இருக்கு ஒரு வித கிறுக்கு
மேடையில் சாமியாடுது
தவளையாய் குதிக்குது
பறக்க முயற்சிக்குது
போதையில் மிதக்குது
புத்தியை தொலைக்குது
குருபக்தியில் திளைக்குது
ரொம்ப அருவருப்பாயிருக்குது
Printable View
இருக்கு ஒரு வித கிறுக்கு
மேடையில் சாமியாடுது
தவளையாய் குதிக்குது
பறக்க முயற்சிக்குது
போதையில் மிதக்குது
புத்தியை தொலைக்குது
குருபக்தியில் திளைக்குது
ரொம்ப அருவருப்பாயிருக்குது
அருவருப்பாயிருக்கிறது...
ஊர்ந்து செல்லும்
கம்பளிப் பூச்சியைப்பார்க்கையில்..
கூட்டத்தில் நடந்து செல்லும் போது
எதிரில் வந்து
மோதும் குடித்த மனிதனின்
நாற்றத்தை உணர்கையில்...
இவை எல்லாம் விட
கேட்கும் போது
முகஞ்சுளிக்க வைக்கும் விஷயம்..
அரசியல் வாதிகளின் பொய்கள்..
பொய்கள் பெருகுமா
நெடுநாள் காக்குமா
மதிப்பை கெடுக்குமா
இதயத்தை கிள்ளுமா
போய்யா அரிசந்திரா
பிழைக்கும் வழியைப் பார்
பார் பார்(bar) இல்லா
ஊரை பார்
பார்வை மட்டும் தெரிய
போர்வை போர்த்திய
பாவை பார்
(பாட்டுக்கு மட்டுமே பார்த்தாலே குற்றமாம்...)
எண்ணையில் நாடு செழித்தாலும்
திண்ணை கூட இல்லா
தின கூலியை பார்
ஏதும் இல்லை என்ற போதும்
பிள்ளை பெறலை கடமையாய்
காணும் குடியை பார்.
(சவுதியில் இருந்து.4 நாள் பயணம் )
பார் என்று பகட்டுகிறாள்
அணிந்தாலும் கவர்ச்சி
அணியாமலும் கவர்ச்சி
பேதமில்லாமல் பழகுகிறாள்
பொது உடமை கருதுகிறாள்
எடுக்கவும் கொடுக்கவும்
தாராளம் காட்டுகிறாள்
வேலியில்லை விதிகளில்லை
விருப்பம் போல வாழுகிறாள்
ஒளிவுமறைவு ஏதுமில்லை
வெட்கப்பட தேவையில்லை
கற்காலம் காட்டுகிறாள்
அறிமுக நடிகை..
காட்டுகிறாள் கண்களிலே கட்டுடலைச் சிற்றுடையில்;
மூட்டுகிறாள் உள்ளத்தில் உணர்வுகளின் நெருப்பினையும்;
கூட்டுகிறாள் வெண் திரையில் வெள்ளமெனக் கூட்ட்த்தை;
பூட்டுகிறாள் நெஞ்சமதில் தான்கொண்ட வேதனையை.;
வேதனையை ஏன் தருகிறாய்
அத்தை பெத்த அதிரசமே
அசையும் உலகின் அதிசயமே
சித்திரை மாத முழு நிலவே
விலகி விலகிச் செல்லாதே
விருப்பமென்ன சொல்லிவிடு
புலிவால் மீசையா
அணில் வால் மீசையா
மீசையே வேண்டாமா
தனிக்குடித்தனம் வேண்டுமா
துணி துவச்சிப் போடணுமா
சேவை செய்ய காத்திருக்கேன்
காலை சுற்றும் பூனைக்குட்டியை
மடியில் வைத்துக் கொள்ளம்மா
வைத்துக் கொள்ளம்மா நீயே..
என்றேன் பேத்தியிடம்..
அவ்ள் கேட்ட் குட்டிக் கறுப்பு ஆடு
சுறுசுறுப்பாய்த்
தழை மேய்ந்து கொண்டிருக்க..
இது வளர்ந்தா என்ன ஆகும்..
குட்டி நிறைய போடும்..
அப்புறம்..
அந்தக் குட்டிகள்ளாம் பெருசாகும்..
இந்தக் குட்டி ஆடு என்னாகும்..
இதுவும் பெருசாகும்..
அப்புறம்..
சாமிக்கிட்ட போகும்...
நெஜம்மாவா..
இல்லைசெல நேரம்
நாமே சாமிக்காக்க் கொடுத்துடுவோம்..
கருப்பசாமிக்கு கருப்பு ஆடு ரொம்ப்ப் பிடிக்கும்...
புத்திசாலி என நினைத்து மருமகள் சொல்ல..
பேத்தி மறுத்தாள் தீர்மானமாய்...
அப்ப இது இங்கேயே இருக்கட்டும்
என்க்கு வேண்டாம்...
வேண்டாம் வாதம் விவாதம்
வீம்பு வீண் பிடிவாதம்
வழக்கு விவகாரம் வினை
விரோதம் வெஞ்சினம் விசனம்
விபரீத விளயாட்டு வேதனை
வாழப்போவது கொஞ்ச காலம்
காலம் மாற்றுபவை ப்ல..அதில் ஒன்று..
சின்ன வயதில்
மேல மாசி வீதியில்
சித்திரைத் திருவிழாவின் போது
சாமி வருகையில்..
ரோஜா,வெள்ளை நிறங்கலந்த
மிட்டாய்.....
பள்ளியில் படிக்கும் போது
ட்ரிபிள் டேஸ்ட் என்ற மிட்டாய்
சுற்றியிருக்கும் பேப்ப்ரைச் சேர்ப்பதற்காக...
க்ல்லூரிப் போதில்
சென் ட்ரல் சினிமா அருகில்
உள்ள சந்தில்
பாம்பே மீல்ஸ் சாப்பிட்ட் போது
கொடுத்த
பால் பேடா...
வேலை சேர்ந்த போது
மனம் கவர்ந்த அலுவலகப் பெண்ணுடன்
சற்றே ஆர்வங்கலந்த் பேச்சுக்களிடையே
அசிரத்தையாய் உண்ட் குலோப் ஜாமூன்...
திரும்ணம் ஆன புதிதில்
புது மனைவி
பாலைக் கொதிக்க்க் கொதிக்க வைத்து
ம்றுபடியும் கையைச் சுட்டுக் கொண்டு
சுண்ட வைத்துக்
கிளறி
கண்களில் ஆவல் ம்ற்றும்
எதிர்பார்ப்பு மின்னக் கொடுத்து
உண்ட திரட்டுப் பால் அதன் பின்
அப்படியே நான் கொடுத்த முத்தம்...
பெண் பிறந்து பத்து வயதாகையில்
வேண்டுதலுக்காக ஸ்ரீரங்கம் சென்றதில்
அங்கு கிடைத்த அரவணை என்ற இனிப்பு
(டேஸ்ட் டிஃபரண்ட்டா இருக்குப்பா)
போன் மாதம் பத்தாம் வகுப்பில்
அதிகமார்க் வாங்கியதற்காக
அவளே செய்த சேமியா பாயசம்..
ம்ம்
காலம் செல்லச் செல்ல
என் இனிப்பின் ரசனையும்
மாறியிருக்கிற்து..
ஆனால் இனி முடியாது..
கண்ட்ரோலில் இருக்கணுமாம்
வைத்தியர் சொன்னாராம்..
சுகர் வந்தாலும் வருமாம்..
எனில்
காலைக் காப்பியிலும்
அதிகமாய் இருந்த்து
கசப்பு...!