Dear Yukesh
Sorry...I just looked at your wishes.
Thanks a lot for your wishes. Glad to see your continuous contributions. Many a thanks for the same dear.
Regards
RKS
Printable View
Dear RKS
Congrats on your reaching a milestone no of 2000 postings
இன்றும் புதிய பறவை என்ற படத்திலிருந்து "உன்னை ஒன்று கேட்பேன்" என்ற பாடல். பாடியவர் - பி சுசீலா, பாடல் - கவியரசர், இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
கப்பலில் நடக்கும் விருந்தின்போது சிவாஜி சரோஜாதேவியை ஒரு பாட்டுப் பாட சொல்ல, அவர் தயங்கும்போது, கைதட்டி அவரை பாடுமாறு ஊக்குவிக்கிறார்.
முதலில் இரு முறை கை தட்டல், பின் ஒரு முறை, இவ்வாறு சிவாஜி இருமுறை செய்தவுடன், நடனக்குழுவினரும் தொடர்ந்து கைகளைத் தட்டி நடனமாடுகின்றனர். கூடவே பியானோ, மரக்கோஸ், பாங்கோஸ் சேர்ந்த இசையுடன் பின்னர் ட்ரம்ஸும் ஒலிக்க, ட்ரம்ஸின் வாசிப்பு முடிந்தவுடன், ஒரு சிறு அமைதி - சிவாஜி "ப்ளீஸ்" என்று சொல்ல, சரோஜாதேவி பாட ஆரம்பிக்கிறார்.
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
பெண்ணைப் பாட சொன்னால்
என்னப் பாடத் தோன்றும்
என்னப் பாடத் தோன்றும்
இதில் முதலில் வரும் என்னப் பாடத் தோன்றும் என்பதில் தோன்றும் என்ற இடத்தில், தோ ஓ ஓ ன்றும் என்றும், இரண்டாவது முறை என்ன்.. னப் பாடத் தோன்றும் என்று சுசீலா இழுத்துப் பாடும் இடத்திலும் மெல்லிசை மன்னர்களின் கற்பனை பளிச்சிடுகிறது.
பின் காதல் பாட்டுப் பாட என்று அனுபல்லவி துவங்குகிறது. அனுபல்லவிக்கு முன் இடையிசைஆக, பியானோவின் ஒரு நீண்ட இசையுடன், வயலின் சிறு இசை முடிந்ததும், கிடாரின் ஒரு தீர்மானமான மீட்டல். கூடவே, கை சொடுக்கும் ஒலி. சிவாஜி இந்த இடத்தில் இடது கையால் கை சொடுக்குவது அவருக்கே உரித்தான ஸ்டைல்.
காதல் பாட்டுப் பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டுப் பாட தாயாகவில்லை
அனுபல்லவியிலும் காலம் இன்னும் இல்லை என்ற வரியில் இல்ல்ல்...லை என்று இழுத்தும், தாலாட்டுப் பாட என்ற இடத்தில் தா..லா..ட்டுப் பாட என்று பிரித்தும் சுசீலா பாடும் அழகே தனி சுகம்.
உன்னை ஒன்று கேட்பேன்.....
முதல் சரணத்திற்கு முன் இடையிசையாக, ட்ரம்பெட் ஒலிக்க அதைத் தொடர்ந்து, பியானோவுடன் வயலின் இசை. சிவாஜி உண்மையிலே ட்ரம்பெட் வாசிப்பது போலவே இருக்கும், ட்ரம்பெட் வாசித்ததும் அதை வைத்து விட்டு அவர் பியானோவுக்கு சென்று அதை வாசிப்பது, அவரது நடிப்பின் நேர்த்தியைக் காண்பிக்கிறது. மிக இயல்பான நடிப்பு.
நிலவில்லா வானம் நீரில்லா மேகம்
பேசாத பெண்மை பாடாது உண்மை
கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
பெண்ணைப் பாட சொன்னால் என்னப் பாடத் தோன்றும்
இதில் தோன்றும் என்று வரும் இடங்களில்லேல்லாம்
தோ ஓ ஓ ன்றும் என்று சுசீலா பாடுவது மிக இனிமை.
உன்னை ஒன்று கேட்பேன்.....
இரண்டாவது சரணத்திற்கு முன் சாக்ஸபோன், புல்லாங்குழல், வயலின் ஆகியவற்றின் மயக்கும் இசை. இதிலும் சிவாஜியின் சாக்ஸ் வாசிப்பு தத்ரூபமாக இருக்கும். இந்தப் பாடலுக்கு அழகுப் பதுமையாக சரோஜாதேவியை நடிக்க வைத்திருப்பது ஒரு நல்ல தேர்வு.
தனிமையில் கானம் சபையிலே மௌனம்
உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்
அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
என்னைப் பாட சொன்னால் என்னப் பாடத் தோன்றும்
சரணத்தின் வரிகள் அனைத்தும் punctuate செய்தாற்போல் பாடியிருப்பது, சுசீலாவின் சிறப்பு. பாடல் வரிகளை மிக எளிமையாகவும் இனிமையாகவும், இசைக்கு ஏற்ப தந்திருக்கும் கவியரசரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
பெண்ணை பாட சொன்னால்
என்னப் பாடத் தோன்றும்
என்னப் பாடத் தோன்றும்
மீண்டும் பல்லவி முடிந்தவுடன், ட்ரம்சின் தீர்மானத்துடன், அனைவரும் கைத்தட்ட பாடல் முடிவுகிறது. ஒரு இனிமையான மாலை நேரத்து விருந்தினை கண் முன்னே நிறுத்துகிறது இந்தப் பாடல். மனதுக்கு நிறைவான இசையுடன் கூடிய பாடல். காலங்கள் கடந்தும் மனதில் அழியாத கோலமாய் இருக்கும் ஒரு பாடல் என்றால் அது மிகையாகாது.
courtesy facebook
Sivaji with Kannada Rajkumar during Sivaji's mother death.
http://i1170.photobucket.com/albums/...psf76bd496.jpg
Quote:
Quote:
Chronic Diseases best exemplified on screen by the one and only one NT
Quote:
நடிகர் திலகத்தால் மட்டுமே நடித்துக் காட்ட முடிந்த சில நலக் குறைபாடுகள்
குறைகள் இல்லாத மனிதர் எவருமில்லை / உடன் பிறந்த உடல் நல குறைபாடுகள்
நலக்குறை 1 : வலிப்பு நோய்
சூதுவாது தெரியாத கிராமத்துக் கள்ளமற்ற அப்பாவி வாலிபன் சாப்பாட்டு ராமன் அவன் உணர்ச்சிவசப்பட்டு நிதானமிழக்கும் தருணங்களில் வலிப்பு வந்துஅவதியுறுவதை எந்த உலகப் பெருநடிகராலும் நடிகர்திலகம் உருவகப்படுத்தியதில் பாதியளவாவது காட்டிட இயலுமா !? ராமன் எத்தனை ராமனடி!!
1. When NT moves with KR Vijaya in an early scene
2. When NT is beaten by angry Nambiyaar
3. In the climax when NT tries to save his daughter
https://www.youtube.com/movie/raman-ethanai-ramanadi
http://i157.photobucket.com/albums/t...ps1a5cc883.jpg
விளக்கு எரிகின்றது என்ற
வெளிவராத படத்திலிருந்து
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ;
அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
http://i157.photobucket.com/albums/t...psd8bfd2e1.jpg
Quote:
Quote:
Chronic Diseases best exemplified on screen by the one and only one NT
Quote:
நடிகர் திலகத்தால் மட்டுமே நடித்துக் காட்ட முடிந்த சில நலக் குறைபாடுகள்
குறைகள் இல்லாத மனிதர் எவருமில்லை / உடன் பிறந்த உடல் நல குறைபாடுகள்
நலக்குறை 2 : மாரடைப்பு
மாரடைப்பு இதய நோயின் விளைவு. அதீத கோபம் வெறுப்பு சந்தோஷம் பயம்.....டென்ஷன் மாரடைப்பை தூண்டிவிடும். ஒரு சீசனில் நடிகர்திலகம் படங்களில் மாரடைப்புக் காட்சிகள் சர்வ சாதாரணமாகிவிட்டன!! வியட்நாம் வீடு, பாரத விலாஸ், ......
https://www.youtube.com/watch?v=e5dHOuDL6-c
https://www.youtube.com/watch?v=uAynT5UabwQ
https://www.youtube.com/watch?v=zKUpbXldBA4