Mr Vasu Sir,
Superb Fight scenes from VP.Thanks for uploading the same.
Mr Raghavendra Sir,
Your new avatar is simply superb.
Mr Karthik Sir,
Awaiting your theatre experience of NT's Films.
Printable View
Mr Vasu Sir,
Superb Fight scenes from VP.Thanks for uploading the same.
Mr Raghavendra Sir,
Your new avatar is simply superb.
Mr Karthik Sir,
Awaiting your theatre experience of NT's Films.
Mr Gopal Sir,
Your Love series is fantastic.
Dear Vasu Sir - NT fight scenes superb but more than that the way you have narrated - that added further value . In any other heroes movies , both the shots would be taken separately and combined after long drawn editing - in some movies , to please the fans , animals would appear after fights to confess their defeats . But the scenes are so natural and NT had risked his life too much - Ganesh became equal to Ganesh:pink:and at the end overpowered the Ganesh :pink: Great Sir !!:):smokesmile:
There could be a few who are yet to watch this enjoyable movie from Thilana Mohanambal combo - for them this gift - watch it online
http://youtu.be/L6nBNSlN6ck
வாசு சார்,
வேலை பளு காரணமாக சில பல நாட்கள் பதிவிட முடியவில்லை. ஆனால் உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நடிகர் திலகத்தின் படங்களை இயக்கிய இயக்குனர்கள் பற்றிய ஒரு குறுந்தொடர் பிரமாதம். எனக்கு அதில் நீங்கள் மாதவனுக்கு கொடுத்திருந்த முக்கியத்துவம் பிடித்திருந்தது. காரணம் நாம் அனைவருமே CVR பற்றி பெருமையாக சொல்வோம். ACT பற்றி சிலாக்கிது பேசுவோம். ஆனால் மாதவன் பற்றி பேசுபவர்கள் குறைவு. ஞான ஒளி காரணமாக இருந்தால் கூட அவரின் படங்கள் மற்றும் அவை புரிந்த சாதனைகள் பற்றி நீங்கள் மிக சரியாக குறிப்பிட்டிருந்தீர்கள். தங்கபதக்கம் பற்றி சொல்லும்போது நான் எதிர்பார்த்திருந்த விஷயங்களை எழுதியிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
நாயகியர் தொடரில் மைனாவதி பற்றி எழுதியது நன்றாக இருந்தது. எனக்கு பண்டரிபாய் மற்றும் மைனாவதி பற்றி எந்த செய்தி படித்தாலும் நகைச்சுவையான ஒரு விஷயம் நினைவுக்கு வரும். பெருந்தலைவரின் தொண்டனாக ஸ்தாபன காங்கிரஸில் பணியாற்றி பின் ஜனதாவில் இணைந்து அரசியல் பணி செய்து பின்னாட்களில் தனி இயக்கம் கண்ட பெரியவர் நெல்லை ஜெபமணி அவர்கள் ஒருமுறை பொதுகூட்டத்தில் பேசும்போது பண்டரிபாய், மைனாவதி ஆகியோரையும் கர்நாடக காவிரி அணைப்பிடிப்பில் 1960-களின் இறுதியில் கட்டப்பட்ட ஹேமாவதி அணையையும் இணைத்து நகைச்சுவையாக ஒன்றை சொன்னார். அதை இன்றைக்கும் நினைத்து ரசிப்பேன்.
மைனாவதி பற்றி சொல்லும் போது அபிநய சரஸ்வதி நினைவிற்கு வருகிறார். காரணம் ஞாயிறன்று பார்த்த குலமகள் ராதை. உங்கள் நாயகியர் தொடரில் கன்னடத்து பைங்கிளி பற்றி எழுதும்போது அவர் எப்படி நடிகர் திலகம் படங்களில் பரிமளித்தார் என்பதைப் பற்றி விளக்கமாக எழுதியிருந்தீர்கள். நடிகர் திலகத்துடன் அவர் நடித்த அனைத்துப் படங்களிலுமே அவர் திறமை பிரகாசித்தது என்பதில் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன். அதுவும் தவிர அவர் நடிகர் திலகத்துடன் இணைந்தபோது திரையில் நாம் கண்ட compatibility நம்மை ரொம்பவே ரசிக்க வைக்கும். பாகப்பிரிவினை, விடிவெள்ளி பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், வளர் பிறை, ஆலயமணி, இருவர் உள்ளம், குலமகள் ராதை, கல்யாணியின் கணவன், புதிய பறவை என்று எப்படிபட்ட படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள்? அதையும் நினைவு கூறும் வாய்ப்பு கிடைத்தது.
பொதுவாகவே நடிகர் திலகத்தின் ரசிகர்களின் ரசனை ஒரே அலைவரிசையில்தான் இருக்கும் என்பது தெரிந்த விஷயம் என்றாலும் கூட இன்றைக்கு நீங்கள் விளையாட்டுப் பிள்ளை படத்தின் இரண்டு வீர சாகச காட்சிகளை தரவேற்றி எழுதியிருப்பதை படித்த போது நமது திரியின் 6-ம் பாகத்தில் மூன்று வருடங்களுக்கு முன் நான் எழுதியதுதான் நினைவு வந்தது. கோபால் சொன்னது போல் நமது அலைவரிசை எப்போதும் ஒரு போலதான். நான் எழுதியவற்றில் இருந்து ஒரு சில வரிகள் மீண்டும்
இந்தப் படத்தை பொறுத்தவரை நடிகர் திலகத்திற்கு ஒரு வித்தியாசமான ரோல் என்றே சொல்லலாம். அதாவது பல வகைப்பட்ட வீர விளையாட்டுகள் இதில் இடம் பெற்றன. சிலம்பாட்டம், ரேக்ளா, காளை அடக்குதல், மத யானையை அடக்குவது என்று வெரைட்டி வீர பிரதாபங்கள். இந்தப் படத்தை ஒரு சவாலாகவே அவர் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இவரால் இதையெல்லாம் செய்ய முடியாது என்று ஒரு தரப்பினர் பல காலமாக கிண்டல் செய்திருந்ததும் இந்த பாத்திரத்தை ஏற்க ஒரு காரணமாக இருந்திருக்கலாம். சவாலை திறம்படவே சமாளித்திருக்கிறார். முதலில் ஆடும் கபடியாகட்டும், சிலம்பு சுற்றும் போது ஒரு கால் ஊன்றி ஒரு கால் முட்டி போட்டு கழுத்தை மட்டும் பின் பக்கம் திருப்பி வலது கையை மட்டும் பயன்படுத்தி சிலம்பை பின்னால் கொண்டு வந்து தடுப்பதோடு மட்டுமல்லாமல் தாக்கவும் செய்யும் அந்த ஸ்டெப், டூப் போடாமல் அதி வேகத்தில் ரேக்ளா வண்டி ஒட்டி வரும் அந்த க்ளோசப் காட்சிகள், கல்லூரி விழாவில் யானையின் தந்தைகளை பிடித்து அடக்குவதோடு இல்லாமல் இதிலும் டூப் இல்லாமல் அந்த தந்தங்களை பிடித்தே யானையின் முதுகின் மேல் ஏறுவது, அதே காட்சியின் தொடக்கத்தில் யானையின் சீற்றம் கண்டதும் தாவி எழுந்து வேட்டியை மடித்துக் கட்டுவது, இறுதிக் காட்சியில் மாட்டை அடக்கும் காட்சிகள் என்று காட்சிக்கு காட்சிக்கு பிரமாதப்படுத்தியிருகிறார். ஆக்க்ஷனே இப்படியென்றால் ஆக்டிங் பற்றி சொல்லவும் வேண்டுமோ?
படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பற்றி கேட்ட கார்த்திக் அவர்களுக்காக அதே பதிவிலிருந்து
இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிகழ்வுகளை பார்த்தோம் என்றால் சென்னைக்கு தெற்கே இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. திருச்சியிலும், மதுரை - நியூசினிமாவிலும் 84 நாட்கள் ஓடிய படம் ஷிப்டிங்கில் [மதுரை வெள்ளைக்கண்ணு/மிட்லண்ட் தியேட்டர் என்று நினைவு] 100 நாட்களை கடந்தது. படம் வீர விளையாட்டுகளை கொண்டிருந்ததாலும், மேற் சொன்ன சமூக அமைப்புகள் தென் தமிழகத்தில் அப்போதும் நிலைப் பெற்றிருந்ததும் இதன் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஓடின நாட்களை மட்டும் வைத்து இதை சொல்லவில்லை. இந்த படம் வெளியான போது சிவந்த மண் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. எங்க மாமா வெளியாகி 3 வாரங்களே ஆயிருந்தது. அது மட்டுமா? விளையாட்டுப் பிள்ளை வெளியான 60 நாட்களிலே வியட்நாம் வீடு ரிலீசானது. முன்னால் வெளி வந்த படங்கள் பொழுதுபோக்கு அம்சங்களோடு மக்களை கவர்ந்தது என்றால் பின்னால் வந்தது கதையம்சத்திலும் நடிப்பிலும் மக்களை ஈர்த்தது. அப்படியிருந்தும் விளையாட்டுப் பிள்ளை 100 நாட்களை கடந்தது என்று சொல்லும் போது அதன் வெற்றியின் வீச்சை புரிந்துக் கொள்ளலாம். மதுரை ராமநாதபுரம் நெல்லை குமரி மாவட்டங்களில் B, C சென்டர்களிலும் நன்றாக வசூல் செய்தது.
சுருக்கமாக சொன்னால் இவையெல்லாம்தானே என்னால் முடியாது என்று சொன்னீர்கள். இதோ பார்த்துக் கொள்ளுங்கள் என்று நடிகர் திலகம் சில பேருக்கு பதில் சொன்ன படம்.
முழு விமர்சனத்தையும் படிக்க
http://www.mayyam.com/talk/showthrea...Part-6/page118
அன்புடன்
சின்ன கண்ணன், ஒரு சின்ன nit picking. ராவ் பகதூர் சிங்காரம் தொடரை எழுதியதும் கொத்தமங்கலம் சுப்புதான்.
கோபால், உங்கள் தொடருக்கு அடுத்து வருகிறேன்.
கார்த்திக்,
நீங்கள் எழுதும் தொடரில் நீங்கள் குறிப்பிடும் நடிகைகளை விட அந்த படங்கள் பற்றிய குறிப்புகளைத்தான் ரசிக்கிறேன். அதிலும் என் மகன் படத்தை அண்மையில் பார்த்தேன். ஆகவே சிநேகலதா பதிவில் என் மகன் படத்தை மீண்டும் அசை பட முடிந்தது.
//சின்ன கண்ணன், ஒரு சின்ன nit picking. ராவ் பகதூர் சிங்காரம் தொடரை எழுதியதும் கொத்தமங்கலம் சுப்புதான். // மன்னிக்க முரளி ஸ்ரீ நிவாஸ் சார்..என் கண்ணில் பாவை அன்றோ வை நினைத்து சற்றே கன்ஃப்யூஸ் ஆகி விட்டேன்..மனமார்ந்த மன்னிப்பு..
சிவாஜி அவரிகளின் நடிப்பு என்ன என்று தெரியாதவர்கள் தான் இப்படி பிதற்றுவார்கள். கமல் இதுவரை நடித்ததோ செய்ததோ எல்லாமே சிவாஜி அவர்கள் செய்ததில் 10% அளவு தான்.. அவர் ஆயுள் உள்ளவரை நடித்தாலும் சிவாஜி செய்ததில் 30-40% வேண்டுமானால் செய்ய முடியுமே தவிற சிவாஜியின் நடிப்பும் அவர் நடிப்பிற்கு வகுத்த பாதையும் யாருமே தொட முடியாத ஒன்று. நானும் தான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் அதே சமயம் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகனும் கூட ஏன் இருக்க கூடாதா.. அதற்காக இங்கே வந்து கமலுக்கு இவரைவிட புகழ் கிடைத்தது என்றெல்லாம் பிதற்ற வேண்டியதில்லை. கமல் அந்த புகழெல்லாம் கிடைக்க செய்ததெல்லாம் நடிகர் திலகம் செய்ததுமில்லை செய்ய வேண்டிய அவசியமுமில்லைQuote:
Originally Posted by Raajjaa View Post
ஒரு ஹப்பர் 1975க்கு அப்புறம் சிவாஜியின் நடிப்பு சரியில்லை என்று சொன்னால் அதை மறுத்து அவருக்கு விளக்கம் கொடுங்கள்.இல்லை என்றால் பேசாமல் இருங்கள். சம்பந்தமே இல்லாமல் எதற்கு கமலை இதில் இழுக்குகிறீர்கள். கமலுக்கு கிடைத்த புகழில் பாதி கூட சிவாஜிக்கு கிடைக்கவில்லை. அதை யாரும் மறந்து விடாதீர்கள்.
சார் - உலர்பவர்க்கெல்லாம் பதில் சொல்லிகொண்டுஇருக்க வேண்டாமே சார் - பேத்துபவர்கள் எல்லாம் chosen to remain immature - so let us ignore and go forward - these comments if we consider seriously may turn to be roadblocks and reduce the speed of our thread .
:-D
Dear Murali Sir - Can I get tuition from you for writing in good tamil ?
Great response with a lucid explanation and conviction . Great sir for being around .
Ravi
:smokesmile::)