நினைப்போம்.மகிழ்வோம்-15
"சரஸ்வதி சபதம்"
'அகர முதல' பாடலை ராஜகம்பீரத் தோற்றத்தில்
அமர்ந்து பாடிக் கொண்டிப்பார்.
"ஊமையின் வாய் திறந்து
பேச வைத்தாய்" எனப் பாடும்
பொழுது நன்றியின் நெகிழ்வில்
கண்களில் கண்ணீர் நிரம்பும்.
தொடரும் ஒரு சிறிய தபேலா
இடையிசைக்குப் பிறகு
மீண்டும் "அகர முதல" எனப்
பாடத் துவங்கும் போது
கவனியுங்கள்..
அந்த அழுகை முகத்தை
ஆனந்த முகமாய் மாற்றும்
அழகை.