ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
ஓரிரு வாரங்கள் ஹாய் மட்டும் சொல்லிவிட்டு லைக்ஸ் மட்டும் போட்டுக் கொண்டு இருக்கலாம் என நினைத்தேன்..காரணம் ஹோம் வொர்க்கும், எழுத நினைத்த சிலவும் எழுத நேரம் கிடைக்காதது தான் காரணம்..இருந்தாலும் நுழைந்த போது பின்னூட்டம் போடாமல் இருக்க முடியலை..வாசுசாரின் பொல்லாத புன் சிரிப்பு :) வும் ஒரு காரணம்..
வாசு சார் எனக்குப் பிடித்த பாடல் இது..வழக்கம் போல அழகான பதிவு..
யாரைச் சொல்லி என்ன பயன்
என் வழக்கு தீரவில்லை
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப் பூ
அகெய்ன் தாங்க்ஸ்..
மேனகா பற்றி கிருஷ்ணா ஜி.. தாங்க்ஸ்.. ழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்.. மிக அழகிய பாடல்
இது பற்றி முன்பு ஒரு மலரும் நினைவுகள் எழுதியிருந்தேன்அது..கொஞ்சம் தள்ளி..கீழே..
வாங்க ராகவேந்தர் சார்..பொங்கும் பூம்புனலும் க்கு நன்றி.. புகைப்படத்தில்பார்த்ததில் மிக்க சந்தோஷம்..என் நமஸ்காரங்கள்
சந்திரசேகரன் சார் முன்பே பார்த்திருக்கிறேன்.. கிருஷ்ணா ஜியையும்.. பட் இந்த ஃபோட்டோவில் கொஞ்சம் டிஃபரண்ட் லுக்.. முரளி சாரும் முதல் தடவை பார்க்கிறேன்.. மிகச் சந்தோஷம்..ஒன்று மட்டும் தெரிந்தது.. எல்லாருக்கும் இளையவன் நான்..சார் போடுவதில் தப்பில்லை என (அதே இருபத்து நாலு வயது தான் :) )
எஸ்வி சாரின் பதிவுகள் எஸ்வாசுதேவனின் பாடல்கள் ராஜேஷ் ஜியின் பாடல் அனைத்துக்கும் ஒரு தாங்க்ஸ் + ஓ
**
கொஞ்சம் ம. நி..
கல்லூரி முடித்திருந்த காலகட்டம்.. வேம்பு என்ற ஒருவர் என் நண்பனின் அண்ண்னின் நண்பர் எம்.எஸ்ஸி மேத்ஸ் எம்ஃபில் எனப் படித்து வேலை தேடிக் கொண்டிருந்தார்..ஒரு நாள் எங்களை திருமோகூர்பக்கம் வந்தால் அவர் ஊர் திருவாதவூருக்கு வாருங்கள் எனச் சொல்லி இருந்தார்..ஸோ அந்த நாளும் வந்தது..திருமோகூர் சென்று ஒம்மாச்சி சேவித்துவிட்டு வந்த மொஃபசல் பஸ் பிடித்து திருவாதவூர் இறங்கினால் எதிரில் வேம்பு..கண்டும் காணாதவர் போல் செல்ல ஹ்லோ..வேம்பு.. பட்டெனத் திரும்ப..
ஓ.. நீங்கள் வேம்புவின் நண்பர்களா வாங்க..வேம்பு வீட்ட்ல இருக்கான் நான் அவன் அண்ணன் என (பேர் மறந்துவிட்ட்து)ச் சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றால் முகமலர்ந்த வேம்பு உள்ளே தங்கைக்கு ஜாடை காட்ட பின் வந்தது சுடச் சுட தண்ணீர் கலக்காத கள்ளிச் சொட்டுக் காஃபி..
பின் வேம்பு வாங்க பக்கத்துல அண்ணன் வேலை பாக்கற இடம் இருக்கு..அங்க போய்ப் பேசலாம்..எனச் சொல்ல போனால் அது ஒரு டூரிங்க் டாக்கீஸ்
காலை வேளை என்பதால் பளபளவென் வெயில் மேக்கப் போட்டது போல் அடித்துக் கொண்டிருக்க உள்ளே சென்று மரபெஞ்சில் நான், உடன் வந்த என் நண்பர்கள் இருவர் வேம்பு என அமர்ந்து.. ஆமா ஒங்க அண்ணன் இங்க என்னவா இருக்கார்..
வேம்புவின் கண்களில் குட்டியாய்ச் சிரிப்பு..இங்க ஒரு டீக்கடை வைத்திருக்கிறார்..என்ன படிச்சுருக்காரா..எம்.எஸ்ஸி ஸூவாலஜி...
எங்களுக்குப் பேச்சு வராமல்..என்ன வேம்பு..இப்படிச் சொல்றீங்க..ம்ம் என்ன பண்ண வேலை கிடைக்கும் வரை இப்படி கடை வைத்திருக்கிறார் எனச் சொல்லி எதிரே தெரிந்த வெண் திரையை ஒரு நிமிடம் வெறித்துப் பார்த்துவிட்டு..பின் சொன்னார்..
”உங்களுக்குத் தெரியுமா சாவித்திரி ப்டம்.. ஓ..மேனகா நடிச்சது தானே..யா. அதை இந்தத் தியேட்டர்ல போட்டாங்க ரெண்டு மாசத்துக்கு முன்னால.. சுத்த பத்த ஊரெல்லாம் வண்டி கட்டிக்கிட்டு பாக்க வந்துட்டாங்க..சத்யவான் சாவித்திரி படம்னு நினச்சு..பின்ன என்ன..மாட்னி ஃபுல் ஈவ்னிங்க் ஈ காக்கை கூட வரலை..படத்தை எடுத்துட்டோம்.!.”
பின் பேசி முடித்து மறுபடி வேம்புவின் வீடு வந்தால் அமர்க்களமான சாப்பாடு..மோர்க்குழ்ம்பு, பால் பாயசம், தயிர்வடை, தயிர்ப் பச்சடி.. வேம்பு எங்களுக்கு எதுக்கு இவ்ளோ கிராண்டா..
மறுபடியும் சிரித்த வேம்பு..”நல்லா இருக்குல்ல..ஒரு ரகசியம் சொல்லட்டா.. நேத்துக்கு கரெண்ட் கட்..தியேட்டர் ஓடலை..வாங்கின பால்லாம் மீந்து.. சரியா நீங்க வந்தீங்க..வேஸ்ட் ஆக்லை..”.. எதுவும் சொல்லாமல் ஒரு வித கனத்துடன் பிரிந்தொம்(வேம்புவிற்கு அருப்புக்கோட்டையில் லெக்சரர் வேலை பின் கிடைத்தது..அவர் அண்ணனைப் பற்றி மறந்து விட்டது)..
இன்று இருவரிடமும் எனக்குத் தொடர்பில்லை..மனதில் இருப்பது நினைவு மட்டுமே
**