நன்றி: தினதந்திQuote:
திக்கற்ற தேவதைகள்
திருநங்கைகள் எனப்படும் அரவாணிகளுக்கு இன்றும் நமது சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்காமலேயே இருந்து வருகிறது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளின் கண்ணீர் கதைகள் `திக்கற்ற தேவதைகள்' என்ற பெயரில் வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது.
நிகழ்ச்சியில் வாரந்தோறும் இரண்டு திருநங்கைகள் கலந்து கொண்டு தங்கள் கதைகளை கூறுகிறார்கள்.
வியாழக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, மறு ஒளிபரப்பாக புதன்கிழமை காலை 10 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.