மனதுள் மணக்குது
மதுரை மருக்கொழுந்து
மல்லிகை பூச்செண்டு
மருதாணி மனோரஞ்சிதம்
பவளமல்லி பாரிஜாதம்
ஜாதிமல்லி செண்பகம்
முகரத் திகட்டா கதம்பம்
பொத்தி வைத்த பொக்கிஷம்
மலரும் நினைவுகள் தரும்
பள்ளி மாணவர் சந்திப்பு
Printable View
மனதுள் மணக்குது
மதுரை மருக்கொழுந்து
மல்லிகை பூச்செண்டு
மருதாணி மனோரஞ்சிதம்
பவளமல்லி பாரிஜாதம்
ஜாதிமல்லி செண்பகம்
முகரத் திகட்டா கதம்பம்
பொத்தி வைத்த பொக்கிஷம்
மலரும் நினைவுகள் தரும்
பள்ளி மாணவர் சந்திப்பு
சந்திப்பு ஏற்படுமென்று
நான் நினைக்கவேயில்லை
அவனும்
எவ்வளவு வருஷாச்சுடி
எங்க இருக்க மஸ்கட்டா
நான் இந்தக் கம்பெனி
உன்னவர்?
எத்தனை குழந்தைகள்
எனக்கு இவ்வளவு
எவ்ளோ நாள் இருப்ப
வேலை பார்க்கறியா
அவளும் வேலை பார்க்கறா..
அப்புறம்…
தொடர்ந்த உரையாடல்களில்
அவன் கண்கள்
பசும்புல்லைக் கண்ட மாடாய்
மேய்ந்தவண்ணம் இருக்க.
ஒண்ணும் டிஃபரன்ஸே இல்லடி உன்கிட்ட
ஜிம் போறியா என்ன..
ம்ம் யோகா ப்ளஸ் டயட்
,என்று மட்டும் சொன்னேன்..
நீ மட்டும் என்ன வாழுதாம்.
அப்படியே இருக்கடா
காலேஜ்ல படிச்சாமாரி….
ஆளைத் துளைக்கும் பார்வை..
சொல்ல நினைத்து விட்டுவிட்டேன்..
வயதானால் என்ன
வண்டு வண்டு தான்..
வண்டு தான் காட்டும் சமத்துவம்
உண்டோ அதற்கு நிற பேதம்
தேடித் தேடி தேனை உண்ணும்
பரப்பும் பூமி எங்கும் மகரந்தம்
ஓயாத உழைப்பதன் ரீங்காரம்
சேவைகெடுத்த ஒரு அவதாரம்
அவதாரம் எனக்கேட்டால் நீயே தோழி
..அழகான் அனுக்கிரகம் என்றே சொல்வேன்
புவனத்தில் கண்டிப்பாய் அப்பா போலே
...பூர்த்தியான அன்பினிலே அம்மா போலே
உவகைகளை உணர்த்துவதில் அக்கா தங்கை
..உள்ளத்தை வழிநடத்த அண்ணன் போலே
கவலைகளைக் கனவுகளைப் பகிரத் தானே
..கடவுளர்கள் அனுப்பிவைத்தார் எனக்கா கத்தான்
எனக்காகத்தான் இங்கு எதுவும் மாறுமோ
கிழக்கன்றி மேற்கில் சூரியன் உதிக்குமோ
அலைகளும் கடலில் ஓய்ந்து நிற்குமோ
ஆற்றலேயில்லா அப்பாவியும் நானோ
மாறாத நியதிகளை இயற்கை விதிகளை
மதித்து ஒதுங்கி முரண்படாதிருப்பேனே
மாற்ற முடிந்த என் சூழலை அழகாக்கி
மாந்தர் தம் வாழ்வில் மேம்பட உதவி
மானிடப்பிறவியின் பலனை துய்ப்பதே
மகத்தான மதமும் மார்க்கமுமென்பேனே
மார்க்கமுமென்பேனே..
எனில் இறைவன்
எல்லாப் பொருள்களிலும்
எல்லா உயிர்களிலும்
இருக்கிறான்
என மேடையில்
காலட்சேபக் காரர் சொல்லிக் கொண்டிருக்க
காலில் ஏதோகடிக்க..
பார்த்தால் எறும்பு
ஒரே நசுக் என ஒரு ஷணம் நினைப்பை
மாற்றி
கொஞ்சம் தள்ளிவிட்டேன் காலால்..
மனதுள் நிம்மதி
உண்மை தான்.
காதில் எப்போதும் கேட்கவேண்டும்
நற்செய்தி..
நற்செய்தி மாறும் வயதிற்கேற்ப
பள்ளிக்கு விடுமுறை பால்யத்தில்
காதலும் கல்யாணமும் வாலிபத்தில்
பதவி உயர்வும் பணமும் நாற்பதுகளில்
சுப காரியங்கள் ஒய்வு பெறுமுன்
மூன்றாம் தலைமுறை அறுபதுகளில்
படுத்தாத தேக நிலை எழுபதுகளில்
மன நிறைவாய் உறங்கிய முடிவுரை
முடிவுரை எழுதிச் சென்றாய்
.முகத்தினை மறைத்து வேகம்
கடிதெனக் காற்றைப் போல
.காலடி கூட்டி வைத்தே
படிகளில் தாவித் தாவி
…பாய்ந்துநீ சென்ற காட்சி
துடித்தவென் நெஞ்சத் துள்ளே
…சுத்தமாய் பதிந்தி ருக்கு
காதலினை மறுத்துவிட்டுச் சென்றிருந்தால் நியாயமே
…கன்னியுனை மறந்துவிட்டு நின்றிருப்பேன் நானுமே
வாதமிட்டுப் புரியவைத்துப் பின்சென்றால் நியாயமே
..வழக்குவென்ன சொல்லிடாமல் சென்றதுவும் தவறுதான்
பேதமுண்டு இதயத்தில் அந்தஸ்தில் என்றுதான்
..பெண்நீயும் சொல்லிவிட்டுச் சென்றிருந்தால் நியாயமே
சேதமிலாக் காதலுமே உனக்குண்டு தெரியுமே
…சேதியென்ன சொல்லிடாமல் சென்றதுவும் நியாயமோ..
பார்க்காதே என்றாய்நீ சரியென்றே நானும்
….பார்க்கவில்லை நிலவின்கண் பார்ப்பதையே விட்டேன்
ஓர்மையினை நெஞ்சுள்ளே வைக்காதே என்றாய்
…உணர்வுகளை அடக்கிடவும் பாடங்கள் கற்றேன்
வேர்வையது நெற்றியிலே பொங்கிவிட வந்து
….வெண்ணிலவுக் கண்ணீராய் கன்னத்தில் ஓட
போர்க்களம்தான் நம்காதல் போய்விடுங்கள் என்றாய்
..போனதுவோ நீதானே நம்காதல் அல்ல.
அல்ல அல்ல அது கோபமல்ல
யாரை நினைத்து தும்மினாய்
வெடுக் வெடுக் பச்சைமிளகாய்
கொடுக்கால் கொட்டும் தேள்
எரிக்கும் அனல் பார்வைகள்
பேரன்பின் அடையாளங்கள்
அடையாளங்கள் தெரியத் தான்
செய்கின்றன..
வழக்கம் போல
பத்திரிகை தொலைக்காட்சிப் பேட்டிகள்
நல்லது செய்திருக்கிறோம் என்று
பிரகடனங்கள்
செய்வோம் என வாக்குறுதிகள்
மற்றவர்களைப் பற்றிக் கேள்விகள்.
ஓ
வந்து விட்டது மற்றொரு தேர்தல்..
பாமர மக்களோ மோன நிலைதான்.
இதுவும் கடந்து போகுமென்று..
போகுமென்று தெரியும்
அழகும் இளமையும்
ஆயுளும் ஆரோக்கியமும்
அதிலில்லை அதிசயம்
ஆனந்தமான இந்நொடி
அதன் பொருள் கோடி
கோடியில் ஏழு சுழியம்.
ஏழு சுழியும் அமைவாய் பெற்று
கோடி பெற்றால் ஈஸ்வரன்.
செலவு செய்து இழந்து
கோவணம் கொண்டால்
இருப்பதற்கு தெருக் கோடி
இக்கவிதை ஆதியந்தமாதலால் அதன்
பொருட்டே நான் முடிக்கும் இந்த கோடி.
கோடி வீட்டு கோமளா
பக்கத்து வீட்டு பரிமளா
எதுத்த வீட்டு ஏகாம்பரம்
அடுத்த வீட்டு அண்ணாச்சி
எல்லோரும் இத கேளுங்க
கேட்ட சேதியப் பரப்புங்க
கவிதைத் திரி மணக்குது
மைய்யம் பூத்து குலுங்குது
குலுங்குது குலுங்குது மய்யம் பூத்து
மணக்குது மணக்குது மனசு பாத்து
சேக்குது சேக்குது எவரையும் கூட்டு
தெறிக்குது தெறிக்குது கவிதைப் பாட்டு.
பாட்டு செவியில் பதமாய் விழுந்திங்கு
ஆட்டுவிக்கும் நெஞ்சினை ஆம்..
ஆம் நீதான் முடிவெடுக்க வேண்டும்
உனக்கொரு துன்பம் உடலில் நோவு
ஆ என அலறி ஊரை கூட்டுவாயா
இவ்வலி யாருக்கும் வந்ததுண்டோ
புலம்பி பலத்தை போக்குவாயோ
போதாத காலத்தை நோவாயோ
பல்லைக் கடித்து பொறுப்பாயோ
போய்விடும் இதுவும் கடந்து என
தைரியமாய் வலி தாங்குவாயோ
பொறுப்பாய் விதியை சுமப்பாயோ
வலியை வாங்கிக்கொள்ள முடியுமோ
வருந்தும் சுற்றம் மேலும் வருந்தவோ
விவேகம் கண்டு வியந்து உருகவோ
விரைந்து நீ முடிவு செய்ய வேண்டாமோ
வேண்டாமோ கவிதை பாடும் வளமை நம்மினிலே
தோண்டாம ரகசியத்தை தெரிய வருமா உலகினிலே
தீண்டாம மனைவியை உயிர் வருமா வீட்டினிலே
நோண்டாம மண்ணை பயிர் வருமா விதையினிலே
தூண்டாம விளக்கை ஒளி வருமா அறையினிலே
தாண்டாம படியிருந்தா நடை வருமா இளமையிலே
வேண்டாம இறையோட வரம் வருமா பக்தியிலே
சீண்டாம இருந்திருந்தா சுகம் வருமா காதலிலே
காதலிலே காண்கிறேன் பரிணாமம்
கடக்கும் அது பல வளர் கட்டங்கள்
பருவம் எட்டிய இளம் வயதினில்
பூவாய் மொட்டொன்று மலர்ந்து
காலூன்றி வாழத் துவங்கியபின்
காயாய் அது மெல்ல கடினப்பட்டு
கலந்து ஒன்றான முதுமையில்
கனியாய் கடைசியில் இனிக்கும்
இனிக்கும் தேனை நாவில் வைத்தே
...ஏய்க்க நரியும் எண்ணிச்சாம்
கனிவாய் மரத்தில் காகம் பார்த்தே
…கலக்க லாகச் சொல்லிச்சாம்
மனிதர் போலப் பாடும் தன்மை
….உனக்கு உண்டே சொன்னாங்க
பணிவாய்க் கேட்பேன் பாடு காக்கா
...ரசிப்பேன் ருசிப்பேன் நானும்தான்
படையாய் நாமும் பறந்து போனால்
..பார்க்க மாட்டான் இந்தாளு
தடையில் லாமல் பேசும் பார்வை
…சரியும் இல்லை என்றேதான்
வடையைக் காலில் வைத்த காக்கா
..வெவ்வெவ் வேவே என்றதாம்
மடையாய் ஆசை கொண்ட நரிக்கும்
…மயக்கம் தெளிந்தே போனதாம்.
போனதாம் பொற்காலம்
பெருசுகளின் புலம்பல்
புரியவில்லை புது கருவிகள்
பிடிக்கவில்லை புது அலைகள்
பழசை பற்றிக்கொண்டு
புதியவற்றை வசை பாடி
படுவது அதிகமா
படுத்துவது அதிகமா
அதிகமா பேசாதே
அதிகமா சாப்பிடாதே
அதிகமா விளையாடாதே
அதிகமா படம் பார்க்காதே
அதிகமா படி
என்றெல்லாம் சொன்ன அம்மாவின் வார்த்தைகள்
பிற்காலத்தில் தான் புரிந்தது
வேலைகிடைத்த பிறகு..
ம்ம்
எக்காலத்திலும்
மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம்..
அமிர்தம் கடைந்தெடுக்க
அசுரர் உதவிடவேண்டும்
அதில் பங்கு மட்டுமில்லை
அநீதியின் அமரத்துவம்
அமரத்துவம் அடைந்தார் என வரும்
அபிச்சுவரி எனத் தமிழில் வரும்
நீத்தார் நினைவுகள் விளம்பரங்களில் வரும்
புகைப்படத்தில் இருக்கும் சிரிப்பு
மட்டும்
பல சேதிகள் சொல்வதாக
எனக்குப் படுகிறது
எனக்குப் படுகிறது இதெல்லாம் தவறென்று
ஒத்துக்கொள்ளவில்லையே இவ்வுலகம்
தின்னக்கூடாததை தினம் தின்கிறார்கள்
செய்யக்கூடாத பலவும் செய்கிறார்கள்
இத்தலைமுறையின் அறிவில் மயக்கம்
இதை சொல்லிட எனக்கில்லை தயக்கம்
தயக்கம் கொள்ளுகின்றேன் எனக்கு தெரிந்தததையும் பேசிடவே
வியப்பும் அடைகின்றேன் சிலர் தமக்கு தெரியாததையும் பேசிடவே!!!
சாத்தியம் ஆனது இவரால் எவ்வாறு, என்னால் முடியாதபோது
பாத்தியம் கொண்டாடிட முடியாது எவரும் இத்திறமைக்கே.
இத்திறமைக்கே ஆசைப்பட்டேன்
கை வரத்தான் அது மறுக்கிறதே
செடியில்லை நீர் விட்டு வளர்க்க
ஆடில்லை இலை தழை கொடுக்க
எப்படித்தான் நான் வளர்ப்பேன்
வக்கணையாய் கவிதை வடிப்பேன்
கவிதை வடிப்பேன் என்றேதான்
…காகி தத்தைப் பிடித்தாலும்
நவில மறுக்கும் குழந்தையென
… நன்றாய் ஏதும் வாராமல்
தவித்துத் துடித்து யோசித்தே
..சற்றே நேரம் கண்மூட
குவிந்த மலராய்க் கற்பனைகள்
…கூட்டித் தொடுத்தேன் நெஞ்சத்தில்..
நெஞ்சத்தில் பக் பக்
துடிக்குது திக் திக்
பிள்ளைகள் நச் நச்
தாங்காமல் செக் செக்
காய்ந்த வயிறுடன் செல்
என்ன தெரியுமோ சொல்
அறிவுரையும் ட்விட்டரும்
சொல்லத்தான் துடிக்குது மனம் அனு தினம்
சொல்லியே ஆகவேண்டும் அது என் குணம்
நல்லதாய் சொன்னால் தரும் அது நறு மணம்
அல்லதாய் சொன்னாலோ தர்ம அடி என்றும் ரணம்
* முதல் கவிதை. குற்றம் குறை பொறுத்துக் கொள்ள வேண்டும் !
ரணம் ஆறாவிட்டால் நெஞ்சில் வலிமிகும்
பணம் செலவழித்து தேடு நீ மருத்துவம்
குணம் ஆகாவிட்டால் உடலையது வருத்தும்
பிணம் ஆகும்வரை உன்னிடம் வடு இருக்கும.
***முரளிதரன், முதல் கவிதையே மிக அருமை. இதற்கு போய் ஏன் மன்னிப்பு?
இருக்கும் என்றே பார்த்தாலோ
..இல்லை எங்கே போச்சுதுவோ
கருக்கல் வேளை இருந்ததுவே
..காலை கூட இருந்ததுவே
விருப்பப் பட்டு ஏதேனும்
..வேகஞ் செய்ய முடியலையே
துருப்புச் சீட்டாம் வைஃபிநீ
..கடிதாய் வாநான் பாட்டெழுத!
பாட்டெழுத அன்று பனை ஓலை
பரிசளிக்க குளிர்ந்த மன்னர் குலம்
பின்னாளில் காகித உபயோகம்
படித்திட பாதுகாக்க குதூகலம்
தட்டித் தடவி இன்று தகவல் பிறக்கும்
எட்டாத விண்ணிலுலகம் பறக்கும்
பறக்கும் மனத்தை கட்டி வைத்து
சீரான பாதையில் கொண்டு சென்று
நடக்கும் நினைப்பிற்கு ஆசை கொண்டு
வழிகளை கண்டு வாழ்க்கை நடத்து
சிறக்கும் வாழ்க்கை செவ்வனே
காதல் உறுதி :
செவ்வனே நான் சாக இறுதியாய் ஒன்று செய்வாயா பத்மினி
செல்வனே நீ சொல் செய்கிறேன் இது உறுதி என் பத்தினி
என்னுயிர் பிரியும் வரை இருப்பாயா நீ என்னுடன்
என்னவள் கலந்தாள் என் கையை தன்னுடன்
என்னுயிர் பிரியும் வரை இருப்பேன் நான் உன்னுடன்
இன்னுயிரே இது நிச்சயம் இது தானடா என் சத்தியம்
சத்தியம் போற்றும் அரிச்சந்திரன்
பிறன் மனை நோக்கா சீதாராமன்
கொடுத்து கை சிவந்த கர்ணன்
பிரம்மச்சர்யம் தழுவிய பீஷ்மன்
தேடுகிறேன் எங்கே அம்மானுடன்
இருக்கிறானா அது போல் ஒருவன்
ஒருவன் வருவான் உன்னை அடக்க
..ஓயாப் பேச்சு ஒழியா அகந்தை
பருவம் தந்த அழகும் மேலும்
...பக்குவ மாகா நெஞ்சும் கொண்டு
உருவ எழில் தான் உண்மை என்று
..உள்ள்ந்தன்னில் வேகம் கூட்டி
சிறுமி போலே பேசும் பெண்ணே
..சின்ன விஷயம் சொல்வேன் நானே
கண்களில் கனவு தாங்கி
..க்ன்னிமைப் பருவந்தன்னில்
எண்ணமும் பலவும் கொண்டு
..ஏந்திழை நானும் நின்றேன்
வண்ணமாம் கனவுக் கோலம்
..வழியிலே மிதிகள் பட்டு
மின்னலாய் மறைந்து போச்சு
..மேவிநீ உணர்வாய் பெண்ணே..
என்னதமிழ் என்னதமிழ் அம்மாநீ உனக்கு
..என்னவென்று சொல்லிநானும் புரியவைக்க முடியும்
கன்னமதைப் பிடித்திடித்து சொல்லட்டுமா அம்மா
..கனவெல்லாம் கண்டதெல்லாம் அந்தகாலம் தானே
எண்ணத்தில் இப்பொழுது படிப்பிருக்கு அம்மா
..ஏற்றமுடன் நல்வேலை தானெனக்கு வருமே
பின்னென்ன வாழ்க்கையிலே சாதனைகள் செய்வேன்..
..பேதையல்ல நானம்மா பெருமைகொளு நீயும்
நீயும் நானும் குறை உள்ளன் நிறை அல்லன் மானுடனே அன்றோ
தீயிலிட்டு கரியாகி உள்ளன் என்பது அல்லனாவோம் அது என்றோ
நோயிலிட்டு அடங்குமுன் அடக்கம் பண்பு அத்துடன் அன்பு
அதிலிட்டு வினைத்தூய்மை கொண்டால் வியக்குமே விசும்பு
விசும்பு நீரினை கண்டு காதல் கொண்டு
ஆதவன் உதவியால் அதனை மொண்டு
கருவினள் ஆகி மழையை பிரசவித்தனள்
உலகுவாழ் உயிர்கட்கு உணவை ஊட்டினள்.
ஊட்டினள் சாதத்தை கணவனுக்கு
கால்கட்டு போட்ட அவனொரு நாள்
கைகட்டு போட்டு வந்த சமயத்திலே
முதல் குழந்தையானவனின் தாயோ
தன் பதவி பறிக்க வந்தாளேயென்று
தவிக்கிறாள் பழைய யுகத்து மாமியார்
மாமியார்னு நினைச்சுக்காதேள்
நீங்க தான் இவ அம்மா
எனக் கண்கலங்கச் சொன்ன
புவனாவின் அம்மா
புவனாவின் அண்ணியிடம்
சொன்னாள்
“ஏய் சும்மா
மசமசன்னு நிக்காம
பெரியவாளக் கவனிடி..”