//பழைய ஒலிபெருக்கி//
அது ஆம்ப்ளிபையர் இல்லை ராஜ்ராஜ் சார். ஸ்பீக்கர். (சட்டசபை ஸ்பீக்கர் இல்ல):)
Printable View
//பழைய ஒலிபெருக்கி//
அது ஆம்ப்ளிபையர் இல்லை ராஜ்ராஜ் சார். ஸ்பீக்கர். (சட்டசபை ஸ்பீக்கர் இல்ல):)
அதிகாலையில் செல்பேசியில் வெகுநாட்கள் கழித்து வாழ்த்துக்கள் நிறைந்த உங்கள் குரல் கேட்டு மகிழ்ந்தேன் ரவி சார் !!
மாபெரும் மதுர கானக் கடலில் வகை வகையான பொக்கிஷங்களை தேடி எடுக்க மீண்டும் வருக என்று கேட்டுக்கொள்கிறேன் !!
ஈகோக்கள் இல்லாத மனமகிழ் திரியில் அகமகிழ்வுடன் முகமலர்வுடன் பணியைத் தொடர்வோம் நண்பரே !!
அன்புடன் செந்தில்
summaa for a change Ravi Sir...enjoy!
https://www.youtube.com/watch?v=aNL3POV6OoI
என்ன ஒரு அட்டகாசமான பாடல்!
கணீரென்று அமர்க்களமான பாவங்களுடன் உணர்ச்சிமயமாக டி.எம்.எஸ். பாட நமக்கு மெய் சிலிர்க்கிறது. அந்த கம்பீரக் குரல் நம்மைக் கட்டிப் போட்டு ஆள்கிறது. இன்னிசை வேந்தர்கள் பாடகர் திலகத்தை வேகமாகப் பாட வைப்பதில் வல்லவர்கள். அது போல பாடல் ரிகார்டிங்கும் தெள்ளத் தெளிவு. போலீஸ் ஜீப்பில் ராஜனும், மேஜரும். இனால் மறக்க முடியாத பாடல்.
சாட்சி ஒரே சாட்சி
அது கோர்ட்டுக்கு வாராதது
எந்தக் கூண்டிலும் ஏறாதது
உன் காட்சிக்கு வராமல் சாட்சி
சொல்லும் கடவுள் தானது
உலகம் அவனது அரசாட்சி
அவன் உருவம்தான் உன் மனசாட்சி
உள்ளம் என்றும் தெய்வம் அது
சொல்லுவதில்லை பொய் சாட்சி
(சாட்சி)
காதலுக்கிரண்டு கண் சாட்சி
அந்தக் கண்களின் தவறுக்கு பெண் சாட்சி
அம்மா உந்தன் வழக்கைத் தீர்க்க
காலம் செய்வது ஆராய்ச்சி
(சாட்சி)
1000 இருக்கும் ஊர் சாட்சி
இதில் உண்மை என்பது யார் சாட்சி
சிறுவன் இந்த ஒருவன் தானே
சட்டம் தேடும் மெய்சாட்சி
சட்டம் தேடும் மெய்சாட்சி
(சாட்சி)
https://youtu.be/Nx3Utpl4vEw
ஹாய் குட் மா...ர்...னி...ங்... ஆல்ல்....:)
ரொம்ப ஹேப்பி யா இருக்கு... சில விஷயங்கள்..
ஒண்ணு.. கங்க்ராட்ஸ் சிவாஜி செந்தில் சார்.. நிஜம்மாகவே படிக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது..இன்னும் பல சாதனைகள் நீங்கள் படைப்பீர்கள்..உங்களுக்கு இறைவன் எல்லா நலமும் எல்லாகான்செப்டுகளும் தருவான்..
இரண்டு.. வஹிதா பாட்டு என்று ஜஸ்ட் லைக் தட் மட்டும் தான் சொன்னேன்.. இந்தப் பாட்டை நானும் தேடித் தேடிப் பார்த்தேன்..முதல் வரி வராததினால்(மனதுள்) கண்டுபிடிக்க இயலவில்லை.. ஒரே மாதிரி யோசிக்கும் நண்பர் எனக் காட்டியமதுண்ணாக்கு நமஸ்கார் தாங்க்யூ நன்றி..இன்னும் வேறு மொழிகளிலும்..
மூன்று..வாஸ்ஸீ .. பேக் பைப்பர் இன்ஸ்ட்ருமெண்ட்.. நீங்கள் பைட் பைப்பர் கதை தானே சொல்கிறீர்கள் படம் வந்து ஒரு நாதஸ்வரக் குழாய் மாதிரித் தானே இருக்கும்…. அப்புறம் விளம்பரங்களில் எல்லாம் பேக் பைப்பர் சோடா என்று தான் சொல்வார்கள் இல்லியோ..
நான்கு.. ராஜ் ராஜ்சார்.. எழுதுங்கள்.. இட் வில் பி இண்ட்ரெஸ்டிங்க்..
ஐந்து.. ராகவேந்திரா சார்.. மைக் மோகனுக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் ஜாஸ்தி எனக் கேள்வி..அதிர்ஷ்டத்திற்கு உதாரணமும் அவரே.. எதிர்மறைக்கும் அவரே உதாரணம்..
**
ஆறு..உடல் நலம் கொஞ்சம் நிறையவே முடியவில்லை..எனில் ஆஃபீஸூக்குச் சுட்டி..பதினொன்றரைக்கு முடிந்தால் டாக்டரிடம் (அப்போது தான் வருவார்) போக வேண்டும்..
*
இனி.. வஹிதா பாட்டு தமிழ்ப் - படுத்தல்..
*
என் முந்தானையிலிருந்து முட்களை எடுத்துவிட்டேன்..
எல்லாத் தளைகளையும் உடைத்துவிட்டேன்..
என் பொங்கும் இதயத்தை தடுக்காதீர்க்கள்.. இதோ இதோ என் இதயம் போகிறது..
**
இன்று நான் மறுபடியும் வாழ விரும்புகிறேன்..
இன்று நான் மறுபடியும் சாக விரும்புகிறேன்..
*
என் உணர்வுகள் என்னிடம் இல்லை…
நான் ஓரிடத்தில் என் இதயம் வேறிடத்தில்..
*
நான் குடித்திருக்கிறேனா அல்லது ஒரு புயல் எனக்குள் புகுந்து விட்டதா..
யாராவது சொல்லுங்களேன்.. நான் எங்கே இருக்கிறேன்..
*
நேற்றின் இருளிலிருந்து விலகி விட்டேன்..
கொஞ்சம்பயமாகத்தானிருக்கிறது..
போகும் பாதை புதிது..ம்ம் அதனால் என்ன..
மெல்ல மெல்லக் கண் திறந்தால் வழியெங்கிலும் பூக்கள்..
ஆஹா வந்துவிட்டது வசந்தம்…
..
ஆஜ்…
வெகு அழகான பாடல்..கொஞ்சம் யோசித்தால்..காற்றுக்கென்ன வேலியும் அதே டைப் தானில்லை..
*
ஹிந்திலிரிக்ஸும்..ஆங்கில ட்ரான்ஸ்லேஷனும்..( வலையில் தான் சுட்டது)
*
kaanton se khinch ke ye aanchal
After pulling my sari fringe from the thorns
tod ke bandhan baandhe paayal
I broke all the ties and wore my anklet
koi na roko dil ki udaan ko
don't any one stop the my soaring heart
dil vo chalaa ha ha haa haa haa haa
Here goes my heart
(aaj phir jine ki tamannaa hai
Today i want to live again
aaj phir marane kaa iraadaa hai) - 2
today I again want to die
apne hi bas main nahin main
I am not in self control
dil hai kahin toh hoon kahin main, o o
My heart is somewhere else and I am elsewhere
jaane kyaa paa ke meri zindagi ne
Don't know what my life found and
hans kar kahaa, ha ha, ha ha, aa a
laughingly said
aaj phir jine
main huun khumaar (ghubaar) yaa tuufaan huun
Am I drunk or a rebelious storm is rising in me
koi bataae main kahaan huun
Some one tell me, where I am?
dar hai safar men kahin kho na jaauun main
I scared that I may not get lost in my travel
rastaa nayaa a a aa aa aa aa
Since the road I am taking is new
aaj phir jine
kal ke andheron se nikal ke
Escaping from the darkness of yesterday
dekhaa hai aankhen malake malake
I am slowly opening my eyes
phuul hi phuul zindagi bahaar hai
I see flowers everywhere, the life has turned into the spring time
tay kar liyaa a a aa aa aa aa
I have decided
http://i.ytimg.com/vi/QsXTCxLZyws/maxresdefault.jpg
மதுண்ணா!
'ஒரே சாட்சி' படத்தில் இன்னொரு அமர்க்களமான பாட்டு ஒன்று உண்டு. மனோகர் போதை மயக்கத்தில் இருக்க எம்.பானுமதி பாடி ஆடுவார். சுசீலா குரல் கொடுத்திருப்பார்.
விலை பேசும் கண்கள் அல்லவோ
கண்ணா விளையாட வா என்று
இன்னும் சொல்லவோ
இப்போது அப்படியே டிராக் மாறும். இப்போ ராட்சஸி டைம். ஆடுபவர் வழக்கம் போல சி.ஐ.டி.சகுந்தலாதான். சும்மா தானே புயல் மாதிரி குரல் விறுவிறுவென பறக்கும்.
அந்த மங்கையா இந்த மங்கையா
இருவரில் யார் வேண்டும்
இங்கே இருவரில் யார் வேண்டும்
பக்கம் வந்ததும் சொர்க்கம் என்பது
என்னிடம்தான் தோன்றும்
சுகம் என்னிடம்தான் தோன்றும்.
இப்போ ஈஸ்வரி கலக்குவார் பாருங்க
பொண்ணு தேவையா ஜின்னு தேவையா
இரண்டிலும் சரிபாதி போதை
இரண்டிலும் சரிபாதி
கன்னம் தேவையா கிண்ணம் தேவையா
இரண்டுமே ஒரு ஜாதி இங்கே இரண்டுமே ஒரு ஜாதி
கையிலே ஏந்தலாம் காதலில் நீந்தலாம்
அடுத்து நக்கல் சிரிப்புடன் சுசீலா ஆரம்பிப்பார். பிறகு ஈஸ்வரி தொடர்வார் போட்டியாக.
சங்கர் கணேஷ் பின்னுவார்கள். ஈஸ்வரி எல்லாரையும் விட கலக்கல்.
http://www.inbaminge.com/t/o/Ore%20S...llavo.vid.html
வணக்கம்
செந்தில் சார்.
தங்களது மாணவர்கள் தங்களுக்கு பெருமை சேர்த்து உங்களை சந்தோஷப்படுத்தி எங்களையும் சந்தோஷப்படுத்தி விட்டனர். அந்த தங்கங்களுக்கு நம் வாழ்த்துக்கள். உங்கள் சந்தோஷத்திலும், பெருமையிலும் மதுரகான நண்பர்களும் பங்கு கொள்கிறோம். மதுண்ணா சொல்வது போல பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும் என்றுமே பலன் அளிக்கக் கூடியவை. தங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
வாசு சார்
ஒரே சாட்சி... அருமையான பாடல்கள்.. அபூர்வமான பாடல்களும் கூட..
தேடிக் கொண்டு வாருங்கள் இது போன்ற பொக்கிஷப் புதையல்களை..
ஆவலுடன் காத்திருக்கிறோம்.