அது....
இது முறை...
இப்ப நீ துரை ...
புலி வாலைப் பிடித்து விட்டு........
Printable View
just enjoyed Iruvar Ullam. After Motor Sundaram Pillai this movie remains a monument for NT's subtle acting prowess, the reply to the so called over acting accusations. NT's magnetic charm remains throughout the movie whether he speaks or just stands in the court without uttering a single word, but watching SVR, MRR..... talking.
இருவர் உள்ளம் தொலைக்காட்சியில் பார்த்தவர், ராமன் எத்தனை ராமனடி நம்முடைன் பார்த்தவர் - இருவர் உள்ளமும் இன்று ஒரே நிலையில் தான் இருக்கும் - அந்த hangover தான் நம்மை இணைக்கும் பாலம் - அது தான் நடிகர் திலகம் என்கிற வைப்ரேஷன் - அதுவும் குறிப்பாக இன்று ரா.எ.ரா. பார்த்த அனைத்து நண்பர்களும் தங்களுடைய உணர்ச்சி வசப்பட்ட நிலையிலிருந்து மீள முடியாமல் தான் திரும்பிச் சென்றனர். தொலைக்காட்சியில் நடிகர் திலகம் நம்மையெல்லாம் கட்டிப் போடும் நிலையிலும் கணிசமான அளவில் ரசிகர்கள் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தது, அந்த ஒப்பற்ற தெய்வம் எந்த அளவிற்கு இந்த சாப்பாட்டு ராமன் ரூபத்தில் நம்மையெல்லாம் ஈர்த்துள்ளார் என்பதற்கு சான்று. ஆகஸ்ட் 15, 1970 முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் எந்தெந்த காட்சிகளில் கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தனரோ அதே காட்சிகளில் இன்றும் நடைபெற்றது .. ஒரு விஷயத்தை உறுதிப் படுத்தியது ... அது ... காலமும் தலைமுறைகளும் நடிகர் திலகத்திற்கு ஒரு பொருட்டல்ல ... அனைத்தையும் கடந்த கலைத் தெய்வம் என்பதை நிரூபித்தது.
படம் முடிந்து வணக்கம் எழுத்துகள் வரும் நிலையில் சிரிப்பிலிருந்து அழுகைக்கு மாறும் அந்த ஒரு வினாடி போதுமே .... வணக்கம் போடும் போது கூட அவர் நம்மை விடவில்லையே..
இன்னும் எவ்வளவோ எழுத ஆசை... ஒவ்வொரு நொடியிலும் நம் வாசுதேவன் சாரின் நினைவு படுத்திக் கொண்டே தான் பார்த்தேன். குறிப்பாக அந்த மாடிப்படியிலிருந்து வேகமாக இறங்கும் காட்சியைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் ..
ONE WILL BE SPELL BOUND ON THE SPEED HE CLIMBS DOWN ... AT THE AGE OF 43 ...
நடிகர் என்றால் நீங்கள் மட்டும் தான் ... நீங்கள் என்றால் அந்நியமாய் உள்ளது...
நீ தானய்யா நடிகன் ....
ஒய்.ஜி.எம். சொல்வது போல்
அவன் தான் நடிகன் ....
இருவர் உள்ளம் திரைப்படத்தில் தலைவரின் சூப்பர் ஸ்டைல் போஸ் ..
http://i1146.photobucket.com/albums/...ps97c23ab6.jpg
← 1953-இல் தமிழ் சினிமா
திரும்பிப் பார் →
திரும்பி பார் சிவாஜி பற்றி எம்ஜிஆர்
மார்ச் 21, 2009 by RV
1962ல், நடிகர் திலகம் கலைத் தூதராக அழைக்கப்பட்டு அமெரிக்க அரசால் கௌரவப்படுத்தப்பட்டார். இதற்காக, சிவாஜி அமெரிக்கா சென்று திரும்பிய போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலே எம்.ஜி.ஆர். சிவாஜி பற்றிச் சொன்னது அவ் விழாவில்தான். அப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.ஆர்.தான். அவ்விழாவில் எம்.ஜி.ஆர். சிவாஜி பற்றிச் சொன்னது
நல்ல குணங்களுள்ள பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பெறுவது எளிது என்று கூறலாம். பாத்திரம் மக்கள் மனதில் பதியுமானால் அதனை ஏற்கும் நடிகரும் இடம் பெறுவது இயற்கை. ஆனால் மக்களால் வெறுக்கப்படும் பாத்திரங்களைத் தாங்கி, மக்கள் மனதில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் அறிய வேண்டும். ‘திரும்பிப் பார்’ என்ற படத்தில் முழுக்க முழுக்க வில்லன் பாகத்தையே ஏற்றார் சிவாஜி. பல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்குமளவுக்கு, ‘ஆங்கில பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ் பெற்றார் அவர். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், ‘ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்த பாத்திரங்களைப் போலவே அவர் நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படம் எடுத்த போது) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புத மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும் தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்!
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.
இன்றைய புகைப்படம்(5)
http://i1087.photobucket.com/albums/...t%20-2/R-1.jpg
நன்றி ராகவேந்திரன் சார்!
'ராமன் எத்தனை ராமனடி' விழா நிகழ்சிகள் பற்றிய தங்களின் பதிவைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். கலந்து கொள்ள முடியாமல் போனாலும் இருவர் உள்ளத்தின் மூலம் ஈடு செய்து கொண்டேன். மொத்தத்தில் நேற்று நம் ரசிகர்களுக்கு தடபுடல் விருந்து.
கோபால் சார்,
நேற்று இருவர் உள்ளத்தை கண்டுவிட்டு உடனே அந்த மகிழ்வை என்னுடன் பகிர்ந்து கொண்டீர்கள் கை பேசியின் வாயிலாக. தங்களின் எல்லையில்லா ஆனந்தத்தை என்னால் உணர முடிந்தது. அப்பா! எப்படி ஒரு சந்தோஷம். உங்கள் உள்ளம் அதையே சுற்றி வந்தால் என் உள்ளம் ராமனையே நினைத்து நினைத்து சுற்றி வந்தது. இன்றுதான் இருவர் உள்ளம் பார்க்கப் போகிறேன் செல்போனை அணைத்துவிட்டு.
தம்பிக்கு அண்ணனின் பாராட்டு.
http://i1087.photobucket.com/albums/...20-2/mgr-1.jpg
உண்மை தமிழர்களுக்கு, சில தமிழர்களே எதிரியாக நின்றதால்தான்,தமிழினமே தலை குனிந்து நிற்கிறது. நமக்கு உரிய மரியாதையை ,இந்திய அளவிலோ,உலக அரங்கிலோ பெற முடியவில்லை.
ஒரு தாகூர் ,சத்யஜித் ரே வங்காள மாநிலத்தில் கொண்டாட படுவது போல உலக மேதைகள் பாரதியும்,சிவாஜியும் அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி கொண்டாட பட்டிருந்தால் ,நாம் உலக அரங்கில் கவனிக்க பட்டிருப்போம்.
இனியாவது உலக தமிழர்களே, ஒன்று படுங்கள்.