மேலும் ஓர் எடுத்துக்காட்டு.
கரு > கன்
கருநடம் > கன்னடம்.
Printable View
மேலும் ......................
அருந்து என்பதிலிருந்து அன்னம் தோன்றியதென்பதை மலையாள மொழியொலிப்புப்படி சென்று காணலாமே.
வந்து - வன்னு
என்றுதான் அங்கு வரும்.
ஆகவே அருந்து என்பது
அருன்னு (அருந்நு) என்றுதான் வரும்,
அருந்நு > அந்நு > அன்னம்.
இப்படிப் பார்த்தால் மிகத் தெளிவாகிவிடும்.
தொடரும்.
More support evidence:
குறு > குன்
குறு - குன் - குன்று (வினைச்சொல்: குன்றுதல்)
குறு - குன் - குன்று = சிறிய மலை.
நறு > நல்- நன். அல்லது நல் > நறு.
அறு>அன் > அன்று.
அறு - முடிதல் குறிக்கும். அ என்னும்சுட்டடிச் சொல் என்றும் கொள்ளலாம்.
னகரம் லகரம் ஒன்று மற்றொன்றாய்த் திரிதலும் கொள்ளப்படும்.
Thursday, october 11, 2012
கண்> கரு > கருணை
வீரம், காதல், இரக்கம் போன்ற பலவேறு பண்புகளும், கண்களின் வழியாகவே வெளிப்படுவனவாகத் தமிழன் கருதினான்.
தமிழனின் மொழியில் அமைந்துகிடக்கும் சொற்கள் பலவும் இக்கருத்தையே நன்கு படம்படித்துக் காட்டுகின்றன.
வீரம் குறிக்கும் "தறுகண்மை" என்னும் சொல் கண்ணினையே நிலைக்களனாகக் கொண்டதாகும். காதலுக்கும் கண்ணுக்கும் உள்ளதாக இலக்கியங்கள் கூறும் தொடர்பினை ஈண்டு விரித்துரைக்கத் தேவையில்லை.
இரக்கம், மனநெகிழ்வு முதலிய கண்ணினின்றே வெளிப்படுவன என்று இலக்கியம் கூறும். கண்ணோடுதல், கண்ணோட்டம் என்ற சொற்களை ஆய்ந்து இதனை அறியலாம்.கண்ணோட்டம் என்பது இரக்கம்.
கண் என்பது கரு என்று திரியும் என்பதை நாம் மேலே ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளோம்.
கண்> கரு > கருணை.
முகத்தின் ஏனை உறுப்புகட்கு இல்லாத ஒரு திறம் கண்ணுக்கு உண்டு. கண் கலங்கி நீர் சிந்தி அழக்கூடியது. கண்ணிலிருந்து (கண் என்றசொல்லில் இருந்து) கரு என்பதமைந்து கருணையில் முடிந்தது மிக்கப் பொருத்தமுடையதாகும்.
நெய்(தல்) என்ற சொல்லே "ணை" என்று மாறி சொல்லீறாக நிற்கின்றது. கண் சென்று ஈடுபாடு கொள்ளுதல் என்பது பொருள்.
கண்> கரு > கருநெய் > கருணை.
எண்ணெய என்ற சொல் எண்ணை என்று வழங்குதல் காண்க. தமிழ்ப் புலவன் இதை எண்ணெய் என்றே எழுதவேண்டுமென்றாலும் எண்ணெய் வணிகர் கேளார். திரிபு வழக்கில் உள்ளது.
அங்ஙனமே, கருணை என்ற திரிபையும் புலவர் ஏற்கமாட்டார்.எனினும் சங்கதத்தில் நல்ல இடப்பிடித்துக்கொண்டு இது மீண்டும் தமிழுக்கு வந்து வழங்குகிறது,
குறிப்பு: கண்+ எய்(தல்) =கண்ணெய் > கருணை எனினும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
You may enrich your references by reading:
http://www.mayyam.com/talk/showthrea...anskrit/page12
இனியும் ஓர் எடுத்துக்காட்டு:
நெருநல் > நென்னல்.
இங்கு நெரு என்ற சொல்லின் பகுதி "நென்" என்று மாறி அமைந்துள்ளது காணலாம்.
மேலும்"நெந்நல்" என்றில்லாமல்,"நென்னல்"என்று மாறியுள்ளதையும் உணர்ந்துகொள்க.
அகரவரிசை எழுதினோர் யாது கூறினும், இங்ஙனம் நுண்மாண் நுழைபுலம் உடையாராய், ஆய்ந்தறிதலே செயற்பாலதாம்.
மற்றொன்று:
தரு என்பதும் தன் என்று திரியும். இந்தத் "தரு" முழுச்சொல் அன்று.
இப்படி:
தருமம்> தன்மம்.
ஒரு நண்பர் நீங்கள் ஏற்றுக்கொள்ள வியலாத ஒன்றைச் சொல்லிவிடுகிறார். நீங்கள் கோபித்துக்கொண்டு அவரிடம் கொஞ்ச நாள் பேசாமலிருக்கிறீர்கள். இருவரும் மீண்டும் ஒன்றுபட க் காலம் கனிகிறது. பொறுத்துக்கொள்ளுமாறு அவரும் வேண்ட, இருவரும் மருவிக்கொண்டு (தழுவிக்கொண்டு) மகிழ்கிறீர்கள்.
மருவிக்கொள்ளுதல், அணைத்துகொள்ளுதல், கைகுலுக்கிக் கொள்ளுதல் முதலிய இன்ன பிறவும், மன்னித்துக்கொள்ளுங்கள், மன்னித்துவிட்டேன் என்றெல்லாம் செயல்வாயிலாகத் தெரிவித்தலேயன்றி வேறு என்ன?
கை கூப்புதலும், ஒரு கை இன்னொரு கையைச் சென்று தொட்டுத் தழுவுதலே ஆகும். இரண்டு உள்ளங்கைகள் ஒன்றாய்ப் படிந்து கை கூம்புவதும் (கைகூப்புவதும்) இருவர் ஒன்றாய் மருவிக்கொள்ளுதற் குறிப்பேயாகும். Ipso facto, the embracing of two hearts.
மரு>மருவு> மருவுதல்.
மரு> மன்.
மன்> மன்னி > மன்னித்தல்.
அரு> அன் என்பதிலிருந்து நாம் மேற்கூறிய அனைத்தையும் மீண்டும் கவனிக்கவும்.
ஒரு சொல் இங்ஙனம் மாறும்போது, இனிய ஓசை வருமாறு வேறோர் ஈறுபெற்றமையக்கூடுமென்பதை நீங்கள் கூர்ந்து கவனித்து உணர்ந்திருக்கலாம்.
மன்னுதல் > மன்னித்தல் என்றும் பொருள்கூறல் தகுமாதலின் இஃது ஓர் இருபிறப்பி (இருவகையிலமையக்கூடிய சொல்) எனலாம்.
அரு > அண், அண்>அரு என்னும் மாதிரியில் அமைந்த பல சொற்களை அறிந்து இதுகாறும் இன்புற்றோம்.
இன்னும் ஒரு சொல்லை ஆய்வதுடன் இதனை முடித்துக் கொண்டு வேறு வகையான சொல்லமைப்புக்களைக் காண முயல்வோம்.
உரு என்று அமைந்த சொல் உண் என்று தொடங்குமாறு மாறியமைந்ததை இங்குக் காண்போம்:
உரு>உண்
இவை இரண்டும் தனிச்சொற்களல்ல. சொற்பாகங்கள்..
இது:
உருண்டை > உண்டை என்று திரியும்.
இங்ஙனம் மாறுவன, பொருள் மாற்றமடைதலு முண்டு; பொருள் மாறாமல் போலிகளாய் இருப்பனவுமுண்டு.
துண்டு = சிறிய துண்டுத் துணி. வேட்டியினும் சிறிய துணி.
துண்டு = முண்டு.
முண்டு என்பது மலையாள வழக்கு அல்லது திரிபு.
ஆசு = பற்றி நிற்பது, பற்றுக்கோடு.
முண்டு+ஆசு = முண்டாசு > " முண்டாஸ்."
முண்டுப்பற்று அதாவது தலையைப் பற்றி நிற்கும் துண்டு, தலைச் சுற்றுத் துணி.