இன்று இரவு 7 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த " தெய்வத்தாய் "
சன் லைப் சானலில் ஒளிபரப்பாகியது
http://i66.tinypic.com/25zlfeu.jpg
Printable View
இன்று இரவு 7 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த " தெய்வத்தாய் "
சன் லைப் சானலில் ஒளிபரப்பாகியது
http://i66.tinypic.com/25zlfeu.jpg
தற்போது ஜெயா மூவிஸில் (இரவு 10 மணி முதல் ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "அன்னமிட்டகை " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i68.tinypic.com/t020sx.jpg
தின இதழ் -09/11/2016
http://i66.tinypic.com/qzkig0.jpg
மாலை சுடர் -09/11/2016
http://i66.tinypic.com/a288q1.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆரின் ''பறக்கும் பாவை ''. நேற்று பொன்விழா ஆண்டை நிறைவு செய்தது .
11.11.1966 தீபாவளி விருந்தாக வந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்ற இன்னிசை சித்திரம் .
12.11.1976
to day 40 years completed.
ஊருக்கு உழைப்பவன்-1976
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர், வாணிஸ்ரீ, வெண்ணிறஆடை நிர்மலா, எம்.என்.ராஜம், குமாரி பத்மினி, பேபி ராஜகுமாரி, பி.எஸ்.வீரப்பா, தேங்காய் சீனிவாசன், கே.கண்ணன், சண்முகசுந்தரி, ஆஷாத் பயில்வான், ஷெட்டி, ஜஸ்டின், வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர்.
இசையமைப்பு:-மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.
பாடல்கள்:-"புரட்சித்தலைவரின் அரசவைக்கவிஞர்"புலவர்.புலமைப்பித்தன் & "கவிஞர்"முத்துலிங்கம் & "கவிஞர்"நா.காமராசன் & வாலி & "கவிஞர்"ரெண்டார்கை ஆகியோர்.
மூலக்கதை:-பூவை கிருஷ்ணன் அவர்கள்.
உரையாடல்:-ஆர்.கே.சண்முகம் அவர்கள்.
தயாரிப்பு:-எஸ்.கிருஷ்ணமூர்த்தி & டி.கோவிந்தராஜன் ஆகியோர்.
இயக்கம்:-எம்.கிருஷ்ணன்அவர்கள்.
இதயத்தை வருடும் இன்பகானங்கள்...
1. இதுதான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி!
தலைவா கொஞ்சம் பொறுத்திரு
வெட்கம் போனபின் என்னைச் சேர்த்திரு!
2. இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்-நெஞ்சில்
இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு தென்றல்க் காற்றினிலே ஒன்றைத் தூது விட்டான்.
3. அழகெனும் ஓவியம் இங்கே-அதை
எழுதிய ரதிவர்மன் எங்கே?
இலக்கிய காவியம் இங்கே-அதை
எழுதிய பாவலன் எங்கே?
4. பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்-ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகைபோல் மனதில் வாழும்
மழலைக்காகப் பாடுகிறேன்! நான் பாடுகிறேன்
பறக்கும் பாவை - 1966
மக்கள் திலகத்தின் பொழுது போக்கு சித்திரம் .
சர்க்கஸ் மையமாக கொண்ட புதமை கதை .
படத்தின் ஆரம்ப காட்சியில் சரோஜாதேவி ஆண் வேடமிட்டு வீட்டை விட்டு ஓடிவந்து மக்கள் திலகத்தின் பார்வையில் சிக்கி தப்பிக்க நினைக்கும் நேரத்தில் அறிமுக பாடல் - பட்டு பாவடை எங்கே ? என்ற அப்பாடல் சூப்பர் .
மக்கள் திலகத்தின் அருமையான நடனம் -இனிமையான பாடல் .இன்று பார்த்தாலும் மன நிறைவு தருகிறது .
மக்கள் திலகம் -நடராஜன் முதல் சண்டை காட்சி படு அமர்க்களம் . அருமையான ரீ-ரெகார்டிங் .வித்தியாசமான ஸ்டைல் சண்டை .
மக்கள் திலகம் ,சர்க்கஸ் சேர்ந்த பிறகு படம் விறுவிறுப்பாக செல்கிறது .
நிலவென்னும் ஆடை கொண்டாளோ .... குரூப் பாடல்
tms - சுசீலா குரலில் மெய்மறக்க செய்கிறது .அழகான romance பாடல் .மக்கள் திலகம் மிகவும் இளமையாக அழகாக தோன்றி தாளம் போடவைப்பர் .
காஞ்சனாவின் கனவு பாடல் .
முத்தமோ --மோகமோ .......
பாடகர் திலகம் - இசை அரக்கி ஈஸ்வரி குரலில் கண்ணுக்கும் செவிக்கும் தித்திக்கும் விருந்தாக அமைந்த எவர்க்ரீன் பாடல் .
மக்கள் திலகத்தின் சூப்பர் நடன அசைவுகளும் அவருக்கு இணையாக காஞ்சனாவின் நடனமும் ரசிகர்களின் நெஞ்சத்தை கொள்ளை கொள்கின்றது .
சர்க்கஸ் வலையில் மக்கள் திலகமும் சரோவும் படும்
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா ...... இனிய பாடல் படமாக்க பட்டவிதம் அருமை .
மக்கள் திலகம் அவர்கள் தன்னை தாக்க வரும் புலியின் சீற்றத்தை அடக்கும் அந்த புல்லரிக்கும் கட்சி அவரது வீரத்தை காட்டுகிறது .
அசோகன் - மனோகர் இருவருடன் மக்கள் திலகம் மோதும் காட்சி - புதுமையான சண்டை .
பாடலில் புதுமை காட்டும் ராமண்ணாவின் கை வண்ணம்
.
உன்னைத்தானே .....ஏய் ... உன்னைத்தானே ......
குளியல் அறை .. பாடல் ... மக்கள் திலகம் - சரோ ரசித்து நடித்திருப்பார்கள் .
... யாரைத்தான் ,, நம்புவதோ .... சுசீலாவின் இனிமையான குரலில் சூப்பர் சாங் .
ஹோட்டல் ... குரூப் டான்ஸ் ...
மக்கள் திலகம் - சந்திர பாபு - சரோஜதேவி -மூவரும் நடனமாடும் பாடல் .
சுகம் எதிலே ...மது ரசமா .... கண்ணாடி கின்னம்மா ...
கிளைமாக்ஸ் .... யாருமே எதிர் பார்க்காத திருப்பமாக காஞ்சனா மூலம் படம் முடிவுக்கு வருவது ...suspence .
மொத்தத்தில் பறக்கும் பாவை ...
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு கண்ணுக்கும் மனதிற்கும் நிறைவான பொற் காவியம்
புதிய தமிழ் படங்களில் இன்றய நடிகர்கள் -நடிகைகள் பாடல் காட்சிகள் காணும் போது மிகவும் அபத்தமாக இருக்கிறது .புரியாத பாடல் வரிகளும் , தொடர்பே இல்லாத இசை அமைப்பும் ,அசிங்கமான முக பாவங்களும் , அரைகுறை உடைகளும் ,காட்சி அமைப்பும் , நடிகை -நடிகைகளின் முகமும் காண சகிக்கவில்லை என்பதுதான் உண்மை .
http://i63.tinypic.com/2pskrbs.jpg
தமிழ் பட உலகின் பொற்காலம் [ 1950-1975 ] எம்ஜிஆர் - சிவாஜி - ஜெமினி மற்ற கதாநாயகர்கள் நடித்த படங்களில் இடம் பெற்ற பாடல்கள் சாகாவரம் பெற்றவை . இன்று பார்த்தாலும் மனதிற்கு நிறைவு தருகிறது . குறிப்பாக எம்ஜிஆர் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் . எம்ஜிஆர் பாடல்களின் வரிகள் , இசை , காட்சி அமைப்புகள் , எம்ஜிஆரின் அற்புதமான தோற்றம் , புதுமையான நடனங்கள் , 50 ஆண்டுகள் கழித்து இன்று பார்த்தாலும் பிரமிப்பாக உள்ளது .பாடல்கள் மூலம் எம்ஜிஆர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம் . தான் சேர்ந்திருந்த திமுக மற்றும் தான் உருவாக்கிய அதிமுக இரண்டு கட்சிகளின் பிரச்சாரமாக எம்ஜிஆர் கையாண்ட யுக்தி அபாரம் .
எம்ஜிஆரின் சமுதாய சீர்திருத்த பாடல்கள் இந்திய திரை உலகையே திரும்பி பார்க்க வைத்தது . எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம் பெற்ற ''நான் ஆணையிட்டால் '' பாடல் மற்றும் நம்நாடு படத்தில் இடம் பெற்ற ''நினைத்ததை நடத்தியே முடிப்பவன் '' இரண்டு ப்பாடல்கள் மூலம் எம்ஜிஆரின் புகழும் அரசியல் செல்வாக்கும் இமயத்தின் உச்சிக்கே சென்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆரின் தனிப்பட்ட முகராசியும் , நம்பிக்கையும் , உழைப்பும் , எம்ஜிஆரின் ரசிகர்களின் அதீத ஆதரவும் மக்களின் செல்வாக்கும் தான் என்பது நிதர்சனம் .
நன்றி . செங்கோட்டை - இணையதளம்
திருச்சி கெயிட்டியில்
ராமன் தேடிய சீதை