http://i39.tinypic.com/5b49jp.jpg
Printable View
அன்பு நண்பர் வினோத் சார்
கிளைமாக்ஸ் காட்சி என் ஒருவனுக்கு பிடிக்கவில்லை என்றால் தவறு ஒன்றும் இல்லையே...
எனக்கு என்னமோ ரொம்ப நேரம் அந்த காட்சி இருப்பது போல தோன்றியது. ஒரு வேளை திரு.MGR அவர்கள் முகத்தை மூடிக்கொண்டு கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் முடியும் வரை இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை எனக்கு அப்படி தோன்றியது.
ஆனால் கிளைமாக்ஸ் காட்சி எனக்கு ரொம்ப strain அக இருந்தது பார்பதற்கு. அவ்வளவுதான் .!
அன்பு நண்பர் எஸ்வி சார்
அருமையான பாடல்.
இதன் வரிகள் அனைவருக்குமே பொருந்தும்படியான ஒன்று.
அறிவுரை சொல்பவர், அறிவுரை கேட்பவர், சாமான்யர், பாமரன், பணக்காரன், என்று சகலர்க்கும் சால பொருந்தும்..!
வித்தியாசமான ஒரு கெட்-அப் மக்கள் திலகத்தினுடயது. மிகவும் ரசிக்கும் பாடல்..!
அருமையான பாடல் வரிகள் கொண்ட சற்று வித்தியாசமான ஒரு பாடல். தங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கருதுகிறேன். இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால் தவறாக புரிந்துகொண்டு இகழ்பவர்களுக்கு உண்மையான அன்பை வலியுறுத்தும் பாடல். அதில் அறிஞர் அண்ணா அவர்களின் பல கருத்துக்கள் வரிகள் சரியான முறையில் பயன் படுத்த பட்டிருக்கும்....!
https://www.youtube.com/watch?v=0OsxqQoIW-Y
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே,
உயிர்க் கொடை பூண்ட உரவோய்!
இந்த பாடல் வரிகள் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான 'மணிமேகலை' என்னும் காப்பியத்தில் சீத்தலை சாத்தனார் இயற்றிய வரிகள்..இந்த பாடல் வரிகள் ஏழைமக்களின் இதய தெய்வம் எம்ஜிஆருக்கென்றே எழுதப்பட்டது போன்றுள்ளது..
இதன் பொருள்:
பசியைப் பொறுக்கமுடியாத ஏழைகளின் வேதனையைப் போக்குவதுதான் இந்த வாழ்க்கைக்கு உரிய உண்மையான நெறி.
அணுக்களால் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் நீ உணவு கொடுத்தால், அது அவர்களுக்கு உயிரைக் கொடுத்ததற்குச் சமம்.
ஆகவே, உன்னுடைய அறிவைச் சரியானபடி பயன்படுத்து, எல்லாருக்கும் உயிரைத் தானமாகக் கொடு!
இப்போது சொல்லுங்கள்... நம் தலைவன் குறள், காவியங்கள் காப்பியங்கள் அனைத்திலும் சொல்லப்பட்ட வாழ்க்கை நெறிமுறைப்படி வாழ்ந்த வள்ளல் என்பதற்கு சான்றுதானே..
இந்த மாபெரும் காப்பியத்தை நினைவுகூரும் வகையில் தலைவரின் உணவு பரிமாறும் காட்சியை பதிவிட்ட திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் அ .இ .அதிமுக
பொதுக்குழு உறுப்பினருமான பெங்களூர் திரு r .s .ராஜன் அவர்கள்
தந்த நிழற் படங்களும் தகவல்களும் .
நன்றி திரு ராஜன் சார்
1976 ஜனவரி இறுதியில் அன்றைய தமிழக அரசு கலைக்கப்பட்ட நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் மைசூர்
நகரில் '' நீதிக்கு தலை வணங்கு '' படபிடிப்பில் இருந்தார்.
2.2.1976 அன்று பெங்களுர் நகருக்கு வந்த மக்கள் திலகம் அவர்கள்
நேரமின்மையால் 3.2.1976 அன்று பெங்களுர் நகரில் அறிஞர் அண்ணா அவர்களின்
7வது நினைவு ஆண்டு அனுசரிக்க முடிவு செய்து அன்று இரவு
முடிவு செய்து பெங்களுர் நிர்வாகிகளுக்கு தகவல் கூறினார் .
இரவோடு இரவாக வாய் மொழி மூலமும் , மிதி வண்டி மூலமும் முக்கியமான மன்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க பட்டது .
3.2.1976 காலை 8மணியளவில் பெங்களூர் - சிவாஜி நகர்
லாவண்யா அரங்கின் அருகில் கிறிஸ்தவ ஆலய மைதானத்தில் அனுமதி பெற்று நினவு அஞ்சலி நிகழ்ச்சி
துவங்குவதற்கு முன் மக்கள் திலகம் சரியாக 8 மணிக்கு வந்து சேர்ந்தார் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழக தொண்டர்களும் யாருமே
எதிர் பார்க்காத வண்ணம் ஆயிரக்கணக்கில் குவிந்து நினைவு
நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மறக்க முடியாது .
http://i39.tinypic.com/nyzrph.jpg
மைதானத்தில் மக்கள் வெள்ளம் . மரங்கள் மீதும் , கட்டடங்கள் மீதும் மக்கள் அமர்ந்திருந்தனர் .
மக்கள் திலகம் அவர்கள் சரியாக 3 நிமிடம் பேசிவிட்டு
பின்னர் 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்திய பின்னர்
படபிடிப்புக்கு திரும்பினார் .
http://i42.tinypic.com/20iar1k.jpg
மக்கள் வெள்ளம் சூழ மக்கள் திலகம் விடை பெற்று சென்றார் .
Dear Ravichandran Sir, http://i44.tinypic.com/2q8ztxc.jpg
MANY THANKS for all the Colourful and Beautiful Photos of our beloved God M.G.R. posted by you.
Designing the Background with much STRAIN & PAIN and quoting suitable words relating to the picutre(s) shows your enthusiasm in keepihng us always in a DELIGHTFUL / CHARMING / CAPTIVATING / ENTHRALLINIG / ENJOYABLE / PLEASANT / BEGUILING / FASCINATING Manner. .
I suggest you to bring out all these colourful picturtes, in a Book Format, in a different mode and style and we can keep them as an ASSET / TREASURY.
I know this is a difficult task but I am sure and quite confidednt that you will do it in a perfect way and comportment.
Ever Yours
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
Dear Vinoth Sir,
What a Lovely Pictures ? They are all very rare photos.
Every now and then, our beloved God proves that he is always approachable and mingle with public as well as between his Fans.
Addressing the gathering, wherever it may be, whatever the crowd whether it is small group or huge, he was the one who came forward to speak before the Audience without hesitation and kept the Mob in a happy situation. It shows how much concern he had towards the Public & his Fans.
By way of his Humanitarian Approach and Kindness, he touched the hearts of the People of Tamil Nadu and thus live in their Hearts ever.
I am extremely happy to note that you were also in this crowd.
Thank you very much Vinoth Sir, for posting such nice images.
Please convey our (on behalf of all MGR FANS/DEVOTEES who post in this Thread) sincere thanks to Mr. R.S. Rajan. Ever Yours
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan