-
அன்பு எனதருமை நண்பர்களே. நெல்லை எஸ்.எஸ்.மணியின் வணக்கம். வரலாற்றில் ஒரு புதிய செய்தி.பிற பதிவுகளில் இல்லாத ஒன்று.வரலாறு பொய்செய்திகளை தாங்கி பின்னர் அது வரலாறாக மாறக்கூடாது.அதில் நேரடி தொடர்பாளர் எஸ்.எஸ்.மணி பேசுகிறேன்.பதிவிடுகிறேன். குமரியில் தனித்தீவாக இரு பாறைகள்.ஒன்று விவேகானந்தர் ஒரு இரவில் கரையில் இருந்து நீந்தி ஒரு தனி பாறையில் மீது ஏறி அமர்ந்து தவம் செய்தார்.ஞானம் பெற்றார் என்பது வரலாறு.அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்.எனவே அவரது பக்தர்கள் சார்பாக ஒரு தூயதொண்டர் ஏக்நாத் ரானடே என்பவர் குமாரி வந்து தங்கி பல ஆண்டு காலம் தங்கி பலரிடம் உதவிகேட்டு விவேகானந்தர் நினைவாலயம் 1970ல் நிறுவினார்.அப்பொழுது அவர்தான் பக்கத்து பாறையில் தமிழ்நாடு அரசு தன் நினைவகத்தை நிறுவலாம் என்று கலைஞரிடம் சொன்னதாக வரலாறு பதிவுகள் உள்ளது.அதன் பின்னர் 1975ல் கலைஞர் திருவள்ளுவர் சிலை நிறுவலாம் என்று முடிவெடுத்தார் என்று வரலாறு உள்ளது.ஆனால் அண்ணா அவர்கள் மறைந்தபிறகு தமிழக முதல்வர் பதவி கலைஞருக்கு கொடுத்தது நமது தலைவர் எம்.ஜி.ஆர்.ஏனெனில் அவர் பிரச்சாரத்தினால் மட்டுமே தி.மு.க 2/3 மெஜாரிட்டி பெற்றது.ஆனால் திருவள்ளுவர் சிலை பேச்சோடு முடிந்துவிட்டது.பின்னர் 1976ல் எமெர்ஜேன்சி.1977ல் தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கட்டில் முதல்வராக அமர்ந்தார்.தொடர்ந்து கலைஞரை 3 முறை அடுத்த தேர்தல்களில் முடக்கிவைத்தார் தலைவர் எம்.ஜி.ஆர்.இருப்பினும் கலைஞரால் கிடப்பில் போடப்பட்ட திருவள்ளுவர் சிலை தலைவர் எம்.ஜி.ஆர் அதற்க்கான நிதி ஒதுக்கி 15.4.1979ல் குமரியில் அடிக்கல் நாட்டினார்.பாரத பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களை தலைமையேற்க செய்து அந்த நிகழ்வை நடத்தினார்.அதற்காக ஹோட்டல் தமிழ்நாடு முன்பு கடற்கரை நோக்கிய திறந்த வெளியில் மேடை 60×40 அளவு புதிதாக நிரந்தர மேடை கட்டப்பட்டது.அடிக்கல் நாட்டப்பட்டது.பின்னர் அது பித்தளையில் செய்யப்பட்டது.மேடை நிர்வாகம் பொதுப்பணித்துறை,செய்தித்துறை, சுற்றுலாத்துறை.நான் மேடை நிர்வாகம் பார்த்தேன்.என் தலைவனை பேசும்போது நேரடியாக எனது கேமராவில் படம் பிடித்தேன்.அதை அவர் பார்த்து கோணம் கொடுத்தார்.ஏனெனில் தலைவர் எந்த புகைப்படகலைஞரையும் அவர் அனுமதி பெறாமல் படம் எடுக்க அனுமதிக்கமாட்டார். ஆனால் எஸ்.எஸ்.மணி நேராக படம் எடுக்க அனுமதித்தார்.அந்த படம் இத்துடன் பதிவிட்டுள்ளேன்.இது ஒரு அரிய பதிவு.அரிய படம். அப்பொழுது மேடையின் கீழ் எனது நண்பர் பொன்ராஜ் என்பவர் தலைவர் ரசிகர்.அவர் அவரது கேமராவில் படம் எடுத்தார்.தலைவர் அதை கூர்ந்து கவனித்துள்ளார்.பேசி முடித்ததும் அவரை மேடைக்கு கூப்பிட்டு விசாரித்தார்.நான் அவர் உங்கள் ரசிகர் என்றேன்.உடன் தலைவர் கேட்டார் இந்த கேமரா எங்கு வாங்கினீர்கள் வித்தியாசமான தொழில்நுட்பம் கொண்டது என்றார்.நான் சொன்னேன் அண்ணே அவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார் அங்கு வாங்கியது.ஜெர்மன் மேக்.ஏனெனில் அந்த சின்ன கேமராவில் fellowtype துணி சுருள் முன்பு இருக்கும். ஆக என் தலைவன் 15.4.1979ல் அடிக்கல் நாட்டியதோடு அதன் வேலைகளை அவர் மறையும் 24.12.1987 வரை திருவள்ளுவர் சிலை கற்களால் மட்டுமே வைத்து மா மன்னன் ராஜராஜசோழன் செய்த கலைப்பணியை செய்தார்.அவர் மறைந்தவுடன் 1988,89 களில் ஜேஜே அம்மையார் குளறுபடி அரசியல் ஆனது.கலைஞர்,ஜேஜே என்று மாறி மாறி அரசியல் தலைமை.கலைஞர் 1.1.2000ல் திருவள்ளுவர் சிலை திறந்தார்.தலைவர் எம்.ஜி.ஆர் பெயரை கலைஞர் மறந்தார்.பித்தளை கல்வெட்டு குப்பையில் வீசப்பட்டது.விழாவில் கலந்துகொண்ட சிவாஜி ,அந்த சிலைக்காக 10 ஆண்டு பணிகளை செய்த தன்னுடைய அண்ணன் எம்.ஜி.ஆர் பெயரை மறந்தார்.1.1.2000 திறப்பு விழாவிற்கும்,15.4.1979 அடிக்கல் விழாவிற்கும் நெல்லை எஸ்.எஸ்.மணி அதிகாரியாக பணி செய்தவன்.பின்னர் சமூக ஆர்வலர்கள் பலர் குரல் கொடுத்தனர்.அதன் காரணமாக பெயருக்கு எம்.ஜி.ஆர் பெயரையும்.,பாரத பிரதமர் மொரார்ஜி பெயரையும் மகா கேவலமாக சைசில் போட்டு,அதிலும் கலைஞர் தீர்மானம் போட்டதை பெரியதாக தகவல் சொல்லி கல்வெட்டு வைத்து ள்ளனர்.அந்த ஒரே கல்வெட்டில் மட்டும் கலைஞர் பெயர் நான்கு முறை இடத்தில் வருகிறது.அந்த கல்வெட்டு சுற்றுலாப்பயணிகள் கழிவறை செல்லும் வழியில் வழியில் பதிக்கப்பட்டுள்ளது.அந்த கல்வெட்டு இத்துடன் பதிவிட்டுள்ளேன்.ஆக சிலை அமைக்க நிதி ஒதுக்கி 1979ல் அடிக்கல் நாட்டி 1987 வரை பணிகள் செய்தவர் நம் தலைவர் எம்.ஜி.ஆர்.பின்னர் ஆட்சிகள் வந்த வரலாறு அறிவோம்.எம்.ஜி.யாரை பெரியப்பா என்று கூப்பிடும் சிவாஜி வாரிசுகளே கலைஞர் பெயரை போடுங்கள் என்று அரசு விழாவில் செல்கிறீர்களே. உங்கள் சிவாஜி அய்யா அதே அரசு விழாவில் 2000ல் அண்ணன் எம்.ஜி.ஆர் .இந்த சிலைக்காக நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டி 10 ஆண்டுகள் பணி செய்ததை சொல்லவில்லையே. தலைவரின் அடிக்கல் கல்வெட்டை இன்று வரை வைக்கவில்லையே. இது ஒரு உண்மை வரலாறு. நெல்லை எஸ்.எஸ்.மணி... Thanks Friends...👍
-
பாசமிகு மூத்த சகோதரர் திரு லோகநாதன் அவர்கள் புரட்சி தலைவர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் நாம் நேராக கலந்து கொண்டு பார்த்தால் வரும் உணர்வை இடைவிடாத தன் பதிவுகளால் நிரப்பி நம் மக்கள் திலகம் புகழ் காக்க செயல் புரிந்தமைக்கு நிறைவான நன்றி...👌
-
வசூல் சக்ரவர்த்தி புரட்சி நடிகர் என்றும் வாழும் "எங்க வீட்டு பிள்ளை" மதுரை - ஸ்ரீ மீனாட்சி A/C dts தினசரி 4 காட்சிகள், மற்றும் சென்னை - சரவணா dts தினசரி 4 காட்சிகள் "காவல்காரன்" வெற்றி நடை போடுகிறார்கள்...👌
-
http://i68.tinypic.com/2q1w0wm.jpg
வெள்ளி முதல் (05/10/18) சென்னை பாலாஜியில் மக்கள் திலகம் எம். ஜி.ஆர். நடித்த "காவல்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது
-
-
வெள்ளி முதல் (05/10/18) மதுரை மீனாட்சியில் கலைவேந்தன் /கலைச்சுடர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/2gwawiu.jpg
-
-
-
-