வெள்ளெலிகள் துள்ளி ஓடும்
கிளி ஒன்று யாரு என கத்தும்
பாட்டியின் தம்பி சிறு வீட்டில்
பேரப்பிள்ளைகள் எங்களுக்கு
பாட்டியுடன் அங்கு செல்கையில்
மனதில் வழியும் குதூகலம்
Printable View
வெள்ளெலிகள் துள்ளி ஓடும்
கிளி ஒன்று யாரு என கத்தும்
பாட்டியின் தம்பி சிறு வீட்டில்
பேரப்பிள்ளைகள் எங்களுக்கு
பாட்டியுடன் அங்கு செல்கையில்
மனதில் வழியும் குதூகலம்
குதூகலமாகத் தான் இருக்கும்
வருட முடிவு வர வர..
அடுத்த வருடம்
இன்ன செய்யலாம்
இப்படி இருக்கலாம்
இவ்வளவு சம்பாதித்து
இவ்வளவு சேமிக்கலாம்
வேலை மாறலாமா
கல்யாணம் செய்து கொள்ளலாமா
இன்னும் இன்னும்..
வருடக் கடைசி நாளின்
கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர்
புதுவருட முதல் நாளில் தோன்றும்
ஆச்சு இன்னொரு வருஷம்..
ம்ம் நல்லா இருக்கட்டும்..
என்ற நினைப்புடன்
நல்லா இருக்குமா
என எழும் கேள்விக் குறியும்..
இருந்தாலும்
தொடரும் நம்பிக்கை..
நம்பிக்கை நட்சத்திரங்கள்
நாளைய சூரியன்கள்
நம் கலங்கரைவிளக்கங்கள்
நல்ல இளைய பிள்ளைகள்
பிள்ளைகள் அங்கு மிங்கும்..
..பேச்சுகள் பலவாய்க் கத்தி
எள்ளியே ஓடிச் செல்ல
..ஏற்றமாய் நோட்ட மிட்டு
விள்ளலாய் எடுத்த இட்லி
..வாயினில் போட மறந்த
தள்ளாத பாட்டி சொன்னாள்
..தக்கவாய் பாத்துப் போங்க.
போங்க என்றால் வாங்க
வாங்க என்றால் போங்க
ஊடி விளையாடி மகிழ
வஞ்சியர் தனி அகராதி
அகராதியில் இருக்காதவோர் அசைத்தாடிடும் உணர்வாய்
பகராததாம் எழிலாயென பலபாவலர் திகைக்கும்
நகராமலே இதயந்தனில் நல்மாகவே எழும்பும்
நகங்கள்முதல் உடலெங்கிலும் துலங்கும் உன் அழகே
அழகே ஆயிரம் கப்பலை கடலிறக்குமாம்
அதி நீள போரினை நடத்தி வைக்குமாம்
ஆபத்தின் உறைவிடமாகிக் கிடக்குமாம்
அன்றும் இன்றும் காவியத்தின் கருவாம்
கருவாமென கனிந்தேசொல கணவன்முகம் மலர்ந்தே
திருவேயிவள் எனவேசொலி தளிர்மேனியை அணைத்தே
தருவேன்பல விதமாகவே பரிசேயெனச் சொலியே
பருவத்திலே தாயானவள் இதயமதை நிறைத்தான்..
நிறைத்தான் இல்லத்தை
பட்டால் நகை நட்டால்
பகட்டால் சொகுசால்
பரிவொன்றே போதும்
பெண்ணைப் போற்றவென
புரியாத அவன் பாமரன்
பாமரன் போலத் தோற்றம்
.,..படகினில் வந்த கூட்டம்
சாமரம் வீசும் தென்றல்
..சாற்றிய மென்மை உள்ளம்
கோமகன் ராமன் மீதோ
...கொண்டதோ பக்தி வெள்ளம்
பூமனம் கொண்ட குகந்தான்
..புவனமும் அறியும் அம்மா..
அம்மா அம்மம்மா
பற்றி எரியுதம்மா
புயலின் நடுவினில்
தேவேந்திரன் மகள்
கேட்கக் கூசும் சோதனை
வேலைக்காரியால் வேதனை
முட்டி மோதும் அரசியல்
நடந்ததுதான் என்னவோ
என்னவோ என்றே நெஞ்சில்..
..ஏதோவோர் அச்சம் கூட்ட
மின்னலைப் போலத் தாவி
...மென்மையாம் எந்த்ன் பெண்ணின்
கண்ணிலே உற்றுப் பார்த்தால்
..கரித்துளி இல்லை என்றால்
வண்ணமாய்க் குவித்து வாயால்
..வக்கணம் காட்டு றாளே..!
காட்டுறாளே குருட்டுப் பாசம்
ஒன்றிரண்டு பெத்த தாயின்று
கண்டிப்புக்கு அடங்காதவை
அவள் வளர்த்த செல்லங்கள்
பிஞ்சில் பழுத்து வெடித்த
மீசை அரும்பிய விடலைகள்
மிகப்பெரியதோர் வாகனத்தில்
பயங்கர வேகத்தில் மின்னலாய்
விதிமுறைகள் மீறி பறந்து
சாலையோரம் சிவனே என்று
நடந்து சென்ற நல்லவரை
முதியவரை மோதி நொறுக்கி
மருத்துவமனையில் சேர்த்து
நினைவு திரும்பாமலே அவர்
சில நாள் பாவமாய் கிடந்தது
பல லட்சங்கள் வீணே கரைத்து
யந்திரத்தில் மூச்சு விட்டு
இறுதியில் உலகை விட்டு
பயணிக்க யார் காரணம்
காரணம் கேட்க லாமா
...காரிகை கண்ணின் ஓரம்
ஆரமாய்க் கோலம் கண்டு
...அவனுமே சொன்னான் மெல்ல
பாரமாய் இருந்த நெஞ்சம்
..பகிர்வதால் இளகு மன்றோ
ஈரமாய்ச் சொல்ல அங்கே
..எந்திழை முறுவல் செய்தாள்..
சொல்ல நினைத்தால் முடிந்திடுமோ
...சோகம் என்னை மறந்திடுமோ
அள்ளி முடிக்கும் வார்த்தைகளை
...அழகாய் அளவாய்த் தான்போட்டு
மெல்லக் கேட்கும் சகநடிகா
...மேவிச் சொல்வேன் கேள் கதையை
வல்ல விதியின் விளையாட்டா
...வாட்டும் வினையாய் ஜாதகமா...
நடிகை என்றே எனை அறிவாய்..
.. நட்பாய் பழகத் தான் துடிக்கும்
விடியல் அறியா பறவையென
..வஞ்சி எனைநீ அறியாயே
கடிதாய் வந்த ஓர்காதல்
..காரிகை என்னை அள்ளீயதே
துடிக்கும் இளமை இன்னபிற
..தோழன் பிரிவும் காரணமே..
மெல்லச் சிரித்தான் சகநடிகன்
...மேகம் போலத் தான்கருமை
கொள்ளா இருந்தால் அதுநடிப்பு
...கோதை உனக்குத் தெரியாதா
விள்ளீச் செல்லும் மேகம்போல்
..வேகமாய் துயரும் மாறிவிடும்
அள்ளிச் சிரிப்பை முகத்தினிலே
...அழகாய் அணிவாய் எனச்சொன்னான்
சொன்னான் முடிவாக உறுதியாக
போகாதே அங்கே இங்கே என
நிற்காதே கண்ட இடத்திலென
கண்கொத்திப் பாம்பானான்
வெடித்தது பூகம்பம் அங்கு
ஆணாதிக்க முழு உருவே
கொடுங்கோலனே உன்னடிமை
நானல்ல புது யுக பெண்ணடா
உன் பிடிக்குள் அடங்குவேனா
என் நகர்வை கண்காணிக்கும் நீசனே
என் அசைவை கவனிக்கும் அற்பனே
பிரிந்து செல்கிறேன் இப்பொழுதே
சுதந்திரமாய் பறந்து திரிவேன்
பிழைத்துக்கொல்வேன் நீயின்றி
செத்துவிட மாட்டேன் பட்டினியில்
பிரவாகம் நிற்கவில்லை
பரிதாபமாய் தவித்தான்
தன்னிலை விளக்கினான்
அன்பே ஆருயிரே கண்மணியே
கொலைகார மனித எதிரிகள்
தீவிரவாதிகள் பலசாலிகள்
கொடிய நவீன போர்முறைகள்
பயங்கர உயிகொல்லி கருவிகள்
நச்சுப்புகையும் மின்சார ஆயுதமும்
இன்னும் பிற வியூகமும் அமைக்க
பதறாமல் இருப்பேனோ சொல்லம்மா
ஆபத்தை நான் கண்ட இடமெங்கும்
நீ போகாதிருக்க வேண்டினேன்
பொல்லாத பேச்செல்லாம் ஏனம்மா
போகாதே என்னைவிட்டு நில்லம்மா
பதியின் பாசமறிந்தாள் சின்னவள்
பாகாய் உருகினாள் சரணடைந்தாள்
சரணடைந்தாள் ஏந்திழையும் கணவனவன் பாதம்
..சங்கடந்தான் இருந்தாலும் நின்றானே ஆங்கே
வரமெனவே மனையாளாய் வாய்த்திட்ட வஞ்சி
..வனவாழ்க்கை என்றாலும் மயங்காமல் அங்கே
துறவுக்காய் பதிசெல்ல பின்னாலே சென்று
..தூய்மைமிகு வாழ்க்கையினை வாழ்ந்தவளும் அன்றோ
உறவினிலே பழிவந்தால் உலகின்முன் நீக்க
..உணர்ச்சியினை மட்டாக்கி நின்றானே அண்ணல்
அண்ணல் காந்தி சிரிக்கிறார்
ரூபாய் நோட்டுக்களில் தினம்
அறியாத அப்பாவியாய்தானே
ஆசை முகம் மறக்கலானதே
அன்றாட பணப் பரிமாற்றம்
அட்டையிலும் எங்கேயும்
அல்லது கணினி பெட்டியிலுமென
ஆகிவிட்ட கலிகாலமிதிலே
கலிகால மிதிலேபல கனமாய்வரும் விஷயம்
பலிகொள்ளுதே பலவாண்டுகள் பகிர்ந்தேவரும் நடத்தை
வழியாய்தினம் வரமாய்ப்பலர் மனத்தேயுள மனிதம்
வழிமாறுதே குறைந்தேயினி மறைந்தேயது விடுமோ
மறைந்தேயது விடுமோ
மாயமோ மந்திரமோ
தினம் தினம் தேயுதே
காணாமலே போனதே
இரு வாரத்தில் இருளானதே
கலங்கிய கணத்தில்
கீற்றாய் முளைத்தது
சிறிது சிறிதாய் வளர
மனமதுவும் குளிர
முழுதாய் கண்ட நிலவு
வாழ்வதின் ஏற்ற இறக்கம்
காட்டியதோ தெளிவாகவே
தெளிவாகவே தான் பிறக்கிறது
புதுவருடம்
நல்ல எண்ணங்கள்
நல் வாழ்க்கை
நல்ல விஷயங்கள்
இன்னும் பல நல்லவை தருவதற்கு..
எல்லாம்
எப்படி நாம் இருக்கிறோம் என்பதை வைத்து
வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறேன்
இயலாதவன் வசனம் வஞ்சிக்கு கசக்குதே
பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கிறான்
பொறுக்காமல் பொறுமுகிறாள் உறுமுகிறாள்
பூலோகத்தைப் பீடித்த பிணியிதுவல்லவோ
புற்றாய் கொல்லும் இது மருந்தேயில்லையே
மருந்தே இல்லையே..
என்ன பண்ண..
நாலு நாள் தாடி
கண்ல
செம்மறியாட்டுக் கண்ணோட மந்தம்
கன்னம் ஒட்டிப் போச்சு
என்னடான்னு கேட்டா
நஸ்ரியாக்கு கண்ணாலம் நிச்சயம் அதான்னு
சொல்றான் பாவிப்பய புள்ள
அதுக்கா இப்டி
நாமெல்லாம் பத்மினிலருந்து
ராதாலேர்ந்து
இன்னும் பலபேரைப் பார்த்துருக்கோம்
பேராண்டி..
வாழ்க்கையே ஒரு
பாஸிங்க் க்ளவ்டா
ஈஸியா ஃப்ரீயா உடுன்னு
அவன் பாஷைலயே சொன்னா..
போ..தாத்தா
ஒனக்குப்புரியாதுங்கறான்..
போறான் போ..புரியாத பய..!
புரியாத பயன்னு நினைச்சிட்டானுங்க
வெளக்குமாத்த தூக்கிட்டு கிளம்பிட்டான்
வேகமா பெருக்கித் தள்ளுறான் குப்பைய
மிரண்டு ஓடுது பழம் பெருச்சாளி எல்லாம்
பெண்டு பிள்ளைக பிழைக்கப் போகுது
பரிகாரம் கிடைக்கப்போகுது பாவத்துக்கு
பாவத் துக்காய் பரலோ கத்தில்
..பங்காய் வருமே ச்ம்பள மாக
சாவின் பின்னால் சாத்தான் எல்லாம்
...சற்றே பிய்த்தே உனையே உண்பர்
ஆவ தென்ன வென்றே கேட்டால்
..அமைதி யுடனே நல்ல செயலை
அவதி எதுவும் கொள்ளப் படாமல்
...அழகு டனேதான் செய்தால் நன்றாம்..
நன்றி குருவே என்றான் சிறுவன்
..நலமாய் அழகாய் நயமாய் உரைத்தீர்
இன்னும் இன்னும் என்றே என்னை
..கேட்கத் தூண்டும் இனிக்கும் பேச்சு
என்ன கேள்வி கேட்டால் பதிலும்
..ஏகம் வருமே என்ற படியால்
கேட்பேன் நானே உம்மைத் தானே
..பாவம் என்றால் என்ன என்றான்..
அடுத்தவன் சொத்து வேண்டா அழுக்கெனப் பொறாமை வேண்டா
துடுக்குடன் கோபம்கொண்டே துயர்படும் வார்த்தை எல்லாம்
மிடுக்குடன் சொல்ல லாகா மேலுமே பாவம் உண்டு
விடுத்திடு பாப எண்ணம் விளங்கிடும் உனது வாழ்வே
பாவமென்றால் என்னவென்றே தெரியா மல்நான்
..பாங்காக நன்கிருந்தேன் குருவே ஆனால்
தூவுமழை சாலையிலே சேறாதல் போல்
..சிந்தையிலே பாபம்பற்றி சொல்லி விட்டீர்.
பாவத்தைப் பற்றிய்தும் சொன்னால் கூட
..பாபம்தான் என்பதுவும் சரியா ஐயா
நாவசைத்தே எதையோதான் சொல்ல வந்த
.. நற்குருவும் சொல்லாமல் சென்று விட்டார்..
சென்றுவிட்டார் பெரியவர்
பூடகமாய் உயிலை எழுதி
வயக்காட்டை உழுதனர்
புதைத்த பணத்திற்காக
கிடைக்கவில்லை பணம்
உழைப்பை வீணாக்காமல்
உழுத மண்ணில் விதைக்க
விளைந்தது பொன்னாக
சோம்பிக் கிடந்தவர்கள்
உணர்ந்தனர் உண்மையை
உண்மையைச் சொல்வேன் பாவாய்
..உணர்விலும் ஓடி நிற்கும்
கன்னியே என்று முந்தன்
..களிகொளும் தோற்ற மங்கே
வண்ணமாய் பூவின் சாயல்..
..வாட்டமாய் வாழை மேனி
திண்ணமாய்த் தினமும் தோன்றி
..தீண்டியே சீண்டும் அன்றோ..
சீண்டும் அன்றோ செய்த வினை
செயத்தகாத தீய செயல்களால்
பெற்ற கல்வியும் உதவாமல்
சேர்த்த செல்வமும் நிலைக்காமல்
தள்ளாத வயதில் தனியே
தள்ளியே நிற்கும் உறவுகள்
தடுமாறி தடம் புரண்ட வாழ்க்கை
துணையாய் வந்தது மதுவும்
கூடவே போதை மாத்திரையும்
அத்தோடு மூக்குப்பொடியும்
உடும்பாய் பற்றியிருக்க
புத்தன்றி வேறென்ன வாய்க்கும்
தவித்த வாய்க்கு தண்ணியோ
பக்குமாய் செய்த உணவோ
தருவாரின்றி உணர்வு மரத்து
ஒரு வித துறவினிலே வாழ
ஒரு நாள் காலன் வந்து
கதவை தட்ட கௌரவமாய்
அனுப்பி வைக்க சொந்தத்தை
அழைக்கும் பொறுப்பும்
அக்கம்பக்கத்தார் தலையிலே
விசித்திரமான நடப்புகள்
விதியின் பல நாடகங்கள்
நாடகங்கள் பலவற்றை நயமுடனே செய்து
.. நன்றான மேடைபல அரங்கேற்றி அன்று
ஊடகங்கள் தான்குறைந்த காலத்தில் நன்றாய்
..உணர்ச்சியுடன் பலவூர்கள் சென்றேதான் அங்கே
மாடங்கள், மதில்களுமே மன்னவரின் உடைகள்
..மற்றுபல செய்தவர்தான் நடிகரவர் பெயரோ
ஆடவைத்து அதிரவைக்கும் தோற்றமுடன் திரையில்
..அழகாகப் பவனிவந்த மனோகரவர் தானே..
மனோகரவர் தானே
மேடையேறாமல்
அரிதாரம் பூசாமல்
வசனம் பேசாமல்
வலம் வருகின்றார்
பொது இடங்களில்
பெண்பிள்ளைகளை
கண்டதும் மோகித்து
காமத்தில் சுகித்து
கௌரவ மாந்தராய்
ஏலம் விடுகிறார்
மானத்தை நெறியை
மெல்லக் கொல்லும்
கொடிய நஞ்சின்று
கொடிய நஞ்சின்று வேகமாய்ப்
பரவுகிறது..
அது வேறு எவருமல்ல
எதிர்க் கட்சி தான்..
ஆகவே..
என நேற்று முழங்கிய தலைவர்
இன்று
அதே கட்சியில் இணைய
நஞ்சைப் பற்றி
யோசிக்க ஆரம்பித்தனர் மக்கள்..
மக்கள் பிறந்த பின்னர்
மணவாளன் பின்னிருக்கையில்
மூச்சிருக்கும் வரை
முதலிடம் அவர்களுக்கே
அவர்களுக்கே தெரியும்..
போடுவது வேஷம் என
பார்ப்பவர்களுக்கும்...
இருப்பினும்
அலுக்காமல்
நடந்து கொண்டிருக்கிறது
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நாடகம்
நடிப்பவர்களிடமும்
பார்ப்பவர்களிடமும் தான்
மாற்றமிருக்கும்..
மற்றதில் இல்லை..
இல்லை எனும் சொல்
இல்லை என்று சொல்
இலகுவாய் எதையும் வெல்
இன்பம் எனதென்று சொல்
சொல்லிவிட வேணு மின்னு
...சுறுசுறுப்பாய்த் தானி ருந்தேன்
அல்லிமலர்க் கால வெச்சு
..அன்றவளும் போகை யிலே
மெல்லமெல்ல வேகங் கூட்டி
..மேவிமுன்னால் சென்று நிக்க
கள்ளவிழி பாத்த பின்னால்
...காணாமலே போச்சு வார்த்தை..
..
வார்த்தை விளையாட்டில்தான் எத்தனை வகை
மூழ்கி துழாவி வெல்கையில் பிறக்குது உவகை
கட்டங்களுக்குள் மல்லு கட்டும் அப்போட்டிகள்
இன்றெந்தன் இனிய இணைய பொழுதுபோக்குகள்
பொழுது போக்குகள்
பூக்களைப் போன்றவை..
தொடுப்பவரைப் பொறுத்து
தினம், வாரம், வருடம் என மலர்பவை..
சிறப்பான ஒரு பூ
ஐந்து வருடங்களுக்கு
ஒருமுறை மலரும்.
தொடுப்பவரில்
சிலருக்கு வெற்றியும் சிலருக்குத் தோல்வியும்
வழங்கி விட்டு
தொடுக்காத மீதம் பேருக்கு
அழகாய்
அடுத்த ஐந்து வருடம் வரை
அளித்துச் செல்லும் ஏமாற்றத்தை..
ஏமாற்றத்தை வாடிக்கையாய் பலரும்
அறியாத வேடிக்கையாய் மிக சிலரும்
அரசியல் நடக்கும் அசிங்க அரங்கத்தில்
பல்லாயிரம் ஒன்றல்ல அவதாரங்கள்
உலகை உய்விக்க வந்த உத்தமர்கள்
கோடிகளில் உருட்டி வைத்த ஊழல்கள்
உச்சரிப்பதெல்லாம் தன்னல பொய்கள்
கேட்டிடத் திரளும் செம்மறியாடுகள்
சீரழிந்த செயல்பாடுகள் மாறாதா
நேர்மையான நல்லாட்சி வாராதா
வாராதா கண்ணனவன் உருவம் கண்ணில்
..வந்துவக்க வைக்கவரும் காலம் என்றே
ஆறாக மனமுருகி அழைத்த பெண்ணின்
..அழகுமிகு பாடல்கள் கேட்ட வண்ணம்
வா ராதா என்றபடி வந்தான் அங்கே
..வஞ்சியவள் மனங்கவர்ந்த மாயன் மேலும்
பேறாகத் தந்துவிட்டான் தன்னைத் தானே
..பெண்மயிலும் கலந்துவிட்டாள் அவனில் அன்று...
அன்று நடந்தது ஒரு புரட்சி
விதவை முகத்தில் மலர்ச்சி
வெறுமை தொலைத்த நெற்றி
கையில் கழுத்தில் அணிகள்
இன்று தேவை ஒரு புரட்சி
பொதுவாய் பெண் என்பவள்
வயது பருவம் பொருட்டின்றி
என்றும் மூளியாய் நிற்கிறாள்
பூவை தொலைத்து விட்டு
பொட்டை அழித்து மறந்து
மொட்டை கை கழுத்துடன்
காணத்தான் சகியலையே
புது நாகரிகம் புகுந்ததேன்
புரியாமல் தவிக்கிறேன்
தவிக்கிறேன் துடிக்கிறேன் தணற்புழுவாய் என்றே
...தயங்காமல் முழக்கங்கள் பலவிதமாய்ச் செய்தே
பவித்திரமாம் பாரதத்தின் பண்பதனைக் காக்க
..பாங்காக நீங்களெல்லாம் பேருதவி செய்வீர்
செவிக்குணவு கிடைத்ததனால் பேசாமல் நின்றே
..சோம்பேறிக் குணமடைந்து எதிரியிடம் சென்றால்
தவிலுக்கு அடிபடுமே இருபக்கம் இல்லை
..தக்கபடி அடிபடுவீர் எப்பக்கமும் என்றே
முடிக்கின்றேன் இவ்வுரையை மூவுலகும் காக்கும்
...மேலான தலைமையிது எனச்சொல்லி அமர்ந்தால்
நடிக்கின்றேன் என்பார்கள் நால்வகையும் தம்முள்
..நன்றாக அடக்கிவைத்து இருப்பதாக எண்ணும்
தடியர்கள் எதிரணியில் இருக்கின்ற நண்பர்
..தானாகத் தெரியாத மூடர்கள் பலராம்
விடிவதற்கு ஓட்டெனக்கே எனச்சொல்லி முடிக்க
...வெறும்பேச்சுப் புரியாமல் எழுந்ததுகை தட்டல்..
..