 33 ஆண்டுகளாக மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மோடு பசுமையான நினைவுகளோடு வாழ்ந்து கொண்டு வருகிறார். இன்னமும் நம்மோடு தொடர்ந்து பயணிப்பர் . உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்று அவருடைய பிறந்த தினத்தை அனுசரித்து கொண்டு வருகிறார்கள் .
1987 முதல் 2020 இன்றுவரை மக்கள் திலகம் எம்ஜிஆரின் ஆளுமைகள் நம்மை பிரமிக்க வைக்கிறது . உலகத்தில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவர்க்கு மட்டுமே கிடைத்துள்ளது .
32ஆண்டுகள்
இடைவெளி இல்லாமல் அவருடைய திரைப்படங்கள் தமிழகமெங்கும் திரை அரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது .
மக்கள் திலகம் புகழ் பாடும் புதிய புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் வந்த வண்ணம் உள்ளது .
எல்லா தரப்பிலிருந்தும் பல்வேறு எம்ஜிஆர் விழாக்கள் உலகமெங்கும் தெடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது .
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பல்வேறு அமைப்புகள் மூலம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது .
அனைத்து ஊடகங்களும் எம்ஜிஆர் நினவு நாளை சிறப்பித்தார்கள் .
பத்திரிகைகள் அனைத்தும் எம்ஜிஆர் நினைவு நாளை கூர்ந்து கட்டுரைகளை பதிவிட்டார்கள்
மக்கள் திலகமே
நாங்கள்
கோடிக்கணக்கான உங்கள் ரசிகர்கள்
கடந்த முப்பது ஆண்டுகளாக உங்களின் திருவுருவம் தினமும் காணாத நாளே இல்லை .
தினமும் உங்கள் படங்கள் , பாடல்கள் எங்களுக்கு விருந்தது .
உங்கள் பெயரை சொல்லி வெற்றி கண்டோர்கள் பட்டியல் ..... நீள்கிறது .
இன்றும் உங்கள் அரசாங்கம் நடக்கிறது .
தமிழக அரசியலில் நீங்களதான் மைய்யம்
வாழ்ந்த காலத்தில் பலரையும் வாழ வைத்தீர்கள் .
33 ஆண்டுகளாக உங்கள் பெயரை உச்சரித்தவர்களை வாழ வைத்தீர்கள் .
உலகத்தில் எங்கும் நடக்காத அதிசயம்
உங்கள் ரசிகனாக நாங்கள் வாழ்வதை எண்ணி பெருமை கொள்கிறோம்........... Thanks...
-
புரட்சித் தலைவரின்
ரசிகன் பக்தன்
என்ற
பெருமிதத்துடன்
இந்த பதிவு
த*மிழ*க முத*ல்வ*ர் எம்.ஜி.ஆர் செய்த* ந*லத்திட்ட*ங்க*ளில் சில...
---------------------------------------------------------------
குறு விவசாயிகளுக்கு
--------------------------------------
இலவச மின்சாரம்--
விவசாயக் கடன் தள்ளுபடி--
பயிர் பாதுகாப்பு இன்ஷூரன்ஸ் திட்டம்--
கரும்பு கொள்முதலை அரசே ஏற்றுக் கொண்டது.
பெரு விவசாயிகளுக்கு
குந்தா மின் நிலையம்--
TAMIN--கிரானைட் தொழிற்சாலை--மணலியில்--
பாதிக் கடன் சலுகையில் விவசாய உற்பத்திக்கு பணம் வழங்கியது--
காற்றாலை மின்சாரம்
ஏழைகளுக்கு
------------------------
குடிசை தோறும் ஒரு இலவச மின் விளக்கு-
TNPL--காகித உற்பத்தி தொழிற்சாலை தொடங்கியது--
நியாய விலைக் கடைகளில் பாமாயில் 10லி வழங்கியது--
சரளைச் சாலைகளுக்கு கிராமம் முழுவதும் ஒரே சீராக தார் சாலை போட்டது--
6300 க்கும் மேலாக அரசு பேருந்து வழித்தட போக்குவரத்து தொடங்கப்பட்டது.
பள்ளிக்கு செல்லும் பாலக*ர்க*ளுக்கு மட்டுமின்றி அனைத்து ஏழைக் குழ*ந்தைக*ளுக்கும் தினன் ஒருவேளை ச*த்துணவு சாப்பிட உறுதி செய்த*து.
அத*ன்மூலம் எண்ணற்ற ஆத*ர*வ*ற்ற, வித*வை தாய்மார்க*ளுக்கு வேலை கொடுத்த*து.
விலைவாசியை தான் ஆண்ட 11 ஆண்டுக*ளிலும் பெரிதாக உய*ராமல் க*ட்டுக்குள் வைத்த*து. நியாயவிலைக் க*டைக*ளில் சீரான விநியோகம்.
அப்போத*ய எஸ்.எஸ்.எல்.சி மாணவ*ர்க*ள் பெரும்பாலோனோர் அத்துட*ன் ப*டிப்பை நிறுத்தி க*ல்லூரி ப*டிப்பை தொட*ராமல் (குறிப்பாக கிராம*ப்புற பிள்ளைக*ள்) இருந்த* நிலையை மாற்ற ப*ள்ளியிலேயே +2 என்ற மேற்ப*டிப்பை தொட*ர*ச்செய்த*து.
இலவ*ச* ஆம்புலன்ஸ் சேவையை இந்தியாவிலேயே முத*ன்முத*லில் அறிமுக*ப்ப*டுத்தி செய*ல்ப*டுத்திய*து.
வ*ச*தி குறைந்த* வ*குப்பின*ர் இலவ*ச*மாக*வும்,மற்ற*வ*ர்க*ள் குறைந்த தொகையில் அர*சு மருத்துவ*ம*ணையில் ட*யாலிசிஸ் செய்துகிள்வ*து.
இர*ண்டுபேர் சைக்கிளில் செல்ல அனும*தி
காவ*ல*ர்க*ள் அனைவ*ரும் முழுக்கால் ச*ட்டை ம*ற்றும் கூம்பு வ*டிவிலான தொப்பியை மாற்றிய*து.
காவ*ல*ர்க*ள் அனைவ*ருக்கும் ரெயின்கோட் அளித்தது.
ம*க*ளிர்க்காவ*ல் நிலைய*ம் அமைத்த*து.
புதிய க*ல்லூரிக*ள், புதிய ப*ல்க*லைக்க*ழ*க*ங்க*ள், பொறியிய*ல் க*ல்லூரிக*ள் நிறுவி அத*னால் க*ல்விப்புர*ட்சியை ஏற்ப*டுத்தியது.
உலகத்த*மிழ் மாநாட்டை சிற*ப்பாக ந*ட*த்திய*து.
த*மிழுக்கென த*னிப*ல்க*லைக்க*ழ*க*ம் க*ண்டது.
எழுத்துச்சீர்திருத்த*ம் கொண்டுவ*ந்த*து.
15 ஆண்டுக*ளாக ந*டைபெறாமலிருந்த* உள்ளாட்சி, ந*க*ராட்சி தேர்த*லை ந*ட*த்திய*து.
ப*ர*ம்ப*ரை க*ர்ணம் முறையை ஒழித்து கிராம நிர்வாக அலுவ*ல*ர்க*ளை தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கச் செய்தது.
முல்லைப்பெரியாறு அணையை ப*லகோடி செலவில் செப்ப*னிட்டு இன்றைக்கும் 142 அடி உய*ர*த்திற்கு தேக்கி வைக்கும் அளவிற்கு ப*லப்ப*டுத்தி த*ந்தது.
ப*ராமரிப்பில்லாத* கோவில்க*ளுக்கும் ஒருவிளக்கு பூஜைக்கு உறுதி செய்த*து.
ந*க்ச*ல்பாறி, ஜாதிச்ச*ண்டைக*ள், வன்முறைக்க*லாச்சார*ம் அதிக*ம் நிக*ழாவ*ண்ணம் பார்த்துக்கொண்ட*து.
இவைகள் எல்லாம் யார் ஆட்சியில் என்றால்---
நடிகன் நாடு ஆண்டதால் தான் நாடு நாசமானது என்று நா கூசாமல் நவில்கின்றவர்களுக்கு---
சினிமா கவர்ச்சியால் சீரழிந்தது செந்தமிழ் நாடு என்னும் செம்மொழித் தலைவருக்கும்???
தெரிந்திருந்தும் தெரியாதது போல் நடிக்கும் திசையில்லா ஏனைய உதிரிக் கட்சிக்காரர்களுக்கும்--
நினைவூட்ட விரும்புகிறோம்??
எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் இத்தகைய ஏற்றங்கள் நடந்தேறின!!!!!
இன்னும்,,,,தறியாளர்களுக்கு,,தொழிலாளர்களுக்கு--நடுத்தர வர்க்கத்தினருக்கு என்று--
எம்.ஜி.ஆர் ஆட்சியின் இன்ன பிற சாதனைகள் தொடர்ந்து பதிப்பிக்கப்படும்!! காத்திருக்கவும்!
இனிய மதிய வ*ணக்கத்துட*ன்....... Thanks...