பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
என்னை பொறுத்த வரை , எனக்கு பிடித்ததை புகழ்வேன். பிடிக்காததை இகழ்வேன். ஒவ்வாததை குறிப்பிட்டு மாற்றம் வேண்டுவேன். வெளிப்படையாக. என்னை யாராவது தாக்கி விட்டால் பயந்து ஓடுவதோ, அல்லது மானம் மரியாதையே இதனால் போய் விட்டதாக (ரவிக்குமார் பட கிராமத்து ஹீரோ ரேஞ்சில்)துடித்து கொதிப்பதோ,என்னை பாராட்டி விட்டார் என்பதால் இன்னொருவரை பாராட்டுவதோ , அணைத்தல் என்ற பெயரால் எல்லோரையும் தகுதியை மீறி புகழ்வதோ எனக்கு கை வராத கலை. எனக்கு பிடித்தவற்றை பாராட்டும் போது ,அவரின் எதிர்வினை பற்றி எனக்கு கவலையேயில்லை.அதே போல என்னை ஒருவர் பாராட்டி விட்டால் ,ஒவ்வாத விஷயங்களில் அவரோடு ஒத்து போகும் வழக்கமும் எனக்கில்லை. திரிகளில் வரும் விவாதங்களை வைத்து யாரையும் எதிரியாக பாவிக்கும் எண்ணமும் இல்லை. அதே போல சராசரிகளை மிகையாக புகழ்ந்து ,பிறரை மட்டம் தட்டும் அரசியல் செய்ததும் இல்லை.
நம் திரியில், எல்லாவற்றையும் மிகையாக ஆஹோ,ஓஹோ என்று புகழாமல்,சிறிது விமர்சனங்களால் கூட நம் தெய்வத்தின் புகழுக்கு மாசு வரும் என்றோ எண்ணாமல் உண்மை தன்மை கடை பிடிக்க படுவதாலேயே ,பொது மக்களால் நேசிக்க படுகிறது.
அதனால்தான் சும்மா எதையோ மனசில் வைத்து ,போட்டியாக வெற்று பதிவுகளை போட்டு பக்கம் நிரப்புவதிலும் நமக்கு உடன்பாடில்லை.இந்த வித்யாசம் உணர்ந்தோர் இதனை ஆரோக்யமாக அணுக முடியும். சிறிது வாக்குவாதம் வந்தால் "ரவி"க்கை அணிந்து எதிரிகளிடம் சரணாகதி புகுவோர் கற்றவர் என்றே தகுதி பெற முடியாது.
சமீப காலங்களில் ,நீ எனக்கு சொரிந்து விடு,நான் உனக்கு சொரிந்து விடுகிறேன் என்ற வகையில் கூத்து நடை பெறுவதால், சிலர் ஊடுருவி புகழ்ச்சி என்ற ஆயுதம் கொண்டு ஆள் பிடிப்பு வேலைக்கு தயாராவது ,அதற்கு சிலர் பலியாவது ,"எல்லாமே ஹிட்டுக்குதாண்டா",பொல்லாத புகழ்சிக்குதாண்டா,நல்லாயிருப்பவன் நாணயம் கெடுவதும்,நாணயம் கெட்டவன் மனசாட்சி விட்டு உளறுவதும் ,எல்லாமே ஹிட்ச்க்கு தாண்டா என்று ஆகி விட்டது.
இந்த லட்சணத்தில் ,எனது நடிகதிலக பக்தியை கேள்விக்குறியாக்கி,நான் போட்ட நேரடி பதிவுகளின் உண்மைகளை தாங்க இயலாதவர்களால் குறி வைக்க பட்டேன்.
நான் நடிகர்திலகம் தவிர எதையுமே பொருட்டாக கருதாதவன். அதனால் எனக்கு விலை வைக்க முடியாது. சுய நலம்,வெற்று புகழ் தேடி சிலர் உடைப்பு வேலை செய்து குளிர் காய நான் தயாரில்லை.