Originally Posted by
esvee
மக்கள் திலகத்தை காதல் காட்சிகளில் மிக சிறந்த முறையில் இயக்கிய பெருமை ப .நீலகண்டன்
அவர்களை சேரும் .
காதல் மன்னன் என்று ஜெமினி புகழ் பெற்றிருந்தாலும் மக்கள் திலகம் அவர்கள் ரொமான்ஸ் காட்சிகளில் மிகவும் அழகாக , நளினமாக , நடனத்துடன் நடித்து ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை அடித்திருப்பார் . இனிமையான பாடல்களும் , படமாக்கப்பட்ட விதமும் , எம்ஜிஆரின் உடை ,
சிரித்தமுகம் ,மறக்க முடியாத அளவிற்கு ரசிகர்கள் ஒன்றி போனார்கள் .
இன்று பார்த்தாலும் எம்ஜிஆரின் காதல் பாடல்கள் பிரமிக்க வைக்கிறது .
இயக்குனர் ப.நீ கை வண்ணதில் வந்த சில மக்கள் திலகத்தின் கனிரச பாடல்கள் .
1. கனவுகளே ... காதல் கனவுகளே ..... நீதிக்கு தலை வணங்கு
2. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து -----------நினைத்ததை முடிப்பவன்
3. நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - நேற்று இன்று நாளை
4. என் உள்ளம் உந்தன் ஆராதனை - ராமன் தேடிய சீதை
5. நல்லது கண்ணே .. கனவு - ராமன் தேடிய சீதை
6. தமிழில் அது ஒரு இனிய கலை --- சங்கே முழங்கு
7. இரண்டு கண்கள் பேசும் விழியில் - சங்கே முழங்கு
8. கண்ணன் எந்தன் காதலன் - ஒரு தாய் மக்கள்
9. மாலை நேர தென்றல் என்ன - நீரும் நெருப்பும்
10.கன்னி ஒருத்தி மடியில் - நீரும் நெருப்பும்
11.எங்கே அவள் என்றே மனம் - குமரிகோட்டம்
12.நாம் ஒருவரை ஒருவர் - குமரிகோட்டம்
13.தொட்டு கொள்ள வா. தொடர்ந்து - மாட்டுக்கார வேலன்
14,நீல நிறம் - வானுக்கும் - என் அண்ணன்
15.மயங்கும் வயது ......- கணவன்
16.சிரித்தாள் பதுமை - கண்ணன் என் காதலன்
17.நினைத்தேன் வந்தாய் நூறு வயது - காவல்காரன்
18.மெல்ல போ .மெல்ல போ - காவல்காரன்
19.என்னருகே நீ இருந்தால் - திருடாதே
20.பாலாற்றில் தேனாடுது - கொடுத்து வைத்தவள் .
மேற்கண்ட பாடல்களில் மக்கள் திலகத்தின் வசீகர தோற்றமும் , காதல் பாவனைகளும் அருமை.
ஒரு சிலர் கிண்டல் செய்தாலும் மக்கள் திலகத்தின் திறமைகளை காதல் காட்சிகளை இன்றும் என்றும் ரசித்து பார்த்து மகிழ்வார்கள் .