இல்லை என்பது அமங்கலச் சொல்லாம் எனவேயதை
சொல்லவேண்டாம் என்று பண்டைய தமிழர் வணிகத்தில்
இல்லாத பொருளை விடுத்து இருக்கும் பொருளை சொல்வர்
பொல்லாத உலகம் குறும்பாய் எண்ணும் இதையே இந்நாள்.
Printable View
இல்லை என்பது அமங்கலச் சொல்லாம் எனவேயதை
சொல்லவேண்டாம் என்று பண்டைய தமிழர் வணிகத்தில்
இல்லாத பொருளை விடுத்து இருக்கும் பொருளை சொல்வர்
பொல்லாத உலகம் குறும்பாய் எண்ணும் இதையே இந்நாள்.
இன்னாளிலே எல்லாவித சந்தோஷங்கள் பெருகி
பொன்னாளென பூரித்துளம் முழுதும்மகிழ்ந் திடவும்
எந்நாளிலும் வாழ்வில்மிக ஏற்றங்களைப் பெறவே
கண்ணாம்சிவன் அருள்வான்தினம் களிப்பாகிடும் புவியும்
புவியும் மதியும் பரிதியும்
பிரபஞ்சத்து கோளங்களும்
தட்டையா உருண்டையா
தன்னைத் தானே சுத்துதா
எத்தனை நாள் சூரியனை
நீள் வட்டமாய் சுற்றி முடிக்க
நட்சத்திர கூட்டங்கள் எவை
எரிநட்சத்திர தரிசனம் எப்போது
சூரிய சந்திரரை ராகு கேது கவ்வுதோ
எண்ணற்ற கேள்விகள் ஆவல்கள்
எம் மூதாதையர் மண்டைக்குள்
கணினி இல்லை கணக்குப் போட
கருவிகள் இல்லை தொலை நோக்க
மதமும் மன்னரும் கொலைவெறியில்
சளைக்கவில்லை களைக்கவில்லை
கண்டுபிடித்தனர் பல அதிசயங்கள்
அவர் அபூர்வ அறிவுக் களஞ்சியங்கள்
வியக்கிறேன் ரசிக்கிறேன் வணங்குகிறேன்
வணங்குகிறேன் வாழ்வதனில் வாகை சூடும் வீரனென
சுணக்கமின்றி சிரிக்கின்றாய் சூரனென நினைக்கின்றேன்
எதிர்மறை எண்ணம் இன்றி நடப்பதெல்லாம் நன்மைக்கென்றே
சிறுவர் பாசம் சான்றோர் விசுவாசம் கொண்டே
இயற்கையின் சுவாசம் செடிகளின் தோட்டம் நண்பர் கூட்டம்
வென்றாய் நன்றாய் உன்னேசம் என்றும் எனக்கேற்றம்
ஏற்ற மிறைக்குதற்கு நான்போறேன் முன்னாடி
..என்றே சொல்லிபுட்டு போனமச்சான் காங்கலையே
தீற்றி செஞ்செவப்பா மிளகாயில் தொக்குசெஞ்சு
…தூக்குச் சட்டியிலே மணமாக மோர்சோறு
வேர்க்க விறுவிறுக்க வயக்காட்டில் ஓடிவந்தா
…வேஷம் போட்டாரோ எங்கபோனார் தெரியலையே
தீர்க்க விழியகட்டி தூரக்கே பார்த்தாக்க
..திண்ணமா வருதுமச்சான் ஹப்பாடா பெருமூச்சு…!
ரொம்பத்தான் காத்தாயோ இப்படியேன் மூச்சிருக்கு..
…ரோசனையா ஒருஆள காங்கத்தான் போனேனே..
வம்பத்தான் ஒங்களுக்கு வாகாக ஆக்கிவச்சு
…வந்துபார்த்தா இல்லையின்னா என்னாவும் எம்மனசு
சும்மாத்தான் யோசிச்சே குழப்பாதே பயபுள்ள
…செத்தநாழி போனதுலே ஒனக்கென்ன கலக்கமடி
உம்முனுல்லாம் ஒன் ஒதட்ட சுழிச்சுத்தான் வெக்காதே
…உள்ளத்துல ஆசவந்து வேறவிதம் ஆகிவிடும்!
ஆகிவிடும் ஆகிவிடும் என்றிருந்தால் ஆகிவிடாது
ஆக்கிவிடுவோம் ஆக்கிவிடுவோம் என்று ஆக்கினோமென்றால்
ஆகாததெல்லாம் ஆகாததாக நிற்காமல் ஆகி நிற்கும்
ஆக்கமுடன் ஆக்கிவைப்போம் வையத்தை தூக்கிவைப்போம்.
ஆன தலைமுறைகள் எத்தனையோ வருந்தலைமுறை எத்தனையாயினும்
ஆக்கிய யாவையுடன் ஆக்கும் வழிமுறையும் காத்து வைப்போம்.
வைப்போம் முற்றுப்புள்ளி வாக்கிய முடிவில்
வார்த்தை எத்தனை இருந்தாலும் இறுதி அதுவே
வார்த்தையை கணக்கிடாது முற்றுப்புள்ளி
வருடத்தை கணக்கிடாது கடைசி மூச்சு
மூச்சு விடாமல் முன்னூறு கவிதை பாட முயற்சித்தேன்
மூன்றையே பாட முடியாமல் மூச்சிறைத்தேன்
மூக்கிலே வேர்த்ததம்மா முன்னோர் பாடல் கேட்டு
மூட்டிய தமிழ்த்தீயில் மூழ்கியே தேடுவேன் கவிதை
கவிதை என்பது ஒரு பம்மாத்து
உரைநடையில் வரிசை மாத்து
வார்த்தைகள் பிறழ்கின்ற கூத்து
இது ஒரு சாரார் கொண்ட கருத்து
மூப்பு :
கருத்து இது காலடி சங்கரர் சொன்னது
காலன் வரும் நேரம் இனி காலம் இல்லை பாரும்
காமம் பாசம் போதும் நீவிர் மறுமையை நாடும்
கடவுளைப்பாடும் என்றும் இறைவனைத் தேடும்
தேடும் பார்வை உன்னைக் காண அங்கும் இங்கும்
….நாடும் மனமோ நிலையில் லாமல் முன்னும் பின்னும்
ஓடிச் சென்றே அலைகள் போலே உந்தன் நினைவை
..ஊடி உணர்வை மேலும் மேலும் மயக்க வைக்கும்
வாடும் வஞ்சி என்னை நீயும் மகிழ வைக்க
…வாராய் கண்ணா வாவா விரைவில் இங்கே இங்கே
பாடும் பாடல் சுவையா என்று நானும் அறியேன்
..பக்தி அதனுள் உண்டே உனக்கும் தெரியும் கண்ணா..!..
கண்ணா மன்னா என்றால் நடக்காது
ராஜா என்று தாஜா செய்திட முடியாது
உன்னால் ஆனதை பார்த்துக்கொள்
என் வழி தனி வழி என்றால் வெல்வாய்
வெல்வாய் எனச்சொல்லி வேல்விழிகள் தான்விரித்து
…மெய்யாய் நெஞ்சத்தில் நம்பிக்கை வைத்தவள்தான்
செல்லும் காதலனைக் கண்கொட்டா மல்பார்த்து
…தெளிவாய் இருந்தமனம் தடக்கெனவே குழம்பிவிட
கிள்ளும் கவலையதோ மிகப்பெரிய ரூபத்தில்
,..கிளறிக் கண்ணீரைக் கட்டவிழ்த்து விட்டுவிட
மெல்ல அமர்ந்தவளும் மென்மையுடன் கண்மூடி
…மேனி உளமுருக பிரார்த்தித்தாள் ஆண்டவனை
ஆண்டவனைத்தான் விரட்டினோம்
கத்தியின்றி யுத்தமின்றி போரிட்டு
அப்படியே படிந்து கிடக்கே புத்தியில்
அவன் விதைத்த அடிமைத்தனம்
அடிமைத்தனம் கொள்வாய் ஆண்டவனிடத்தில்
அன்றே சொன்னார் துவாபர யுகத்தில்
சிறப்புதான் கர்ம ஞான பக்தி யோகம் எனில்
சரணாகதி ஒன்றே தான் முக்திக்கென்றே
//ஹாய் முரளி.. have you checked kavithai iyatRik kalakku -i posted in other thread//
முக்திக் கென்றே முனிவரவர்
...மூச்சை மறந்தே தியானத்தில்
பக்தி யிழைத்தே தவம்செய்து
..பரமன் கண்டது அக்காலம்
வித்தை பலவும் தான்செய்து
..விந்தைப் பேச்சும் தாம்பேசி
மக்கள் தம்மை ஏமாற்றும்
...மாந்தர் இருப்பதும் இக்காலம்
இக்காலம் முக்காலத்தில் ஒன்று
நேற்று இன்று நாளை என்பது
நாட்காட்டியில் மட்டும் வருவது
மன வான வாசத்தில் இல்லையது
இல்லையது எனில் இல்லையாம்
உள்ளதது எனில் உள்ளதேயாம் மேதினியில்
வெள்ளத்து ஏற்ப மலர்நீட்டம் அதுபோல்
உள்ளத்தில் கொள்வோம் உயர்வு
https://encrypted-tbn1.gstatic.com/i...ia9Yy6VvJUCriQ.
உயர்வு தந்தது கொஞ்சம் கர்வம்
பொறுப்புடன் வந்தது மன அழுத்தம்
சொகுசால் ஏகமாய் கூட்டியது இன்பம்
அதில் அழைக்காமல் வந்தன நோய்கள்
வங்கி இருப்பின்றி ஏழை நடைபாதைவாசி
என்னைவிட நிம்மதியாய் தூங்குகிறான்
தூங்குகிறான் தூளியிலே சின்னக் கண்ணன்
..சுற்றிநீயும் ஆட்டாதே விழித்துக் கொள்வான்
பாங்காக அவன்முறுவல் முகத்தில் தானே
..ப்ரவசத்தைக் கூட்டுதடி அடியே தோழி
தேங்கிடுமே மென்காற்று அவனைச் சுற்றி
..தேகத்தை விட்டெங்கும் போகா வண்ணம்
நீங்கிடுமே நாம்ப்ட்ட துயரம் எல்லாம்
..நீலவண்ணன் தரிசனத்தில் என்றும் தானே..
தானே நடக்கும் என்றிருப்பவரன்றி
தெய்வம் நடத்தும் என்போருக்கும்
நானே நடத்துவேன் எனக்கொள்வாரும்
உய்யம் அடைவோம் எனமுயற்சிசெய்
வானேறி பிரபஞ்சங்காணும் ஏற்றம் பெறுவர்
பெறுவர் நண்பர் சற்று நிம்மதி
அகராதி பேசி வார்த்தையாடி
தொல்லை தரும் கிழவியும்
விடுமுறையில் செல்வதால்
:noteeth:
//enga leaveletter..not acceptable :) //
விடுமுறையில் செல்வதால் என்ன ஆகும்
...விகசிக்கும் நெஞ்சமது ஊரைக் கண்டு
கடுகடுத்த முகத்துடனே பணிகள் செய்து
..களிப்புகளை மறந்திருந்த மனமும் இன்று
படுத்துவிடும் மகிழ்வில்தான் ஊரில் உள்ள
..பலவிதமாய் நண்பர்கள் உறவைக் கண்டே
சுடும்நினைவு பின்னாலே முடிந்தபின்னால்..
.இருந்தாலும் முன்னாலே அனுப விப்போம்..!
அனுபவிப்போம் நன்றே அமர்க்களம் இன்றே
அறவழி வாழ்வுதனை ஐம்புலம் துணை கொண்டே
நேற்று என்பதேதோ சரித்திர நினைவாம்
நாளை என்பதுவோ மர்மத்தின் நிழலாம்
இன்று மட்டுமே இயற்கையின் வெகுமதி
என்றும் அதனை ‘ப்ரெசன்ட்’ எனக்கொள்
https://encrypted-tbn0.gstatic.com/i...NLZA_i0YdElTnw
எனக்கொள் எனக்கொள் எனக் கொண்டால்
தனக்கொள் தனக்கொள் என்று தனதாக்கிக்கொண்டு
எவருமே ஏகடியம் பேசும் வாய்ப்பால்
தன்னிலை உணர்ந்தே எவரும் கொள்வர்
எனவறிந்தே பிறர் கொள்ள ஏற்றுக் கொள்வர்
தாமும் பிறர்க்குரியர் என உணர்வார்
உணர்வார் தங்கள் வெற்றி
ஓய்ந்தே அமரும் காலத்தில்
ஆற்றிய கருமம் எண்ணுங்கால்
அகத்துடன் முகமலர்ந்தாலே
முகமலர்ந் தாலே ஓதோழி
..மூச்சது திரும்ப வந்துவிடும்
உவந்ததன் தன்மை தான்காட்டும்
..ஒருசெயல் அதுதான் என் தோழி
சுகமிலை என்றே சொன்னதனால்
..சுரத்தினைப் போக்க வேண்டுமென்றே
அகத்திலே செய்த சிறுமருந்தை
..அவரிடம் நானே அனுப்பிவைத்தேன்..
சுளித்தே குடித்துத் தானிருப்பார்..
..சுர்ரெனப் புளிக்கும் அதுவன்றோ
விழிகள் நன்றாய் மூடிவிட
..விரைந்தே தூக்கம் வந்திருக்கும்
துளியாய் சிரித்தார் என்கின்றாய்..
..சுரவலி ஓடிச் சென்றிருக்கும்
வலியைப் போக்க நான்செல்ல
..வழியும் இருந்தால் சொல்லடிநீ
வழி நீயே காட்டுவாய்
என நானே நீட்டினேன் நோட்டை
சுழி ஒன்றே பொருத்தம்
என சொல்லி மதிப்பெண் இட்டார்
கழி கொண்டே அடிப்பார்
என நானே புரியாமல் விலகினேன்
பழி ஒன்றே சொல்லத்த்தான்
எனை நானே தேடினேன் தந்தைக்கு
சுழி இல்லா மதிப்பெண்
எனைத் தேடி எப்போ வரும்
இழி இல்லா கணிதம்
என எனக்கு எப்போ புரியும்
புரியு மெனநினைத்தால் புருவத்தை உயர்த்தித்தான்
...பூவை முகமாறி பல்வாறாய்க் கேள்விகளை
விரியும் பார்வையதன் மூல்மாகக் கேட்டிடுவாள்
...விழிகள் சிவந்திருக்கும் வேடிக்கை மறைந்துவிடும்
சரிதான் காத்திருப்பின் கஷ்டமென நானறிவேன்
..தங்கம் சின்னப்பூ ஜிஞ்சும்மா என்றாலோ
சுழிப்பாள் உதட்டினையும் பின்னங்கே வெடித்திடுமே
..சூறா வளியாகச் சொற்றொடர்கள் திட்டல்கள்..
மெல்லப் பின்வாங்கி மேவியவள் கைபற்றி
..மேனி தனையிழுத்து மென்முத்தம் பதித்தாலோ
துள்ளி விலகிடுவாள் துச்சமெனத் தான்பார்த்தே
..சும்மா சால்ஜாப்பு சொல்லாதீர் எனச்சொல்ல
அல்லி அழகியலே ஆனமட்டும் கெஞ்சுகிறேன்
..ஆனா லிக்கோபம் உன்னழகைக் கூட்டுதெனச்
சொல்லி மறுபடியும் கெஞ்சத்தான் வஞ்சுகத்தின்
..சொக்கும் இதழ்விரியும் ஊடலதும் பறந்திடுமே..
தோழியின் சொல் :
பறந்திடுமே கவலை தோழி
மறைந்திடுமே உந்தன் வலி
மனதினில் உறுதி கொள் மகன்
மாறிடுவான் ஒரு நாள்
குறை உன்னிடமில்லை- மகன்
குறை தீர்க்க மருந்துமில்லை
குறையற்ற மனிதர் யாருமிலை
குறைத்திடுவாயே உன் குமுறலை
வாழும் வழி வழுக்கினான் விடு
வயதின் கோளாறு வினையாகாது
விருப்பம் போல் நடக்கிறவன் போக்கு
வெந்து விம்முவதால் அது மாறாது
வளர்ந்த மகன் உன் பையன் - நீ
வருந்தி மட்டும் என்ன பயன் ?
விடியும் நிச்சயம் ஒருநாள் வருவான்
விதிப்படி விடு ! வேறு வேலை எடு !
Courtesy :
https://s-media-cache-ak0.pinimg.com...9bf2c7212e.jpg
பின் குறிப்பு:
தோழி சொல் ஏன்?
காரணம் தெரிந்து கொள்ள :
**
தாயின் புலம்பல் தோழியிடம் :
இவனைப்பெற வேண்டி அழுதேன் அன்று
இவனைப் பெற்றேனே அழுகிறேன் இன்று
வேலைக்கு போக மாட்டானாம்
வீணாய் அடிமை ஆகானாம்
சொந்த தொழிலும் வேண்டாமாம் அது
சூனியம் கொள்வது போல்தானாம்
படித்தவன் பகுத்தே பேசுகிறான்
எதிர்த்தால் சினந்தே ஏசுகிறான்
சோம்பி சும்மா அலைகின்றான்
சொகுசாய் சுகமே தேடுகிறான்
ஏதுமிலை ஜோலி குடிப்பதே ஜாலி
இருந்த வீடு நகை எல்லாம் காலி
ஏகமாய் கொடுத்து விட்டான் எனக்கு
ஏக்கம் இதயநோய் அல்சர் எல்லாமே
இதுவே என் சோகக் கதை
தினமும் படும் சித்ரவதை
என்ன செய்ய என் மகன் உய்ய
ஏதேனும் வழியென்று உண்டா
இருந்தால் சொல் ஒரு வழி !
எடு
சாய்த்து வை
கொஞ்சம் பிடிச்சுக்கோடா
ஏணி சாயப் போகுது
இரு..
ஹப்பாடா
கொஞ்சம் இரு எறக்கறேன்
இந்தா இதை
இந்தப் பேப்பர்ல வச்சுக்கலாம்
இருடா இருடா
அதுக்குள்ள சாப்பிடாதே
மறுபடியும் ஏறி
வெச்சுடலாம்
பிடிச்சுக்கோ போய்டாதே
அப்பாடா வெச்சாச்சு
டேய் எங்கடா போன
ஓ சாயற மாதிரி இருக்கே
கொஞ்சம் மெல்ல மெல்ல
இறங்கணும்
இவன் எங்க போனான்
சுற்றித் தேடி
மாடியில் எல்லவற்றையும்
ம்டியில் வைத்து
வேகவேகமாகச்
சாப்பிட்டுக் கொண்டிருந்த தம்பியின்
காதைத் திருகி
இந்தாண்ணா நீயே வெச்சுக்கோ
எனக்கு வேணாம்
உனக்குத் தரமாட்டேன்னா சொன்னேன்
நீ எடுத்துக்கோ
எனக்கு ஒண்ணு போதும்
என விட்டுக் கொடுத்ததெல்லாம்
இப்போது நினைவில்..
கண்முன் ஈமெய்ல் மட்டும்..
நான் அடுத்த வாரம் வருவேன்
அப்பா வீடு வித்தாச்சுல்ல
ப்ணம் உடனே கிடைக்குமா..
எனக்குத் தேவை இருக்குண்ணா இங்க
புரிஞ்சுக்கோ..
புரிகிறது
பெரியவர்கள் சுபாவமே
விட்டுக் கொடுத்தலோ..
விட்டுக் கொடுத்தாலோ விடாது எடுத்தாலோ
குறையாதிது அமுத சுரபி
பட்டு மாய்வதேன் படாது ஏய்ப்பதேன்
மறைந்து தப்பிப்ப தேன்
சிட்டு ஏமாற்றினாள் சீற்றம் தாமாய்
இறைத்தலை இழந்து போயிற்று
வாழ்க்கை என்ன கொடுமையடா
வீழ்ச்சியை நெஞ்சம் தேடுதடா!!!
தேடுதடா எங்கள் மனம் தெய்வமே
நாடுதடா எங்கே நீயென தினமே
காடு மலைதனில் காற்றாய் மறைந்தாயோ
ஓடி ஒளிந்தாயோ உயரவே பறந்தாயோ
நாதியற்ற நடைப்பிண மாந்தர்தமை
நாம்தானே படைத்தோமென
நாணம்தான் கொண்டாயோ
நியாயம் தானோ ! நவில்வாய் தேவுடா !
தேவுடா என்று வாயும்
..தெளிவுறச் சொல்லும் போது
கேவுதல் போல நெஞ்சம்
..கிளர்ந்திடக் கண்கள் உள்ளே
மேவியே தோற்றங் கண்டே
..மெல்லிய அதிர்வு கொள்ளும்
பாவியென் பக்கு வத்தின்
..பரிந்துரை கேட்கு மன்றோ
நொடியா கணமா எதுவும் அறியேன்
.. நெடிதாய் இருக்கும் நாரண் தோற்றம்
துடித்தே இதயம் துள்ள வைத்தே
..சொல்லும் பலவாய் அருளும் அன்பும்
நடிப்பாய் இருக்கும் வாழ்க்கை மாயை
.. நன்றாய் அங்கே மறைந்தே போக
வடிக்கும் நகையில் நெஞ்சம் மகிழ்ந்தே
..மனதுள் போற்றும் அவனின் நாமம்.
நாமங்களில் நன்றே நாரணனின் நாமம்
நாடுகின்றவர் நெஞ்சினிலே நீடிக்கும் நாமம்
ராமானுஜர் ஊரெல்லாம் தெரியவைத்த நாமம்
ஓதுகின்றவர் ஓங்கினின்று உயரவைக்கும் நாமம்
சொல்லிடுவோம் ஓம்நமோ நாராயண வென்றே!!!
நாராயணவென்றே மட்டும்
சொல்ல மாட்டாள்பாட்டி
எப்போதும் பெருமாளே காப்பாத்து தான்..
கொஞ்சம் செண்டிமெண்ட் என்றும் சொல்லலாம்
ஏனெனில் தாத்தாவின் பெயர்
நாராயணன்..
ச்சும்மா சொல்லுடி
ஒண்ணும் ப்ராப்ளமில்லை
தாத்தா கிண்டல் செய்தாலும்
கேட்க மாட்டாள்
யாராவது பெயர் கேட்டால்
ம்ம் அதான் அங்கெ இருக்கானே
திருப்பதில்ல அவன் பெயர் தான்..
சீனிவாசன்..
வெங்கடேஷ்..
என்றெல்லாம் கேட்டு
நாங்களும் பரிகசிப்போம்
சூழ்நிலையில்
தாத்தாவிற்கு
ரொம்ப முடியாமல் போய்
டாக்டர் மணி நேரங்கள் கெடு
வைத்திருந்தசமயம்
அவர் அருகில் எதற்கோ வந்த
பாட்டி
இடறி விழுந்து
கீழே கூர்மையாய் எங்கோ அடிபட
கடைசியாய்ச் சொன்னது
நாராயணா அவரைக் காப்பாத்து..
கட்டிலில் இருந்த
தாத்தாவும் கேட்டாரோ என்னவோ
அதன் பின்
அவரும் எழவில்லை..
எழ வில்லை கற்பனை
எழுதவில்லை கவிதை
ஏனோ தெரியவில்லை
என்னால் முடியவில்லை
அப்பா சித்தப்பா தெரியும்
அது என்னப்பா ஆசிரியப்பா
அசையாம் தளையாம் தொடையாம்
ஆசையாய் திளைக்க தடுக்குதப்பா
யாப்பு வேண்டுமாம் கவிதையில்
ஆப்பு வைத்தார்கள் சடுதியில்
எதுகை அளபடை மோனை
எதுக்கய்யா எனக்கினி வேதனை
தேமா புளிமா விருத்தத்திற்கு
தேவையாம்மா என் வருத்தத்திற்கு
இலக்கணம் தெரிந்தால் கவிதைதான்
இலக்கினி எனக்கு விடுதலைதான் !
விடுதலைதான் என்று முழக்கமிடும் வேந்தரே
விருத்தப்பாக்களினால் ராமகாதை வரைந்தான் கம்பன்
விடுதலை வேண்டுமென்று நினைத்திருந்தால்
வெற்றிப் பெருமைகொள்வோமோ இப்போதே நாமே.
விடுதலை பெற்றோம் ஆங்கிலேயனிடமிருந்து வெற்றாய்
விடுதலை கொடுத்தனரா நம் அரசியல்வியாதிகள்
தேமா புளிமா விருத்தம் தொடை தளை எல்லாம் பயிற்சியே
தேறினால் நீரும் கம்பரோ, வள்ளுவரோ, இளங்கோவோ யாரறிவார்
ஆசிரியப்பா ஒன்றும் பெரியப்பா இல்லைதான் பத்துவரிகள் மேல்மிக
அதுவே ஒன்றும் சிறியப்பாவாகலாம் நான்கு வரிகள் எழுதியே
யாப்பு ஒன்றும் ஆப்பு வைக்காது சொல்லியாயிற்று
எதுகை மோனையால் இசையை கூட்டு
இல்லாவிட்டால் புதுக்கவிதை பூட்டு.
திறமையை நன்றாய் இங்கே காட்டு
சொல்லித் தருவோரின் பேச்சை கேட்டு
இலக்கணம் கற்றே பெயரை நாட்டு
அவநம்பிக்கையை அவையின் வெளியே மாட்டு
பெருமையுடன் பெருங்கவிதை நன்றாய் தீட்டு
கருத்துக்களை காவியமாய் நீயே சாட்டு
கற்றவர் முன்னே கலக்கமின்றி நீட்டு
பெருங்கவிஞன் என்றே பேரை ஈட்டு
உண்மையை எல்லோரும் உணர்வதற்கே ஊட்டு
எல்லோரும் போடுவர் உனக்கே ஓட்டு
இலக்கணம் இல்லாமலும் இப்போதைக்கு பாட்டு
இருக்கே நமக்கு என்பதை சூட்டு.
சூட்டுகிறாள் பூமாலை கோதை நல்லாள்
…சுடர்வண்ணன் கண்ணனையே நெஞ்சில் வைத்து
மீட்டுகிறாள் ராகங்கள் பலவாய்க் கொண்டே
..மென்மையான மாயவனின் செயல்கள் தன்னை
பாட்டுகளில் பற்பலவாய் எழுதிப் பார்த்து
…பங்கயமாய் விழிகொண்ட பாலன் என்று
தீட்டிடுவான் நெற்றியிலே குங்கு மத்தை
…தீர்மானம் கொண்டபடி அங்கு தானே..