http://i60.tinypic.com/1zxb9f6.jpg
Printable View
http://i62.tinypic.com/jubnm0.jpg
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளாகிய இன்று முதல் , "திராவிட இயக்க வரலாறு" என்ற தலைப்பில், ஒரு தொடர் எழுதவுள்ளேன். இத்தொடரானது, புதிய திரி ஒன்று துவக்கப்பட்டு, அதில் இடம் பெறும் என்றும் தெரிவித்து கொள்கிறேன்.
தலை சிறந்த சட்ட மன்ற சொற்பொழிவாளர் பேரறிஞர் அண்ணா
27-01-1766 அன்று அயர்லாந்து நாட்டை சார்ந்த 'எட்மண்ட் பர்க்' நிகழ்த்திய முதல் பாராளுமன்ற சொற்பொழிவே அவரை தலை சிறந்த அரசியால் அறிஞராக உயர்த்தியது. அது போல், 30-04-1957 அன்று இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய சிறப்பு உரை, அவரை தேர்ந்த சட்டமன்ற வாதியாக வெளியுலகிற்கு அடையாளம் காட்டியது.
அவரது விரிவான சட்டமன்ற உரை, "திரவிடர் இயக்க வரலாறு" என்று நான் துவக்கும் புதிய திரியில் எழுதவுள்ளேன் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் கதை திரைப்படங்களான பட்டியல் :
1. ஓர் இரவு
2. சொக்க வாசல்
3. நல்ல தம்பி
4. நல்லவன் வாழ்வான்
5. எதையும் தாங்கும் இதயம்
6. ரங்கோன் ராதா
7. தாய் மகளுக்கு கட்டிய தாலி
8. காதல் ஜோதி
9. வண்டிக்காரன் மகன்
பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்னேட்டில் பொறிக்கத்தக்க உரை :
1962ம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில், தமிழகத்தில் நடைபெற்ற மூன்றாவது சட்ட மன்ற தேர்தல் நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழகம் இந்த தேர்தலில் 142 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 18 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் போட்டியிட்டது.
பேரறிஞர் அண்ணா அவர்களும், முன்பு போலவே (1957 சட்ட மன்ற தேர்தலில் காஞ்சி மாநகரில் போட்டியிட்டது போலவே) வேட்பாளராக நின்றார்.
பேரறிஞர் அண்ணா அவர்களை எதிர்த்து போட்டியிட்டவன் - என்று பிற்காலத்தில் பீற்றிக்கொள்ளக்கூடிய பெருமை ஒன்றை தவிர, அரசியல் வாழ்வில் வேறு எவ்வித ஆர்வமோ, செல்வாக்கோ இல்லாத ஒருவரை காங்கிரஸ் கட்சியினர், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு எதிராக நிறுத்தினர்.
அப்போது முதலமைச்சராக இருந்த காமராசரும், இதர அமைச்சர்களும் பேரறிஞர் அண்ணாவை வீழ்த்துவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டனர். போதாக்குறைக்கு, தந்தை பெரியார் அவர்களும், அந்த கூட்டத்தினருடன் இணைந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவை தோற்கடிக்க வரிந்து கட்டினார்.
அந்த மூன்றாவது தேர்தலின் முடிவுகள் , தி,.மு. க. தன்னுடைய அரசியல் பயணத்தில், கணிசமான அளவுக்கு, முன்னேறியிருப்பதை உலகுக்கு பறை சாற்றின. 50 சட்ட மன்ற தொகுதிகளும், 7 பாராளுமன்ற தொகுதிகளும், கழகத்தின் வசமாயின. கழகம் ஆரம்பித்து, இந்த குறுகிய காலத்தில், பெற்ற இந்த குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டு உள்ளூர அதிர்ச்சி அடைந்து மருட்சியுற்றனர்.
ஆயினும், அந்தோ...... கழக் காவலர் நம் பேரறிஞர் அண்ணா அவர்கள் அநியாயமாக தோற்கடிக்கப்பட்டார். பெற்ற வெற்றி கழகத்தவர் , பேரறிஞர் அண்ணா அவர்களின் தோல்வி யினால் துவண்டு போயினர். ஆனால், பேரறிஞர் அண்ணா அவர்களோ, "எதையும் தாங்கும் இதயம் படைத்தவர் அல்லவா ? தம் அடைந்த தோல்வியால், அவர் துவண்டு போய் படுத்து விட வில்லை. சோகம் தாளாமல், நெஞ்சு விம்ம நின்ற தம் தம்பியர்க்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அக்கறையோடு மேற்கொண்டு செயல்களில் ஈடுபட்டார்.
04-03-1962 அன்று நடைபெற்ற தி. மு. க. தேர்தல் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு கூட்டத்தில், உற்சாக உரையாற்றிய உரை பொன்னேட்டில் பொறிக்கத்தக்கதாகும்
அந்த வரலாற்று சிறப்பு மிக்க உரையில்,.
"ஐரோப்பா கண்டத்தில் இசுலாமியருக்கும், கிரிஸ்தவருக்கும் , இடையே புனிதப்போர் நிகழ்ந்தது. இயேசு பிறந்த ஜெருசலம் நகருக்குள், கிறிஸ்தவர்கள் நுழையக்கூடாது என்று இசுலாமியர்கள் கூறியதாலேயே அந்த போர் நிகழ்ந்தது.
சாலடி மன்னன், இசுலாமியருக்கு தலைமை வகிதது போர் நடத்தினான். ரிச்சர்டு என்பவன் கிறிஸ்தவருக்கு தலைமை தாங்கினான். ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் அடிப்படையில், போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எல்லாக் கிறிஸ்தவர்களும் ஜெருசலம் நகருக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஒரு நிபந்தனை என்றான் சாலடி மன்னன். அதாவது,
கிறிஸ்தவர்களின் தலைவன் ரிச்சர்டு மட்டும் உள்ளே வரக்கூடாது என்பது தான் அந்த போர் நிறுத்த நிபந்தனையின் முக்கிய அம்சம்.
அது போல், நான் வெளியே நிற்கிறேன்; என் தம்பியரின் படை உள்ளே செல்கிறது. தலைவன் இல்லாத அணிவகுப்பு அமைக்க முடியும். ஆனால், அணிவகுப்பு இல்லாது தலைவைனை அமைக்க முடியாது. என் தோல்வியை பற்றி வருந்துவபர்களுக்கு நான் இதைத்தான் சொல்லிக் கொள்ளுவேன். கழகம் பெற்றுள்ள இந்த வெற்றி குறித்து நீங்கள் அடைய வேண்டிய மகிழ்ச்சியை இன்றே அடைந்து விடுங்கள். நாளை முதல், இதை விட மிகக் கடுமையான கடமையுணர்ச்சியும், பொறுப்புணர்ச்சியும் மிக்க பணிகளில் ஈடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
என்று பலத்த கரவொலிக்கிடையே, பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்.