மிகச்சரியாக சொன்னீர்கள் மோகன்...Quote:
Originally Posted by rangan_08
மற்ற படங்களில், அவர் எப்போ வருவார், எப்போ வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்போம். ஆனால் இந்தப்படத்தில் வித்தியாசமாக, படத்தின் மிக முதல் காட்சியிலிருந்து அவர் நம் கண்முன்னேயே நடமாடிக்கொண்டு இருப்பார். ஆனால் முகத்தை மட்டும் காட்டாமல். (இத்தனைக்கும் நடுவே டைட்டில் கூட ஓடிமுடிந்துவிடும்). ரசிகர்களில்ன் பிரஷர் ஏறிக்கொண்டே போகும். எப்போது முகத்தைக்காட்டப்போகிறார் என்று. நான் முன்னொருமுறை சொன்னதுபோல, குழந்தையைப்பார்த்துவிட்டு வரும்போது, வாசற்படியில் ஒரு கால் நொடித்து, தங்கக்காசுகளை கீழே போட்டபடியே வரும்போதே கைதட்டல் பறக்க துவங்கி விடும்.
அதிலும், குழந்தையைக்கொன்றுவிடும்படி மேஜரை வற்புறுத்தும் காட்சியில், ஆள்காட்டி விரலை நீட்டி மூன்று முறை உதறும்போது கைதட்டலும் ஆரவாரமும் கரைபுரண்டதென்றால், அதையே மீண்டும் டாக்டர் மேஜரிடம், கண்ணன் செய்யும்போது, ரசிகர்களின் உற்சாகமும் கைதட்டலும் இருமடங்காகும் (கொஞ்சம்கூட எதிர்பாராத ஒற்றுமை அல்லவா?.
முரளி, அருமையானதோர் 'டாப்பிக்'கை துவக்கி விட்டீர்கள். இனி உற்சாக வெள்ளம்தான்