கை தட்டல் கேட்டு
குளிர்ந்தது காது
கழுத்தில் மாலை
களிப்பேறிய நிலை
கௌரவ பட்டம்
கொடுத்தது கூட்டம்
குதூகல வேளையிலே
குற்றால சாரலிலே
கலைந்தது கனவு
கண்ணெதிரே நின்றது
கட்டிய காதல் மனைவி
கையில் தண்ணீர் கிண்ணி
Printable View
கை தட்டல் கேட்டு
குளிர்ந்தது காது
கழுத்தில் மாலை
களிப்பேறிய நிலை
கௌரவ பட்டம்
கொடுத்தது கூட்டம்
குதூகல வேளையிலே
குற்றால சாரலிலே
கலைந்தது கனவு
கண்ணெதிரே நின்றது
கட்டிய காதல் மனைவி
கையில் தண்ணீர் கிண்ணி
தண்ணீர் கிண்ணியை
அரைவாசி நிரப்பி
மடியில் தலையைச் சாய்த்து
குடிடா கண்ணு எனக் கொடுக்க
உதடு குவிய மறுக்காமல்
கோவித்து யே என மறுபடி மறுபடி
அழ..
பின் தோளில் சாய்த்து
பாரு தோ தோ
பாரேன் அந்தக் காககாய
ஒன்ன மாதிரி
முழிய முழிய் உருட்டுது பாரேன்
எனத் தொடர்ந்த பேச்சில்
மனம் வந்து தண்ணீரைக்
குழந்தை மடக் மடக் எனக்
குடிக்கவும்
நிரம்பியது
அன்னையின் வயிறு..
வயிறு மட்டும் உண்டு பருப்பதோ
உழைத்து நாம் ஓடாய் தேய்வதோ
மற்ற உறுப்புகள் எண்ணத துவங்க
கை கால் வாய் உணவை மறுக்க
கூட்டு சதியில் காலியாய் வயிறு
அத்தோடு முடியவில்லை கதை
அத்தனை உறுப்பும் சோர்ந்தன
இயங்கும் சக்தியை இழந்தன
யாரால் யாருக்கு லாபம்
போட்டியில் கற்ற பாடம்
அனுபவம் புகட்டிய அமுதம்
அன்பாய் சார்ந்திருப்பதே நலம்
நலமாய் இருக்கத்தான் நாங்களின்று
..நன்றாகக் கைகுவித்து கேட்டு நிற்போம்
வளம்பலவும் உமக்குவாய்க்க வேணுமென்றால்
..வாக்குதனை இட்டிடுவீர் எமக்கே என்றே
பலமாகப் பாய்ந்தங்கே கேட்டே அங்கு
..பதைபதைப்பாய் அமர்ந்தபின்ன்ர் அருகில் கேட்டார்
களத்திற்கு வந்துவாக்கும் கேட்டு விட்டேன்..
..கரன்சியினை கண்ணீலெப்போ காட்டு வீர்நீர்!!
நீர் என்றும் விஞ்சுகிறீர்
வஞ்சியை கொஞ்சுகிறீர்
கொஞ்சம் கெஞ்சுகிறீர்
நெஞ்சம் மறைக்கிறீர்
வஞ்சம் நிறைக்கிறீர்
வென்றதாய் நினைக்கிறீர்
அய்யோ பாவம் ஆண்களே
அறியாத அப்பாவிகளே
அப்பாவிகளே
என் இனிய மக்களே
ஒன்று சொல்வேன் கேட்பீர்..
எதிர்கட்சிக்குப் போட்டீர்களென்றால்
நீங்கள் முட்டாள்கள்
எங்களுக்கு ஓட்டு கொடுத்தீரெனில்
புத்திசாலிகள்..ஆகவே
கேட்ட மக்கள்
எப்போதும் போலேவே
அமைதி காத்தனர்
புத்திசாலித் தனமாக..
புத்திசாலித்தனமாக
முன்யோசனையாக
எச்சரிக்கையாக
மிக கவனமாக
ஊஹும்......
எதுவும் பலிக்காது
வீண்கனவு உனது
தோற்பதும் சுகமே
தாம்பத்திய போர்க்களம்
அடக்கிய சூத்திரம்
சூத்திரம் மறந்து போனால் சுலபமாய் வழியும் சொல்லி
பாத்திகள் தோட்டந்த் தன்னில் பதிவதைப் போல நெஞ்சில்
சேர்த்திட வைத்த பள்ளி தென்றலாய் நினைவில் தீண்டி
கோர்த்திடும் விரைவில் வேலை குறைவறச் செய்வ தற்கே
குறைவறச் செய்வதற்கே
கோடி வேலை கிடக்கே
கோடை விடுமுறையிலே
குதூகலமாய் விளையாட
கோலியும் சோழியுமாய்
கூடிய தோழியர் அன்று
கையில் ஐபேட் இருக்க
கண்ணான பேத்தியுடன்
கோடி இன்பம் பெற்றேன்
கணக்கில்லா கேம்ஸில்
காலம் மாறினாலும் நான்
களிக்கின்ற குழந்தையே
குழந்தையே என்று நின்று
..குறைகளை மறந்த காலம்
சலசலச் சாரைப் பாம்பாய்
..தாவியே ஓடிப் போச்சு
வளம்பல மாற்றம் பெற்ற
...வஞ்சியாய் அவளும் பேச
களிகொளும் மனத்தில் அங்கே
..கருத்துடன் பயமும் கூடும்..
கூடும் ஆசைகளும் வசதிகளும்
குறையும் திருப்தியும் நிம்மதியும்
பெருகும் நோயும் கவலையும்
புத்தர் கண்டுபிடித்தது புதிதல்ல
புதிதல்ல கண்விழித்துப் பார்த்த போது
...புத்துணர்வாய் தெரிந்திருந்த தாயின் உள்ளம்
புதிதல்ல பள்ளிமுதல் தொடங்கி நாளும்
...பாடங்கள் மனதினிலே பதிந்த உண்மை
புதிதல்ல சின்னவனாய் இருந்து இன்று
..பொன்மனத்து வாலிபனாய்த் தோற்றம் ஆனால்
புதிதாய்த்தான் இருக்கிறது அன்பே உந்தன்
..பூப்பூக்கும் இதழ்கொண்ட தேனைக் கண்டே..!
கண்டே பசியாறும் கஞ்சனா
உறியிலே ஊறுகாயை வைத்து
சோற்றை அப்பக்கம் காட்டியோ
வாடையிலே திருப்தியாய் உண்டு
ஓடையிலே கை கழுவி திரும்பவோ
ஏலாது என்னால் வா கைக்குள்ளே
கைக்குள்ளே உலகமென குருவும் சொல்ல
..காணவில்லை என்றுசொன்னான் சிஷ்யன் அங்கே
பைக்குள்ளே இருக்குமனம் சொல்லும் வார்த்தை
..பக்குவமாய் நீசொல்ல வாங்கிக் கொள்ளும்
தைத்துவீடு நெஞ்சத்தில் தூய எண்ணம்
..தெளிவாகக் கொண்டுதெய்வம் தொழுதால் நன்றாய்
மெய்ப்பொருளூம் உன்னருகில் வந்து சேரும்
..மேல்வாழ்வு கிட்டிவிடும் குருவும் சொன்னார்..
சொன்னார்
பதமாய்
பக்குவமாய்
நயமாய்
நல்லவிதமாய்
பலிக்கவில்லை
பதி பாவம்
சதி சக்தியல்லவோ
சக்தியல்லவோ சிவனல்லவோ சாந்தமாகவே பணிவாய்
பக்தியாகவே பக்குவங்களை பார்த்துபார்த்துதான் உரைப்பீர்
முக்திகொள்ளவும் நெஞ்சமெலாமுமே நிறைந்துநின்றிடும் இறையை
நித்தியபூஜைகள் நன்குசெய்திட மோட்சங்கிட்டுமே அறிவீர்...
அறிவீர் வெயிலின் கொடுமையை
அவசியமான ஒரு பருவத்தை
பரிகாரமாய் பதநீரும் இளநீரும்
நுங்கும் முலாம்பழமும் வெள்ளரியும்
எலுமிச்சை நன்னாரி நாவினிக்க
பரிவாய் இயற்கை வழங்குவதை
இயற்கை வழங்குவதை எழிற்கூட்ட வேண்டுமென
..ஏதோ செய்கின்றார் ஏந்திழையர் இன்னாளில்
மிகையாய்ச் சிகப்பழகு சாயத்தில் தான்வந்தால்
..மென்னுதடும் இழக்காதோ மின்னுகின்ற தன்நிறத்தை
சிகையில் சிச்சிறிதாய் மாற்றங்கள் செய்திடலாம்
..சிகையே சின்னதெனப் போய்விட்டால் ஆவதென
சுயமாய்த் தான்பொங்கும் அழகினைத்தான் தக்கவைக்க
..தூய மனமிருந்தால் போதுமென உணராரோ
உணராரோ இங்கிவர் உணராரோ
அறிவியல் வளர்ச்சி அபாரந்தான்
ஐம்புலனுக்கும் சுகம் அதிகந்தான்
அத்தனை கண்டுபிடிப்பும் அருமையே
ஆனாலும் கொடுக்கும் விலை என்ன
கொஞ்சமும் சிந்திக்காமல் திளைக்க
யந்திரங்கள் அடுக்காய் வீட்டுக்குள்
நுழைந்தபின் சிரமமின்றி சடுதியில்
வேலைகள் முடிந்தாலும் அவயங்கள்
வேலையிழந்து நோய்கள் பழகியதே
இயல்பாய் கிடைத்த உழைப்பை
உடற்பயிற்சியிலே தேடியும்
உடலும் இளைக்கவில்லை
பிணிகளும் ஒதுங்கவில்லை
எங்கும் எப்போதும் வேண்டும்
செயற்கை குளிரூட்டல் எனில்
வியர்வை சுரப்பிகள் வீணாகி
கழிவகற்றி தேயுதே கிட்னியும்
இயற்கையோடு ஒன்றி வாழாது
இயந்திரங்களோடு பிணைந்து
பிழையாகுதே வாழ்க்கை முறை
புத்திசாலித்தனம் போனதெங்கே
போனதெங்கே என்றெல்லாம் புலம்பாமல் கொஞ்சம்
..புத்தியுடன் நடந்துவிடு இனிமேல்தான் நீயும்
ஆனபடி தானுரைத்தேன் செவிகளையும் மூடி
..அழகாக வக்கணைகள் காட்டிநின்றாய் இன்றோ
கானங்கள் பலபாடி சோகத்தில் மூழ்கி
..காதலினைச் சொலவிலையே என்றெல்லாம் ஏங்கி
கானலென நினைக்கின்றாய் கலங்காதே பெண்ணே
..காதலர்க்கு தூதுசெல நான்போவேன் முன்னே!
முன்னே போனால் முட்டி
பின்னே சென்றால் உதைத்து
முடக்குதே படுத்துதே அய்யோ
நான் பாவமில்லையா மூப்பே
மூப்பே என்னைச் சீண்டாதே
..முகத்தில் சுருக்கம் தாராதே
சீப்போ என்றே சொல்லிடுவேன்
..திரும்பி என்னைப் பார்க்காதே
காப்போம் என்றே எனைச்சுற்றி
..கடமை இருக்கு கேட்டாயோ
போப்பு என்றென் ஊர்த்தமிழில்
..சொல்வேன் நீயும் போய்விடப்பா..
போய்விடப்பா என
பூவை கெஞ்சினாள்
செல்லப் பூனையிடம்
கணவனுக்குப் பிடிக்காத
ரகசிய சிநேகிதனிடம்
தடவுவேன் நாளை இரவு
நாளை இரவு நலமாய் வருவேன் என்றே சொன்னாள்..
.. நானும் அவளை உளத்தில் சுமந்தே அங்கே சென்றேன்
வேளை கூட திரும்பி வஞ்சி சென்றாள் என்றோ
..வீணர் சிலரின் பார்வை எண்ணிப் போனாள் என்றோ
மேலை நாட்டில் இருக்கும் நேரக் கட்டுப் பாட்டை
...மென்மை யாக உணர்த்திப் போனாள் என்றோ நானும்
தேளைக் கண்டு திகைத்தாற் போல தவித்த போதில்
..தேனாய்ப் பின்னால் இருந்தே என்னை அணைத்தாள் அவளும்..
அவளும் களம் சென்றாள்
தோளோடு தோள் நின்றாள்
தேர் அச்சில் விரல் வைத்தாள்
வரம் இரண்டும் பெற்றாள்
மறந்தே போனவற்றை
கூனி எடுத்துக் கொடுத்தாள்
அது ராம காவியமானது
சமத்துவத்தின் விளைவானது
விளைவானது எதுவோஎன சிலநாட்களில் தெரியும்
களையானவை களைந்தேபல பயிர்கள்விதை விடுமா
சுளையாகவே பழைமைபல சுவையாய்ச்சொலும் மனிதர்
வலைவீச்சினில் நாடோயினி விழுமாயிலை எதுவோ
எதுவோ ஒன்று தடுக்க
எதுவோ ஒன்று இழுக்க
என்னவொரு தடுமாற்றம்
எத்தனை தப்பாட்டம்
இரு பாலிடை ஈர்ப்பு
என்றும் கலையின் கரு
கருவினில் கண்ட தோற்றம்
....காலத்தின் போக்கில் நல்ல
உருவினைக் கொண்டு அன்று
... உலகினில் வந்த போது
முறுவலும் முகத்தில் பொங்கி
... மனதிலும் மகிழ்ச்சி தங்கி
சுறுசுறு வென்றே சுற்றம்
...சொன்னது அந்தக் காலம்
விறுவிறு வென்றே நீயும்
..வேகமாய் வளர்ந்து விட்டாய்
சுறுசுறுப் பாக வேலை
..சடுதியில் தேடி இன்று
துருதுரு பெண்ணின் மையல்
..கொண்டதால் என்னை நீயும்
துரும்பென எண்ணிப் போகச்
..சொல்கிறாய் பரவா யில்லை....
..
பரவாயில்லை இந்த மாற்றங்கள்
கூட்டுக்குடும்பத்தில் அதிகாரம்
குவிந்திருந்தது மூத்த தலையிடம்
பெட்டிப்பாம்பாய் ஆணும் பெண்ணும்
தனி அரசாங்கம் நடக்குது இன்று
தம்பதிக்கு சம உரிமைகள் உண்டு
நரைத்த தலைகளுக்கு நிம்மதி
அலுப்பில்லாத ஆனந்த ஒய்வு
ஓய்வெடு என்று
அலுவலகத்தில் அனுப்பி வைத்தாலும் கூட
சுற்றிச் சுற்றி
ஏதாவது வேலை
பார்த்துக் கொண்டேஇருந்தார் தாத்தா..
சொந்த வியாபாரம் என்பதால்
இறப்புக்கு முதல் நாள் வரை
கடைக்குப் போய் வந்துகொண்டிருந்தார் அப்பா
நாற்பத்தைந்து வயசில்
போதும்..கொஞ்சம் சேர்த்தது இருக்கு
என நினைத்து
வி.ஆர்.எஸ் வாங்கி
சந்தோஷமாய் இருக்கும் நான்..
எப்படியும் நாற்பது வயசுக்குள்ள
சேர்த்துடுவேன் டாடி..
நானும் இவரும் தான் வேலைக்குப்
போறோம்ல..
அப்புறம்
லைஃபை எஞ்சாய் தான் பண்ணனும்..
இது என் மகள்..
ஆகக் கூடி
ஓய்வென்பது வயதைப் பொறுத்திருந்தது போக
மாறிவிட்டது இன்று
மாறிவிட்டது இன்று தேர்தல் காட்சி
படித்தவர் பசையுள்ளவர் வீடுகள்
தேடி வருவதில்லை வேட்பாளர்கள்
பார்த்ததே இல்லை ரகசிய பரிசுகள்
சம்பிரதாயமாய் வருவர் கட்சிக்காரர்கள்
வாக்குச்சாவடி தகவல் சீட்டுடன்
அந்தோ அதுவும் இல்லை இம்முறை
வாக்குரிமைக்கு வந்த சோதனை
சோதனை தாக்கும் போது
...சோகமும் விலக்கி அங்கெ
வேதனை தீர நன்றாய்
..விரைந்துவோர் செயலைச் செய்தால்
பேதமை ஆன நெஞ்சம்
..பெற்றிடும் ஆற்றல் அந்த
சோதனை தீர்வ தற்கு
..சுகமுடன் தீர்வும் தருமே..
தருமே புத்துணர்ச்சி
காலை காப்பியின் ருசி
காதில் விழும் தினசரி
கிள்ளையின் கச்சேரி
கொல்லை மரமேறி
மனமே கேட்டு நீ ரசி
ரசியென்ற ஓட்டமிடும் மங்கை நல்லாள்
..ரசனையுடன் நாவலொன்றில் ஓடிச்சென்றே
வசியங்கள் மயக்கத்தைச் செய்யும் போலே
..வாகாகத் தங்கத்தை வென்று செல்வாள்
புசிப்பதுவா மனிதவாழ்க்கை போநீ மூடா
..புவனத்தில் லட்சியமே முதலில் மெய்யாம்
உசுப்பிவிட்டு சொல்லிவிடும் கருத்து எங்கே
..அழகான சுஜாதாவின் நாவல் தானே
/*பத்து செகண்ட் முத்தம்- சுஜாதா//
நாவல் தானே
சிறுவன் ஆயுதம்
ஔவை திகைத்த
சொல் விளையாட்டு
விளையாட்டாய்க் கூடதீய சிந்தை கொண்டால்
..வினையாக மாறுதற்கு நேரம் ஆகா
களைகளினை பயிர்களுடன் வளர்த்து வைத்தால்
..காலத்தில் நற்பயிரும் வாடும் அன்றோ
தளையெனவே இருக்கின்ற கெட்ட சிந்தை
..தடுத்துவிடும் நல்லநல்ல செயலைத் தானே
வளையாத நற்சிந்தை உடலை நெஞ்சை
..வளமாக்கி விட்டுவிடும் உண்மை தானே..
உண்மை தானே மாறிவிட்டது
அன்றாட அட்டவணை இன்று
அன்று போலில்லை எதுவும்
ஆசைகள் எல்லாம் வேறானது
வேறானது எதுவோயிலை வித்தைசொலும் மனந்தான்
தேரானது நிலைமீதினில் தெளிந்தேநகர் வதுபோல்
நேரானது நங்கைமணம் கொண்டேஅசல் புகுந்தே
மாறாமலே இருந்தாலது தவறேயென உணர்வாய்..
தகப்பன்மனம் தவிக்கும்படி தயங்காமலே சுடுசொல்
பகட்டாகவே பாய்ந்தோடி் யே இதயந்த்தனில் தைத்தே
விகற்பம்கொளா யிவளெங்ங்கனம் மாற்றங்கொண்டா ளென்றே
திகைத்தாலுமே உலகத்தினில் சகஜம் என உணர்வாய்
உணர்வாய் ஓயாது
ஐப்பசி மாத அடைமழை
பெண்களின் அரட்டை
கவிதைக்கு கவிதையும்
கவிதையும் மொழியையும் கருத்தில் கொண்டால்
..கலகலப்பாய் உற்சாகம் பிறந்தே தீரும்
தவிக்கின்ற தாகத்தில் தொண்டை அங்கே
..தாங்காமல் காய்ந்தபடி உலரும் போதில்
குவித்தகையில் பாய்ந்துவிழும் அருவி நீர்போல்
..குளிர்விக்கும் உடலைத்தான் மற்றும் இன்னும்
பவித்திரமாம் பக்குவமாய்ப் பொங்கும் கவிதை,..
…பாட்டெல்லாம் நமதுவுயிர் மூச்சே தானே