Enjoy the superb melody from the movie Anamika by Sanjeev and Jaya Badhuri
http://youtu.be/kq_vWD4lTcw?list=PLCD0BBCF0821C9084
Printable View
Enjoy the superb melody from the movie Anamika by Sanjeev and Jaya Badhuri
http://youtu.be/kq_vWD4lTcw?list=PLCD0BBCF0821C9084
//கலாட்டா கல்யாணம் நடிகர் திலகம் 'சாவி' நினைவு உள்ளதா// நினைவில்லாம கிருஷ்ணா சார்..முதலில் இட நினைத்து எடிட்பண்ணி விட்டேன்
//சமீபத்திய அரண்மனை ஆயிரம் ஜன்மங்கள் உல்டா என்று கேள்வி
உண்மையா ?// கொஞ்சம் ஆயிரம் ஜென்மங்கள், கொஞ்சம் சந்திர முகி..மனோபாலா கோவை ச்ரளா சந்தானம் கிக்கிக்கிக் எனச் சிரிக்க வைக்கிறார்கள்.. டிபிகல் சுந்த்ர் சி படம்..
பாடகி பற்றி தெரியலீங்க....
http://youtu.be/d-nJrSt46cU
கிருஷ்ணா ஜி..
இந்தாங்கோ
http://youtu.be/4G6vLH2236I
நன்றி மது சார்
தமிழில் குறிப்பிடத்தக்க காமெடி நடிகைகள் என்றால்
டி ஏ மதுரம்
டி பி முத்துலட்சுமி
மனோரமா
ஈ வி சரோஜா
சச்சு
காந்திமதி
ஊர்வசி
கோவை சரளா
கல்பனா
ஆர்த்தி
முதலானோரை சொல்லலாம். இதுதவிர கனகா (விரலுக்கேத்த வீக்கம்), சுவாதி (அசத்தல்) போன்ற நாயகிகள் மார்க்கட் போனபின் காமெடி செய்தனர்.
ஷகிலா,ஷீத்தல் – ஜல்லிக்கட்டு காளை
ஜோதிமீனா - பரம்பரை
பாபிலோனா - அசத்தல்
போன்ற கவர்ச்சி நடிகைகள் சில படங்களில் காமெடி செய்தனர்.
ஆனால் காமெடி நடிகர்களுடன் ஒப்பிட்டால் இவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஏன் பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவா?.
http://4.bp.blogspot.com/--qR17cfJcr...mitabh_web.jpg
இந்த நிழல் படத்தின் தகவல் ஏதும் தர முடியுமா ?
மக்கள் திலகத்திற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்காக திரைப்படக் கலைஞர்கள் பாராட்டு விழா எடுத்தனர். இப்போது நேரு ஸ்டேடியம் இருக்குமிடம் அப்போது காலி இடமாக இருந்தது. அங்குதான் பாராட்டு விழா நடந்த்து. பிரமாண்டமான அரங்கம் அமைத்து அந்த விழா நடந்தது.
பாரதிராஜா, பாக்யராஜ். டி.ராஜேந்தர் என்று மக்கள் திலகம் மீது மரியாதை கொண்ட அனைவரும் வந்து மனதார வாழ்த்தினர். நடிகை ரேவதி உட்பட பலர் நடனம் ஆடினார்கள்.
இந்த விழா நடப்பதற்கு இரண்டு தினங்கள் முன்பு அடையாறு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் சின்ன விழா நடந்தது. அங்கேயும் திரை பிரபலங்கள் குவிந்திருந்தார்கள். மக்கள் திலகம் அப்போது முதல்வர் என்பதால் அவர் வர மாட்டார் என்ற நினைப்பில் நான், ஜெய்சங்கர் உட்பட சிலர் டிரிங்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
திடீரென்று மக்கள் திலகம் வந்துவிட்டார். அப்போது இலங்கை பிரச்சினை உச்சத்தில் இருந்த்தால் அவர் கருப்பு உடையில் வந்திருந்தார். அவர் வந்ததும் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த டிரிங்ஸை மறைத்துவிட்டோம். நான் அவசரம், அவசரமாக ஓட்டல் ஊழியரிடம் சென்று டூத் பேஸ்ட்டு வாங்கி பல் துலக்கிவிட்டு வந்து மக்கள் திலகத்திற்கு வணக்கம் வைத்தேன்.
“எப்படியிருக்கு சினிமா..?” என்று கேட்டார் மக்கள் திலகம்.
“நல்லாயில்லை..” என்றேன்..
“ஏன்..” என்றார்.
“நீங்கதான் சி.எம். ஆகிட்டீங்களே ஸார்..” சிரித்துக் கொண்டே என் தோளில் கை போட்டார்.
பல் துலக்காததால் மது வாடை பிடிக்கும் என்பதாலும், அது மக்கள் திலகத்திற்குப் பிடிக்காது என்பதால் தூரத்திலேயே நின்று கொண்டிருந்தார் நடிகர் ஜெய்சங்கர்.
மக்கள் திலகம் சில கலைஞர்களுடன் தோளில் கை போட்டுக் கொண்டு போஸ் கொடுத்தார். நான் படம் பிடித்தேன். அப்போது டைரக்டர் பாலு மகேந்திரா மக்கள் திலகம் தோள் மீது கை போட்டுவிட்டார். அவர் தோளில் கை போட்ட அடுத்த நிமிடமே பட்டென்று மக்கள் திலகம் அவரது கையைத் தட்டிவிட்டார். அவசரத்தில் அதையும் நான் படம் பிடித்துவிட்டேன். மக்கள் திலகம் இதைக் கவனித்துவிட்டார்.
“நடிகை ஷோபா, பாலுமகேந்திராவில் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்று பேசப்பட்ட நேரம் அது. முதல்வர் என்பதால் வழக்கில் இருந்து தப்பிக்க மக்கள் திலகத்திற்கு நெருக்கமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்வதற்காக அப்படி தோளில் கை போட்டு படம் பார்க்கப் பார்த்திருக்கிறார் பாலுமகேந்திரா..” என்று முணுமுணுத்தார்கள். “பெருந்தன்மையாக எல்லோருடைய தோளிலும் முதல்வர் கை போடுகிறார். இதற்காக அவர் தோளிலேயே கை போடலாமா..?” என்று சிலர் சிடுசிடுத்துக் கொண்டிருந்தார்கள்.
விழா நடந்த அன்று இரவு 11 மணிக்கு நான் வீட்டிற்கு வந்தேன். கொஞ்ச நேரத்தில் கதவு தட்டும் சப்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது வாசலில் ஜேப்பியார் நின்று கொண்டிருந்தார்.
“என்ன ஸார்.. எம்.ஜி.ஆர்., நெகடிவ் ரோலை எல்லாம் வாங்கிட்டு வரச் சொன்னாரா..? என்று கேட்டேன். “அதெப்படி இவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க..?” என்றார் ஜேப்பியார். “இத்தனை வருஷமா அவர்கூட இருந்திருக்கேன். இது தெரியாதா ஸார் எனக்கு..? பாலுமகேந்திரா தோளில் கை போட்டதும் நான் படம் எடுத்ததை மக்கள் திலகம் பார்த்துவிட்டார். நிச்சயம் பிலிம் ரோலை வாங்கிக் கொள்வார்ன்னு தெரியும்..” என்று சொல்லிவிட்டு பிலிம் ரோலை ஜேப்பியாரிடம் கொடுத்தேன்.
அதை வாங்கிக் கொண்டதும், “தலைவர் கொடுக்கச் சொன்னார்..” என்று சொல்லி ஒரு கவரைக் கொடுத்தார் ஜேப்பியார். பிரித்துப் பார்த்தேன். அதில் நூறு ரூபாய் நோட்டுக்கள் பத்து இருந்தன.
நன்றி :
“தரணி கண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர்.”
எழுதியவர் : புகைப்படக் கலைஞர் திரு.ஏ.சங்கர்ராவ்
நக்கீரன் வெளியீடு
பக்கங்கள் : 264
விலை : ரூ.150
சலவை நிலா - இளைய நிலாவாக மாறிய மர்மம்..!
கவிப்பேரரசு பற்றி பல இயக்குநர்கள் பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனும் அவர் பங்குக்கு ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் இடம் பெற்ற ‘இளைய நிலா பொழிகிறது’ பாடலை முதலில் ‘சலவை நிலா பொழிகிறது’ என்றுதான் வைரமுத்து எழுதிக் கொடுத்தாராம்..
அந்தச் ‘சலவை’ என்ற வார்த்தை நன்றாக இல்லை. அதற்குப் பதிலாக வேறு வார்த்தையை போடும்படி ஆர்.சுந்தர்ராஜன் வற்புறுத்தியும் கவிஞர் ஏற்கவில்லையாம்.. பதிலுக்கு, “உங்களைவிட அறிவாளிகள் நிறைய பேர் தமிழ்நாட்டுல இருக்காங்க..” என்று பதில் சொன்னாராம்.. “இருக்கலாம் ஸார்.. ஆனா எனக்கே அது என்னன்னு புரியலையே..? அப்புறம் எப்படி நான் மத்தவங்களுக்கு புரிய வைக்கிறது..?” என்று சண்டையிட்டாராம் ஆர்.சுந்தர்ராஜன்.
இளையராஜாவும் ஆர்.சுந்தர்ராஜனை அழைத்து, “இது உனக்கு முதல் படம்.. ரொம்ப திமிரா இருக்காத.. கொஞ்சம் விட்டுக் கொடுத்து போ.. கவிஞர் சொன்ன மாதிரியே இருக்கட்டும்..” என்று அட்வைஸ் செய்திருக்கிறார். “இல்ல ஸார்.. என் படத்துல என் ஹீரோயினை பாடாய்ப்படுத்தி அடிச்சு, துவைச்சு காயப் போட்ட மாதிரி காட்டப் போறேன்.. அதுக்கு முன்னாடியே இப்படி ‘சலவை’ன்னு போட்டா நல்லாயிருக்காது ஸார்..” என்றிருக்கிறார். “சரி.. கதைக்கு தேவையில்லைன்னா நீ எப்படி வேண்ணாலும் மாத்திக்க..” என்று இளையராஜா ஓகே சொன்ன பின்புதான் ‘சலவை நிலா’-‘இளைய நிலா’வாக மாறியதாம்..!
மும்பையில், நோய்வாய்ப்பட்டு சகோதரர் வீட்டில் தங்கியிருந்த தன் தாயார், டி.எம்.எஸ்ஸைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க, அதன்படி அருகில் வாணி வித்யாலயாவுக்கு வந்திருந்த டி.எம்.எஸ். அவர்களிடம் கவிஞர் வாலி போய் தன் தாயாரின் விருப்பத்தைச் சொன்னவுடன், மறுப்பேதும் சொல்லாமல் டி.எம்.எஸ். உடனே கிளம்பி வந்து, தாயாரின் அருகில் அமர்ந்துகொண்டு பரிவோடு விசாரித்து, அவர் கேட்டுக்கொண்டபடி இரண்டு திரைப்படப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தார் என்று சமீபத்திய குமுதம் இதழில் சொல்லியிருக்கிறார் கவிஞர் வாலி. இதன் பின்னணியில், பாட்டுத் தலைவன் டி.எம்.எஸ்ஸின் பேரன்பையும் பெரியமனசையும் வெளிக்காட்டும் விதமாக ஒரு சுவாரஸ்ய செய்தி உள்ளது.
டி.எம்.எஸ்ஸின் மூத்த மகன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடந்தான். எத்தனையோ வைத்தியர்களைப் பார்த்தும், எத்தனையோ சிகிச்சைகள் செய்தும் அவன் உடல்நிலை தேறவே இல்லை. ‘முருகா… முருகா…’ என்று அனத்திக்கொண்டு இருந்த அவனைப் பார்க்கப் பார்க்க பெற்ற உள்ளம் துடிதுடிக்க, அருகே இருந்து ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார் டி.எம்.எஸ். அவர் மனம் பிள்ளை படும் துயரைக் காணச் சகியாமல் அழுதுகொண்டு இருந்தது.
அதே நேரம், ‘பாகப் பிரிவினை’ படத்துக்காக அவர் போய் ஒரு பாடலைப் பாடிக்கொடுக்கவேண்டிய கட்டாயம். தன்னால் ஏதும் தாமதம் ஆகிவிடக்கூடாதே என்று, மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, மகனிடம் விடைபெற்று, ஸ்டுடியோவுக்குப் போய் அந்தப் பாடலைப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ். வழக்கமாக ஓரிரண்டு முறை ரிகர்சல் பார்ப்பது வழக்கம். ஆனால், அந்தப் பாடலுக்கு ரிகர்சல் ஏதும் பார்க்கவில்லை. பாடல் வரிகளைக் கேட்டுக்கொண்டார். மெட்டு என்ன என்று கேட்டுக் கொண்டார். இசையமைப்பாளரை ஒருமுறை பாடச் சொல்லிக் கேட்டார். அவ்வளவுதான்! ஒரே டேக்கில் பாடிப் பதிவாகிவிட்டது அந்தப் பாடல்! அப்போது அவர் இருந்த சோகமான மனநிலையோடு அந்தப் பாடல் வரிகளும் மெட்டும் ஒத்துப் போயிருந்ததால் பாடல் மிகக் கச்சிதமாக அமைந்துவிட்டது.
அதுதான், ‘ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ?’ பாடல்!
பாடலைப் பாடிக் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய டி.எம்.எஸ்ஸுக்குப் பேரதிர்ச்சி! உடல்நிலை சரியில்லாத மகன் உயிரை விட்டிருந்தான். துடிதுடித்துப் போனார் டி.எம்.எஸ். ஆற்றாது அழுது தீர்த்தார்.அத்தனை பேராலும் பாராட்டப்பட்ட அந்தப் பாடல், அவர் வரையில் ஒரு மீளாத் துயரத்தின் நினைவுச் சின்னமாக ஆகிவிட்டது. ‘ஏன் பிறந்தாய் மகனே’ பாடல் டி.எம்.எஸ். மனத்தின் சோகத்தைக் கிளறும் பாடலாகிவிட்டது. எனவே, அந்தப் பாடலை அவர் அறவே வெறுத்தார்.
எந்த மேடையிலும் அதைப் பாடுவதில்லை என்று தவிர்த்தார். எந்தக் கச்சேரியில் எத்தனைப் பெரிய பிரமுகர் கேட்டுக்கொண்டாலும், ‘மன்னிக்கவும். அதை நான் பாடமாட்டேன்’ என்று பிடிவாதமாக மறுத்துவிடுவார்.. அவ்வளவு ஏன்… வீட்டில் ரேடியோவில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும்போது ‘ஏன் பிறந்தாய் மகனே’ பாடல் ஒலித்தால், சட்டென்று எழுந்து போய், ரேடியோவை அணைத்துவிடுவார். அந்த அளவுக்கு அவர் நெஞ்சில் காயம் ஏற்படுத்தியிருந்தது அந்தப் பாடல்.
பாகப் பிரிவினை படம் வெளியானது 1959-ஆம் ஆண்டு.
1960-ல்… நோய்வாய்ப்பட்டிருந்த கவிஞர் வாலியின் தாயார் தன்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று தெரிந்ததும், உடனே கிளம்பிச் சென்று, அந்த மூதாட்டியைச் சந்தித்தார் டி.எம்.எஸ். அந்தத் தாயார் டி.எம்.எஸ்ஸைப் பாடச் சொல்லிக் கேட்ட பாடல்… ‘ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ?’
ஒருகணம் உள்ளுக்குள் அதிர்ந்து போனார் டி.எம்.எஸ். இருப்பினும் சுதாரித்துக்கொண்டார். ‘இங்கே இந்தத் தாய் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். இவர் விரும்பிக் கேட்கும் பாடலைப் பாடி மகிழ்விப்பது என் கடமை!’ என்று முடிவெடுத்தார். தனது வைராக்கியத்தைக் கைவிட்டார். அதே உருக்கமும் துயரமும் இழையோடும் குரலில் ‘ஏன் பிறந்தாய் மகனே’ பாடினார். எத்தனைப் பெரிய மனசு!
இந்த பேரன்பு மிக்கவரைத்தான் ஆணவம் பிடித்தவர், பிறரை மதிக்காதவர், திமிர் பிடித்தவர் என்று ஒரு கூட்டம் இன்னும் சொல்லிக்கொண்டு திரிகிறது!