-
Quote:
Originally Posted by
ravichandrran
http://s10.postimg.org/5ga71r121/DSC_7412.jpg
மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வத்தின் உண்மையான பக்தர் மறைந்துவிட்டார். அவர்தம் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்.
இப்படி ஒரு தொண்டரை இனி நாம் காண்பது எப்போது?
இந்த இழப்பை ஈடு செய்ய யாருண்டு?
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
புதிய பதிவாளரான எனக்கு தலைவரின் பக்தர் சைதை ராஜ்குமார் அவர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது..முகநூளிலும் நமது திரியிலும் இன்று அவரை பற்றிய பதிவுகளை பார்த்தேன்..தலைவரின் மிக பெரிய பக்தரை நாம் இழந்து விட்டோம் என்பதை உணர்ந்தேன்..என்ன பதிவுகளை மேற்கொள்வது என்று தடுமாறுகிறேன்..அண்ணா உங்களுடைய பணிகளை உங்களுக்கு பிறகு நாங்கள் மேற்கொள்வோம்..தலைவரின் புகழ் பாடுவோம்..உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு கண்டிப்பாக உண்டு..தலைவரோடு சேர்ந்த எங்கள் ரத்தத்தின் ரத்தத்திற்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி..
http://i68.tinypic.com/2zsb8ep.jpg
-
http://i64.tinypic.com/10h4k5x.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அதி தீவிர பக்தரும் , இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு தலைவரும், கழக செயல் வீரரும், சிறந்த களப் பணியாளரும்,
சமீபத்தில் பெய்த மழை , மற்றும் வெள்ளத்தால் பாதித்தோருக்கு , உணவு, உடைகள்
மருத்துவ முகாம் மூலம் உதவிகள் புரிந்தவரும் ஆன சைதை திரு. எஸ். ராஜ்குமார்
அவர்கள் 06/01/2016 அன்று மாலை 6 மணி அளவில் இறைவன் எம்.ஜி.ஆர். திருவடி
சேர்ந்தார்
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும், சென்னையில் இருந்தும் திரளான, ரசிகர்கள், பக்தர்கள், கழக தொண்டர்கள்,
பெருமளவில் கலந்து கொண்டு இறுதி மரியாதை திரு. ராஜ்குமாருக்கு செலுத்தினர்.
இன்று (07/01/2016) அவரது பூத உடல், பின்னர், மேல்மருவத்தூரை அடுத்த அச்சரப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள், உறவினர்கள், கழக தொண்டர்கள், கழக முன்னணியினர் பார்வைக்கும், இறுதி அஞ்சலிக்கும் வைக்கப்பட்டது .
பின்னர் மாலை 6 மணியளவில் அருகில் உள்ள மயானத்தில் நல்லடக்கம்
செய்யப்பட்டது.
சென்னை, மற்றும் தமிழகத்தின் பல நகரங்களில் இருந்து அனுதாப செய்திகள் ,
இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளும் தமது ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்துள்ளன .
அவரை பிரிந்து வாடும், தாய், மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருக்கு
சென்னையில் உள்ள அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்பில்
ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் தெரிவிக்கப்பட்டது.
ஆர். லோகநாதன்.
-
திரு. ராஜ்குமார் தனது அச்சரப்பாக்கத்தில் உள்ள இல்லத்தின் அருகில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அன்று வைத்திருந்த பேனர்.
http://i63.tinypic.com/2mzle80.jpg
-
-
திரு. ராஜ்குமார் அவர்களின் அச்சரப்பாக்கம் இல்லத்தில்
http://i64.tinypic.com/2ds47q0.jpg
-
-
-
திரு. ராஜ்குமார் அவர்களின் அச்சரப்பாக்கம் இல்லத்தில் இன்று வைக்கப்பட்டிருந்த
பேனர். http://i67.tinypic.com/2mz9naf.jpg
-
-
-
-
http://i68.tinypic.com/2luuzc4.jpg
இன்று இரவு 10 மணி முதல் ஜெயா மூவிஸில் , நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த
"விக்கிரமாதித்தன் " ஒளி.பரப்பாகி வருகிறது
-
http://i67.tinypic.com/538lg0.jpg
மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும் எங்கள் அருமை நண்பருமான சைதை திரு.ராஜ்குமார் அவர்களின் மறைவுச் செய்தி அளவற்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நம்ப முடியவில்லை. எளிமையும், உதவும் குணமும் கொண்ட அவரது மறைவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல. எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அனைவருக்குமே தாங்கஇயலா துன்பத்தை அளிப்பதாக உள்ளது. அன்னாரைப் பிரிந்து வாடும் அனைவருக்கும் இத்துயரைத் தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல எம்.ஜி.ஆரின் ஆன்மா வழங்கட்டும். வாழும் போது எம்.ஜி.ஆரின் நினைவாகவே வாழ்ந்த சைதை ராஜ்குமார் அவர்களின் ஆன்மா எம்.ஜி.ஆரின் திருவடி நிழலில் அமைதிபெறட்டும்.
-
மக்கள்திலகத்தின் தீவிர பக்தர் திரு.சைதை ராஜ்குமார் அவர்களின் மறைவுக்கு மக்கள்தலைவர் சிவாஜி ரசிகர்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கைலயும் அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
அவரது இழப்பை தாங்காது தவிக்கும் மக்கள்திலகம் திரி நண்பர்கள் அனைவருக்கும் எங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...14a8dd6b757143
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Quote:
Originally Posted by
ravichandrran
http://s10.postimg.org/5ga71r121/DSC_7412.jpg
மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
பொன்மனச்செம்மலின் தீவிர பக்தர், மென்மனம் படைத்தவர் , சிறந்த களப்பணியாளர், எங்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர், எனது உறவினர்கள் பலரும் அறிந்த எனது ஆருயிர் உடன்பிறவா சகோதரர் , சைதை ராஜ்குமார் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அவருடன் பழகிய நாட்கள், மிகவும் இனிமையானவை. அவருடன், நானும், எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் காப்பாளர் திரு. ஹயாத்தும் கலந்து பேசும் பேச்சுக்களில் புரட்சித்தலைவரின் புகழ் பாடும் விதமாக புதுமையான ஆலோசனைகளை முன் வைத்து அதனை நடைமுறைப்படுத்திய ஆற்றல் மிகுந்த செயல் வீரர்.
அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில், சென்னை காமராஜர் அரங்கில் 16-03-2014 அன்று (மக்கள் திலகத்தின் "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல் முறையில் 14-03-2014 அன்று தமிழகமெங்கும் வெளியிடப்பட்டிருந்த சமயம் அது) இதய தெய்வம் நம் புரட்சித்தலைவரின் 97வது பிறந்த நாளை, காண்போர் வியக்கும் வண்ணம், மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாடி , வெற்றிகரகமாக நடத்திக் காட்டினார். சீருடைகள் வழங்கி சிறப்பித்த சிந்தனையாளர்.
2013ஆம் வருடம் நடைபெற்ற "இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில்" , சென்னை நேரு விளையாட்டரங்கம் முகப்பில், முதல்வர் நுழையும் வாசலில், அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அவர் தலைமயிலான "இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு" வுடன் இணைந்து எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் வைத்த மக்கள் திலகத்தின் மகத்தான பதாகைகளை கண்ட கட்சிக்கார்கள், வியப்பின் உச்சிக்கே சென்று விட்டதும், பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். பக்தர்கள் வாய் விட்டு பாராட்டியதும், பசு மரத்தாணி போல் என் நெஞ்சில் இன்றும் நிழலாடி கொண்டிருக்கிறது. அன்றைய இரவு முழுவதும் அவருக்கு துணையாக, உறக்கம் துறந்து, விழித்திருந்து உரையாடியதையும், அவர் நம் மனிதப்புனிதர் எம். ஜி. ஆர். அவர்களை பற்றி சிலாகித்து பேசியதையும் என் வாழ் நாளில் மறக்க முடியாத ஒரு அற்புதமான நிகழ்வு !
இப்படிப்பட்ட ஒரு செயல்வீரனை நாம் இழந்து விட்டோம் . ஆறுதல் சொல்ல வேண்டிய எனக்கே ஆறுதல் கூறும் அளவுக்கு ஒரு நெருங்கிய பாசப்பினைப்பிணை ஏற்படுத்தி விட்டார்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் ! இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற மக்கள் திலகத்தின் பாடலுக்கு ஏற்ப ஒரு உதாரண புருஷனாக திகழ்ந்த தெய்வத்திரு. ராஜ்குமார் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை இத்திரியின் மூலமும் தெரிவித்து கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய அவர் தெய்வமாக கருதும், இறைவன் எம். ஜி. ஆர். அவர்களை வேண்டிக் கொள்கிறேன்.
-
-
-
http://i1170.photobucket.com/albums/...ps3qwcan3d.jpg
today dailythanthi given article of thalaivar residence and mathippugal illatha avar upoyokitha porutkal damaged by heavy flood
-
என் வாழ்க்கையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை மட்டும் மறக்கவே இயலாது – நடிகை சரோஜா தேவி பெருமிதம்
நான் பெங்களூரில் பிறந்திருந்தாலும் எனக்கு
புகுந்த வீடு சென்னை தான். என்னுடைய உயிர் பிரிந்தால் கூட சென்னையில்
தான் பிரியவேண்டும் என்று நான் இறைவனை பிராத்திப்பது உண்டு. என்னுடைய
கணவர் கூறியது போல் அனைத்தும் நடந்து வருகிறது. இன்று நானும் உண்டு
மற்றவர்களுக்கும் அளிக்கும் அளவுக்கு இறைவன் என்னை நல்ல இடத்தில்
வைத்துள்ளான். என்னுடைய வாழ்க்கையில் என்னால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்
அவர்களை மட்டும் மறக்கவே இயலாது. அவரும் நானும் இணைந்து நடித்த நாடோடி
மன்னன் படத்தில் நான் வரும் காட்சியில் இருந்து படத்தை கலர் படமாக
மாற்றினார். அதற்க்கு காரணம் யாதெனில் நான் அந்த படத்தில் அறிமுக நடிகை ,
என்னை ரசிகர்கள் ஏற்று கொள்வதற்காக, படத்தில் நான் வரும் பகுதியில்
இருந்து படத்தை கலர் படமாக மாற்றி இருக்கிறார். அதே நேரத்தில்
எதிர்பார்த்தது போல் அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதன் பிறகு
நானும் அவரும் பல படங்களில் சேர்ந்து நடித்தோம். எனக்கு நிறைய விஷயங்களை
கற்றுத்தந்தவர் அவர் , நான் எப்படி பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும்
என்பது முதல் பல நல்ல விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார். என்னால்
நிச்சயம் அவரை ஒருபோதும் மறக்கவே முடியாது. அவருடைய ராமாபுரம் தோட்டத்தை பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எல்லோரும் அவரை தெய்வம் என்று சொல்லுவது உண்டு. நானும் அவருடைய ராமாபுரம் இல்லத்துக்கு சென்று பல முறை உணவு உண்டுள்ளேன் , பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன்.
அதனால் நீங்கள் அவர் அவரை தெய்வம் என்று கூறுவதோடு நிறுத்திவிடாமல்
அவருடைய இருப்பிடம் என்பது தெய்வம் வாழும் இடம் போல் புனிதமாக கோவில்
போல் இருக்க வேண்டும். அவரால் வந்தவர் இந்த சரோஜா தேவி , அவர் இல்லை
என்றால் இந்த சரோஜா தேவியே இல்லை.
-
-
சாரதா ஸ்டூடியோவில் மகாகவி காளிதாஸ் படப்பிடிப்பின் பிரம்மாண்டமான செட் அது. மிகப்பெரிய சிற்பியால் உருவாக்கப்பட்ட காளி தேவியின் சிலை. அதன் முன்பு நின்று சிவாஜிகணேசன் பாடுவது போன்ற காட்சி.
அப்போது சிலரது கவனக் குறைவு காரணமாக அந்த சிலையில் தீப்பற்றிக் கொள்ள, செட் முழுவதும் நொடிப் பொழுதில் எரிந்து நாசமானது. இச்சம்பவத்தில் ஐந்து டெக்னீஷியன்கள் உயிரிழந்து விட்டனர்.
இச்செய்தி கோடம்பாக்கத் தையே உலுக்கிவிட்டது. மற்றொரு படப்பிடிப் பில் இருந்த எம்.ஜி.ஆர்., இதனைக் கேட்டு அங்கு வந்தார். அந்த டெக்னீஷியன்கள் வசதி யற்றவர்கள் என்பதால் மொத்த குடும்பமும் அழுது புலம்பிக் கொண்டிருந்தது. தமிழ்த் திரை உலகமே அங்கு திரண்டு வந்து ஆறுதல் கூறிக்கொண்டிருந்தது.
அப்போது சிலர் இறந்து போனவர்களின் குடும்பத்திற்காக அனைவரிடமும் நிதி வசூல் செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கேற்ப ஆயிரம், இரண்டாயிரம் என்று நிதியை அள்ளிக் கொடுத்துக் கொண்டி ருந்தனர். எப்படியும் எம்.ஜி.ஆர். மிகப்பெரிய தொகையைக் கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவ்வாறு அவர் எதுவும் செய்யவில்லை. ஒரு பைசா கூட நிதியாகக் கொடுக்கவில்லை.
அனைவருக்குமே இது அதிர்ச்சியைக் கொடுத்தது. ஏனென்றால், மனிதாபிமானமும், இரக்க சுபாவமும் கொண்டவர், வாரி வாரி வழங்கும் வள்ளல். இவ்வாறு ஒன்றுமே நிதி அளிக்காதது ஆச்சரியமாகத்தானே இருக்கும்.
ஆனால், அவர் வேறு மாதிரியாக அவர் களுக்கு உதவி செய்தது மறுநாள் புரிந்தது. தனது உதவியாளரிடம் ஐவரின் குடும்பத்தில் முக்கியமானவர்களை மறுநாள் காலையில் தோட்டத்திற்கு அழைத்து வருமாறு கேட்டுக் கொண்டார். அப்படியே அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களிடம் நிரந்தர வருமானம் கிடைக்க என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலை அளிக்கவே, அதற்கேற்ப சிலருக்கு வேலையும், சிலருக்கு தொழில் துவங்குவதற்கான கருவிகளையும் வாங்கிக் கொடுத்து அவர்களின் பொருளாதார பிரச்னையை நிரந்தரமாகத் தீர்த்து வைக்க உதவினார்.
அதுதான் எம்.ஜி.ஆர்.
courtesy dinamalar
-
There is no any substitute for our Marvelous Great Revolutionary Personality
-
Like MGR, Madam J. Jayalalitha also helped innocent people without much advertising
-
மக்கள்திலகம் எம்ஜிஆர் பிறந்தநாள் மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 15.01.2016 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்திற்கான பேனர்.
படத்திற்கான வேறு ஸ்டிகல்கள் இருந்தால் பதிவேற்றவும் செய்யவும் நண்பர்களே.
https://scontent-mxp1-1.xx.fbcdn.net...43&oe=570A0DCF
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
-
-
Makkalthilagam Fans, & Followers faced deep condolence why late mr. Rajkumar 's death... Personal Loss Very Great for our fans...
-
-
-
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "பறக்கும் பாவை " ஒளிபரப்பானது .
http://i65.tinypic.com/2z51uf5.jpg
-
10 facts about MGR - Courtesy : Youtube
https://www.youtube.com/watch?v=d_tWhzsWkJA
8th fact is wrong.
-
-
-
எம்ஜியார் பற்றி ஒரு குட்டி கதை.ஒரு எம்ஜியார் பக்தர் சொன்னது.எம்ஜியார் இறந்த பிறகு,எதிர் கட்சியை சேர்ந்த ஒரு ஆள் தீக்குளித்து இறந்தாராம்.மேலுலகம் சென்ற அவர் எம்ஜியார் தலைமையில் அங்கே அன்ன தானம் நடப்பதைப்பார்த்து மிகவும் கோபப்பட்டாராம்.கடவுளிடம் இவர் யார் அன்ன தானத்தை நடத்துவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி கேட்டாராம்.அதற்க்கு கடவுள் பூலோகம் சென்று உண் வீட்டையும் உனக்கு முன்பு இறந்த எம்ஜியார் கட்சியை சார்ந்தவனுடைய வீட்டையும் பார்த்துவிட்டு வந்து பின்பு என்னை கேள்வி கேள் என்று சொன்னாராம்.பூலோகம் வந்த அவன் தன் மனைவி பிச்சை எடுத்தும் அடுத்தவீட்டில் பத்திரங்களை கழுவியும் பிழைப்பதை பார்த்திருக்கிறான்.அவளிடம் இதைப்பற்றி கேட்டதற்கு உன்னுடைய கட்சி தலைவனும் அவனை சார்ந்த தொண்டர்களும் அவளை மிகவும் கேவலமாக பேசி விரட்டி விட்டதாகவும் அதனால் தான் பிச்சை எடுப்பதாகவும் சொல்லிவிட்டாள். எம்ஜியார் கட்சியை சேர்ந்தவனுடைய வீட்டை சென்று பார்த்தால் அங்கே எம்ஜியார் போட்டோவை வைத்து அவர்கள் பால் வியாபாரம் பண்ணுவதாகவும்,அது எம்ஜியார் உயிரோடு இருந்தபோது அவர்கள் அப்பாவிற்கு பால் மாடு தானம் செய்ததாகவும் அது போட்ட கன்றுகள் இன்று மிகவும் பெருகி நல்லவகையில் பால் கொடுப்பதாகவும் அதனால் அந்த புண்ணியவானின் பெயரிலேயே பால் வியாபாரம் செய்கிறோம் என்று சொன்னதாகவும் தான் கேட்டதை மீண்டும் எதிர் கட்சிக்காரன் கடவுளிடம் வந்து சொல்லியிருக்கிறான்.உடனே கடவுள் பார்த்தாயா? இப்படிப்பட்ட நல்ல மனிதரின் தலைமையில் அன்னதானம் செய்தால் என்ன தவறு சொல் என்று எதிர் கேள்வி கேட்டிருக்கிறார். இதில் பாருங்கள் இந்த கதையின் மூலம் எம்ஜியார் பக்தர் மனதில் எப்படி வாழ்கிறார் என்று.Migavum ஆச்சர்யம் தான்.
courtesy net
-
எம்.ஜி.ஆருடன் சினிமாவிலும் அரசியல் வாழ்விலும் கூடவே பயணித்த ராமகிருஷ்ணனை சந்தித்தோம். எம்.ஜி.ஆர் இரட்டை வேடமிட்ட படங்களில் டூப் எம்.ஜி.ஆராக நடித்த ராமகிருஷ்ணன், அவர் முதல்வரான பிறகும் பாதுகாவலராக அருகில் இருந்தவர்.
‘‘1945ல இருந்து எம்.ஜி.ஆரை எனக்குத் தெரியும். அப்போ நான் சௌகார்பேட்டையில பால் கடையில் வேலை செய்துகிட்டிருந்தேன். சைனா பஜார்ல எம்.ஜி.ஆர் குடும்பத்தோட தங்கி, சின்னச் சின்ன வேஷத்துல நடிச்சிட்டிருந்தார். பால்கடைக்கு வரும்போது பழக்கமானார். ஒரு பொங்கல் அன்னிக்கு அவர் வீட்டுக்குப் போயிருக்கேன். அவங்க அம்மாவைப் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன். எம்.ஜி.ஆரை விட நல்ல சிவப்பு சத்யா அம்மா. எனக்கு பொங்கல் கொடுத்து உபசரிச்சு, கையில நாலணா கொடுத்து அனுப்பி வச்சாங்க.
1949ல் பி.யூ.சின்னப்பா நடித்த ‘மங்கையர்க்கரசி’ படத்துல பயில்வானா நடிக்கப் போயிருந்தேன். சின்னப்பாவை பார்க்க எம்.ஜி.ஆர் வந்திருந்தார். சின்னப்பா என் பக்கம் திரும்பி, ‘இவரை நல்லா பழக்கம் புடிச்சி வச்சுக்கோ... பின்னால பெரிய ஹீரோவா வருவாரு’ன்னு எம்.ஜி.ஆரைக் காட்டி சொன்னார். அவர் சொன்ன மாதிரியே எம்.ஜி.ஆர் பெரிய ஹீரோவான பிறகு, அவர் படங்கள்ல ஸ்டன்ட் நடிகரா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ‘சிரித்து வாழவேண்டும்’, ‘ஆசை முகம்’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘நீரும் நெருப்பும்’னு சில இரட்டை வேடப் படங்கள்ல முகம் காட்டாத எம்.ஜி.ஆராவும் என்னை நடிக்க வச்சார். அவரோட கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை அவருக்காக டூப் போட்டு நடிச்சிருக்கேன். ‘நினைத்ததை முடிப்பவன்’ படம் க்ளைமாக்ஸ்ல ரெண்டு எம்.ஜி.ஆரும் கத்தி சண்டை போடுற சீன்ல இன்னொரு எம்.ஜி.ஆரா அவர்கூட கத்திச் சண்டை போட்டேன். கத்திச் சண்டையில உடம்பை ரோலிங் செய்யிறது ரொம்ப சிரமம். எம்.ஜி.ஆர் அதில் கில்லாடி. நானும் அப்படிச் செய்ததைப் பார்த்துட்டு ஸ்பாட்லயே ஆயிரம் ரூபாய் கொடுத்துப் பாராட்டினார்’’ என்ற ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆரின் உணவுப் பழக்கங்களை பட்டியலிட்டார்.
‘‘தலைவர் தங்க பஸ்பம் சாப்பிடுவார்னு சொல்றதெல்லாம் சுத்த பொய். தங்கம் மாதிரி ஜொலிக்கிறவருக்கு தங்க பஸ்பம் எதுக்கு? கேரளாவிலிருந்து நங்கி கருவாடை வரவழைச்சு, அதை வறுத்துப் பொடியாக்கி சோத்துல பிசைஞ்சு சாப்பிடுவார். அதுல அவருக்கு அலாதி பிரியம். அப்புறம், மத்தி மீன் சாப்பிடுவார். காலையிலேயே இட்லிக்கு கோழி குருமா வச்சு சாப்பிடுவார். மதியத்துக்கும் கறிக் குழம்புதான். முருங்கை கீரையை ப்ரியமா சாப்பிடுவார். அடிக்கடி கோதுமை பாயசம் செய்து தரச் சொல்லி குடிப்பார்.
வாய்க்கு ருசியா தான் மட்டும் சாப்பிடுற ஆளு இல்லை அவர். அரசியலுக்கு வந்த பிறகு, ராமாவரம் தோட்டத்துல மனு கொடுக்க வர்றவங்களைக் கூட வெறும் வயித்தோட அனுப்ப மாட்டார். அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி சந்தோஷப்படுறதுல தலைவர் ஒரு தனிப்பிறவி.
என்.டி.ஆர் கட்சி ஆரம்பிக்கும்போது முதல்ல ‘தெலுங்கு ராஜ்ஜியம்’னு கட்சிக்குக் பெயர் வச்சார். தலைவர்தான் ‘தெலுங்கு தேசம்’னு மாத்தச் சொன்னார். அவர் சொன்னபடியே செய்த என்.டி.ஆர், ஆட்சியைப் பிடிச்சு முதல்ல தலைவரைத்தான் பார்த்துட்டுப் போனார். அப்போ கர்நாடக முதல்வரா இருந்த குண்டுராவுக்கும் தலைவர் மேல ரொம்பப் பாசம். அவரோட பிறந்தநாளுக்கு ஒரு தடவை தலைவரைக் கூப்பிட்டு விருந்து வச்சார். பெங்களூர்ல இருந்து திரும்பி வந்துக்கிட்டிருந்தப்போ, வெயில்ல செருப்பில்லாம் நடந்து போன ஒரு பாட்டிக்கு ஜானகி அம்மாளோட செருப்பைக் கழட்டிக் கொடுத்த வள்ளல்தான் எம்.ஜி.ஆர்.
1979ல ஒரு தடவை காமராஜர் பிறந்த நாள் விழாவுல கலந்துக்கறதுக்காக தலைவர் போய்க்கிட்டிருந்தார். ராணி சீதை ஹால் கிட்ட கார் போகும்போது ரோட்டுல ஒருத்தர் காக்கா வலிப்பால துடிக்கிறதைப் பார்த்துட்டு காரை நிறுத்தச் சொன்னவர், அந்த ஆளை போலீஸ் வண்டியிலயே ஏத்தி ஹாஸ்பிடல் கொண்டு போகச் சொன்னார். சினிமால எப்படி ஹீரோவா ஓடிப் போய் உதவி செய்வாரோ, அதே மாதிரி நிஜ வாழ்க்கையிலும் கடைசிவரை ஹீரோவா இருந்தவர் தலைவர்.
தலைவர் கூட இருந்தவங்க எல்லாம் இப்ப எங்கயோ இருக்காங்க. ‘எம்.ஜி.ஆர் கூட இருந்துட்டு நீங்க மட்டும் ஏன் கஷ்டப்படுறீங்க’ன்னு என்னைப் பார்க்க வர்றவங்கல்லாம் கேப்பாங்க. அவர் கூட இருந்ததையே பெரிய சொத்தா நினைச்சதால அப்போ எனக்கு எதையும் கேட்க தோணல. ஆனா, கேட்டிருக்கலாமோன்னு இப்போ தோணுது’’ என்று ஐந்துக்கு எட்டு அடி அறையில் அமர்ந்தபடி கலங்கினார் ராமகிருஷ்ணன் .
- நன்றி : குங்குமம் .
courtesy chandran veerasamy his facebook page
-
-
Congratulations Jaishankar sir for starting Makkal Thilagam MGR thread - Part 19.
Thanks to Kaliyaperumal sir for successfully completing Makkal thilagam MGR Thread - Part 18.
Regards,
Sathya
-
Quote:
Originally Posted by
Sathya VP
.................................................. .......
-
-
இன்று (09/01/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "அரச கட்டளை " ஒளிபரப்பாகியது .
http://i64.tinypic.com/2lswiuf.jpg