-
புரட்சித்தலைவர் அவர்கள் குண்டடி பட்டு மீண்டும் நடிக்கும்போது, அவருக்கு வசன உச்சரிப்பில் சில வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது.
ஆம், புரட்சித்தலைவர் அவர்கள் பேசுவது சமூக சீர்திருத்தங்கள், அரசியல் கருத்துக்கள், சமூக கருத்துக்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லாமல் வசனங்களின் நீளம் குறைக்கப்பட்டது. அத்தகைய கடமையைச் செவ்வனே செய்தவர் உயர்திரு. "முரசொலி" செண்ரணம் அவர்கள். அவரை போலவே உயர்திரு ஆர்.கே.சண்முகம் அவர்களும் .... இவர்கள் இருவரும் புரட்சித்தலைவரின் அங்கீகாரத்தை பெற்ற திரைக்கதை வசனகர்த்தாவாக திகழ்ந்தார்கள்.
"மாட்டுக்கார வேலன்" படத்தில் எழுத்து உயர்திரு. ஏ. எல். நாராயணன் என்று வரும். அவருக்கு நீண்ட வசனங்கள் எழுதியே பழக்கம்.........! நிலைமையை புரிந்துகொண்ட அவராகவே "நான் விலகிக்கொள்கிறேன்" என்று புரட்சித்தலைவரிடம் சொல்லிவிட்டார். அதைப்பிறகு உயர்திரு "முரசொலி" சொர்ணம் அவர்கள் தான் உரையாடல் எழுதியது. மேலும் அந்த படத்தில் புரட்சித்தலைவர் அவர்கள் வேண்டுகோலின்படி பின்னணி குரல் கொடுத்துள்ளார் [ மனசாட்சி பேசுவது - வேலா நீ ஒரு ....................கண்ணீர்விடு]..............
. Thanks wa.,
-
திரு. கலைஞானம் அவர்களுக்கு,
விளம்பரம் என்றால் திரு. "கலைப்புலி" தாணு அவர்கள் தான். யாருக்கு சந்தேகம் இல்லை.
ஆனால் :
புரட்சித்தலைவரின் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" வந்த தேதி 14/1/1978 பைரவி வந்த தேதி 2/6/1978 !!!
பைரவி படம் வந்த நேரத்தில் புரட்சித்தலைவர் நடிகர் அல்ல தமிழகத்தின் முதல்வர் அதாவது திரு துறையில் இல்லை சார்.
புரட்சித்தலைவர் நடித்துக்கொண்டு இருந்த காலத்திலேயே பெரிய பதாகை/ கட் அவுட் என்பது இருந்தது சார்!!!
மேலும் என் அண்ணன் படத்துக்கு வானளாவிய கட் அவுட் ......மேலும் ஊருக்கு உழைப்பவன் .......மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை சென்னை மவுண்ட் ரோடு சாலையில் இருந்த பதாகைகள் தணல் பார்த்ததில்லையா??
இந்த ஆதாரம் போதுமா, மேலும் ஆதாரம் தேவையா???
.............. Thanks wa.,
-
அண்ணன் விஜயன் அவர்கள் 15 தலைவரின் பக்தர்களை தலைவரின் படுக்கை அறைக்கே அழைத்து சென்றார்.இந்த வாய்ப்பு அவரால் மட்டுமே நடந்தது.அப்பொழுதுதான் தலைவர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார் என்பதில் பூரிப்படைவதைவிட தலைவர் மேல் எனக்கு முதல் முறையாக பொய்கோபம்தான் வந்தது.காரணம் சாதாரண கூலித்தொழிலாளி கூட ஓரளவு வசதியை எதிர்பார்பான். ஆனால் எத்தனையோ ஜூவன்களுக்கு படியளக்கும் என்தெய்வம் ஏன் தன்னை வருத்தி வாழவேண்டும் என்று வருந்தினேன். இதைவிட கழிவறை இன்னும் சிறியது.சின்ன கண்ணாடி.ஒருஷேவிங்மிஷின்.குழந்தைகள் குளிக்ககூடிய அளவில் சின்ன டப்பு.. இவ்வளவுதான்.அதில் ஒரே ஒரு கொடுப்பினை என்னவென்றால் கழிவறையில் தலைவரின் கால்கள் படும் தடத்தை என் இருகண்களால் ஒற்றிக் கொண்டேன்.என்ன தவம் செய்தேனோ இந்த பெரும் பாக்கியத்தை நான் பெற அண்ணன் அமரர் விஜயன் அவர்களை என் வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாது.............. Thanks wa.,
-
கடந்த வாரம் (31/05/19) திண்டுக்கல் என்.வி.ஜி.பி. யில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகளில் 5 நாட்கள் நடைபெற்றது .
http://i66.tinypic.com/2h5678g.jpg
http://i63.tinypic.com/153nrrc.jpg
http://i65.tinypic.com/29lhjd0.jpg
http://i68.tinypic.com/2yxnc0g.jpg
-
இன்று முதல் (07/06/19) கோவை சண்முகாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகளில் வெற்றி விஜயம்
http://i67.tinypic.com/zvsexd.jpg
-
இன்று முதல் (07/06/19) சென்னை அகஸ்தியாவில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 2 காட்சிகள் (மேட்னி / மாலை ) நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/27zf3t4.jpg
-
ஜெனோவா மலையாளத்தில் முதலில் 24/4/1953ல் வெளியானது .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,பி..எஸ்.சரோஜா , ,பி.எஸ்.வீரப்பா , எம்.ஜி.சக்கரபாணி , ஆர். பாலசுப்ரமணியம் ,ஜூனியர் கண்ணாம்பா ,ராஜாமணி ஆகியோரது நடிப்பில்
தமிழில் "ஜெனோவா "05/06/1953ல் வெளியானது,
பட நிறுவனம் : சந்திரா பிக்ச்சர்ஸ் , ஆலப்புழை .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் : சிப்ரஸோ
பாடல்கள் : சுரதா, ரமணி ,
இசை அமைப்பு, எம்.எஸ். விஸ்வநாதன் ( முதல் எம்.ஜி.ஆர். படம் ).ஞானமணி, கல்யாணம்
வசனம் : சுரதா, இளங்கோவன் , நெடுமாறன்
இயக்குனர் : எப் . நாகூர்
கதை : ஸ்வாமி பிரம்மவரதன்
ஒளிப்பதிவு : ஜி.விட்டல்ராவ் .
ஸ்டண்ட்: சோமு & பார்ட்டி
சென்னை பாரகன் , பிரபாத், மகாலட்சுமி, காமதேனு அரங்குகளில் வெளியானது .
திருச்சி ராஜாவில் 112 நாட்கள் ஓடியது .
http://i68.tinypic.com/300efci.jpg
-
-
-