Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார்,
வீறுகொண்டு எழுந்து வீர முழக்கமிட்ட 'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைக்காவியம் உருவான வரலாறு மலைக்க வைக்கிறது. மலைப்புக்கு காரணம் அப்போது நடந்த சம்பவங்கள் என்றால், அதைவிட பல மடங்கு மலைப்புக்குக் காரணம், இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவற்றை நாம் கண்டு வியக்கும் வண்ணம் தருவதற்கு 'பம்மலார்' என்ற மாமனிதர் இருக்கிறாரே என்ற வியப்புத்தான் காரணம்.
அன்புச்சகோதரர் வாசுதேவன் அழகாகச் சொன்னது போல, நீங்கள் எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு நாடகளை, மாதங்களை, வருடங்களை மற்றும் பொருளாதாரங்களை செலவழித்துத் தேடிய ஆவணப்பொக்கிஷங்களை, யாம் பெற்ற இன்பம் பெறுக நடிகர்திலகத்தின் ரசிகர்களும் என்று அள்ளி வழங்கிக்கொண்டிருக்க, நாங்கள் 'நோகாமல் நொங்கு தின்று கொண்டிருக்கிறோம்'.
ஏற்கெனவே பல நண்பர்கள் எனக்குத்தனி மடலில் சொன்னது போல, தங்களின் சீரிய சேவைக்காக எதிர்வரும் நடிகர்திலகத்தின் பிறந்த நாள்விழாவில் தாங்கள் மேடையேற்றப்பட்டு, மாலை சூடப்பட்டு, பொன்னாடை அணிவிக்கப்பட்டு, விருது வழங்கப்பட்டு சீரிய முறையில் கௌரவிக்கப்பட வேண்டும். இது அனைத்து ரசிகர்களின் தணியாத தாகம்.
ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை அன்புக்குரிய ராகவேந்தர் சார் அவர்கள் நடிகர்திலகத்தின் புதல்வர்களின் கவனத்துக்கு எடுத்துச்சென்று ஆவண செய்ய வேண்டும்.
உங்கள் சீரிய சேவை தொய்வின்றி தொடர வாழ்த்துக்கள்.