-
உதவாக்கரையாய்த் தான் போவான்
என நினைத்த பாஸ்கர்
ப்ளஸ்டூவில் தேறாமல்
அப்பாவின் ஏச்சுக்களை
நல்லவிதமாய் ஏற்று
தொழிலும் கற்று இன்று..
நன்றாய் முன்னுக்கு வ்ந்து விட..
பெரீய்ய கலெக்டராக வரணும்னு
ஆசைப்பட்ட
நன்றாய்ப் படிக்கும் எதிர்வீட்டு எத்திராஜ்
திடீரென தந்தை மரிக்க
குடும்பத்திற்காக
படிப்பை நிறுத்தி
ஏதோ ஒரு வேலை எனச் செய்து..
கனவு கனவாகவே ஆனதை எண்ணி
முதலில் கொஞ்சமாய்க் குடித்து
பின் குடியே அவனைக் குடிக்க ஆரம்பித்தது...
இந்த மாற்றங்கள்
எந்த விதத்தில் நியாயம்...
சில கேள்விகளுக்கு
வாழ்க்கையில் எப்போதும்
இருப்பதில்லை விடை..
-
விடைத்தாளை விசிறியடிக்கும் ஆசிரியருண்டு
அழகாய் திருத்தி பாராட்டி தெளிவாய் விளக்கிடும்
உயர்ந்த வழிகாட்டிகளும் உண்டு வகுப்பறையில்
விளைநிலத்தை பண்படுத்துவோர் வாழியவே
-
வாழியவே..
வாழியவே..
*
பக்கத்து அறையில் வேதியர்கள்
எனக்காக யாகம் செய்கிறார்கள்..
நான் நல்ல மன்ன்னாம்...
நீண்ட நாள் இருக்க வேண்டுமாம்..
டபக்கென்று கோபம் வசப்படுகின்ற
நானும் ஒரு மன்ன்னா..
ஆத்திரத்தில் கண் மறைக்க
ஊர்ந்த பாம்பை முனிவரின் கழுத்தில் சூட்ட
அவரதுமகனுக்கும் கோபம் வர
எனக்குக் கொடுத்தானாம் சாபம்
ஏழு நாட்களில்
அரவமில்லாமல் அரவம்
எனைத் தீண்டுமாம்..
*
இதோ
நிலவைத் தொடும் வகையில்
அமைந்த மாளிகையில்
உச்சியில் நான்...
வேடிக்கையாகத் தான்
இருக்கிறது..
விரைவில் அங்கேயோ போவேனோ என்னவோ..
*
இறப்புக்கு பயமா எனக்கு
இல்லை இல்லை
இந்த பரீக்*ஷித்துக்கு என்றும்
இருந்த்தில்லை..
பின்
எதற்கு உடன்படுகிறேன்
இந்த மந்திரங்களுக்கும் யாகங்களுக்கும்..
என் மேல் இவர்கள் கொண்ட நம்பிக்கையால்..
*
பொறுத்துப் பொறுத்து இருந்த்தில்..
இன்று
ஏழாம் நாள்..
இறுதி இரவா இது..
என் வாழ்க்கைக்கதையில்
முற்றுமா.. தொடருமா
*
அறைக்கதவு தட்ட்த் திறந்தால்
ஒரு வேதியர்
கண்களில் ஏதோ விஷம்ம்..
பரீஷித்..உன்மனம் கலங்கியிருக்க
மற்றவரைக் குறை சொல்லாதே..
இருந்தும்..
‘வாருங்கள் வேதியரே..’
‘வாழுங்கள் மன்னா..
இந்தாரும்..”
அழகிய மாம்பழங்கள் கொண்ட கூடை
அற்புத வாசனை
மிக இனியதுமன்னா..
உண்டு விட்டு உறங்குவீர்...இனிதாக..
எனக்கும் இனிதாக...
*
வேதியர் போய்விட்டார்..
மாம்பழங்கள் சிரிக்கின்றன
உண்ணலாமா..
வெளியில் பார்த்தால்
சந்திரன் ஏதோ சொல்வதைப் போல..
வா என்கிறானா..
அதோ அந்தமுழுதும்
மஞ்சளாய் உள்ள பழம்..
கத்தியால் வெட்ட...
வெளியில் தாவிய சிறுபுழு
மடமடவென நாகமாய் மாறி
கணத்தில் தீண்ட...
மெல்ல மெல்ல க்ண்சொருகும்
தருணத்தில் தோன்றியது..
யாராலும் முடியாது
வெல்வதற்கு விதியை..
நான் விதைத்த்து வினை
அறுவடை செய்வதும் வினை...
***
-
வினை முடிக்கும் செயல் வீரன்
விடாமுயற்சியுடைய தீரன்
வெற்றிக்கனியை பறிப்பான்
விவரமாய் ஆளை தேர்ந்தெடு
-
தேர்ந்தெடுத்து தேரில் ஏற்றினால்
சாலையில் ஓட்டாது
சாக்கடையில் ஓட்டி
தேரேன்றால் நாறத்தான் செய்யும்
எனில் என்சொல்ல.
-
என்சொல்ல
சின்ன மழையே
செல்ல மழையே
சுகமாய் தூவு
செடியோடு நானும்
சிலிர்க்கின்றேனே
சில்லென்று மனது
சிரிக்கின்றதே நிதம்
-
நிதம் எழும்போது
நினைத்துக் கொள்வேன்..
அதற்கு அதிகம் செல்லம்
கொடுக்கக் கூடாதென..
எழுந்ததும்
அறையை விட்டு வெளியே வந்தால்
அது பரபரவென வாலை ஆட்டி
தாவி நாக்கைத் தொங்க வைத்து
பார்க்கும் பார்வையில் மறந்து
கட்டிக் கொஞ்சுவேன்
’என் செல்லக் கன்னுக்குட்டி..!.”
-
கன்னுக்குட்டி துள்ளுவதை
கண்டாலே மனம் துள்ளுவதேன்
கள்ளம் கபடில்லை அதனிடம்
காலம் இருக்கு பதவிசு வந்திட
கவலை தெரியாத பருவம்
கடிதாய் முடிந்திடுவது பாவம்
-
பாவமாய்த் தான் இருக்கிறது...
உன் மென்மையினால்
பொறாமைப் பட்ட தென்றல்
மெல்ல
அடிமேல் அடி வைத்து
உன் முன்னுச்சி முடியைக் க்லைக்க
அதனால் நீ மேலும் அழகானதைக்
காணப் பொறுக்காமல்
உன்னிடமே
முட்டி மோதுவதைப் பார்க்கையில்...
*
பாவமாய்த் தான் இருக்கிறது..
என் பெருமை யாருக்கு வரும்
எனக்
கர்வத்துடன் இருந்த
உன் தலையில் நீ சூடியிருந்த
ரோஜா
ஏதோ ஒரு அசைவில்
உன் பின்னால் விழுந்து
நீ எடுத்து
மறுபடியும் சூடிக் கொள்வாயா
என
ஏக்கத்துடன் பார்ப்பதைப் பார்க்கையில்….
*
பாவமாய்த் தான் இருக்கிறது..
எப்படியும் நீ எடுத்து
எழுதுவாய்..
உன் தளிர்விரல்கள்
தன் மேல் படும்..
ஜென்மசாபல்யம் அடையலாம்
என நினைத்திருந்து
உன் கைப்பையினுள் தவமிருந்த பேனா
அதை நீ எடுக்காமல்
கணினியைஉயிர்த்து
தட்டச்சு செய்வதைப்பார்த்துப்
பெருமூச்சு விடுவதைப் பார்க்கையில்..
*
உன்க்கு நான்
பாவமெனத் தெரியவில்லையா..
கடைத்தெரு சென்று வந்த்தும்
எனக்கு சின்ன புன்சிரிப்புக் கூடக்
கொடுக்காமல்
நேரே கணினியின் முன் அமர்ந்து
எதுவோ எழுதுகிறாயே..
இது நியாயமா.. நீயேசொல்..
-
சொல் ஒரு சொல்
முடியாது
மாட்டேன்
போடா
லூசு
ஏதாவது ஒன்று