http://i64.tinypic.com/2z7lms9.jpg
http://i63.tinypic.com/dwszr4.jpg
Printable View
1977-ம் ஆண்டு ஜுன் மாதம் 30-ம் தேதியை மறக்க முடியுமா....
1977-ம் ஆண்டு ஜுன் மாதம் 30-ம் தேதி காலை 09:15 மணிக்கு ராஜாஜி மண்டபத்தில் புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் மற்றும் அமைச்சர்கள் அன்றைய கவர்னர் பட்வாரி முன்னிலையில் எந்த ஆடம்பரமும் இன்றி மிக எளிமையான முறையில் பதவியேற்றார்கள்.பின்பு பேரறிஞர் அண்ணா சாலையில் திறந்த வேனில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து அறிஞர் அண்ணா சிலைக்கு வந்து மக்களிடையே எழுச்சி உரை ஆற்றினார்.. அறிஞர் அண்ணா மீது ஆணையிட்டு கூறுகிறேன்,, ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது ஒரு சம்பிரதாய விழா.. தற்போது உங்கள் மத்தியில் தான் நாங்கள் பொறுப்பேற்கிறோம்.. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அறிஞர் அண்ணா சொன்னார்.. அண்ணா வழியில் லஞ்சமற்ற, ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு தருவோம்.. எங்கள் பணி தொடர உங்கள் நல்லாசியை வழங்குங்கள் என்று ரத்தின சுருக்கமாக பேசினார்..பின்பு தலைமை செயலகம் சென்று முறைப்படி முதலமைச்சர் பணியை தொடங்கினார்..04.07.1977--ம் நாள் அமைச்சரவையின் முதல் கூட்டம் தொடங்கியதன் நினைவாக தான் மன்னாதி மன்னன் தலைவர் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அம்பாசிடர் கார்கள் அனைத்திற்கும் வெளிர் நீல நிறத்தில் TMA 4777,TMX 4777,TMG 4777 என்ற எண்களை கொண்ட அம்பாசிடர் காரை இறுதி வரை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது............. Thanks wa.,
*"எம்.ஜி.இராமச்சந்திரன் எனும் நான்....."*
கழகத்தின் நிறுவனர், *புரட்சித்தலைவர்*
'நாடோடி மன்னன்' நாடாளும் மன்னராக 42-ஆண்டுகளுக்கு முன் பதவி ஏற்ற தினம் 30.6.1977 இன்று..
1977-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 234 இடங்களில் 144 இடங்களைப்பெற்று *அதிமுக* வென்றது.
அருப்புக்கோட்டையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட *எம்ஜிஆர்* சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கவர்னர் பிரபுதாஸ் பட்வாரியின் அழைப்பை ஏற்று *அதிமுக* ஆட்சிப்பொறுப்பேற்றது
*01. நாஞ்சில் மனோகரன்*
*02. நாராயணசாமி*
*03 எட்மண்ட்*
*04 பண்ருட்டி ராமச்சந்திரன்*
*05 ஆர்.எம்.வீரப்பன்*
*06. அரங்கநாயகம்*
*07. பெ.சவுந்தரபாண்டியன்*
*08. காளிமுத்து*
*09. ராகவானந்தம்*
*10. பொன்னையன்*
*11. பி.டி.சரசுவதி*
*12. ஜி.குழந்தைவேலு*
*13. கே.ராஜா முகமது*
-போன்ற படித்த இளைஞர்கள், அனுபவமுள்ள தலைவர்களைத் தனது அமைச்சரவையில் இடம்பெறச்செய்தார் *எம்ஜியார்*
பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, மற்றும் தொழிற்சாலை ஆகிய துறைகளை எம்.ஜி.ஆர் வைத்துக்கொண்டார்.
ராஜாஜி மண்டபத்தில் இந்தப் பதவியேற்பு வைபவம் நடந்து முடிந்ததும் நேரே எம்.ஜி.ஆர் தன் அமைச்சரவை சகாக்களோடு சென்றது அண்ணா சாலையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடைக்கு..
ஆம் 'தன்னை, தன் வாழ்வை இத்தனை உயரத்துக்குக் கொண்டு சென்ற மக்கள் முன்னேதான் பதவியேற்பு வைபவத்தை நிகழ்த்தி தன் ஆட்சி லஞ்ச லாவண்மயற்ற ஊழலற்ற ஆட்சியாக மக்களாட்சி புரியும்' என மக்களுக்கு உறுதியளித்தார்.
'தணிக்கை செய்யப்படாமல் ஓரிரு படங்களை மட்டும் என்னை எடுக்க அனுமதித்தால் நான் திராவிடத்தை வென்று காட்டுவேன்' என்றார் *பேரறிஞர் அண்ணா*
அண்ணாவின் ஆசையைத் தணிக்கை செய்யப்பட்ட படங்களைக் கொண்டே நிகழ்த்திக்காட்டியவர் அண்ணாவால் *இதயக்கனி* என அழைக்கப்பட்ட *மக்கள்திலகம்* எம்.ஜி.ஆர்.
அண்ணாவின் ஆசையை நிறைவேற்றி தமிழகத்தின் அசைக்க முடியாத முதலமைச்சராக மக்கள் தலைவராக இருந்தார் என்பது உலகமறிந்த வரலாறு.......... Thanks wa.,
*தமிழக வரலாற்றில் இந்நாள் ஒரு பொன்நாள்.. 30/6/1977*
*எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் நான்...*
*மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர், பாரதரத்னா, இதயதெய்வம், டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் அரியணை ஏறிய மகத்தான, மறக்கமுடியாத, மகிழ்ச்சியான நாள்*
*சி.ரங்கநாதன்* ........... Thanks wa.,
இன்று..........30-06-1977... பல நடிகர்கள் சினிமாவில் யாரோ எழுதி கொடுத்ததை பேசி, எவரோ வசனம் எழுதி, இன்னொருவர் இயக்கம் செய்து, தயாரித்து நடந்து கொண்டிருக்கும் திரைப்பட வரலாற்றில்... உண்மையாக சினிமாவில் நடைபெற்ற காட்சிகளை, நிழலை நிஜமாக்கிய ஒப்பற்ற ஒரே மேதை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஆட்சி கட்டிலில் அமர்ந்த திருநாள் ...
தற்போது மக்கள் திலகம் "தாய் சொல்லை தட்டாதே" முரசு தொலைக்காட்சியில்......
https://i.postimg.cc/PfKRtP9H/IMG-20190701-WA0007.jpg
கோவை சண்முகா நேற்று மாலைக்காட்சி