-
16/3/2018 முதல் கம்பம் யுவராஜா ,பழனி மினிரமேஷ் , மற்றும் மானாமதுரை,
காரைக்குடி அரங்குகளில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் ஆர்ப்பரித்த "நாடோடி மன்னன் " வெற்றி முரசு கொட்டுகிறது .
http://i63.tinypic.com/28by4p5.jpg
23/3/2018 முதல் சென்னை ஆல்பட்,பாரத், நெல்லை-ரத்னா , தூத்துக்குடி கிளியோபாட்ரா ,நாகர்கோயில் சக்கரவர்த்தி மற்றும் பல நகரங்களின்
அரங்குகளில் வெற்றி விஜயம் .
-
http://i67.tinypic.com/rlxk40.jpg
நாள்:08/04/2018 தவறாக 18/3/2018 என்று பேனரில் பதிவாகியுள்ளது
-
http://i67.tinypic.com/4scepk.jpg
.நேற்று (18/3/18) நடைபெற்ற சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் பெருந்திரளாக (சுமார் 100 பேர் ) கலந்து கொண்டனர் .அனைவரையும் வரவேற்று , உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு பேசினார். மெகா டிவி புகழ் திரு.ஆதவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் கடமை ஆற்ற வேண்டியதையும், அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டுமென்று உரையாற்றினார் . திரு.துரை கருணா ,(பு திய தலைமுறை ஆசிரியர் ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பெருமைகளை ,சிறுமை படுத்துவோரை புறந்தள்ளி எம்.ஜி.ஆர். புகழ் தொடர்ந்து பாடுவோம் என்கிற வகையில் பேசினார் .அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த முக்கிய நபர்களுக்கு ,பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது .கூட்டத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு,இனிப்பு, காரம்,,தேநீர் வழங்கப்பட்டது . முக்கிய நபர்கள் கூட்டத்தில் தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் வழங்கினார்கள் .
அனைத்திந்திய எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கத்தின் செயல்பாடுகளை
விரிவாக எடுத்துரைத்தார் .திரு.சுரேந்திரபாபு . கூட்டத்தில் பேசும்போது ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் திரு.லோகநாதன் நடைபெற உள்ள அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் விரிவான விளக்கம் அளித்த திரு.பி.எஸ். ராஜு அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் ,சமீபகாலமாக ஊடகங்கள், பத்திரிகைகளில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள் /பத்திரிகைகளுக்கு கண்டனம் /எதிர்ப்பு தெரிவிக்க நமது ஒற்றுமை, பங்களிப்பு அவசியம் என்கிற கருத்தை பதிவு செய்த பின்னர் , கடந்த 2017ம் ஆண்டில் சென்னை, மதுரை, கோவை மற்றும் இதர நகரங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் வெளியானதன் பட்டியலை திரு.பி.எஸ். ராஜு அவர்களிடம் அளித்து ,உரிமைக்குரல் மாத இதழில் பிரசுரம் செய்யும்படி கேட்டுக் கொண்டார் . கூட்டம் முடியும் தருவாயில் திரு.மதியழகன் (சிங்கப்பூர் எம்.ஜி.ஆர். பக்தர் )வந்திருந்து அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் சில வார்த்தைகளை பேசினார்..அப்போது அனைத்திந்திய எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கம் சார்பாக திரைப்படங்கள் வெளியாகும் செலவினங்களில் எனது பங்களிப்பும் அவசியம் இருக்கும் என்றார் .அத்துடன் வந்திருந்த எம்.ஜி.ஆர். பகதர்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் சரவணபவன் , வடபழனியில் அறுசுவை விருந்து படைத்ததோடு, நீண்ட நேரம் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு விடை பெற்றார் .
-
http://i67.tinypic.com/3537h54.jpg
புகைப்படத்தில் திரு.சுரேந்திரபாபு பேசும்போது, அருகில் திருவாளர்கள் பி.எஸ். ராஜு, ரங்கராஜன், ராமச்சந்திரன், தம்பாச்சாரி, மதியழகன், லோகநாதன்,துரை கருணா ஆகியோர்.
-
http://i66.tinypic.com/25jff4m.jpg
திரு.தம்பாச்சாரி, திரு.மதியழகன், திரு.லோகநாதன்
-
-
-
-
-