http://i68.tinypic.com/a9tpgm.jpg
Printable View
நாளை இரவு 7 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.( புகழ் ) பல்லாண்டு வாழ்க
திரைப்படம் சன் லைப் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாகிறது .
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
http://i65.tinypic.com/w2k0n6.jpg
1988ஆம் ஆண்டு தன்னந்தனியனாக எந்த ஒரு அறிமுகமும் இல்லாமல் ராமாவரம் தோட்டத்தை அடைந்தேன். அந்தத் தருணத்தில் காவலர்கள் விரட்டிய போது தற்செயலாக அங்கு வந்த அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள் (அப்போது தான் பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து திரும்பி இருந்தார்கள்) என்னை அன்புடன் விசாரித்து ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்று (படுக்கை அறை உட்பட ) ஒவ்வொரு அறையிலும் எம்.ஜி.ஆருடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். வரவேற்பு அறையில் இங்கு தான் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட சம்பவம் நடந்தது. இங்கு தான் தன் தாய் தந்தையர் மற்றும் அண்ணா அவர்களின் படங்களை வணங்குவார்கள். தனது படுக்கையைக் கூட அடுத்தவர்கள் விரித்துக் கொடுத்தால் அவருக்குப் பிடிக்காது. உடல் மிகவும் நலிவுற்ற காலங்களில் கூட அவரே தான் அந்த வேலைகளைச் செய்வார். அவர் லிப்ட்டை பயன்படுத்தியதே இல்லை. அவர் இறந்த பின்னர் அவரது உடலை கீழே கொண்டு வரத்தான் அந்த லிப்ட் பயன்படுத்தப்பட்டது. கால்நடைகள் மீது அவர் அளவற்ற அன்பு கொண்டிருந்தார் என்று சுமார் 1 மணி நேரம் ராமாவரம் தோட்டத்தைச் சுற்றிக் காட்டினார். எளிமையான அதே சமயத்தில் அழகான அந்த இல்லம் இன்னமும் என் கண் முன்னர் காட்சியளிக்கிறது. அந்தக் காலத்தில் என்னிடம் புகைப்படக் கருவிகள் எதுவும் இல்லாத சூழலில் அவற்றை என்னால் படம் பிடிக்க இயலவில்லை. இன்றைய வெள்ளம் பாதித்த ராமாவரம் தோட்டத்தின் வீடியோ தொகுப்பினைப் பார்க்கும் போது தாங்க இயலவில்லை. மன்னாதி மன்னன் இதழின் ஆசிரியர் விஜயகுமார் அவர்கள் இருந்திருந்தால் அந்த மாத இதழ் மூலம் பல அபூர்வமான புகைப்படங்கள், எம்.ஜி.ஆர் கைப்பட எழுதிய டைரிக் குறிப்புகள் போன்ற பல அபூர்வமான தகவல்கள் அனைவருக்கும் பயன்தரும் வகையில் பதிவேற்றப்பட்டிருக்கும். இன்று யாருக்கும் கிடைக்காமல் போய்விட்டதை நினைக்கும் போது துக்கம் தாங்க இயலவில்லை. மக்கள் திலகத்தின் அரிய ஆவணங்கள் வைத்திருப்போர் யாராக இருந்தாலும் சரி அவற்றை டிஜிட்டல் முறையில் பதிவேற்றி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பாதுகாக்க வேண்டுகிறேன். மன்னாதி மன்னன் விஜய் டிவியில் நடிகன் குரல் இதழ்களை பாதுகாத்து வைத்திருப்பதாகவும், கோடி கொடுப்பினும் அவற்றைக் கொடேன் என்றும் கூறிய நண்பர் (அவரது முகவரி தெரியாததால் திரியின் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.)தனது பொக்கிஷங்களைப் பதிவேற்றி தனக்கு மட்டுமல்லாமல் எல்லோரும் எம்ஜி.ஆரின் பெருமைகளை உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அருமை நண்பர் பேராசிரியர் செல்வகுமார் அவர்களும், அருமை நண்பர் சி.எஸ்.குமார் அவர்களும் ஏராளமான எம்.ஜி.ஆர் தொடர்பான பொக்கிஷங்களை வைத்திருக்கும் மியூசியமாக உள்ளார்கள். அவர்களிடமிருந்து அதிகமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன். நன்றி.
MAALAI MURASU
http://i160.photobucket.com/albums/t...psb3pcj3va.jpg
http://i68.tinypic.com/nyhfsk.jpg
மிகவும் அரிய படம். நம் திரியில் இதுவரை வந்தது இல்லை என நினைக்கிறேன். அண்ணா அமர்ந்திருக்கும் நாற்காலியின் மேல் ஒரு கையை ஊன்றி ஒரு கையை இடுப்பில் வைத்தபடி கேசுவலாக ஸ்டைல் சக்கரவர்த்தி நிற்கும் அழகை காண கோடி கண்கள் இருந்தாலும் போதாது.
கல்மண்டபம், ராயபுரம் காவல் நிலையம் அருகில் வைக்கப்பட்டுள்ள பேனர்.
http://i68.tinypic.com/2meon7d.jpg
DT NEXT 6TH DECEMBER 2015
http://i160.photobucket.com/albums/t...psvzc2mqvl.jpg
புரட்சித் தலைவர் எதையும் நுட்பமாக கவனிப்பவர். திரைப்படத்தில் எல்லா துறைகளிலும் அவருக்கு ஆற்றல் உண்டு. சில படங்களில் பாடல் காட்சிளில் உடன் நடிக்கும் நடிகைகளின் உடை, நகை ஆகியவற்றை சரி செய்வார். (உதாரணம்- மாசிலா உண்மை காதலே பாடலில் நடிகை பானுமதியின் உடையை அவரது தோளுக்கு மேல் சிரித்துக் கொண்டே இழுத்து விட்டு சரி செய்வார்)
டாக்டர் கானுவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது. கானுவுக்கு தனது சொந்த செலவில் தங்க யானையை புரட்சித் தலைவர் பரிசாக அளித்தார். உம்மிடி பங்காரு செட்டி ஜூவல்லர்சில் இந்த தங்க யானைக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக புரட்சித் தலைவருக்கு கடையின் சார்பில் அனுப்பப்பட்டது. அப்போது, யானையைப் பார்த்த புரட்சித் தலைவர் யானை பொம்மையின் தும்பிக்கையும் வாலும் ஒரே அளவில் உள்ளது, வாலை சற்று சன்னமாக ஆக்கி சரி செய்ய சொல்லியிருக்கிறார்.
இதை உம்மிடியார் நிறுவனத்தின் முதலாளி பல ஆண்டுகளுக்கு பின் பத்திரிகை ஒன்றில் சொல்லியிருந்தார். உடல் நிலை சரியில்லாதபோதும் கடைசிவரையிலும் எல்லாவற்றிலும் மிகுந்த கவனத்தோடும் கூர்மையாகவும் இருந்தார் புரட்சித் தலைவர்.
நண்பர் எம்.ஜி.ஆர். ராஜ்குமார் அவர்கள் துரிதமாக 100 பதிவுகள் மேற்கொண்டதற்கு
நல்வாழ்த்துக்கள் .
நண்பர்கள் திரு. சைலேஷ் பாசு, மற்றும் திரு. ஜெய்சங்கர் ஆகியோர் திரியில்
பதிவுகள் மேற்கொள்ள ஆரம்பித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.
ஆர். லோகநாதன்.
DINAMALAR 8TH DECEMBER 2015
http://i160.photobucket.com/albums/t...ps4pmmrumc.jpg
Due to our request to the honourable Chief minister of Tamil Nadu ( message sent to Garden ), they personally intervened and helped restore MGR Home & School for the hearing impaired in Ramapuram MGR Garden, so it will start functioning from Monday Dec. 14, 2015. Thanks once again to our respected CM.
from the FB page of Ithayakkani S. Vijayan.
https://www.facebook.com/vijayansundararajan
ஆமாம் இவன் சொலி தமிழக முதல்வர் கேட்டார்களாம். இல்லாவிட்டால் தமிழக முதல்வருக்கு தெரியாது பாரு. அடங்குடா ..................
இவன் சொல்லித்தான் நிவாரண பொருள்களை கொடுத்தார், மாண்டவர்களுக்கு நான்கு லட்சம் கொடுத்தார் அசைத்து.
மாண்புமிகு ராஜபாளையம் அணைக்கு கட்டுப்பட்டு எல்லாம் நடக்கிறது என்று சொல்லு, யார் கேட்கபோகிரார்கள்
THE HINDU 9TH DECEMBER 2015
http://i160.photobucket.com/albums/t...pstf3hiejc.jpg
அன்பு நண்பர்களே,
நமது அன்புத்தலைவரின் திரி இன்று
வெற்றிகரமாக 18ம் பாகத்தில் பயணிக்கிறது.
17ம் பாகத்தை வெற்றிகரமாக ஆரம்பித்து - வழிநடத்தி -
நிறைவு செய்த அன்பு நண்பர் திரு சுகாராம் அவர்களுக்கும்
18ம் பாகத்தை துவக்கி வைத்த மக்கள் திலகத்தின் பக்தர்
திரு கலியபெருமாள் அவர்களுக்கும் நன்றியை
தெரிவிக்கிறேன்.
நீண்ட இடைவெளிக்குப்பின் நமது திரியில் மறுபடியும்
வருகை புரிந்து தமது பதிவுகளை பதிந்து வரும்
திரு சைலேஷ் பாசு அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
நமது திரியில் தொடர்ந்து தங்களின் அரிய பதிவுகளை
பதிவு செய்துவரும் திருவாளர்கள் :-
வினோத்
லோகநாதன்
பேராசிரியர் செல்வகுமார்
முத்தையன் அம்மு
எம் ஜி ஆர் ராமமூர்த்தி
ஜெய்சங்கர்
எம் ஜி ஆர் பாஸ்கரன்
எம் ஜி ஆர் ராஜ்குமார்
KPR கோவிந்தராஜ்
யுகேஷ் பாபு
வி பி சத்தியா
அமரா எம் ஜி ஆர்
Shahriyar Akbar
மற்றும்
நமது திரியில் பங்கு கொண்டு பதிவுகளை பதிந்த திருவாளர்கள்
சி எஸ் குமார்
தெனாலி ராஜன்
ரூப்குமார்
கலைவேந்தன்
பிரதீப்
பூமி நாதன் ஆண்டவர்
குருநாதன்
ஹுசைன்
mahendra raj
மற்றும் திரியில் பதிவுகளை பதிந்த
அனைத்து பதிவாளர்கள் மற்றும்
பார்வையாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும்
நன்றியையும் தெரிவித்து
அனைவரும் தொடர்ந்து நமது திரியில் மக்கள் திலகத்தின்
புகழ் பாடுங்கள்.
அவரின் நூற்றாண்டு விழாவை 2017ம் வருடம் உலகம்
வியக்கும்
வண்ணம் கொண்டாடுவோம்.
பொன்மனச்செம்மலின் புகழ் வாழ்க
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
நமது திரி இன்று வெற்றிகரமாக 18ம்
பாகத்தில் அடியெடுத்து வைத்தமைக்கு
பாராட்டு தெரிவித்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் திரியின்
மூத்த பதிவாளர் மதிப்புக்குரிய திரு ராகவேந்திரா அவர்களுக்கு
நமது திரியின் அனைத்து பதிவாளர்கள் சார்பாக நன்றியை
தெரிவித்துகொள்கிறேன்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
கனவுப்படம் 'சிவகாமியின் சபதம்' எம்.ஜி.ஆர். கைவிட்டது ஏன்
கல்கி எழுதிய மகத்தான சரித்திர கதை 'சிவகாமியின் சபதம்'. இதை பிரமாண்டமாக எடுக்க எம்.ஜி.ஆர் விரும்பினார். எந்த வேடத்தில் யார் நடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தார். ஆனால் அவருடைய ஆசை நிறைவேறவில்லை.
காவியம்
'ஒரு காவியம் அளவுக்கு உயர்ந்த கதை' என்று தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனாரால் புகழப்பட்ட கதை 'சிவகாமியின் சபதம்'.
காஞ்சியை மகேந்திர பல்லவர் ஆண்ட போது கதை நடைபெறுகிறது. மகேந்திர பல்லவனின் மகனான பட்டத்து இளவரசன் நரசிம்மவர்மர், சிற்பி ஆயனரின் மகளும் நடனக்கலை அரசியுமான சிவகாமியை காதலிக்கிறார்.
அப்போது வடக்கே இருந்து படையெடுத்து வரும் வாதாபி புலிகேசி, மகேந்திர வர்மனுடன் சமாதானம் பேசுவது போல் நடித்து, நாட்டுக்கு திரும்பிச் செல்லும் போது, பல்லவ நாட்டின் பல பகுதிகளை சூறையாடி செல்கிறான். சிவகாமியும் சிறைப்பிடிக்கப்பட்டு, வாதாபிக்கு கொண்டு செல்லப்படுகிறாள்.
புலிகேசியின் உடன் பிறந்த சகோதரன் புத்த பிட்சு நாகநந்தி அடிகள், கதையின் முக்கிய கதாபாத்திரம். நரசிம்மவர்மர் மாறுவேடத்தில் வாதாபிக்குச் சென்று சிவகாமியை மீட்டு வர முயற்சிக்கிறார்.
'புலிகேசியை பழிக்குப்பழி வாங்கினால் தான் காஞ்சித் திரும்புவேன்' என்று சிவகாமி கூறிவிடுகிறாள். ஏமாற்றத்துடன் திரும்பும் நரசிம்மவர்மர் தன் தந்தையார் கட்டளைப்படி மதுரை இளவரசியை மணக்கிறார்.
நரசிம்மரும், தளபதி பரஞ்சோதியும் ஒன்பது ஆண்டுகள் பாடுபட்டு படைதிரட்டி வாதாபி மீது படையெடுத்துச் செல்கிறார்கள். போரில் புலிகேசி கொல்லப்படுகிறான்.
காஞ்சிக்குத் திரும்பும் சிவகாமி நரசிம்மவர்மருக்கு திருமணம் ஆகிவிட்டதை அறிகிறாள். அவள் இதயம் உடைந்து சிதறுகிறது. யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை என்ற முடிவுடன் இறைவனை கணவனாக வரித்து கொள்கிறாள்.
போட்டா போட்டி
தமிழில் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜராஜ சோழனை தயாரித்த தொழில் அதிபரும், ஆனந்த் தியேட்டரின் உரிமையாளருமான ஜி.உமாபதி, ராஜராஜ சோழன் 100-வது நாள் விழாவில் பேசும்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
'அடுத்தபடியாக சிவகாமியின் சபதம் படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கப்போகிறேன். இதில் சிவாஜி கணேசனும் பத்மினியும் நடிப்பார்கள். மற்ற நடிகர்-நடிகைகள் விரைவில் முடிவு செய்யப்படுவார்கள்'.
இது தான் உமாபதியின் அறிவிப்பு.
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் எம்.ஜி.ஆரிடம் இருந்து பத்திரிகை ஆபீஸ்களுக்கு போன் வந்தது. 'சிவகாமியின் சபதத்தை படமாக்கும் உரிமையை நான் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கிறேன். அது தெரியாமல் உமாபதி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மகேந்திரவர்மர், நரசிம்மவர்மர், நாகநந்தி, புலிகேசி, பரஞ்சோதி ஆகிய ஐந்து வேடங்களிலும் நானே நடிப்பேன்' என்றார், எம்.ஜி.ஆர்.
இதைத்தொடர்ந்து சிவகாமியின் சபதத்தைத் தயாரிக்கும் திட்டத்தை உமாபதி கைவிட்டார். எம்.ஜி.ஆரும் அப்படத்தை தயாரிக்கவில்லை.
மீண்டும் முயற்சி:
சில ஆண்டுகள் கழித்து சரோஜாதேவி புகழின் உச்சத்தில் இருந்தபோது 'சிவகாமியின் சபதம்' படத்தை எடுக்கும் முயற்சியை மீண்டும் தொடங்கினார், எம்.ஜி.ஆர்.
நரசிம்மவர்மர் வேடத்தில் மட்டும் தான் நடிப்பதென்று முடிவு செய்தார். சிவகாமியாக சரோஜாதேவி, மகேந்திரவர்மராக ரங்காராவ், பரஞ்சோதியாக ஜெமினி கணேசன், புலிகேசி, நாகநந்தி ஆகிய இருவேடங்களில் எம்.என்.நம்பியார் ஆகியோர் நடிப்பது என்று முடிவாகியது.
இதற்கெல்லாம் மாதிரி ஓவியங்கள் வரையப்பட்டன. பிரபல ஓவியர் சங்கர்லீ இந்த ஓவியங்களை வரைந்தார். ஆனால் குறித்த காலத்தில் படத்தை தொடங்க முடியவில்லை. பிரமாண்டமாக எடுக்க எம்.ஜி.ஆர். விரும்பியதால் வருடங்கள் உருண்டோடின.
கடைசி முயற்சி:
இதற்கிடையே சரோஜாதேவி திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.
ஆயினும், எம்.ஜி.ஆர். தன் கனவுப்படத்தை கைவிட விரும்பவில்லை. பரதநாட்டியத்தில் புகழ் பெற்று விளங்கிய பத்மா சுப்பிரமணியத்தை (டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மகள்) சிவகாமியாக நடிக்க வைத்து படத்தை தயாரிக்க விரும்பினார்.
இதை பத்மா சுப்பிரமணியத்துக்கு தெரிவித்தார். ஆனால் சினிமாவில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று பத்மா சுப்பிரமணியம் மறுத்துவிட்டார்.
'இல்லே, நீ நடிக்கிறே! இந்தக் கதாபாத்திரத்துக்கு நீதான் பொருத்தமாக இருப்பாய். நீ நடிக்கலேன்னா இந்தப்படத்தை நான் எடுக்கவே மாட்டேன்' என்றார், எம்.ஜி.ஆர்.
'அது உங்கள் விருப்பம். எனக்கு நடிக்க விருப்பம் இல்லை' என்று உறுதியாக கூறிவிட்டார், பத்மா சுப்பிரமணியம்.
இதற்கிடையே எம்.ஜி.ஆர். தீவிர அரசியலில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்துடன் சினிமாவுக்கு முழுக்குப் போட்டார், எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் ‘பொன்னியின் செல்வன்’
'கல்கி'யின் 'பொன்னியின் செல்வன்' கதையையும் எம்.ஜி.ஆர். திரைப்படமாகத் தயாரிக்க விரும்பினார். அந்தத் திட்டமும் நிறைவேறவில்லை.
எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படமான 'நாடோடி மன்னன்' வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் போதே, 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அடுத்த தயாரிப்பு 'பொன்னியின் செல்வன்' என்று பத்திரிகைகளில் கலர் விளம்பரம் கொடுத்தார்'.
'பொன்னியின் செல்வன்' கதையில் வந்தியத்தேவன் தான் கதாநாயகன். 'பொன்னியின் செல்வன்' என்று அழைக்கப்பட்ட அருள்மொழிவர்மனுக்கு (பிற்காலத்தில் ராஜராஜ சோழன்) இந்தக்கதையில் பாகம் குறைவு. எனவே, வந்தியத்தேவன், பொன்னியின் செல்வன் ஆகிய இருவேடங்களையும் ஏற்று நடிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டு இருந்தார்.
பத்மா சுப்பிரமணியம்.
பொன்னியின் செல்வன் கதையில் ஏராளமான கதாபாத்திரங்களும், சம்பவங்களும் உள்ளன. எனவே, படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்க முடியவில்லை. 'அடிமைப் பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களை எடுத்து முடித்த பின்னரும், பொன்னியின் செல்வன் படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கப்படவில்லை.
ஆயினும், 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்கும் உரிமை எம்.ஜி.ஆரிடமே இருந்தது. அதன் காரணமாக, வேறு எவரும் இக்கதையை படமாக்குவது பற்றி சிந்திக்கவில்லை.
இதன்பின், 'கல்கி'யின் நூல்கள் அரசுடமை ஆக்கப்பட்டன. இதனால் யார் வேண்டுமானாலும் 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.
'பொன்னியின் செல்வன்' கதையை பிரமாண்டமாகத் தயாரிக்க கமலஹாசன் எண்ணினார். இதற்காக, திரைக்கதை குறித்து பலருடன் கலந்தரையாடல்களும் நடத்தினார்.
கதையில் சம்பவங்கள் அதிகமாக இருந்ததால், அதை 3 மணி நேர சினிமாவாகத் தயாரிப்பது இயலாது என்பது தெரியவந்ததால், அம்முயற்சியை அவர் கைவிட்டார்.
பிறகு, மணிரத்னமும் இதுபற்றி ஆலோசித்தார். அவரும், 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்குவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
மாபெரும் இதிகாசமான 'மகாபாரதம்', பல்வேறு காலகட்டங்களில் டெலிவிஷன் தொடராகத் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது. அது போல், 'பொன்னியின் செல்வன்' கதையை டெலிவிஷன் தொடராகத் தயாரிக்கலாமா? என்று இப்போது சிலர் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. ?
தினதந்தி செய்தி
Only One EMPEROR of CINEMA-WORLD, FIELD also... MAKKALTHILAGAM MGR.,'S " OLI VILAKKU" Running too successfully...in Madurai... Rerelese Emperor...& Collection Emperor...