நாளை இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்
வழங்கும், தேவரின் "தாயைக் காத்த தனயன் " ஒளிபரப்பாகிறது.
http://i62.tinypic.com/1fin2v.jpg
தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு.சுந்தர்.
Printable View
நாளை இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்
வழங்கும், தேவரின் "தாயைக் காத்த தனயன் " ஒளிபரப்பாகிறது.
http://i62.tinypic.com/1fin2v.jpg
தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு.சுந்தர்.
நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு .
----------------------------------
கடந்த சில நாட்களாக , தின இதழ் நாளிதழில், உண்மைக்கு புறம்பான,தவறான
செய்திகள் பிரசுரம் ஆகி வந்தது குறித்து, நண்பர்களின் விமர்சனங்களை/ ஆலோசனைகளை கருத்தில் கொண்டு , நண்பர் திரு. ராஜ்குமார் , தின இதழ்
ஆசிரியர் திரு.குமரனிடம் இது குறித்து, புகார் தெரிவித்தும், நண்பர்களின் கருத்துக்கள் /விமர்சனங்கள் /கண்டனங்கள் எழுந்தது குறித்தும் நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் சார்பாக , தொலைபேசியில் விரிவாக , உரையாடியுள்ளார்.
உரையாடலுக்கு பின்னர், தின இதழ் ஆசிரியர், இனி வரும் நாட்களில் இது போன்ற
தவறுகள் , பிழைகள் நேரா வண்ணம் பார்த்து கொள்வதாக உறுதி அளித்ததாக
திரு. சைதை ராஜ்குமார் அவர்கள் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.
ஆர். லோகநாதன்.
HAPPY BIRTHDAY TO THIRAI ISAI CHAKRAVARTHI [MELLISAI MANNAR]. OUR SINCERE WISHES FOR YOUR SPEEDY RECOVERY:
நான் சபை ஏறும் நாள் வந்தது நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது நானும் அன்பான நண்பர்கள் முன்பாக
இந்நேரம் பண்பாட வந்தேன் நெஞ்சில் உண்டான எண்ணத்தை
உல்லாச வண்ணத்தை பாட்டாக தந்தேன் பாட பாட ராகம் வரும்
பார்க்க பார்க்க மோகம் வரும்
நான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு
செல்வாக்கை பெறுகின்றவன் !!
https://www.youtube.com/watch?v=LD0ydSvlkBw
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் பிறந்த தினம் இன்று!
ஒரேநாளில் பிறந்த இரண்டு மாமேதைகள் தான் கண்ணதாசன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன். “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை-எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற வரிகளின் மூலம் இன்றும் நம் நெஞ்சில் வாழ்ந்து வருபவர் கண்ணதாசன் அவர்கள்.
தன் வாழ்வின் பெரும்பகுதியில் நாத்திகனாக இருந்து, பின் இவர் எழுதிய ’அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நாவலின் வாயிலாக இறைவனை புரிந்துகொண்டார்.
பாடல்கள் மட்டுமின்றி ’ஏசு காவியம்’, ‘அவள் ஒரு இந்து பெண், வனவாசம் என காலத்தால் அழியாத நாவல்களை படைத்துள்ளார்.
இதேபோல் பாடலின் வரிகள் இவை இல்லையெனில் வெறும் காகிதங்களாக தான் இருக்கும், அதன் பெயர் தான் விஸ்வநாதன், மன்னிக்கவும் இசை. எனக்கு இசையும், விஸ்வநாதனும் வேறு ஆளாக தெரிவதில்லை. இவரால் தான் ஒரு மாநிலத்தில் தலையெழுத்தே மாறியது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது தான் உண்மை.தன் பாட்டின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காது நிழைத்திருக்கும் ’புரட்சி தலைவர்’ எம்ஜிஆர் அவர்களுக்கு 75% படங்களுக்கு இசையமைத்தது என்றால் இவர் தான்.
மேலும் கண்ணதாசனும்-விஸ்வநாதன் அவர்கள் கூட்டனியில் ’ஆயிரத்தில் ஒருவன், உரிமைக்குரல், என் கடமை, தங்கப்பதக்கம்’ போன்ற பல படங்களில் சேர்ந்து பணியாற்றியுள்ளனர்.
ஒரு பாடல் வரிகள் இல்லாமல் முழுமையடையாது, அதேபோல் இசையில்லாமல் வரிகள் உயிர் பெறாது. அதனால் தான் கலைத்தாய் இருவரையும் ஒன்றாக படைத்தார் போல!இதுபோல் மாமனிதர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் என்றும் ‘சினி உலகத்திற்கு’ பெருமை தான்.
courtesy - net
கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,
‘தேக்குமரம் உடலைத் தந்தது,
சின்னயானை நடையைத் தந்தது,
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.
புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!
இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்! ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!
கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?
‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’
என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.
courtesy - vallamai