திருப்பதி ராஜாவின் நிழற்படங்கள் தொடர்ச்சி...
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...191554f18cf603
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...9ab76fb8078855
https://scontent-sin1-1.xx.fbcdn.net...eb&oe=56513FE0
Printable View
திருப்பதி ராஜாவின் நிழற்படங்கள் தொடர்ச்சி...
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...191554f18cf603
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...9ab76fb8078855
https://scontent-sin1-1.xx.fbcdn.net...eb&oe=56513FE0
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...8e50feadd3c9dc
from Chithra Lakshmanan's FB page.
From the FB page of Chitra Lakshmanan
https://scontent-sin1-1.xx.fbcdn.net...dd&oe=56161516
அனைத்து நடிகர் திலகம் ரசிகர்களுக்கு ஒரு அன்பார்ந்த வேண்டுகோள் !
நமது திரை உலக சக்ரவர்த்தி நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் 1959இல் வெளிவந்து அனைத்து திரையுலகமும் திரும்பி பார்க்கும் வகையில் பெருவெற்றி கண்டு முதன் முதலாக ஒரு இந்திய திரைப்படம் உலக படவிழாவான ஆசிய ஆப்ப்ரோ பிலிம் பெஸ்டிவல் பங்குகொண்டு ஆசிய ஆப்ரிக்க கண்டத்தின் சிறந்த நடிகர் என்று நமது நடிகர் திலகத்திற்கு பட்டம் கொடுத்து, அவரை இந்திய திரை உலகின் முதல் உலக நாயகன் என்று அடையாளம் காட்டிய திரைப்படம் வீர பாண்டிய கட்டபொம்மன்.
தற்போது டிஜிடல் முறையில் திரைப்படத்தை உலக தரத்திற்கு மாற்றி ஜூலை 31 முதல் தமிழகம் எங்கும் வெளியிட விளம்பரம் வந்துள்ள நிலையில், இன்று தினத்தந்தியில் நடிகர் திலகம் அவர்களின் பேரனும் திரு பிரபு அவர்களின் மகனுமான திரு விக்ரம் பிரபு அவர்கள் நடிப்பில் படபிடிப்பு முடிந்து என்றோ வெளிவர வேண்டிய திரைப்படம், நமது நடிகர் திலகம் அவர்கள் மணிமண்டபம் அமைவதை வேண்டுமென்றே தாமதபடுத்தும், அந்த என்னத்தை தவிர்த்துவரும், அதற்க்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளாத நடிகர் சங்க தலைவர் நடிகர் சரத்குமார், திருமதி ராதிகா பட கம்பெனி தயாரிப்பில் "இது என்ன மாயம்" திரைப்படம் வெளிவரும் விளம்பரம் வந்துள்ளது !
பல்வேறு பிரச்னையில் விற்காமல் இவ்வளவு காலம் இருந்த இந்த திரைபடம் நமது நடிகர் திலகம் அவர்களின் திரைப்படமான வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெளிவரும் அதே தினம் ஜூலை 31ஆம் தேதி வெளிவர இருப்பதாக இன்று விளம்பரம் வந்துள்ளது.
நடிகர் திலகத்தின் நிழலில் இந்த திரைப்படம் அதே தேதியில் வெளியிட்டு, நடிகர் திலகம் ரசிகர்களை எந்த திரைப்படத்திற்கு செல்வது என்ற குழப்ப நிலைக்கு தள்ளபார்க்கின்றனர் இந்த வியாபாரிகள் !
இவ்வளவு நாள் வெளியீடு தள்ளி தள்ளி சென்ற இது என்ன மாயம் திரைப்படம், திடீரென ஜூலை 31 அன்று வெளியிட காரணம் என்ன ?
நமது நடிகர் திலகம் ரசிகர்களை தங்களுடய சுய நலத்திற்கு பயன் படுத்திக்கொள்ளவேண்டும் என்ற காரணத்தால் தான் என்று இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் !
காரணம் இன்றுவரை திரு விக்ரம் பிரபு அவர்களின் திரைப்படங்கள் சிறந்ததொரு ஒபெநிங் கிடைப்பதற்கு நமது நடிகர் திலகம் அவர்களின் ரசிகர்களே முக்கிய காரணம் என்பதை அனைவரும் அறிவர்.
அப்படி இருக்க கட்டபொம்மன் திரைப்படத்திற்கு சிறந்த ஒபெநிங் கிடக்க கூடாது என்று நினைத்து செயல்படும் சதிவேலையா அல்லது நடிகர் திலகம் ரசிகர்கள் நிழலில் வழக்கம் போல குளிர் காயலாம் என்ற எண்ணமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெளிவு படுத்தவேண்டும்.
நடிகர் திலகம் மீது உண்மையான மதிப்பும் மரியாதையும் அன்பும் பாசமும் வைத்திருக்கும் " எனதருமை பிள்ளைகளே " என்று நடிகர் திலகம் அன்புபொங்க அழைக்கும் அவரது ரசிக கண்மணிகள், திரு விக்ரம் பிரபு அவர்கள் நடிப்பில், நமது நடிகர் திலகம் மணிமண்டபம் கட்டுவதை வேண்டுமென்றே காலதாமதம் செய்யும் நடிகர் சங்க தலைவர் திரு சரத்குமார் கம்பெனி தயாரிப்பில் வெளிவரும் "இது என்ன மாயம்" படத்தை முதல் நான்கு வாரம் வரை பார்க்காமல் தவிர்க்கவேண்டும் என்றும்
நம்முடைய முக்கியத்துவத்தை வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு தான் முன் உரிமை கொடுக்கவேண்டும் என்று நடிகர் திலகம் அவர்களின் உண்மையான ரசிகர்கள் அனைவரையும் நான் பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்...!
அப்படி ஒரு வேளை இது என்ன மாயம் திரைபடம் வரும்பட்சத்தில், நமது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தள்ளி வைக்க சம்பந்தப்பட்டவர்கள், நேரிடையாகவோ மறைமுகமாகவோ நிர்பந்திக்கப்படும் நிலையில், அனைத்து நடிகர் திலகம் ரசிகர்கள், இந்த இது என்ன மாயம் திரைப்படத்தை ஒட்டுமொத்தமாக பார்க்க போவதை தவிர்பதோடு மட்டும் அல்லாமல் "நிராகரித்து " அந்த திரைப்படத்திற்கு "ஒரு ருபாய்" கூட செலவு செய்யாமல் நமது ஒட்டு மொத்த எதிர்ப்பை காட்டவேண்டும் என்று அனைத்து நடிகர் திலகம் ரசிகர்களிடமும் கேட்டுகொள்கிறேன்.
இதுதான் நமது தமிழ் இன தலைவன் தமிழகத்தின் அசல் வித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்...!
மன்னிக்க வேண்டும் ரவிகிரண் சார்!!
விக்ரம் பிரபு அவர்கள் நடிகர்திலகத்தின் பேரர் எனினும் அவர் ஒருக்காலும் நடிகர்திலகம் ஆகி விட முடியாதே !! அவர் படம் ஒரு போட்டிப் படமே அல்ல!!
தனது தனித்தன்மையையும் கூட்டமீர்க்கும் காந்தப் புலத்தையும் காலங்களை வென்ற கட்டபொம்மர் நிரூபிப்பார்!
Cloud o' Nine songs Vs Passing Cloud songs
ஒன்பதாம் அடுக்கு மேகப் பாடல்களும் கடந்து செல்லும் மேகப் பாடல்களும் !
குறுந்தொடர் பகுதி 1 கர்ணன்!
உள்ளத்தில் நல்ல உள்ளம் Vs போய் வா மகளே போய் வா !
Quote:
நாம் பார்த்து ரசிக்கும் மதுர கானங்களில் பல நமது மனதிலேயே நங்கூரமிட்டு உறக்கத்தில் கூட மனச்செவிகளில் ரீங்காரமிடுகின்றன!! காரணம்....
இசைக்கோர்ப்பு நம்மை ஆகர்ஷித்து ஏதோவொரு இனம் புரியாத பரவச நிலைக்கு நம்மை உட்படுத்துவதே !!
பாடல் காட்சியமைப்பும் நன்கு அமைந்து இசையும் மதுரமாகப் பொருந்தினால் ஒன்பதாம் மேகத்தின் Cloud o' 9 கூரை மேல் அமர்ந்திருப்பது போன்ற சிலிர்ப்பே !!
பல பாடல்கள் இவ் வண்ணம் அமையாமல் கடந்து செல்லும் மேகங்களாகவும் Passing Clouds இருப்பதுண்டு !!
கர்ணன் திரைக்கவியத்தில் இறுதிக்கட்ட தெய்வீகப் பாடலான உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் மனதை ஈர்க்கும் சீர்காழியாரின் குரல் வளத்தாலும் MSV பொருத்தமான இசைக் கோர்ப்பினாலும், இதயத்தைப் பிழியும் நடிகர்திலகத்தின் வசனமற்ற உடல்மொழி முகபாவ வேதனை வெளிப்பாடுகளாலும், என் டி ஆரின் விசுவரூப தெய்வீக உருவகத்தாலும், பிரம்மாண்டத்தின் அடையாளமான காட்சியமைப்பாலும், இந்த நூற்றாண்டின் மறக்கவொன்னாத சிறந்த பாடலாக என் மனதில் சிம்மாசனமிட்டு என்னை ஒன்பதாம் அடுக்கு மேகத்தின் மேல் அமர்ந்திருப்பது போன்ற பிரமையை தந்து கொண்டேயிருக்கிறது !!
https://www.youtube.com/watch?v=QroxeC_HQ6k
ஆனால் அதே காவியத்தில் இடம் பெற்ற போய் வா மகளே போய் வா எனும் பாடல் குரலினிமையால் காட்சியின் பிரம்மாண்டத்தால் படம் பார்க்கும்போது ரசிக்க வைத்தாலும் மனதில் தங்காமல் கடந்து செல்லும் மேகமாகி விட்டதே!
https://www.youtube.com/watch?v=3LwFGJSX1h8
அன்புள்ள வாசு சார் ,
நீங்கள் எழுதிய நெஞ்சிருக்கும் வரை பதிவை எனது சின்ன மாமியார் திருமதி மருதம் வேலன் அவர்கள் கேட்டு கொண்டதால் எனது முக நூலில் பதிவு செய்தேன்..
உங்களுக்கு மிக்க நன்றி...
அதற்கு அவர்கள் கொடுத்த பின்னுட்டம் :
Marutham Velan நெஞ்சிருக்கும் வரை படத்தை மனக்கண்முன் ஓட வைத்து விட்டீர்கள் .மிக்க நன்றி .பெரிய வேலை .ஆனால் நடிப்புலக மா ,மா( எத்தனை மா போட்டாலும் பற்றாத )மேதைக்கு இதுவெல்லாம் எளிமையான புகழ்ச்சி .அவர் நம்மோடு வாழ்கிறார் .சாதாரண மனிதர்களுக்குத்தான் இறப்பு என்பதெல்லாம் .அவர் நம்மோடு வாழ்ந்தார் ,வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ,வாழ்வார் ,என்றென்றும் ,நம்மோடு ......
முரளி சார்,
'நான் தன்னந்தனிக்காட்டு ராஜா' பாடல் அலசல் பாராட்டிற்கு நன்றி!
கோடீஸ்வரனின் முதல்வார, இரண்டாம் வார மதுரை தங்க(ம்) வசூல் வாயடைக்க வைத்துவிட்டது.
எல்லோரும் நலம் வாழ பாடிய நம் நாயகனை எந்நாளும் கொண்டாடுவோம்.
'நெஞ்சிருக்கும் வரை' நாயகரின் பதிவைப் பாராட்டிய சுந்தர பாண்டியன் சார், வாசுதேவன் சார், தம்பி ராகுல்ராம் (ராகுல்! எவ்வளவு நாட்களாயிற்று தங்கள் பதிவுகளைக் கண்டு! நலம்தானே!) ராகவேந்திரன் சார், பதிவுகளைப் படித்து தொலைபேசி வாயிலாக தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அன்பு 'கோல்ட் ஸ்டார்' சதீஷ் சார், வினோத் சார், மற்றும் 'லைக்'குகள் அளித்த ஆதிராம் சார், செந்தில்வேல் சார், கோபால் சார், கோபு சார், ராதாகிருஷ்ணன் சார், சின்னக்கண்ணன் சார் மற்றும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.