. பொம்மை, ஜுலை - 1970.
அ. ஞானபாஸ்கரன், திருவண்ணாமலை.
கேள்வி :
சிவாஜி கணேசன் கல்லூரி கட்டட நிதிக்காக பணம் உதவியது எதைக் காட்டுகிறது?
பதில் :
தான் படிக்காவிட்டாலும் பிறர் படிக்கட்டுமே என்ற உயரிய எண்ணத்தை.
Printable View
. பொம்மை, ஜுலை - 1970.
அ. ஞானபாஸ்கரன், திருவண்ணாமலை.
கேள்வி :
சிவாஜி கணேசன் கல்லூரி கட்டட நிதிக்காக பணம் உதவியது எதைக் காட்டுகிறது?
பதில் :
தான் படிக்காவிட்டாலும் பிறர் படிக்கட்டுமே என்ற உயரிய எண்ணத்தை.
(மீள்பதிவு)
ஐயன் உயர்வானவர் என்பதற்கு மீண்டும் ஒரு சான்று
----------------------------------------------------------------------------------------------------
இலங்கை உயர்திரு. அப்துல் ஹமீத் யாரும் மறந்திருக்க மாட்டோம். மேன்மை மிகு ஹாமித் அவர்களுடன் இலங்கை சென்ற மாசிலா மாணிக்கம் நம் ஐயனுடன் நேருக்குநேர் நிகழ்ச்சி நடக்கின்றது. அந்த நிகழ்ச்சியில் ஐயனுடன் பல கேள்விகள் கேட்கப்படுகின்றது .
அதில் மிக முக்கியமான கேள்வி என்பது! தங்களுக்கு (நடிகர்திலகத்திற்கு ) எப்படி மன்னர்கள் வேடம் ஏற்று நடிக வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது? அதற்கு அய்யன் கூறும் பதில், எவருக்கும் தோன்றிடாத , எவரும் எண்ணிப்பார்த்திடாத அற்புதமான, அதிசயமான பதில்.
எனக்கு தேவையான வசதிகள் ஓரளவு சேர்ந்த பிறகு, தேவையான செல்வங்கள் கிட்டிய பிறகு, (இங்குதான் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்) தேவையான வசதியும், செல்வங்களும் சேர்ந்த பிறகு மக்களுக்காக எதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்த போது, நாட்டிற்காக உழைத்த தலைவர்களை,உத்தமர்களை, சுதந்திரத்திற்காக போரிட்ட மன்னர்களை மக்களின் கண் முன்னால் கொண்டு செல்வோமே என்ற எண்ணம் என் மனதில் தோன்றியத்தின் காரணமே என்று பதில் சொல்வார்கள் நம் அய்யன்.
தனக்கு தேவையான வசதிகள் கிட்டிய பிறகு, இனி மக்களுக்காக என்ற புனிதமான, அந்த அதிசய எண்ணம் , மக்களை பற்றிய அந்த மாபெரும் அற்புத எண்ணம் எவருக்கய்யா தோன்றும்? இன்று மட்டுமல்ல , திரை உலகம் தோன்றிய காலம் முதல் நடிகர்கள் பணம் சேர்க்க வேண்டும், சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும், சமுதாயத்தில் நாமும் பணம் படைத்தவனாக உலா வர வேண்டும். முடிந்தவரை நடித்து பொன்னும்,பொருளும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு வலம் வரும் திரை துறையில், தனக்கு தேவையான பொருள் சேர்ந்த பிறகு மக்களுக்காக இனி நம்மால் அனாதை செய்ய வேண்டும் என்ற அதிசய மந்திரம் ஐயனுக்கு மனதில் உதித்ததே . இதைத்தான் என்ன என்று சொல்வது?
தனது ஒவ்வொரு படத்திற்கும் சம்பளத்தை அதிகமாக கேட்க்கும் இந்த திரை உலகில், பாசிசம் நிறைந்த இந்த உல்லாச உலகில் எதனை படங்கள் நடித்தாலும், பொருள்கள் சேர்த்தாலும் அடங்கா மனதுடைய நடிகர்களின் மத்தியில் தன் தேவைக்கான செல்வம் சேர்த்தால் போதும் இனி என்னை நேசிக்கும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அந்த மாசற்ற உள்ளம் யாருக்கு வரும்?
சில நடிகர்கள் திரைத்துறையில் தனது அழகு குலைந்தபின் பொது வீதிக்கு தனது பெயருக்காக வருகின்றார்கள். சில நடிகர்கள் பொது வேதி என்ற நோக்கிலே திரைத்துறையை சின்னாபின்னமாக சீரழிகின்றார்கள். சில நடிகர்கள் சரியான நேரத்தில் வருவேன் என்று சொல்லியே தனது படங்களுக்கு விளம்பரம் தேடுகின்றார்கள்.சில நடிகர்கள் தமிழ், தமிழ் என்று சொல்லியே காணாமல் போகின்றார்கள்.
ஆனால் அய்யன் அவர்கள் திரை துறையில் உச்சத்தில் இருந்தபோதும், திரை உலகத்தையே ஆட்சி செய்தபோதும் தனக்கு தேவை எதுவோ அது கிடைத்து விட்டது. இனி என் மக்களுக்காக எனக்கு தெரிந்ததை செய்வோம், செய்ய வேண்டும் என்ற அந்த அற்புதமான எண்ணம் தோன்றியதே, இந்த மனிதனை, மாசில்லை மாணிக்கத்தை என்ன சொல்லி பாராட்டுவது.
அந்த அற்புத எண்ணங்களின் பிறப்பே வீரபாண்டிய கட்டபோம்ம்மன, கப்பலோட்டிய தமிழன், கைகொடுத்த தெய்வத்தில் மகாகவி பாரதியின் சிந்து நதியின் என்ற பாடல். பல படங்களிலும் பலதரப்பட்ட ஓரங்க நாடகங்கள்.அடியார்களின் வரலாற்று படங்கள், தெய்வங்களின் வரலாற்று படங்கள், சான்றோர்களின் வரலாற்று படங்கள் இன்னும் பல,பல
ஏழ்மையில் பிறந்து செல்வம் கொட்டும் திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்தும் பொருள், செல்வம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், நான், என்குடும்பம் செழிக்க வேண்டும் என்று மட்டும் எண்ணாமல் என் மக்களுக்காக செய்ய வேண்டும் என்று எண்ணம் அய்யன் அல்லது எவருக்கு வந்தது? காரணம் அய்யன் வணங்கியதும் , வழி நடந்ததும் , வழி தொடர்ந்ததும் தியாகச்சுடராம் அப்பாச்சியின் வழி அல்லவா !
அப்பச்சியின் வழி தொடர்ந்து , சுதந்திர போராடத்தில் சிறையில் அடைபட்ட தன்னை ஈன்ற தந்தையின் இரத்தமல்லவா ஐயனின் உடலில். அய்யன் பிறக்கும்போதே ஐயனின் இரத்தத்தில் தான் , நான் என்ற எண்ணம் நீங்கி, நாம் ,நாங்கள்,எங்கள் என்ற உயர்ந்த எண்ணம் அய்யனுடன் பிறந்தது விட்டது போலும்.
எண்ணங்கள் அனைவருக்கும் தோன்றும். அது நல்ல எண்ணங்களாக தோன்ற வேண்டும்? அந்த எங்களை செய்திட நல்ல மனம் அமைந்திட வேண்டும். செய்திட மனம் இருந்தாலும் செய்து முடிக்க வேண்டும். அது ஒரு வரமாகும். அந்த வரம் ஐயனுக்கு மட்டுமே கிடைத்தது என்பதே உண்மை. காரணம்.சுதந்திர போராட்டத்தில் சிறை சென்டர் ஒரு உத்தமரின் பிள்ளை. தியாக சுடர் அப்பச்சியின்அற்புத தொடர்பு . ஐயனே நீ நடிகன் மட்டுமல்ல. நீ ஒரு அற்புத பிறவியே. அப்பச்சியின் ஆன்ம என்றும் தங்களுடன். தங்களின் அடி தொட்டு வணங்கும் ஒருவன்.
(Selvaraj Fernandez)
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்..ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்..ஒரு நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தைஇல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்...'
இன்று 29/04/2020 - மாலை 04.00 p.m. மணிக்கு சன் லைப் டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த - " வெள்ளை ரோஜா - மெகா படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், பிரபு, அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
'வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்..கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்...வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்...'
இன்று 29/04/2020 வசந்த் டிவியில் இரவு 07.30 மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம். !!!
" தியாகம் " படத்தை கண்டு களியுங்கள். !!!
இந்த படத்தில் நடிகர் திலகம், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
கருணாநிதி சிவாஜியை தன் உயிர் நண்பன் என்று சொல்லியே..... துரோகம் செய்தார்...!! என்பதற்கு என்னிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளது...!! ஆம் சிவாஜி,MGR என்று இருந்த வரலாற்றுப்பதிவை தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் அவர்கள்
MGR,சிவாஜி என்று மாற்றினார்...!! கொடைவள்ளல்கர்ணன்சிவாஜி-யை கஞ்சனாகவும், MGR - ரை வள்ளலாகவும் சித்தரித்தார் ....அந்த அளவுக்கு சிவாஜி - ன் நேர்மை , அரசியல்வளர்ச்சி, சிவாஜி - ன் உலகளாவியபுகழ் மீது பயம்...!! அது கலைஞர் மரணம் வரை தொடர்ந்தது ஆம்..! கலைஞர் மரணசேய்தியை தாங்கிவந்த அன்றைய தினகரன் நாளிதழ் மீண்டும் உறுதிசெய்தது . கலைஞர்சிவாஜி நட்பு & திறை & அரசியல் எதிலும் சிவாஜி என்ற வார்த்தை வரமல் தினகரன் பத்திரிகையும் மிக கவனமாக பார்த்து கொண்டது கலைஞர் மட்டும் அல்ல இந்தியஅரசியல்...!! தலைவர்கள் பலரை நடு நடுங்க வைத்த ஒரேபெயர் சிவாஜி...!! சிவாஜி...!! காமராஜரின் தொண்டன் சிவாஜி ..... !! என்பதைமறுக்க முடியுமா...??
Thanks Joe
........................................
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...63&oe=5ECF1870
.................................................. ..........................................
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...96&oe=5ECF1F87
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...3d&oe=5ECD0864
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...62&oe=5ECF97F8
ஜீனியர் விகடன் 21-05-2014
கலைஞர் ssrரை வைத்து எடுத்த. குறவஞ்சி பாதியில் தகராறில் நிற்க கடனில் விழுந்த கருனாநிதிக்கு பணமே வாங்காமல் குறவஞ்சி படத்தை நடித்து முடித்துகொடுத்தார் சிவாஜி
Thanks friends F b
சிவாஜியை திராவிட கட்சியிலிருந்தும் எம்ஜிஆருக்காக வெளியேற்றினார். மீண்டும் சிவாஜி இருந்த காங்ரசையே கூட்டணிகாக தேடிவந்த .........
Thanks friends F b
ஐஸ்வச்சா வரி தள்ளுபடி ஒருவருக்கு.ஆனால் எங்கள் சிங்கத்தமிழன் நேர்மை யாருக்கு வரும் #வருமான_வரி_சிவாஜியின்_நேர்மை.
1980 - சிவாஜிக்கு காங்கிரஸில் 5 MP தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. திருச்சி, கரூர், கோவை, ஈரோடு, தென் சென்னை தொகுதிகளில் சிவாஜி சிபாரிசு செய்யும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர். அனைவரும் வெற்றியும் பெறுகின்றனர். அதில் தென் சென்னையில் வென்ற திரு.R.வெங்கட்ராமன் அவர்கள் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.
சிவாஜியின் வரவு செலவுகளை அவரது தம்பி சண்முகம் பராமரித்து வந்தார். ஒரு நாள் அவரது தணிக்கையாளர் சிவாஜியிடம் வந்து வருமான வரி தாக்கல் செய்ததில் சிறு தவறு நடந்து விட்டது. நம்ம வெங்கட்ராமனுக்கு ஒரு போன் செய்தால் போதும் சரி செய்து விடலாம் என்கிறார். கோபத்தின் உச்சிக்கே சென்ற சிவாஜி நீங்கள் செய்த தவறுக்கு நான் அவரிடம் கெஞ்ச வேண்டுமா! அதோடு அவர் எனக்கு அமைச்சரல்ல. இந்த நாட்டிற்கு நிதி அமைச்சர். கட்சிகாரங்கிற உறவெல்லாம் தேர்தலோடு முடிஞ்சிப் போச்சி. தவறு செஞ்சது நீங்கள்தான் அபராதத்தை கட்டித் தொலையுங்க! தம்பி இன்னொரு தடவை தப்பு நடந்துச்சி அபராத தொகையை இவனுங்க சம்பளத்திலே பிடிச்சு கட்டிடு என்று கத்திவிட்டு ஷுட்டிங்சென்று விட்டார்.
(திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற "நடிகர் திலகம் ஒரு நேர்மையாளர்" நிகழ்ச்சியில் திரு.வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் உரையிலிருந்து).
Thanks Joe