வாசுதேவன் ஜி,
ஒரு சின்ன தப்பு நடந்து போச்சி. நான் தங்கத்தின் தங்கம் படத்தில் நடித்த ராகசுதாவைப் பற்றி கேட்கவில்லை. அந்த படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் கேட்டிருந்தேன். நடிகை ராகசுதா கே. ஆர். விஜயாவின் உறவு என்றும், நித்த்யானந்தாவின் சிஷ்யை, நடிகர் ரஞ்சித்தை இரண்டாம் மணம் முடித்தார் என்றும் அறிவேன். ஆனால் நீங்கள் கூடுதல் விவரம்தான் கொடுத்துள்ளீர்கள். அதுதான் விவாஹரத்து போன்ற மேற்படி விவரங்கள்தான். அவர்தான் 'பார்வதி என்னைப் பாரடி' என்ற படத்தில் நடித்தார் என்று நமது சி.க. தப்பாக எடுத்துக் கொண்டு விட்டார். 'பார்வதி என்னைப் பாரடி' படத்தை நான் இரண்டு முறை பார்க்க நேர்ந்தது. 1993-ல் வெளிவந்தது. அதில் சித்தப்பா சரவணன் நாயகனாக நடித்திருந்தார். பாடல்கள் எல்லாமே அருமை. நம்ம ராசாதான் இசை. நாயகியாக நடித்தது ஒரு கன்னட நடிகை. அந்தப் படத்தில் பார்வதி என்று பெயர் கொடுத்திருந்தார்கள். சில பத்திரிகைகளில் ஸ்ரீ பார்வதி என்று குறிப்பிட்டார்கள். அந்த படத்தின் தோல்விக்கு பின்னர் அந்த நடிகை தமிழில் வந்தாரா இல்லையா என்று தெரியவில்லை.
மற்றபடி நான் கேட்ட நடிகை 'செங்கமலத் தீவு' படத்தில் 'பாடுவோம், பூமாலை சூடுவோம்' பாடலின் ராணியாக வரும் நடிகையைத்தான்.