VEYYIL :)
Printable View
VEYYIL :)
என் கேள்விக்கென்ன பதில்?
யாராவது இவற்றுக்கு பதிலளியுங்கள்:
anonymous:தமிழாக்கம் யாது?
யாரேனும் "திரைப்படம் தன் வரலாறு கூறுதல்" என்ற தலைப்பில் எழுதுங்களேன்.
இங்கு எழுதியிருந்த மேற்கோள்களுள் உங்களைக் கவர்ந்தது எது?
:cry: sooooooooo sad.............ennaala indha fonda padikka mudiyala :cry2:
அத்தியாயம் # 10.
நாளை நான் ஓர் கட்டுரைப்போடிக்கு செல்லவிருக்கிறேன்.தமிழ் யானைகள்,இந்த இம்சையை பொறுத்துக்கொள்வார்களாக.சமீபத்தில் அனுபவித்த சில சுக நொடிகளை பகிரக்கடமைப்பட்டிருக்கிறேன்.யாருக்கும் எந்த மேற்கோள் கவியும் பிடிக்கவில்லையா என்ன?(கடந்த அஞ்சலின் கேள்வி)
" வாகன இரைச்சலினூடே
கேட்கும்
மாட்டுவண்டிமணி. "
(அம்பலம்.காம்)
ஏற்கனவே அறிமுகப்படுத்திய பிரசன்ன வெங்கடேசனின் ஆலய குடமுழுக்கு தான் தலம்.அரைத்தூக்கத்தில் நீராடிவிட்டு ஜிப் போடாமலேயெ கோயிலடைந்தேன்.அதிகாலையிலிருந்து பகல் வரை விண்மலர் விரிவதை சுகித்துக்கொண்டிருந்தேன்,ஜிப் போட்டபடி.பழகிய முகங்கள்,தெருக்கள்,கடைகள் எல்லாவற்றையும் நான் பெருமாளுக்கு காட்டிக்கொண்டிருந்தேன்.அதற்குள் நடை திறக்க எல்லோரும் முந்திக்கொண்டு சுவாமியை சேவித்துக்கொண்டிருந்தார்கள்,நான் மெல்ல மேல்தளத்திற்கு ஏறிவிட்டேன்,மரக்கட்டை மார்க்கமாக.அங்கு நீரை கும்ப நீரோடு dilute செய்துகொண்டிருந்தார்கள்.புளியோதரை, தயிர்சோறு, சர்க்கரைபொங்கலோடு கொஞ்சம் பக்தி.பக்கத்தில் பலூன்கள்,ராட்டினமென மழலைக்கொண்டாட்டங்களும்,பட்டாசு.ராக்கெட் என்று மறுபுறம் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்த ஏரியாவும் விழித்திரையில் பட்டு ஒளி பரவிக்கொண்டிருந்தது.புகை இன்னும் சூரியனை புலப்படுத்தவில்லை.ராக்கெட் ஒன்று கிளியாட்டம் ஆகாயஜாலம் புரிந்து குபுக்கென வெடித்து விழ, அருகிலிருந்த குளம் வளையல்களை அணிவித்துக்கொண்டது.நிறங்கள் நிரலாக தாவணியிலும்,பட்டு வேட்டிகளிலும்,சாத்தப்படும் மாலைகளிலும் மிளிர்ந்தது.கவிதை ஒன்று யோசித்துக்கொண்டிருக்கையில் ஜலம் மாயிலையினூடே என்னை அடைந்தது.சிலிர்ப்பினை வாங்கிக்கொண்டு கவிதையை எடுத்துக்கொண்டு வடிந்தது.பன்னீர் பாட்டலொன்றில் அதை நிரப்பி பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு கீழே இறங்கியாகிவிட்டது.தெய்வ வழிபாட்டில் ரசனை,அழகியல்,நுட்பம் எல்லாம் இருக்கிறது அல்லவா?
அப்புறம் பள்ளி சார்பில் யுனானி அறிவியல்மையத்திற்கு பாதசாரித்தது.பாதசாரிப்பதென்பது இங்கு ஆகுபெயர்:நாங்கள் தேர்வு செய்த வாகனம் சுவராஜ் மஜ்தா ஊர்தி.வழிநெடுக அது எங்களுக்கு நகரத்தின் ரணங்களையும்,துர்கதியில் துவளும் மானிடர்களையும் காட்டிக்கொண்டே வந்தது புகையுமிழ்ந்தபடி.அப்போது சிவாஜி சிலை இல்லை.மீதி சிலைகளுக்கு அட்டெண்டென்ஸ் போட்டுவிட்டு கருவாட்டுப்பூவை முகர்ந்தோம்,கைக்குட்டைகளால்.ராயபுரத்தின் மீன்வாசத்தையும்,மண்தொடும் கடல்நுரையையும் தாண்டி மூலிகைச்செடி பராமரிக்கப்படுவது தெரியாது, உணர்ந்தேன்.வேண்டாவெறுப்பாக குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன் துளசிமணத்தில்.அந்த குறிப்பிட்ட இடம் போகப்போக நீண்டுகொண்டே இருந்தது,கண்மூடுகையிலும் மூடாதபோதிலும்!.புராதன முறைப்படி விவசாயம் செய்து மருந்துகளை தயாரிப்பதும் உள்ளது,டிஜிட்டல் முறையில் செய்யும் ஆய்வுக்கூடங்களும் உள்ளன,தமிழ்நாட்டைப்போலவே.அந்த இசுலாமிய பேரா. நிகழ்த்திய உரை மறந்துபோய்விட்டது.கூடவே அவர்கள் எழுதிக்கொள்ளச்சொன்ன தாவரவியல் பெயர்களும்.ஆனால் நாசியில் அந்த நறுமணம் நினைவிருக்கிறது.திரும்புகையில் கால் வலித்தது,அந்த கானகத்தை கடந்த காரணத்தால்.ராத்திரி கடனுக்கு அந்த ரிப்போர்ட்டை முடித்துவிட்டு வானம் காணுகையில் நட்ச்சதிரங்கள் கண்ணடித்து குட் நைட் சொன்னது.
பதிலுக்கு நான் சொல்வதற்குள் சூரியன் குட் மார்னிங் என்றது!
நண்பன் அபிலாஷ் நேற்றைய கவிதைப்போட்டியில் பாடிய கவியிது.ஆனால் அவனுக்கு பரிசு தரவில்லை.வெறும் இயைபிற்காக தாயுடன் நாயை கோத்தோருகெல்லாம் முதற்பரிசு வழங்கப்பெற்றது.வாழ்க ஜனநாயகம்.
என் நாடு இந்தியா.
முக்கடல்கள் படை சூழ
வீற்றிருந்தாள் ஒரு நங்கை.
இமயமலை கிரீடமாயேற்றி
ஆட்சிபுரிந்தாள் இம்மங்கை.
அவள் பெயர் இந்தியா!
அவள் வாழும் இடம் இந்தியா!
இமயம் முதல் குமரிவரை
பரந்திருந்தது அவளது சிவப்பழகு மேனி.
செலவ வளத்தில் செழித்திருந்தாள்
பண்பாட்டில் வளர்ந்திருந்தாள்!
அவளுடைய அமைச்சர்களின் புகழை
சொல்லாமலிருக்க முடிய்முமோ?
வீரம் நிறைந்தவன் பஞ்சாப்
அறிவு நிறைந்தவன் வங்காளம்
அழகில் சிறந்தவன் காஷ்மீர்
சரித்திரம் படைப்போன் இராஜஸ்தான்
படிப்புதேறியவன் கேரளம்
இரும்பு உள்ளம்படைத்தவன் பீஹார்
சிலை வடிப்பவர் ஒரிசா
பால்வடியும் பிள்ளை ஹரியானா
கடமை தவறாதோன் தமிழ்நாடு!
நதிகளவர் சகோதரியர்!
அவள் செல்வவளம் கண்டு
அவளை ஆட்சி செய்யத் துணிந்ததோர்
அயல்நாட்டுப்படி.
வாளே ஆயுதமாய்க்கொண்டோர்க்கு
தோட்டா என்றதும் புரியவிலை!
திகைய்த்தனர்,திடுக்கிட்டனர்
திக்குமுக்கு தெரியாமல் தவித்தனர்.
வழியேதும் தெரியாமல்
விழித்திருந்த அவளுக்கு
பிறந்தானோர் மகன்
கதருடை சாத்திக்கொண்ட
அச்சீமான் காந்தி மகாத்மா!
என்செய்தான் அம்மாவீரன்
கத்தியெடுத்தானா?
தோட்ட நம்பினானா?
குண்டேதும் வைத்தானா?
அவன் நம்பியது அகிம்சையை,
அவனது மந்திரம் ஹேராம்!
இதுவரை யாரும்
கையாளா ஆயுதத்தால்
வந்தவர் வணங்க,வாழ்த்த
தியாக உணர்வை
தோற்கடிக்க இயலாது
விடுதலை வழங்கினான் பரங்கியன்!
இன்றோ...
நாமென்ன செய்துகொண்டிருக்கிறோம்?
விடுதலை நாளை விடுதலை நாளாகி
நட்ச்சத்திரப்பேடிகல் காணுகிறோம்!
நாட்டுக்காக படுபட்ட சிலருக்கு
சிலை வெண்டாம்,பட்டம் வேண்டாம்;
சிந்துகின்ற இருதுளி கண்ணீரால்
பல்கோடி புண்ணியம் கிட்டுமே!
"என் நாடு இந்தியா"
என்றுரையாமல்
"நம் நாடு இந்தியா"
என்ரு மனமோங்கி
இளைஞர் சரித்திரம் படைப்போம்!
வெறும் இயைபிற்காக தாயுடன் நாயை கோத்தோருகெல்லாம் முதற்பரிசு வழங்கப்பெற்றது.வாழ்க ஜனநாயகம்.
:cry: ÐÂÃÁ¡É ¾¡÷ò¾õ! ¿øÄ ¸Å¢¨¾¨Â, ¿øÄ ¸Õò¨¾, ¿øÄ ¯½÷¨Å þíÌ ¦¸¡Îò¾¨ÁìÌ ¿ýÈ¢! :D
kanna :) :cry:
அவர்கள் எங்களுக்கு சொன்ன சமாதானம் பாரதியாரின் "செந்தமிழ் நாடெனும் போதினிலே ..."பாடல் கூட இரண்டாம் பரிசு பெற்றது என்பதுதான்.நான் சில சிறுகவிகளின் சரமாக அங்கு சென்று படித்தேன்,extempore:இதற்கும் தமிழ்ப்பதமறியேன்.ஏற்கனவே இதே போல anonymus-க்கும் தமிழ்க்கிளவி கேட்டிருந்தேன்.
வானை அளப்போம்.
நிலாச்சோறு சாப்பிட்டது
போதும் - நிலாவில்
சோரு சப்பிடலாம் வா!
தோல்வீதிகளில் நடந்தது
போதும் - பால்வீதிகளில்
நடக்கலாம் வா!
கிரகப்பெயரில் சோதிடம் கேட்டது
போதும் - கிரகத்திற்கு நம்
பெயர் வைக்கலாம் வா!
நட்சத்திரங்களிடம் கையெழுத்து ஏந்தியது
போதும் - நட்சத்திரத்தில்
கையெழுத்திடலாம் வா!(நிலாச்...)
சேனை வளர்ப்போம் - அதனால்
வானையளப்போம்.
பாலைவனங்களை சோலைவனமாக்கி,
விறகைக்கூட வைரமாக்குவோம்.
வெறுங்கை மூலதனங் கொண்டு
பெருஞ்செல்வம் அறுவடை செய்வோம்.
மதி வெல்வோம் - அதனால்
மதி செல்வோம்.(சேனை...)
கரங்கள் கோத்து,
மனங்கள் சேர்த்து,
கால்கள் இணைத்து,
சிரங்கள் புணர்ந்து
மொழியால் மட்டுமின்றி
விழியாலும் வானையளப்போம்!
பாதசாரியைத் தொடர்கிறேன்.
Wow! :clap: :clap: :clap:
பவளமணி அம்மையார் கைதட்டுமளவு அக்கவி இருந்ததென்றால்,எனக்குப் பெருமை தான்.அடுத்த அஞ்சலில் தொடரும்படி ஆகிவிட்டதற்கு மன்னிக்கவும்,நான் திரிகளில் உலவும் கட்டுரைகளை வரிசைப்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறேன்.
þó¾ §Å¸õ, þó¾ °ì¸õ, þó¾ò ¾¢¼õ, þó¾ ¸É×ò¾¢Èý -«ò¾¨ÉÔõ þ¨Ç»¸Õ째 ¯Ã¢ò¾¡ÉÐ - þ¨¾ò¾¡§É «ôÐø ¸Ä¡õ Ó¾ø þó¾ º¡Á¡ýÂû Ũà «¨ÉÅÕõ Á¨Ä¡ö ¿õÒ¸¢§È¡õ! :2thumbsup:
ஏன் யாரும் பதிலளிக்க மறுக்கிறீர்கள்?(தன்வரலாறு கூறுதல்,சிறந்த மேற்கோள்,இத்தியாதி வினாக்கள்)பரவாயில்லை,மீண்டும் தொடர்கிறேன்.
BLACK AND WHITE.
படங்களில் கொசுவர்த்தி சுற்றி தத்தம் வரலாற்றை டைரி,பேச்சு,மனோதத்துவம் முதலிய மார்க்கங்களால் விவரிப்பது ஒத்து என் முயற்சி இது.விடுமுறைக்கு விடுமுறை ஏன் விடுமுறை விடுகிறார்கள் என்ற சந்தேகம் மனதில் எழும்,என் தொடை வரை இருந்த எனக்கு.எண்ணற்ற வேலைகள் தந்துவிட்டு "ஹேப்பி ஹாலிடே" சொல்லும் ஆசிரியைகளின் வீட்டை அமளிதுமளிபடுத்த என்று கற்பிதங்கள் பயிற்றுவித்துக்கொண்டேன்.பசுவின் சாணத்தின் மையத்தில் வெடி வைத்தால்,அருகிலிருக்கும் மிஸ் வீட்டு சுவர் நாஸ்தி;கிரிக்கெட் மட்டைகள் ஜன்னல்களுக்கு குறி வைத்து பந்துகளை ஏவூஉம்;டாபர்-மேன்கள் மீது கல்மாரி பொழியூஉம்;வாகன சக்கரங்களிலிருந்து காற்று விடுதலை செய்யப்பெரூஉம்.இவற்றிற்கான கர்த்தாக்களை குறிப்பிட்டவர்கள் புலன்விசாரணை செய்வதற்குள் நாண்க்கள் பூர்விகங்களுக்கு புறப்பாடாவோம்.ஊர்களில் வீடியோ கேம்கள் இருக்காது என்பதொழிய பிறிதொரு இம்சை வாய்த்திருக்கவில்லை.எனது அத்தகு பயண நினைவுகள் வரிக்குதிரைகளின் மீது பதிந்த கோடுகள் நிகர சுவடுடுத்தியிருக்கின்றன.
சிலபல வீட்டுப்பாட நோட்டுகளை மாமிகளிடம் ஒப்படைத்துவிட்டு,விடைகளை குறித்துவிட்டு சிறகு விரிக்கவேண்டியதுதான்.முதல் நாள் காலை,நாளேடு விளம்பரங்களை புரட்டிவிட்டு,தோப்பிற்கு பயணப்படலாம்.உலகிலேயே மனிதன் நிம்மதியாக இருக்குமிடம் என்று கண்டாயப்பட்ட கழிவறைக்கு தான் நாங்கள் சென்றுகொண்டிருந்தோம்.ஏனெனின்,அங்கு ஃபிளஷ்ஷுடன் கூடிய வகையறாக்களெல்லம் "லேது".மிகப்பெரிய திறந்தவெளி-பெயர் தெரியாத மரங்களின் நிழல்,குளம்,விநாயகர் ஆலயம்,புளியந்தோப்பு இவை தான் லொக்கேஷன்கள்.கடன்களை அடைத்தப்புறம்,நாளைய கடனுக்கான சோறு.பெரும்பாலும் இட்டலி/தோசை,சாம்பார்.ஞாயிறுக்கு ஆப்பம் அல்லது இடிஆப்பம்.காலைகள் எப்போதுமே சற்று வெறுமையானவை.மதியங்கள் தான் வேட்டைருது.பெண்டிரெல்லாம் குறட்டை விடும் பொழுதில் கரப்புகளோடு கூட்டணை வைத்து வீட்டுச்சிற்றுண்டிகளை களவாடுவது தான் சாகசம்.ஏப்பங்கலை தானஞ்செய்துவிட்டு தோப்புக்கு போகலாம்.ம்ஹூம்,இப்பொது புளியந்தோப்பிற்கு.அதை தாண்டி பிள்ளையாரின் இடப்புறம் தான் "அந்த"ப்புரம்.அடுப்புக்கில்லையென்றாலும் விளையாட கிரிக்கெட் மட்டைகள் இருக்கும் ஐயன்பெட்டையில்.("தில்லுமுல்லுக்காக இரஜினிகாந்த் கடன் வாங்கிக்கொண்ட நெசவுக்கிராமம்,காஞ்சி மாவட்டம்)பெரியம்மாள் பிள்ளைகளோடு செஞ்சுரிகள் அடிக்கவேண்டியது பாக்கி.நிலா வந்து எங்களை வீட்டிற்கு அழைத்துச்சென்று விடும்.சில நேரங்களில் பாண்டி,புல்-கோட்டி(கில்லி),கோலி விளையாட்டுக்கள்(சோங்கு,இத்தியாதி),கண்ணாமூச்சி முதலியன அனுமதிக்கப்படும்.பாட்டி முக்காடத்தை(தாழ்ப்பாளின் வட்டாரச்சொல்)இழுத்துக்கொண்டு பவம் புரிந்த ஃபியட்டில் ஏறச் செருமுவார்.சுமார் பதினைவரோடு செல்லும் ஊர்தி!விலை சல்லிசு என்பதால் மாம்பலத்திலிருந்து காஞ்சி செல்வோம்:இப்போது கூட இங்கு எழுபதிற்கு விற்கும் அனுமதிசீட்டு அங்கு பதினைந்து!பெரியம்மாள் வீடும்,பாட்டியின் வீடும் அருகருகே இருந்தது மற்றொரு வசதி.பங்காளிகள் ஐவரும் சேர்ந்து தேன் மிட்டாய்,பல்லி மிட்டாய்,புரை,எல்லாம் வாங்கித்தின்போம்.பபுள்கம் வாங்கினால் கிரிக்கெட் கார்டுகள் இனாம் என்பதால் அவற்ரை வாங்கி சேகரிப்போம்.சகோதரர்கள் நால்வரும் ஏரத்தாழ ஐந்நூறு செகரித்திருந்தோம்!
"எந்த இடத்திலிருந்தும்
சொர்க்கம் சமதூரத்தில்
இருக்கிறது."
நாம் நெருங்கிவிட்டோம்.
¦¾Ç¢Å¡É À¾¢×, «Æ¸¢Â ¯Å¨Á¸Ù¼ý. ±ØòÐôÀ¢¨Æ¸û ¸ÅÉ¢ì¸ôÀ¼§ÅñÎõ.
மிக்க நன்றிகள் பாதசாரியை மாபெரும் வெற்றியாக்கியமைக்கு.ஒரே மாதத்தில் 1500 கிளிக்குகள் பதிந்திருக்கின்றன அவன் மேல்.சென்ற மாதம் 1425,இப்போது 2921!இதற்கு எஞ்ஞான்றும் நன்றி மறக்கிலன்.
ஐயன்பேட்டை புராணம் பாதி தின்ற ஆப்பிள் போல பழுப்பாகித் தொங்கிக்கொண்டிருக்கிறது.முடித்துவிடுகிறேன்.
தோப்புகளில் விளையாடியதும்,காஞ்சிக் கோவில்கள் 1008க்கு சென்றதும்,புளியங்காய்(அதுதான் டிரிங்க்ஸ் பிரேக்கின் போது ஆகாரம்)அடித்ததும் உறைந்த பனிக்கட்டியாகிவிட்டன.அதை காட்சிகளாகவே மனமூர்ந்து செல்லும்படி செய்த இயற்கைக்கு நன்றி.பனை நுங்கு இறக்கப்படும் சனிக்கிழமைகளில் மாலுமிகள் ஒத்து திட்டமிட்டு பங்கீடு செய்து கொடுப்போம் அவற்றை.வெட்டி வைக்கப்பட்டிருக்கும் விறகுப்பிரம்புகளை "சுட்டு" ஸ்டம்ப் நட்டதுகூட ஞாபகம் இருக்கிறது.பெயர்கள் தரும் வினோதம் அளப்பெரியது.என் அம்மாவின் பாட்டி பெயர்:செல்சா!நன்பனொருவனது பெயர்:பட்டு ரோஸ்!ஆனால் அவை அரிதாரம் பூசிக்கொள்வதில்லை நகரமாந்தர்களை நிகர்த்து.எவ்வளவு பெரிய படிப்பாளியும் அங்கு நெசவு செய்வார்.ஊர் முழுக்க சாயமும்,தராசு முள்ளாட்டும் நூற்கண்டுமணமும்,பவர்லூமிடி சப்தங்களுமென பட்டணிவிக்கப்பட்டிருக்கும்.நகரமோ கிழிந்த ஜீன்ஸும் பெர்பியூமும் சூடியிருக்கிறது.இல்லையில்லை வாடியிருக்கிறது.மேலும் அங்கு நடக்கும் திருவிழாக்கள் அழகானவை.இன்று அப்போதிருந்த மிடுக்கு குறைந்தாலும்,கிராமம் கிராமமாகவே இருக்கிறது.மெகா சிரியல்களால் மட்டும் கொஞ்சம் உருகி.எஸ்.இராமகிருஷ்ணன் ஒருமுறை எழுதினார்:
"உலகம் ஒரு தின்னமுடியாத பெரிய பழம்.அதன் ஒரு பகுதியை தின்பதற்குள்ளேயே நம் ஆயுள் முடிகிறது....."
நான் தொடர்கிறேன்:ஒவ்வொருவனும் தின்று முடித்த பகுதி மீண்டும் பழத்திற்குள்ளேயே போய் பழத்தை நிரப்பிவிடுகிறது,ஆதலால் இன்றுவரை உலகம் உருண்டை.திருவிழாக்கள் தொடரும் அஞ்சலில்.
நகராத பயணம்.
இம்முறை என் கட்டுரை சற்று மலினமாகிவிட்டது,அருள்க.ஆயினும் அற்புதமானதோர் மேற்கோளுடன் தொடங்கலாம் என்று உத்தேசித்தவுடன் கிறீச்சிட்ட வரிகளும் அவற்றின் சொந்தக்காரரும் இதோ:
" காத்திருக்கு காத்திருக்கு
காலி பக்கெட்டு
வாடா வாடா வாடா வாடா
வாட்டர் பாக்கெட்டு! "
(பேரரசு) (விஷ்க் விஷ்க் விஷ்க்)
இது ஒத்த அமரக்கவியை குமரித்தமிழில் பரிமாற இவரால் மட்டுமே இயலும்.வள்ளுவரும்,தொல்காப்பியரும் இவரது சொல்வங்கியிலிருந்து கந்துவட்டிக்கு கொஞ்சம் வாங்கிக்கொள்ளலாம்.அர்த்தமற்ற தமிழைப்போல நகாரத பயணமென்றும் ஒன்றுண்டு,அஃது தொலைக்காட்சி!
[தயை கூர்ந்து நடுநிசியில் வேறு சில பாதசாரிப்புகளை களிக்குஞ்சிலரை மன்னித்துவிடலாம்.]பால்யத்திலேயே டி.வி-யெனும் கயிறு ஆட்டுவிக்கும் பம்பரமாகத்தான் ஜனித்திருக்கிறேன்.இப்போதுங்கூட போகோவில் மிஸ்டர் பீன் - தி அனிமேட்டட் சீரீஸ் பார்க்கையில் உள்ளம் மழலையுருவெடுக்கிறது.சென்ற வருடமென் நண்பன் பிரசன்ன கோபாலது பெற்றோர் சொன்ன புகாரென்ன தெரியுமா?அவன் ரொம்ப கார்ட்டூன் பார்க்கிறான் என்பதே.இத்தனைக்கும் எழுபது கிலோ தாஜ்மஹாலனான அவனது வயது பதினேழு!கண்ணீர் தெறிக்கும் சீரியல்களைக்காட்டிலும் கார்ட்டூன்கள் உத்தமமே.சிறுவயதில் அநேகம் பேர் பார்க்கிற கார்ட்டூன்களாகவே மாறுவார்களாம்.எனக்கோ நேரெதிர்!உலகமனைத்தும் கார்ட்டூன்களால் நிரம்பி வழிந்தது.நான் ஒண்டி மனிதன்.மீதியெல்லாம் வர்ணமடிக்கப்பட்ட கார்ர்ட்டூன் படங்களே!நான் சுகித்த நிகழ்ச்சிப்பெயர்கள் அநேகமாக உங்களது இரசனைப்பட்டறையில் பத்திரமாக இருக்கலாம்.தூர்தர்ஷனின் ஸ்ரீ கிருஷ்ணா,மகாபாரதம் எல்லாம் ஞாயிறின் ஞாயிறு உதிக்கையில் வந்தென் வைகறை நித்திரை கலைக்கும்.கொஞ்சம் உயரமானதும் 'மேன்'களின் மேனியா என்னைத் தாக்கியது.கேபிள் கனெக்ஷன் பிரபலமானதும் தொடர்களின் நோய்.ஆனாலும் தூர்தர்ஷனே இன்னும் சில வருடம் வரவேற்பறையின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தது.குறிப்பாக சிறார்களின் மனம் ஈர்த்தது சூப்பர் ஹியூமன் சாமுராய்.அற்புதமாக மொழிபெயர்க்கப்பட்ட நாடகம் அஃது.இந்தியத்தொலைக்காட்சிகளில் முதன்முறையாக மாபெரும் வெற்றி பெற்ற மெகா மகா தொடர் ஜுனூன்.கார்ட்டுன் நெட்வொர்க் பிற்பாடு வந்தது.அஃது பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் போர் மூள காரனமாய் அமைந்தது வேறு விஷயம்.ஸ்கூபி டூவும்,பாப்பாயும் அமரத்துவம் பெற்றவை.அதிலும் பாப்பாயின் நான்கு புத்திரர்களும்,ஸ்கூபி/ஸ்க்ராப்பி டப்பிங் குரல் பொருத்தமும் அசர வைத்தன.மனித முகம் தேடிய போது தான் மெல்ல தொடர்கள் வந்தன.'நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்' ஒரு புராதன குடும்பத்தைக்காட்டியது.கோவை அனுராதா மெல்லிய நகைச்சுவையை அறிமுகப்படுத்தினார்.அவ்வப்போது தாய்வீடு புகும் மருமகளொத்து DD-யும் பார்த்தேன்.கிரேஸி மோகனுக்காகவும்,எஸ்.வி.சேகருக்காகவும்.திடீரென் று கார்ட்டூன் நெட்வொர்க் ரெவல்யூஷன் என்ற பெயரில் மனங்களைத் திருட திட்ட்டம் தீட்டினர்.அவற்றுள் முக்கியமானவை centurions,fantastic four,laff-a-lympics,road-runner ஆகியன.சன் தொலைக்காட்சி தன் வேர்களை பிஞ்சுகளில் ஊன்ற மாலையிருள் கவியும் நேரத்தில் கார்ட்டுன்களை பெயர்த்து ஒளிபரப்பியது.அவற்றின் பெயர்கள் மட்டும் நினைவிலில்லை.மெல்ல தொலைக்காட்சிப்பெட்டி தன் சாயலை இழந்து வெள்ளித்திரையின் நகலாகத்தொடங்கிய போது ஆபத்பாந்தவர்களாக வந்தனர் சில இயக்குனர்கள்.அவர்களது பெயர்கள்.....
:)
tat was really good and i hope i have read d same in the class da...
IDHUKKU MUNTHINA PAGE ELLAM PADI KAUSHIK MACHI!I'VE NOT SHOWN U THOSE!
BTW,WHY RAGAV?
கே.பி!பாலச்சந்தர் தொலைக்காட்சியை முற்றுகையிட்டு அனைத்து அலைவரிசிகளிலும் தன் கவிதாலயா நிறுவனத்தின் தொடர்கள் தான்.திருவள்ளுவர் இலையராஜாவின் 'அகர முதல் எழுத்தெல்லாம்..' குரலுக்கு உலகை சுழற்றலாயினார்.மறுபுறம் சன் தொலைக்காட்சியின் வேர்கள் அனைத்து மனங்களிலும் வேர்பரப்பியிருந்தது.முதன்முதலில் ஹிட்டான சீரியல் சாங் நானறிந்து 'பிரேமி'.நாகா மர்மதேசம் வழியாக எனக்கு என் திகிலுறையும் ரேகையை அறிவித்தார்.ஏறத்தாழ பத்து வருடங்கலாக தரமான நாடகங்களை அவர் சமர்ப்பித்துள்ளார்.தலையாய படைப்பு:ரமணி vs ரமணி பாகம் இரண்டு.நகரத்து நியூக்ளியர் குடும்பத்தின் நகைச்சுவையை மையலாகக்கொண்டது.கொஞ்ச நாள் கழித்து தமிழுதடுகள் அனைத்திலும் பதிந்த சொற்கள்:கண்ணின் மணி கண்ணின் மணி...."ஆம் சித்தி தொடரது பாடல்.ஸ்ரீரங்கத்தையும் நட்பையும்,ஊனத்தையும் வெகு ரம்மியமாக வெளிக்கொணர்ந்த தொடர் அது.அதை வழிமொழிந்த அலைகளும்,மெட்டி ஒலியும் ஜஸ்ட் பாஸ்.பிறகு கிளிசரின் கண்ணாம்பூச்சிகளால் நிறைந்து அலறிக்கொண்டிருக்கிறது இன்று.காலப்போக்கில் காணாமற்போகும் காளானாக மாறியிருக்கிறது தொலைக்காட்ட்சி.சிறுவயதில் நாம் விரும்பும் பலவும் பெரியவர்களானதும் அலுத்துவிடுமாம்,அதுபோலத்தானா இதுவும்?எது எப்படியாயிருந்தாலும் மீன்தொட்டியை விட கடல் எப்போதும் பிரும்மாண்டமானது தான்.அந்தக்கடலானது பயணம்,நீண்ட நெடிய பயணம்.பாவம் பேரரசு,அவரை அதிகப்படியாக நகையாடிவிட்டேன்,அவருக்காக மட்டுமின்றி:
" வேருக்கு நீரு
ஊத்தித்தான் பாரு
பூவிலெல்லாம் உன் பேரு "
(பேரரசு,திருப்பதி..... வந்தா பாடலிலிருந்து)
yes i do remeber ramani vs ramani.............i enjoyed it! hm....... :)
perarasu :lol:
மறுபடியும் மறுபயணம்.
நிரம்ப நாட்களாகிவிட்டதால் மீண்டும் ஒருமுறை என் பூர்வீகத்தை கண்டுவர என்று இந்த காலாண்டுவிடுமுறையின் இருநாட்களை ஒதுக்கினேன்.செல்ல நாயிடம் விடை பெறுவதைப்போல கணிணியிடம் சொல்லிக்கொண்டு ஆட்டோவில் பேருந்துநிலையம் அடைந்தேன்.இதற்குமுன் இவ்வளவு கனத்ததில்லை,ஊருக்கு சென்றுவர.அநேகம் முறை பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு ஆனந்தமாய்த்தான் கிளம்பியிருக்கிறேன்.ஆனால் இம்முறை பள்ளி சகாக்களுடன் இரண்டு நாட்களை மிஸ் செய்யப்போகிறேன் என்ற எண்ணத்துடன் கிளம்பினேன்.ஆட்டோவில் முன்னாடி ஓட்டுனருடன் அமர்ந்துகொள்வதே வழக்கம்.வழிகளெல்லாம் எனது ஊரின் பழைய முகத்தை காட்டிக்கொண்டே வந்தன.எங்கள் மாமாவிற்கு திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்திருந்த மாமியிடம் அறிமுகமான முதல் பிரமுகர்கள் நாங்கள் ஐந்து பங்காளிகள் தான்.வெட்கத்தோடு பேசி நண்பர்களாகி பரிசுப்பொருட்கள்அனைத்தையும் பிரித்தது நினைவிருக்கிறது. எங்களுக்கான பேருந்து வந்துவிட்டிருந்தது.என் ஞாபகங்களை அங்கேயே போட்டுவிட்டு பேருந்தில் ஏறி வேகவேகமாக ஒரு ஜன்னல் இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.சென்னையின் புழுக்கத்தை விட்டுவிட்டு பட்டுநகரத்திற்கு விரைந்துகொண்டிருக்கிறது உந்து.ஒரு வேடிக்கை பாருங்கள்:பல்லவனின் நகரத்தில் பாரதி ஓடுகிறான்,பாரதியின் நகரில் பல்லவன் ஓடுகிறான்,நான் பேருந்துகளின் பெயரை சொன்னேன்.பாதையின் முன்னோட்டம்,வாழ்க்கையை பின்னோடியது.ஐயம்பேட்டை,இது லா.ச.ரா. வாழ்ந்த ஊராம்!ஐயம்பேட்டையிலிருந்து முத்தியால்பேட்டை செல்ல அவா கொண்ட என்னிடம்,ரெண்டு ஊருக்கு ஊடால முதைலைங்க கிடக்கு என்று பயமுறுத்தியவர்களின் முகங்கள் நினைவில் பூச்சாண்டி காட்டின.தூக்குச்சட்டியில் நுங்கு கொணர்ந்தது,மரத்தில் ஏற முற்பட்டு விழுந்தது,வண்டி ஓட்ட கற்றுக்கொண்டது தோற்றது- பசுமரத்தாணி.ஸ்ரீபெரும்புதூரை அடைந்த பின் நினைவுகளை விட குமுதம் கொஞ்சம் சுவாரஸ்யமாகப்பட்டது.எவ்வலவு நேரம் தான் கன்னத்தில் கரம் வைத்து முட்டுக்கொடுத்து வேடிக்கை பார்ப்பதைப்போல பாவ்லா காட்டுவது?காற்றின் கைகள் அப்போதுதான் வேலையில் இறங்கின.என் முகத்தினை வறட்சிப்பிரதேசமாக்கி சுத்தமாக உலரவைத்தது.காற்றின் விஸ்வரூபக்கைகளில் மிகவும் காயம் கண்டிருந்த பொம்மை போலிருந்தது என் சிரம்.என் பால்யம் அலாதியாக எல்லாம் இல்லை.எனக்கு கிடைத்த வசவுகள் இவை:அடுப்பு,தயிர்வடை,டியூப்லைட்,தத்தி,எருமை இன்னபிற.ஆனால் என்னைடம் அன்று எக்காளமிட்டவர்களால் இன்று பேசி மாளவில்லை.அவர்களாலேயெ பழக்கப்பட்டு அவர்களையே காயப்படுத்தும் கத்தி நான்.இந்த துர்நினைவுகள் சலனமிட,கொஞ்ச தூரம் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன்.காற்றூ இன்னமும் ஓய்ந்தபாடில்லை.தூரத்து பனைமரங்கள் சாய்ந்தபடி "எங்க அவஸ்தை உனக்கு புரியுதா?"என்று கேட்பது போல இருந்தது.ஊருக்கு செல்லும் குழந்தைகளின் வழக்கமான செயல்களைப்போல அன்றி நான் ஏதேதோ விபரீத கற்பனைகளில் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருந்தேன்.கையிலிருந்த வால்காவிலிருந்து கங்கை வரை-யையும் படிக்க முடியவில்லை.கடந்த முறை வந்துப்ப்யிருந்தபோது ஒரு இழவுக்கு வந்திருந்ததால்,அந்தப்பயணத்தின் ரணங்கள் இன்னுமொருமுறை எனக்கு வலித்தன.ஆறு தெருக்களும்,நூற்றுக்கணக்கான நாராசந்துகளும் நிரப்பிய ஊரின் தொழிலான நெசவின் சாயங்கள் மனதில் ஊறின.சாயடிகளில் பந்துகளை அடித்து அதை தேடி ரகசியமாக கடத்தல்காரர்களைப்போல சென்று வந்ததும்,மாமியின் குழந்தையோடு விளையாடியதும்,விநாகருக்கு கண்கள் பறித்ததும்,தாயபாஸ் ஆடியதும் தெருவில் டயர் உருட்டியதும்,தராசுகளில் விளையாடியதும் என்று எண்ணற்ற ஞாபகங்கள்.அதன் நகைச்சுவையில் சிரித்துக்கொண்டிருந்த என்னை சுற்றியிருதவர்கள் பைத்தியக்காரன் என்று நினைத்திருக்க வேண்டும்.ஊர் அடைந்து டி.வி.டியில் படங்கள் பார்த்தேன்.அதிகம் பேசவில்லை.பாடியின் கைமணத்திலான ஆபங்களை புசித்தபடி நினைவுகளையும் சேர்த்து ஏப்பம் விட்டேன்.ஊருக்கு போஇ வருவது வீண் என்று கற்றுக்கொண்டதோடு இந்த பயணம் முடிவுக்குவந்தது.திரும்பும் தடங்களில் தொலைத்த என் நினைவுகளை சுருட்டிக்கொண்டு மீண்டும் கையிலெடுத்து காகிததில் கொட்டிவிட்டேன்.காற்று அடிக்கிறது
:)Quote:
Originally Posted by VENKIRAJA
மீண்டுமொருமுறை முதலிலிருந்து வாசித்துப்பாருங்களேன்,இது பாதசாரியின் திருந்தியபடிவம்,திருத்தியபடிவம்.
யாத்திரிகன்.
மலைகளின் உயரத்தைப்போலவே அது தரும் இன்பமும் உயரமான ஒன்றாகவே இருக்கிறது.சென்னை மற்ற நகரங்களிலிருந்து எப்படி வித்தியாசப்படுகிறது என்று வரைபடத்திலிருந்தே நாம் கணிக்கலாம்.ஏறத்தாழ நம் நகரம் ஐந்நிலங்களின் சங்கமம்.கடலிருக்கிறது:மெரீனாவும்,எலியட்ஸும்.வயலிரு க்கிறது:புறநகரில்.ஆங்காங்கே காடுகள் இருக்கின்றன.மேலும் பாலையும் இருக்கிறது.மலை:தாமஸ் மவுண்ட் இருக்கிறது.மலை என்ற பெயரில் முதன்முதலாக எனக்கு அறிமுகமானது என் தலைமுடியை தட்சணையாக பிடுங்கிக்கொண்ட திருப்பதியும்,திருத்தணியும்.ஒன்றாம் வகுப்பை நான் கற்றுக்கொண்டேன்-ஆசிரியைகளோடு மலையொடும்.தாமஸ் மலையின் எதிரில் தான் என் பள்ளி:மேரியன்.குருகுலமும் ஏறக்குறைய ஒரு குன்றுதான்.மொட்டையடிப்பதற்கு டிராவல்ஸ் மார்க்கமாக செல்வோம்,பள்ளிக்கு மாட்டு வண்டியிலும்,ஆட்டோவிலும்.என் இயற்கை குறித்த பார்வைக்காகவோ என்னவொ எனக்கென்று அவதரித்திருந்தது என் குடியிருப்புக்கு அருகில் ஒரு மலை.
"பெரிதாயும் சில பூக்கள்
வண்டுக்கும் சிட்டுக்கும் மட்டுமா?
சிட்டுக்கும் தேன் பிடிக்கும்"
(உதயஜோதி)
நெடுஞ்சாலையில் ஆந்தை சத்தங்களையும்,லாரிக்கிறீச்சிடல்களையும் கேட்க ஒவ்வாமல் குறட்டை விடுவது என் வழக்கம்.மலையில் ஏற பாஸ் வாங்கும் போது என் தூக்கத்திற்கு குட் நைட் சொல்லிவிடின் அதற்கப்புறம் கனவுலகு தான்.வாகனத்து(பெரும்பாலும் டிராவல்ஸில் சொல்லித்தான் பயணம் செய்துகொண்டிருந்தேன்,இப்போது தான் ஒரு ஐந்து வருடங்களாக அப்பாவின் கார் அதன் இடத்தை சப்ச்டிட்டியூட் செய்திருக்கிறது.)கண்ணாடியை இறக்கிவிடின் வாகனம் எங்களை ஏற்ற ஏற்ற காதைச்சூழும் காற்றின் குளிர்ந்த கரங்கள்.வழியில் இருக்கும் ஒரு விநாயகருக்காக ஒரேயொருமுறை நிறுத்துவோம்.அதற்கப்புறம் பத்துமணி நேரம் இந்த வெங்கடேஷுக்காக அந்த திருப்பதி வெங்கடேஷ் காத்திருக்க வேண்டும்!மலையுச்சியிலிருந்து கீழே காணின் மொத்த தரையும் பிம்பமாகத் தெரியும்.குறிப்பாக அதை இரவில் கண்டு கண்ணாடியில் விழவைத்து புகைப்படம் எடுக்க ஆசை.சரியாக எனது ஏழாம் வயதிலிருந்து மலையுடன் நண்பனாக இருக்கிறேன்.ஒரு மௌனமான துணையாகவே அவன் இருந்திருக்கிறான்.மலை என்ற பாங்கில் அது வெறும் 134 படிகள் தான்.எனக்கும் 134-க்கும் 143!அஃது சுமாரான ஓர் குன்று.அதைவிட சிறிய குன்றாக்கும் எதிரிலிருப்பது.சின்னக்குன்றின் மீதும் மேலிருப்பதைப்போலவே சின்னதாக ஓர் தேவாலயம் இருக்கும்.ஆலயத்திற்கு கீழே சுமார் 40 படிகள் ஆழத்தில் எனக்கே எனக்கான ஒரு பிரத்தியேக நகரம்,அதாவது பள்ளி.செவ்வக அடைப்புச்சுவர்களும்,விவிலிய வாசகங்களும் நிறைந்த ஒரு கட்டிடம்:அது வெளியாட்களுக்கு.ஆனால் அது ஒரு பட்டாம்பூச்சிப் பண்ணை:எங்களுக்கு.அதைப்பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.அந்த வாசகங்கள் எனக்கு பெரும்பாலும் புரியாமல் இருந்தாலும் கிறித்தவ இடம் என்ற குறியீட்டை தாங்கியபடி அவ்வாசகங்கள் சுவற்றுடன் முத்தம் தந்தபடிக்கு உறைந்து நிற்கின்றன.தேவாலயத்துக்கும்,பள்ளிக்கும் நடுவே இருபத்தைந்து குல்மொஹர் விருட்சங்கள்.மழை மட்டும் பெய்தது என்று வையுங்கள்,குல்மொஹர் மலர்கள் நீரோடு அருமையாக வந்து விழும்.வகுப்புகள் போரடித்தால் பக்கவாட்டு
ஜன்னல்,என் கண்ணாகிப்போகும்.ஏதேதோ ரம்மியமான வயலின் இசை மனதில் ஊறும்.இப்போது நினைத்தாலும் அப்படியே மெல்லிய உறக்கம் வருகிறது.இன்னும் சொல்வதற்கு மூட்டை நிறைய நினைவுகள் இருக்கின்றன.ஒவ்வொரு முறை எழுதும்போதும்,கொஞ்சம் என் மூட்டை நினைவுகளில் கொஞ்சம் குறைகிறது.எழுதி முடிப்பதற்குள் மூட்டை இரட்டிப்பாகும் அளவு வேறுவேறு நினைவுகள்,நிகழ்ச்சிகள் நிரம்பிவிடுகின்றன.இப்போதைக்கு விடைபெறுதலுக்கு அடையாளமாக ஓர் கவிதை.
"பாடம் நடந்தது,
தூக்கம் வந்தது,
வெளியே பாத்தேன்
டவர் தெரிந்சிது
பிடிச்சுப் போச்சு
பாத்துகிட்டே இருந்தேன்
பெஞ்ச் மேல் ஏறுன்னு
சொன்னாங்க மிஸ்.
இப்போ டவர்
தெரிஞ்சுது
இன்னும் நல்லா.
பிடிச்சுப் போச்சு
பாத்துகிட்டே இருந்தேன்.
வெளியே போன்னு
சொன்னாங்க மிஸ்.
அவங்கள எனக்கு
ரொம்ப பிடிக்கும்பா.
வெளியே போனேன்.
இப்போ டவர்
ஃபுல்லா தெரிஞ்சது.
பிடிச்சுப்போச்சு.
பாத்துகிட்டே இருந்தேன்.
ஹெட்மிஸஸ் வந்தாங்க.
என்னன்னு கேட்டாங்க.
இன்னன்னு சொன்னேன்.
அவங்க முட்டாள்பா.
மிஸ் என்ன
ஃபனிஷ் பண்ணாங்கன்னு
சொல்லாறாங்கப்பா."
-செ.ச.செந்தில்நாதன்(அவரது ப்ளாக்கிலிருந்து)
:)
பதினாறு வயதினிலே.
"தங்களை இப்படி
கிறுக்குத்தனமாக கிறுக்கிய
யாரைப் பற்றி
முறையிடுகின்றன சொற்கள்?"
(காலிஃப்,தமிழில்:கவிக்கோ அப்துல் இரகுமான்)
முதல் முதலாக அம்புலிமாமா மூலமாக கிட்டிய இலக்கிய ரஸம் குமுதம்,விகடன் வழியாக வளர்ந்தது.மெல்ல சிறு பத்திரிக்கைகள் பக்கம் ஈர்க்கப்பட்டு,தற்போது எங்கள் வட்டத்திலேயே மிக பிரபலமான இலக்கியவாதியாக ஆனது ரொம்ப சந்தோஷம்.நாங்கள் ஒரு பத்து பேர்.இயற்பியல் பீரியட் வந்தின் செமினார் ஹாலுக்கு அழைத்துச்செல்வார்கள்.நாங்கள் எழுதுவது தான் முக்கியமே ஒழிய,என்ன எழுதுகிறோம் என்பதல்ல.அதனால் ஒரே வரிசையில் பத்து பேர் அமர்ந்து ஒரு காகிதம் எடுப்போம்.அப்பக்கம் முழுதும் அந்தாதி எழுதுவோம்,அதுதான் கவிதைக்கு கவிதை.இப்படித் தான் எங்கள் திறமை உரம் சேர்த்துக்கொண்டது.அண்மையில் எங்களது துண்டுப்பிரசுரங்கள் மாட்டிக்கொண்டுவிட குழு தகர்ந்தது.அத்தனை பேரும் கவியியற்றுவதை நிறுத்திக்கொண்டோம்.ஆனாலும் மனதின் ஓரத்தில் சொட்டிக்கொண்டிருக்கும் இலக்கிய சிந்தைகளை இது போன்ற வெவ்வேறு வடிகால்களில் வாய்க்கால்களாக்கிகொண்டிருக்கிறோம்.எழுதாமல் இருப்பது பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிடுகிறது.நூலகங்களில் முற்றுகையிட்டது,புத்தகக் கண்காட்சிகளில் பேரம் பேசியது எல்லாம் நினைவுக்கு வந்து உயிரை எடுக்கின்றன.பஜ்ஜி மடித்த காகிதத்தில் இருந்த கவிதையை படித்து,பாட்ல்களில் இருக்கும் நயம் பாராட்டுவது என எப்படியோ மனம் கலைந்துவிடுகிறது.உள்ளம் கலைடாஸ்கோப்பாகி நொடியொரு கவிதை எங்கிருந்தோ பறந்து வந்தென் மனக்கிளைகளில் கூடு கட்டிக்கொள்கிறது.இது நேற்று முந்தாநேற்று வந்த பழக்கமல்ல.அத்தனை பேரும் விவாத்தித்த தருணத்தில் தான் நாங்கள் எப்படியோ பத்து வயதிற்குள்ளேயே இலக்கியத்துடன் சம்மந்தப்பட்டிருப்பது தெரிகிறது.உதாரணம்?இதோ:நான் என் முதல் கதையை எழுதிய போது நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்,ஒருவன் மூன்று வயதில் ரஜினியை படம் வரைந்திருக்கிறான்.ஒருவன் தன் தாய்மாமன் காதலிப்பதைப்பார்த்து அதை வைத்து ஒரு கவிதை எழுதியிருக்கிறான் பத்து அகவையில்,இது போல.மு.மேத்த என்னை வெகுவாக பாதித்திருந்தார்,கூடவே அப்துல் இரகுமானும்.ஆனால் நண்பன் வைரமுத்துவின் வைரமுத்துக்களுக்கு நிகராகாது என்பான்.ஒருவன் நாம் அப்படி ஆவோமா என்பான்.ஒருவன் அவர்களைப்பற்றியெல்லாம் எனக்கு தெரியாது,நான் நான் நான்... நான் நல்ல கவிஞன்,எனது நல்ல குணங்கள் எனக்கு தெரியும் என்பான்.எல்லோரும் "யே.."என்போம்.இப்படியாக வளர்ந்து வந்த கவிதைப்பாதை,அவ்வப்போது காதல் பக்கம் தலைவைத்து படுக்கும்,காதல் கவிதைகள் எழுதுவோம்.சினிமா பற்றி கதைப்போம்.புத்தகங்கள் பகிர்வோம்.ரேடியோவிலும்,MP3-யிலும் பாடல்களை கேட்போம்.இசையை காகித்தத்தில் வார்ப்போம்.பழைய பேப்பர் கடைகளில் புத்தகம் வாங்கும் உத்தியை நான் கண்டறிந்தேன்.பள்ளி நூலகத்தில் நல்ல புத்தகங்களை அகழ்வாராய்ச்சி செய்வான் ஒருவன்,பள்ளியின் இதழில் கவிதை எழுதுவான் ஒருவன்.ஆசிரியர் தின வாழ்த்தாக கவிதை எழுதி தப்பித்துவிடுவேன் நான்.இவனை நம்பாதீங்கடா,சரியான் நேரத்தில ஜூட் வுட்டுட்டு எஸ்ஸாயிடுறான் என்பான் ஒருவன்.திடீரென ஒரு crime கதையெழுதி அத்தனைபேரும் கதைக்கு தடம் மாறுவோம்.அதிலும் அந்தாதி தான்.ஒரு வரி நான்,ஒரு வரி நீ...இத்தியாதி.வீட்டிற்கு வருகையிலும் இதே பேச்சுதான்.தூக்கம் வரும் வரை கவிதை பற்றி யோசிப்பேன்.இப்படி பல்வேறு நெறிகளில் மனம் முழுக்க கவிதை ஆக்கிரமித்தது.வெறு வழியே இல்லாமல் அருமையான மதிப்பெண்கள்,வகுப்பிலேயெ first mark,கடைசியிலிருந்து(ஹி..ஹி..ஹி).ஏகப்பட்ட அறிவுரைகள்.அதில் எனக்கு பிடித்தது இதோ:
"நீ எழுதுறது jam மாதிரி,jam உபயோகப்படணும்னா bread வேணும்.மத்தவங்க எல்லாம் வெறும் breadஓட வாழ்க்கை கசந்து போக வாழ்வாங்க,ஆனா நீ bread-jam ஓட சந்தோஷமா வாழலாம்.ஆனா அதுக்கு bread வேணுமில்லையா?போ போய் ஒழுங்கா படி. jam மட்டும் இருந்தா பைசாவுக்கு பிரயோசனமில்லை"
(வசந்தா கிருஷ்ணன்,சுவாமீஸ் பள்ளி தலைமையாசிரியை)
அன்று முடிவு செய்தேன்,அறுவை சிகிச்சை செய்து இந்த நோயை தற்காலிகமாக நீக்குவதென,இன்னும் இரண்டு வாரங்களில் அறுவை சிகிச்சை.
பிரயாணி.
"தலை வழுக்கை
அனுபவச்சீப்பு
கையில் கிடைத்தபோது."
(முனைவர்.ம.இளங்கோவன்,நிலாச்சாரல்.காம்)
அலைந்து அலைந்து ஒருவன் ஒரு மோதிரத்தை வாங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம்.கைக்கு எடுப்பாக,விலையாக,தரமாக.அதை கொண்டுவருகையில் விபத்தொன்றில் கைகள் போய்விடுகின்றன என்றால் .....அதெ போன்ற நிலை தான் ஏறத்தாழ,எனக்கு.தேர்வுகளோடு குடுமிப்புடி சண்டை போட்டுக்கொண்டிருந்த தருணத்தில் நல்ல் வேளை அடைமழை.சீற்றம் காரணமாக எங்களையெல்லாம் 2.30-க்கெல்லாம் சிஐயினின்று விடுவித்துவிட்டார்கள்.ஆபத்பாந்தவனை ரசித்தபடி நான் வந்துகொண்டேயிருந்தேன் சைக்கிளில் ஓவர்ஸ்பீடாக.சர்வலட்சண யமகண்டத்தில் சைக்கிள் செயின் அறுந்தது.மழை வேகமெடுத்தது,நானோ தள்ளிக்கொண்டுவந்தேன்.5 கீ.மி.ஏற்கனவே மழை பற்றி குறிப்புரை ஒன்று எழுதியிருந்தாலும்,அதையும் தாண்டி முகில்கள் எனக்கு ரசிக்கத்தந்த தருணமிது.
வானத்தின் நட்சத்திரங்களே மழைத்துளிகளாக பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கொண்டுவர,வகுப்பில் ஒரே "absent sir!" குரல்களின் ஞாபகம்.வாகங்களின் சோற்றுப்பருக்கைகளான பெட்ரோல் துளிகள் தெருவில் மழையோடு சங்கமமாகி ஆங்காங்கெ மைக்ரோ வானவில்கள்,மேகமிட்ட ரங்கோலியாக.எப்பொழுதும் போல சென்னைவாசிகள் தத்தம் பங்குக்கு தாடைகளுக்கு நடுவிலிருப்பது வழியாகவும்,தொடைகளுக்கு இடையில் இருப்பது வழியாகவும் மழை பொழிந்துகொண்டிருந்தார்கள்.ஜென்மாதி ஜென்மங்களாக குளிக்காத தெருநாய்கள் குளித்துக்கொண்டிருந்தன,விண்ணின் ஷவரில்.புயல்மழையில் டீக்கடை விவாதம்,பாராளுமன்றத்தைவிட இரைச்சல் கம்மியாக.சந்தடி சாக்கில் என் சைக்கிளையும் கழுவிய திருப்தி.இரசனைகெட்ட வேலைக்காரிகள் ஜன்னல்களை மூடிக்கொண்டிருந்தார்கள்.பொறுப்பன மின்சாரத்துறையினர் மின்சாரத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள்.பெருமகிழ்ச்சியில் தங்கள் புன்னகைகளால் பொங்கிவழிந்தன சாகடைகள்.வீட்டுக்குள்ளிருந்த நாய்கலும்,வெளியிலிருந்த நாய்களும் தொகுப்பாளினிகள் பாஷையில் பட்டிமன்றம் நட்ந்துகொண்டிருந்தன.மல்லிகைப்பூகள் பாராஷூட் இன்றி தரையிறங்கி சேற்றோடு கலந்துவிட்டன.யாரும் கண்டுகொள்ளாத பாவப்பட்ட ஜீவனஎன தெருவோர பிள்ளையார் குடையின்றி அழுதுகொண்டிருந்தார்.கரைந்துகொண்டிருந்தது,அவரத ு பக்தர்களுக்காக வைக்கப்பட்டிருந்த விபூதி கரைந்துகொண்டிருந்தது.குதுகலமாக டூயட் பாஅடிக்கொண்டிருந்தன தவளைகள்.மூக்குக்கண்ணாடியை சரி செய்தபடி ரேடியோவை தட்டித்தட்டி கேட்டுக்கொண்டிருந்தார் கடைக்காரர்.கிரிக்கெட் ஆடும் பிள்ளைகளை அபிஷேகம் செய்தது நீலவானஓடை.ரெயின்கோட்டின் பாக்கெட்டுகளில் மழைநீர் சேகரிப்பு நடைபெற்றது.கடிகாரத்தினுள்ளே அத்துமீறி ஆக்க்கிரமித்தன தூறல் துளிகள்.ஏதேதோ காரணங்களால் விசிலடித்தன பறவைகள்.வாகனங்களின் வைப்பர்கள் பெருக்கிக்கொண்டிருந்தன.மரவேர்கள் ஓவர்டைமில் ஸ்ட்ரா போட்டு தண்ணீரை ருசித்துக்கொண்டிருந்தன.அவ்வப்போது டார்ச் அடித்து மழைக்கு வழிகாட்டியது மின்னல்.மழையின் பன்ச்-டயலாக்காக வெளியதிர்கிரது இடி.மக்க்ளால் நிறுத்தமுடியவில்லை மழையையும்,தெருகுழாய்களையும்.அரை நிர்வாணமாக....சீச்சீ சில ஆண்கள்.கவிதைகளை மறந்துகொண்டிருந்தேன் நான்.எறும்பென நகர்ந்தது வாகனநெரிசல்:பாவம் டிராபிக் சார்ஜண்ட்.கொசுக்களுக்கு ரத்ததானம் செய்தபடியே கவிதைகளை மறந்துகொண்டிருந்தேன் நான்.அய்யய்யோ முற்றுப்புள்ளி வைக்க் மறந்துவிட்டேனே
"மழை வேண்டாம்
தூறல் போதும்
மண்வாசனை"
(மோ.அபிலாஷ்,என் சக கவித்தோழன்)
motha ganamum allathu ganamatra innavendru sollaatha silavum...Quote:
Originally Posted by VENKIRAJA
kadaisi iru varigaL kotti vittana. :)
plz do spell check.
konjam spelling mistake irukku. parthukonga. :)
Quote:
Originally Posted by VENKIRAJA
entha mErkoL ai patri kEtkireergaL?
anonymous : peyarili?
sounds okei?
venkiraja,
your tamizh is extremely concentrated , rich. Probably thats why, not many are able to obsorb themselves with absolute intimacy.
Yet I cant help but to say, UR TAMIZH is a GIFT for tamizh lovers.
I would follow up every now and then.
please keep writing.
Also, soon enough I wanna reinstall my tamizh fonts.
appothu naan ungaLukku tamizhil vidai aLippathu innum enakku magizchi aLikkum. :)
:thumbsup:Quote:
Originally Posted by VENKIRAJA
kavithuvam nirambi vazhigirathu :)
nagara maanthar meethum nagara vazhkai murai meethum en ithunai abipraayaminmai?Quote:
Originally Posted by VENKIRAJA
nagarathilEyE piranthu, valarnthu, uzhandra engaLai pondrorukkum
pala pasumai ninaivugaL vaadamal innum sonthamaay, singaaramaay manathil kudikondirukkirathu.
kizhintha jeansum perfumeilum pazhagiya engaLukku athilum kavithai oLinthirupathu pondra bramai :)
ungaL karpanaioottathai ennaal rasikaamal irukka mudiyavillai.Quote:
நான் தொடர்கிறேன்:[b]ஒவ்வொருவனும் தின்று முடித்த பகுதி மீண்டும் பழத்திற்குள்ளேயே போய் பழத்தை நிரப்பிவிடுகிறது,ஆதலால் இன்றுவரை உலகம் உருண்டை[/b
wow!
ரொம்ப நன்றி அண்ணி.நான் ஆரம்பத்திலிருந்து கொடுத்த மேற்கோள் அனைத்திலும் எது உங்கள் மனதைக் கவர்ந்திருந்தது?என கேட்டேன்.யாருமே பதில் சொல்லவில்லை :( உங்களை எங்கே ரொம்ப நாளாய் காணோம்?பவளமணி அம்மையாருக்கு என்ன ஆச்சு?
pp maam pathi therila. hope she would be joining us soon. vEra oorukku maathi porangannu kelvi patten.
regarding merkoL which impressed me, I would answer soon.
ippErpatta azhagaana (suvaiyaana) aRivurai seitha antha thalaimai aasiriyaiyai paarka manam aasaipadugirathu :DQuote:
Originally Posted by VENKIRAJA
ungaL 'prayani' pathivum azhagaay irunthathu.
meRKogaLgaL endru neengaL ethai solgireergaL ena puriyavillai.
Do u mean the poetries uve quoted (other's poetries?)
btw,
enakku paLLikooddathu vidai perum kavithai (from blog sa.senthilnaathan?) pidikkavillai. athil ethuvum rasikkum padi iruppathaay enakku t hondravillai.
Why dont u write in blog?
Do u have one?
Naan inga thaan irukken. Just happen not to visit story section.
ini varuvEn.
arumaiyaana ungaL pathivugaLai padipatharkaagavenum :)
i didn't mean this quote though.i just asked the very poems ive qouted(obviously others,with myne being just one)senthilnathan's poem,hmmm i liked it;coz it was my own self!Quote:
Originally Posted by Shakthiprabha
venkiQuote:
Originally Posted by VENKIRAJA
naan nee mattum thaan kavidhai ezhuduvennu ninachen, un nanbargral kooda nallave kavidhai ezhuduraanga :)
«Õ¨ÁÂ¡É ¾¢Ã¢. þýÛõ ÓÙ¨Á¡¸ ÀÊì¸Å¢ø¨Ä.Å¢¨ÃÅ¢ø ÓÊô§Àý. ¿ýÈ¢. :D
அத்தனை விழிகட்கும் நன்றிகள்.எனக்கு கேள்விகளுக்கு அத்தனை பேரும் பதிலளிக்க வேண்டும் என்று ஆசை.செய்யுங்களேன்.