-
கடந்த 3 நாட்களாக கோவில் திருவிழா குறித்து வெளியூர் சென்றிருந்ததால் நமது திரியில் பங்கேற்க இயலவில்லை. மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.
பாகம் 10-ல் நண்பர்கள் அனைவரின் பங்கேற்பும், பதிவுகளும் கண்டு ஆனந்தம். 7 நாட்களில் 40 வது பக்கம் நெருங்குவது அற்புத சாதனை.
பல வண்ண புகைப்படங்கள் . அரிய சாதனை. பலர் அறியாத செய்திகள்.
இதுவரை கண்டிராத சில புகைப்படங்கள் . நண்பர்கள் அசத்துகிறார்கள்.
பதிவுகள் அதிருகின்றன . அனைவருக்கும் நன்றி.
-
மக்கள் திலகம் திரி -பாகம் 10ஐ துவக்கியதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த
நண்பர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றி.
நண்பர் திரு.ரூப்குமார் அவர்கள் பதிவிட்ட மாறுபட்ட வேடங்களில் புரட்சி நடிகர்/மக்கள் திலகம்/பொன்மனச்செம்மல் எம்.ஜி. ஆர்.அவர்களின் வேடங்கள்/ஒப்பனைகள் உடையலங்காரங்கள் நிறைந்த பதிவுகள் மனதுக்கு நிறைவாக இருந்தது.
நண்பர் திரு. தெனாலிராஜன் பதிவிட்ட புரட்சி தலைவரின் தோற்றங்கள்
வண்ணத்தில் ஜொலித்தன.
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்ட வண்ணப்படங்களுடன்
கூடிய செய்திகள், விவரங்கள் கண்டு மகிழ்ச்சி.
பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களின் மக்கள் தலைவர் பற்றிய அரிய புகைப்படங்கள் , பெருந்தலைவர் காமராஜர் பற்றிய செய்திகள்,இதர புகைப்படங்கள் , பெயர் மாற்றப்பட்ட படங்கள் பற்றிய செய்திகள் கண்ணுக்கு விருந்து.
நண்பர் திரு. யுகேஷ்பாபு அவர்கள் வெளியிடும் செய்திகள் /விவரங்கள்
பதிவுகள் பாராட்டத்தக்கவை.
-
http://i60.tinypic.com/20z48ki.jpg
ஆந்திர மாநில எல்லை அருகே உள்ள பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகில் உள்ள நீரவி கூல் பார் கடையில் வரையப்பட்டுள்ள புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உருவப்படம்.
-
இதயக்கனி மாத இதழ் நடத்தும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் -97
புத்தக, புகைப்பட, உணவு, மருத்துவ திருவிழா இம்மாதம் 18,19,20 தேதிகளில் , சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது.
அதன் சுவரொட்டி சென்னை மாநகர் முழுதும் ஒட்டப்பட்டுள்ளது.என்பது
நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
http://i57.tinypic.com/chl36.jpg
-
நாளை (16/07/2014) விசேஷ தினம்.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில்
ஒருவன் " வெற்றிகரமான 125 வது நாள். அதன் சுவரொட்டி இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக சென்னை மாநகர் முழுதும் பரவலாக
ஒட்டப்பட்டுள்ளது என்பது நண்பர்களின் கவனத்திற்கு
http://i57.tinypic.com/2isuw00.jpg
-
திரு. நீலகண்டன் (திரைப்பட விநியோகஸ்தர்- சக்கரவர்த்தி திருமகள், என் கடமை போன்ற படங்கள் சமீபத்தில் வெளியிட்டவர்) , அவர்களின் மூன்றாவது மகளுக்கும், திரு. ரமேஷ் (பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்தின் நிர்வாகி ) அவர்களின் உடன்பிறவா சகோதரருக்கும்
திருமண நிச்சயதார்த்தம் , சென்னை மகாலட்சுமி திரை அரங்கு அருகிலுள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நேற்று மாலை
இனிதே நடந்தேறியது.
திருவாளர்கள் ; எஸ்.ராஜ்குமார், எஸ்.செல்வகுமார், பி.எஸ். ராஜு, ஆர். லோகநாதன் , இளங்கோவன், கிருஷ்ணசாமி, பி.ஜி.சேகர், சுப்பிரமணி
ஆகிய புரட்சி தலைவரின் பக்தர்கள் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்தனர். அவர்களுக்கு, திரு. நீலகண்டன் அவர்களும், திரு. ரமேஷ்
அவர்களும் இணைந்து, அனைவருக்கும், பொன்னாடைகள்
போர்த்தி வரவேற்றனர். திருமண மண்டப வாசலில் வைக்கபட்டிருந்த
வரவேற்பு பேனரில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
http://i60.tinypic.com/147cl4.jpg
-
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு வருகை புரிந்து என்னுடைய 9000 பதிவுகளுக்கு பாராட்டுக்கள்
வழங்கிய உங்களுக்கு என்னுடைய அன்பு நன்றி .மதுர கானம் திரியில் உங்களின் பாடல் அலசல்கள்மறந்தே போய் விட்ட பல அரிய பாடல்கள் பதிவுகள் - புதுமையான முயற்சி .உங்களுக்கும் வாழ்த்துக்கள் சார் .
-
இனிய நண்பர் திருலோகநாதன் சார்
உங்களின் அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் நம்முடைய
நண்பர்களின் அயராத ஒத்துழைப்பும் ,பதிவுகளும் என்னை மேன் மேலும் ஊக்கப்படுத்துவதற்கு
காரணமாக இருந்தது .
பள்ளிபட்டு சென்றாலும் உங்கள் கண்களுக்கு மக்கள் திலகம் காட்சி தந்ததை உடனே திரியில்
பதிவிட்டு எல்லோரையும் மகிழ்ச்சி படுத்தியமைக்கு நன்றி .
-
-