Quote:
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது பழமொழி.
தமிழர்கள் முன்பே கடல் கடந்து வணிகத்தில் முத்திரை பதித்தவர்கள். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏராளம்.
இன்று உலகமயம் என்றாகிவிட்டது. ஏற்றுமதி வணிகம் மிகப் பெரிய லாபம் தரும் தொழிலாகிவிட்டது.
இட்லி, இடியாப்பம், தேங்காய் நாரில் உருவான பொருட்கள், காய்ந்த கொப்பரை தேங்காய், மீன் குழம்பு, காஞ்சிபுரம் பட்டும், அரிசிப்புட்டு, ரோசாப்பூ, மல்லிகைப்பூ, வெட்டிவேர், தலைமுடி என்று எல்லாப் பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஏற்றுமதி செய்வதற்கு என்ன வழிமுறைகள்... எந்தெந்த நாடுகளுக்கு என்னென்ன பொருளை ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் சம்பாதிக்க முடியும்? ஏற்றுமதி சம்பந்தமான அனைத்து வழிகாட்டுதலையும் தரும் நிகழ்ச்சியே `திரைகடல் ஓடி'.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ராம்குமார் சிங்காரம்.
மக்கள் தொலைக்காட்சியில் செவ்வாய்