10 நாட்களாக அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடும் வசந்த மாளிகை........
Attachment 6000
Attachment 6001
Printable View
10 நாட்களாக அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடும் வசந்த மாளிகை........
Attachment 6000
Attachment 6001
July 21 முதல் மறு மறு மறு வௌியீடு கண்ட வசந்த மாளிகை
இரண்டாவது வார கொண்டாட்டம் திருச்சி.
Attachment 6003
Attachment 6004
Attachment 6005
Attachment 6006
Attachment 6007
July 21 முதல் மறு மறு மறு வௌியீடு கண்ட வசந்த மாளிகை
3வது வாரம் .
Attachment 6008
நேற்று நியூஸ் 7 சேனலில் ஒளி பரப்பான மறைந்த நகைச்சுவை நடிகர் கே.பி.சந்திரபாபு அவர்களை பற்றிய செய்தி தொகுப்பில் பல நடந்த உண்மைகளை நேரிடையாக எடுத்துச் சொன்னார்கள்,
எம்ஜிஆர் ஐ வைத்து "மாடி வீட்டு ஏழை" திரைப்படம் தயாரித்தப் போது 3000 அடிகள் வரை வளர்ந்த பின் எம்ஜிஆர் பணப்பிரட்சனை செய்ததால் தனது கிரீன்வேஸ் சாலை பங்களாவை அடமானம் வைத்து பணம் கொடுத்தும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற எம்ஜிஆர் ஒத்துழைப்பு கிடைக்காததால் கோபமடைந்த சந்திரபாபு. அதுவரை முடித்து வைத்து இருந்த பிளிம் ரோலையும் தீயிட்டு கொளுத்தி மீள முடியாத கடன் சுமையால் சிக்கி போதைக்கு அடிமையாகி விட்டார் என குறிப்பிட்டதோடு,..
கடைசி காலங்களில் நடிகர் திலகம் சிவாஜி உதவியதையும் ராஜா,நீதி,அவன் தான் மனிதன் என பட வாய்ப்புகள் கொடுத்தார் எனவும்
கே.பி.சந்திரபாபு அவர்கள் இறந்த போது நடிகர் திலகம் வெளி ஊரில் ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு இருந்ததாகவும் உடனடியாக அந்த விழாவை ரத்து செய்து விட்டு சென்னை வந்து சந்திரபாபு அவர்களது உடலை நடிகர் சங்கம் கட்டிடத்தில் வைத்து பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு வழி வகுத்து பெருமை படுத்தி தி.நகரிலிருந்து ஜெமினி பாலம் வழியாக சாந்தோம் சர்ச் வரையிலான இறுதி யாத்திரையை உடனிருந்தே நடத்தினார் என்ற முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட்டார்கள்,
இனி வரும் காலங்களில் ஊடகங்கள் உண்மை செய்திகளை கொடுப்பார்கள் என நம்பலாம்,
இதற்கு முன் நடிகர் திரு ராஜேஷ் அவர்கள் நடிகர் திலகம் தேர்தலில் தோற்றதற்கு பின்னால் இருந்த உண்மைகளை டிவி நிகழ்ச்சியில் எடுத்துச் சொல்லி இருந்தார் அதாவது "நடிகர் திலகம் அமெரிக்க மருத்துவமனையில் எம்ஜிஆர் க்கு கொடுத்து இருந்த வாக்குறுதியால் அதைக் காப்பற்ற வேண்டி தெரிந்தே தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்தார்" என புரியும் படி எடுத்துச் சொல்லி இருந்தார்,
பின்னர் சில நாட்கள் கழித்து சென்னையில் ரஷ்யன் கல்ச்சுரல் அகாடமியில் அதை நினைவு படுத்தும் போது " இது போன்ற எத்தனையோ நிகழ்வுகள் இருக்கிறது முன்னரெல்லாம் " நாம் அதை குறிப்பிட்டு பேசும்போது எல்லாம் அரசியல்வாதிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்து விடும் அதனால் எதையும் எடுத்துச் சொல்லுவதை பல வருடங்களுக்கு மேலாக விட்டு விட்டேன்,
ஆனால் தற்போது எந்த எதிர்ப்பும் வரவில்லை
உண்மையை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டார்கள் என நினைக்கிறேன் இனி நாம் தொடரலாம்,
இவ்வாறு கூறி இருந்தார்,,
Attachment 6009
Thanks Sekar Parasuram (Nadigarthilagam Fans F B)
July 21 முதல் மறு மறு மறு வௌியீடு கண்ட வசந்த மாளிகை
20 வது நாள்....
Attachment 6010
Attachment 6011
Attachment 6012
Attachment 6013
விடாது கருப்பு...
அதுபோல விடாது வசந்த மாளிகை..
திருச்சி எந்த ஊருக்கும் குறைந்தது அல்ல...
இதோ வரும் வெள்ளிக்கிழமை 11.8.2023 முதல் திருச்சி அருணா (அருமையான ) தியேட்டரில் இணைந்து 4 வது வாரமாக ஓட இருக்கிறது, அது முடிந்து இன்னும் சில தியேட்டர்கள் காத்து கொண்டு இருக்கின்றன..
வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கும் ஆருயிர் அண்ணன் சிவாஜியின் வசந்த மாளிகை..
நடிகர் திலகம் சிவாஜியுடன் வசந்தமாளிகை வாணிஸ்ரீ இணைந்து நடிக்கும் காதல் காவியம் காண தயாராகுங்கள்..
திருச்சி எம். சீனிவாசன்
நன்றி திருச்சி எம். சீனிவாசன்
Attachment 6014
நடிகர் திலகத்தின் மகன் ராம்குமார் அவர்களின் பேட்டி.
இலங்கையில் வெளிவரும் பத்திரிகையில் இருந்து...
Attachment 6015
ஜோலார்பேட்டை மஞ்சு திரையரங்கில்
மறு மறு மறு வெளியீடு கண்ட வசந்த மாளிகையை காணவந்த மக்கள் கூட்டம்...
Attachment 6016
Attachment 6017
Attachment 6018
Attachment 6019
யார் இந்த எம்ஜிஆர்??? கலைஞரை விமர்சிக்கும்
இளம் தலைமுறையினரே படித்து தெரிந்துகொள்ளுங்கள்...!!!
யார் இந்த MGR?
மறைக்கப்பட்ட உண்மைகள்
கலைஞருக்கு எதிரா சர்க்காரியா கமிசன் மட்டுமே.ஆனா MGR க்கு எதிரா பால்கமிசன், ரே கமிசன் எரிசாராய முறைகேடு, மருத்துவ கல்லூரி சீட்டு முறைகேடு, பால்டிகா கப்பல் நிலக்கரி பேர முறைகேடு,ராபின் மெயின் முறைகேடு, பாஸிச அடக்குமுறை ஆட்சி, ஏகப்பட்ட துப்பாக்கி சூடுகள், பொருளாதார நாசம், பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு, நீதித்துறை மிரட்டல் என எண்ணற்ற குற்றச்சாட்டுகள்.
ஆனால் எதுவுமே பேசப்படவில்லையே ஏன்?
இவர் சினிமாவில் நடிகராக உத்தமர், வீரர், மக்கள் போராளி, குடியை எதிர்ப்பவர் என பல வேசங்களில் வலம் வந்தவர். ஆனால் உண்மையில் அவர் யார்?
திமுகவின் பொருளாளராக அனைத்து அதிகாரத்துடன் இருந்த MGR கணக்கு கேட்டாராம். ஆனா கலைஞர் கணக்கு தரவில்லையாம். அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்களாம்.
வேடிக்கையா இருக்குமே
ஆனால் ஊரெல்லாம் இதே பேச்சுதான். எல்லோரும் நம்பினர்.
ஆனா இந்திராவின் மிரட்டல்தான் MGR ரின் இந்த பேச்சுக்கும் நடத்தைக்கும் காரணம்.
MGR ஒன்னாம் நம்பர் பயந்தாங்கொள்ளி. மத்தியில் யார் பிரதமரோ யாரிடம் வருமானவரித்துறை இருக்கிறதோ அவர்களை கண்டாலே நடுக்கம்தான். அப்படித்தான் இந்திராவின் அடிமையாக மாறி திமுகவை பிரித்தார்.
MGR ன் அடிமைத்தனத்தால் கச்சத்தீவை இந்திரா கொடுத்தபோது திமுக மட்டுமே அதை எதிர்த்தது. அதிமுக அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டது. சட்டமன்ற தீர்மானத்தை கூட ஆதரிக்கவில்லை.
2016 ல் ஜெ சட்டமன்றத்தில் கச்சத்தீவை பற்றி வாய்கிழிய பேசியபோது MGR ன் கோழைத்தனத்தை பற்றி பேசாதது ஏன்?
மேலும் ஜெ பேசும்போது 2008 ல் தான் கச்சத்தீவை மீட்க வழக்கு போட்டதாக சொல்லியிருக்கிறார்.
1977 ல் ஆட்சிக்கு வந்த MGR ஏன் வழக்கு போடவில்லை?
1991 இல் ஜெ ஆட்சிக்கு வந்ததும் ஏன் வழக்கு போடவில்லை?
ஏனென்றால் இதெல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை என்பது ஜெ க்கு நன்கு தெரியும். இனி கச்சத்தீவை மீட்க வழியே இல்லை.
1974 ல் திமுகவுடன் காங்கிரஸ் மற்றும் அதிமுக சேர்ந்து மத்திய அரசின் முடிவை எதிர்த்திருந்தால் அப்போதைய கச்சத்தீவு தாரை வார்ப்பை தடுத்திருக்கலாம்.
ஆனா அப்போது பொத்திக்கொண்டு இருந்த அதிமுகவும் ஜெ யும் இன்று வாய்கிழிய பேசுவது உச்சகட்ட நகைச்சுவை
1976 இல் எமர்ஜென்சி நேரத்தில் கலைஞர் மீது எண்ணிலா வழக்குகளை போட்டார் இந்திரா.
அவரது நோக்கம் கலைஞரை ஊழல்வாதியாக ஒரு பிம்பத்தை உருவாக்குவதே.
அத்தனை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் 2G விவகாரத்தை
எப்படி ஊதி பெருக்கினார்களோ அதே மாதிரிதான் அன்றும் அவாள் சார்பு பத்திரிக்கைகள் தினம் தினம் சர்க்காரியா விசாரணை செய்திகளை பரப்பின. எமர்ஜென்சி என்பதால் ஒரு தரப்பான கலைஞருக்கு எதிராக செய்திகள் பரப்பப்பட்டது.
கலைஞர் தரப்பு நியாயங்கள் மக்களுக்கு போய் சேராமல் பார்த்துக்கொண்டன.
மக்கள் குறிப்பாக அடித்தட்டு மக்கள் அப்படியே நம்பினார்கள். இன்றும் கலைஞர் மீது அன்று குத்தப்பட்ட ஊழல் முத்திரை விலகவில்லை.
ஆனால் இறுதிவரை சர்க்காரியா கமிசனால் எதையும் நிரூபிக்கமுடியவில்லை. ஆனால் மக்களிடத்தில் திமுக மீது வெறுப்பு வந்தது.
விளைவு... 1977 ல் அதிமுக + இந்திரா கூட்டணி பெரும் வெற்றி.
ஆனால் மத்தியில் காங்கிரஸ் தோல்வி.
வழக்கம்போல வடிகட்டிய கோழை MGR மத்திய அரசு பக்கம் சாய்ந்ததுடன் தனித்து நின்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார்.
மத்திய அரசுக்கு பயந்துக்கொண்டு தஞ்சை MP இடைத் தேர்தலில் இந்திரா போட்டியிட விரும்ப MGR அதை ஏற்கவில்லை.
இந்திரா கர்நாடகா சிக்மக்ளூரில் நின்று வென்றார்.
மத்தியஅரசின் நிர்ப்பந்தம் காரணமாக தன்னை நிராகரித்த கோழை MGR மீது கடும் கோபம் கொண்ட இந்திரா தான் கலைஞருக்கு செய்த கொடுமைகளுக்கு வருந்தி கலைஞருக்கு தூது அனுப்பி பின்பு மெரினாவில் மக்களிடம் தனது ஆட்சியின் எமெர்ஜென்சி கால தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்க திமுக- காங்கிரஸ் உறவு ஏற்பட்டு 1980 ல் தமிழகத்தில் ஒரு இடம் தவிர அனைத்து MP தொகுதிகளிலும்
அந்த கூட்டணி வென்றது.
ஆனால் அதே ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் MGR மீண்டும் வெல்ல அதன் பிறகே MGR ன் உண்மை முகம் வெளியானது.
1980 தேர்தலில் வென்ற பிறகுதான் எம்ஜிஆர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ரத்து செய்தார். சாராயக் கடைகளை கொண்டு வந்தார். அந்த சாராயக்கடைகள் ஏலம் எடுப்பதன் மூலம் அந்த வருவாய் கட்சிக்காரர்களுக்கே இருக்க வேண்டும் என்று கருதினார்.
அதற்காக சாராயக்கடை ஏலம் கோருபவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர் சீட்டு விவரங்களை குறிக்க வேண்டும். அவர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு எழுதப்படாத ஆணை பிறப்பித்தார். அது முறையாக நடக்கிறதா என்பதை உளவுத்துறை மூலம் கண்காணித்து நடைமுறைப்படுத்தவும் செய்தார்
சாராயக்கடைகள் திறக்கப்பட்ட வேளை. சாராயக் கம்பெனி நடத்த ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கே அனுமதி வழங்கப்பட்டது.
1975-80 வரை அரசின் மொத்த வரி வருமானத்தில் கலால் வரியின் பங்களிப்பு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே.
1980-81 அஇஅதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மதுப் பயன்பாட்டின் மீதான தடையை நீக்கியது. இதனால் குறிப்பிடத்தகுந்த அளவில் கலால் வரி வருவாய் அதிகரித்தது.
மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் குறிப்பிடத்தகுந்த அளவாகக் கலால் வரியின் மூலம் 13.9 சதவிகித வருமானம் 1980-85 வருட காலத்தில் பெறப்பட்டது.
இந்தக் கலால் வரியில் 80 சதவிகிதம் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பரவலாக அருந்தும் நாட்டுச் சரக்குகளான பட்டைச் சாராயம், கள் மூலம் பெறப்பட்டது என்பது பெரும்பாலான கலால் வரியை இவர்களே செலுத்தினார்கள் என்பதை விளக்குகிறது.
இந்தக் கலால் வரி வருமானமானது 1981-82 காலத்தில் ரூ.110 கோடியில் இருந்து 1984-85 வருட காலத்தில் ரூ.202 கோடியாக உயர்ந்து கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது.
இதெல்லாமே MGR ரால் ஏழைகள் உழைப்பு எப்படி உறிஞ்சப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள்
எம்.ஜி.ஆரின் தயவால் பணக்காரர்கள் பெற்றது அதிகம். பட்ஜெட் புள்ளிவிவரங்கள் சொல்வதைவிட அதிகமாகவே அவர்கள் பயன்பெற்றார்கள்
சட்ட ரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் பல கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் சாராய உற்பத்தியாளர்கள், நகர்ப்புற ரியல் எஸ்டேட் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் தனிப்பட்ட நலன்களுக்காகக் கைமாற்றிக் கொண்டார்கள்.
MGR ரின் அஇஅதிமுக அரசு முறையற்ற மோசடியான மதுக் கொள்கையை வகுத்தது
தமிழக அரசின் ஒட்டுமொத்த மது விற்பனையைக் கவனித்துக்கொள்ள டாஸ்மாக் அமைப்பு
ஏற்படுத்தப்பட்டது.
இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுவகைகள் (IMFLs) விநியோகம் செய்யும் மது உற்பத்தியாளர்களுக்கே மது விலையை நிர்ணயிக்கும் உரிமையை வழங்கியது.
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே IMFL மதுவகைக்கு உற்பத்தியாளர்களுக்குப் பதிலாக டாஸ்மாக் வழியாகத் தமிழக அரசே கலால் வரி செலுத்தியது.
சுத்திகரிக்கப்பட்ட ஸ்பிரிட் மீதான எல்லா வகையிலான கலால் வரியிலிருந்தும் மது உற்பத்தியாளர்களுக்குத் தமிழக அரசு வரிவிலக்கு வழங்கியிருந்தது.
இவை அனைத்தும் தமிழக அரசின் கஜானாவுக்கு ஒவ்வொரு வருடத்துக்கும் 100 கோடி ரூபாய் என்கிற அளவில் ஏழு வருடங்கள் தொடர்ந்து பெருத்த வரி இழப்பை உண்டு செய்தன.
லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த அரசு நிறுவனங்கள் தனியாருக்கு அற்பத் தொகைக்குக் கைமாற்றப்பட்டன மற்றும் அரசுக்குச் சொந்தமான நகர்ப்புற நிலங்கள் மிக மலிவான தொகைக்குத் தனிப்பட்ட நபர்களின் நலன்களுக்காக வழங்கப்பட்டன.
1977-85 இடைப்பட்ட காலத்தில் அடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 26.70 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அஇஅதிமுக அரசு 17.04 லட்சம் நிதியைச் செலவு செய்யாமலும், 3.68 லட்சம் நிதியைத் தேவையில்லை என்றும் திருப்பிச் செலுத்தியது.
1983இல் இருந்து விவசாயக் கூலிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைத் திருத்தியமைக்கவேயில்லை. ஒவ்வோர் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஊதியத்தை ஏற்ற வேண்டும் என்கிற மத்திய அரசின் அழுத்தத்துக்குப் பிறகும் அரசு இப்படி நடந்துகொண்டது.
வறுமைக் கோட்டுக்குக் கீழே தமிழகத்தின் 40 சதவிகித மக்கள் வாடிக்கொண்டிருந்தார்கள். 1977-87 வரை அவர்களின் நிலைமை முன்னேறவே இல்லை.
மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை அளவு மேலும் அதிகரித்தது.1975- 83–க்கு இடைப்பட்ட காலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 86 சதவிகிதம் அதிகரித்தது.
இது ஒட்டுமொத்த தேசிய அளவான 17.8 சதவிகிதத்தை விட மிகவும் அதிகமாகும்.
நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 1977-78 – 1983 காலத்தில் அகில இந்திய அளவில் குறைந்தபோது தமிழகத்தில் அதிகரித்தது.
விவசாயிகளின் தோழனாக பல படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடன் வாகைக்குளத்தில் விவசாயிகளைச் சுட்டுக் கொன்றார்.
மீனவனின் நண்பனாக படகோட்டியில் நடித்த எம்.ஜி.ஆர் அப்பாவி மீனவர்களை சுட்டு வீழ்த்தினார்.
வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் கொடுமையான நிலச்சுவான்தார்களை எதிர்த்துப் போராடிய மார்க்சிய- லெனினிய அமைப்பைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களை துடிக்க துடிக்க என்கவுன்டர் செய்தார்.
ஒரு வருடத்திற்கும் மேலே முதல் தகவல் அறிக்கையே தராமல் 1.5 லட்சம் மக்களை சிறையில் அடைத்து சித்தரவதை செய்தார்.
எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், இயக்கவாதிகள் இப்படி அனைத்து தரப்பினருக்கும் அடக்குமுறை அனுபவத்தை தந்தது
இதற்காக குண்டாஸ் போன்ற புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன
காவல்துறைக்கு தன்னிச்சையான அதிகாரம் கொடுக்கப்பட்டு அரசை விமர்சிப்பவர்கள் ஒடுக்கப்பட்டனர்.
விசாரணைக் கைதிகளின் மரணம் வருடம்தோறும் அதிகரித்தது.
1980-களில் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலம் தழுவிய கடையடைப்பு நடத்தியது. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், பல்வேறு காலகட்டங்களில் 14 விவசாயிகள் பலியாகினர்.
* 1980 டிசம்பர் 31-ம் தேதி, குருஞ்சாக்குளம் விவசாயப் போராட்டத்தின்போது, 8 விவசாயிகள் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகினர்.
* 1985-ம் ஆண்டு, சென்னையில் மீனவர் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், 3 மீனவர்கள் பலியானார்கள். பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் பலியானார்கள்.
*1987 வன்னியர் சங்க போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் 21 பேர்
1980-ல் வடஆற்காடு மற்றும் தர்மபுரி மாவட்டகளில் மார்க்சிய லெனினிய கட்சியைசேர்ந்த 15 பேரும் 1981-ல் நான்குபேரும் எங்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளை உயர் நீதிமன்றம் கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் விமர்சிக்கும் திரைப்படங்களை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
1981-ல் பத்திரிக்கைகளை ஒடுக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்பட்டது.
எந்த வகையிலும் விமர்சனம் என்பது இல்லாமல் பார்த்துக்கொண்டது எம்ஜிஆர் அரசு. உதாரணமாக கொமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் தமிழக கிராமங்களின் அவலத்தை சொல்லும் நாடகமாகும். இந்த நாடகம் தணிக்கை செய்யப்பட்டது.
இதைத் தழுவி எடுக்கப்பட்ட K. பாலசந்தரின் ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்தை தடைசெய்ய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.
மத்திய அரசு தடைவிதிக்காத் சூழலில் காவல்துறை மூலம் அத்திரைப்படம் ஓடும் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர்....
திட்டங்கள் கூட தொடர்ந்து 13 வருடம் ஆட்சியில் இருந்தும் சத்துணவை தவிர வேறு எதையும் பெரிதாக கொண்டு வர வில்லை என்பதும் உண்மை......
மக்களின் ஆதரவிருந்தும் ‘தண்ணீர் தண்ணீர்’ ஒரு சில வாரங்களிலே திரையிலிருந்து விலகியது....
மொத்தத்தில் அடக்குமுறையாலும் பார்ப்பணீயத்தாலும் மூடி மறைக்கப்பட்ட மிக மிக மோசமானவர் தான் இந்த ம.கோ.இராமச்சந்திரன்.......
அதில் சில ஆதாரங்கள்.......
எரிசாராய ஊழலும் ரே கமிசனும்**
ரே கமிஷன் பற்றி வாசிக்க - https://www.facebook.com/kilimookk.....42192422667272
பால் கமிஷன் பற்றி வாசிக்க
https://www.facebook.com/kilimookk.....42733099279871
எம்ஜிஆரின் பால்டிகா நிலக்கரி கப்பல் பேர ஊழலும் மருத்துவ சீட்டு முறைகேடும்.
https://www.indiatoday.in/.../19791215-dmk-leader...
MGR ம் ஈழமும்
எம்ஜிஆர் புலிகளை ஆதரிக்க காரணம் இரண்டு
1) கலைஞர் சபாரத்திணத்தை ஆதரித்தார். அவருக்கு எதிரா புலிகளை ஆதரித்தார்.
2) இந்திரா அப்போது ஈழப்போராளிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி தந்தார்
இல்லாவிடில் பொத்திக்கொண்டு
மௌனமாகத்தான் இருந்திருப்பார்.
எம்ஜிஆர் பணம் கொடுத்தார் என்பது உண்மைதான்
ஆனால் மத்திய அரசு ஒப்புதல் பெற்றுதான் கொடுத்தார்.
சார்க் மாநாட்டுக்கு ஜெயவர்த்தனே வந்தபோது சென்னையில் இருந்த பிரபாகரனை வீட்டுகாவலில் வைத்தது எம்ஜிஆர்.
டெல்லி அசோகோ ஹோட்டல் விவகாரத்தில் பிரபாகரன் எம்ஜிஆரிடம் உதவி கேட்டார் எம்ஜிஆர் கண்டுக்கொள்ளவில்லை.
1987இல் ராஜிவ் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பிய போதும், 1987 செப்டம்பரில் 20க்கும் அதிகமான போராளிகளை இந்திய கடற்படை சிங்கள அரசிடம் ஒப்படைத்த போதும், திலிபன் உண்ணாவிரதம் இருந்து மறைந்த போதும், தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது எம்ஜிஆர்தான்
https://www.indiatoday.in/.../198707...er-10-years-of...
Ray commission உதயம் ஏன்?
கலைஞரை ஊழல்வாதி என முத்திரை குத்திய உத்தமர் எம்ஜியாரின் சாராய ஊழல் பற்றிய முழு விபரங்கள்
https://www.indiatoday.in/.../198210...er-hc-judge-to...
பதிவு - Rajkumar Narasinghan
Thanks திராவிட ஆய்வு முகநூல்
Today - Malai Malar / Chennai
சிவாஜி படத்திற்கு 159 தேங்காய் மாலை.
Attachment 6020
✅வெற்றிமுரசு கொட்டும் 3 வது வாரம் திருப்பூரில் மணீஸ் தியேட்டரில் கலை உலக முதல்வர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வசந்தமாளிகை
அன்புடன்
கவிஞர் திருப்பூர்
ப சிவகுமார்பிரபு
அகில இந்திய சிவாஜி மன்ற செயற்குழு உறுப்பினர் திருப்பூர் மாவட்ட சிவாஜி மன்ற செயலாளர்
Attachment 6021
Attachment 6022
Attachment 6023
Attachment 6024
நன்றி ப சிவகுமார்பிரபு
July 21 முதல் மறு மறு மறு வௌியீடு கண்ட வசந்த மாளிகை
இணைந்து தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறது.
Attachment 6025
Attachment 6026
Attachment 6027
July 21 முதல் மறு மறு மறு வௌியீடு கண்ட வசந்த மாளிகை
இணைந்து தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறது.
Attachment 6028
Attachment 6029
Attachment 6030
July 21 முதல் மறு மறு மறு வௌியீடு கண்ட வசந்த மாளிகை
இணைந்து தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறது.
Attachment 6031
Attachment 6032
13/08/2023 பத்திரிகையில்....
Attachment 6033
அறிந்தும் அறியாதமாதிரியும் தெரிந்தும் தெரியாதமாதிரியும்
எழுதுவதென்பது வாத்தியார் ரசிகர்களின் கைங்கரியம்.
நடிகர் திலகம் செய்த தான தர்மங்கள் இன்றைய மதிப்பில்
சுமார் 310 கோடிக்கு மேல் என்பதை திரு மருதுமோகன் அவர்கள்
தன் ஆய்வின்மூலம் கண்டறிந்ததை அவர் வெளியிட்ட நடிகர்திலகம் பற்றிய
புத்தகத்தில் விரிவாக வெளியிட்டிருந்தார். அதுமடடுமல்லாமல்
வேறு பலரும் முகநூல் மற்றும் ரீ வீ சேனல்களிலெல்லாம்
நடிகர் திலகம் செய்த தான தர்மங்கள் பற்றி விரிவாக புத்திரிகைகளில்
வெளிவந்த சேய்தி ஆதாரங்களுடன் வெளிக்கொண்டுவந்திருந்தார்கள்.
இதனை முழுத்தமிழகமுமே கண்டு ஆச்சரியத்தில் மூழ்கியது.
எதிரிகள் திட்டமிட்டே சிவாஜியை கஞ்சன் என்று அவதூறு பரப்பினார்கள்
என்பதை பொது மக்கள் நன்கு புரிந்துகொண்டார்கள்.
ஆனால் வாத்தியார் ரசிகர்கள் நிம்மதி இழந்து விட்டார்கள்.
தங்கள் வாத்தியார்தான் கொடை வள்ளல் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு
தங்கள் வாத்தியாரை விட தங்களுக்கு கஞ்சன் என தங்கள் தலைகளால்
சொல்லப்பட்ட நடிகர் திலகம் தங்கள் வாத்தியைவிட அதிகம் தான தர்மம்
செய்துள்ளர் என்பதை ஜீரணிக்கமுடியாமல் தவிக்கிறார்கள்.
முடிவு மீண்டும் அதே பாணி கஞ்சன் என்ற புராணம்.
நடிப்பு பேரரசர் என்று தங்களுக்கு தாங்கனே பட்டத்தை சூட்டிக் கொண்டு
எழுதுவதெல்லாம் பொய்க்கு மேல் பொய்.
அண்மையில் ஒரு பழைய பத்திரிகை செய்தி கிடைத்தது.
நடிகர் திலகம் அவர்கள் பற்றி அவரது மனைவி கமலா அம்மா அவர்கள்
சொன்னது.வீடு தேடிவருபவர்களை வெறும் வயிற்றுடன் அனுப்பக்கூடாது
என்பது அவர் கட்டளை.இப்படி கூறியவரைத்தான் மட ஜென்மங்கள்
கஞசன் என கதை கட்டி சந்தோசப்பட்டார்களா?மற்றொருவரை உயர்த்த
இன்னொருவரை தாழ்த்துவதா?கபோதிகள்.ஆண்டவன் ஒருவன் இருக்கிறான்.
அவன் எல்லோரையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறான்.
நிச்சயம் இப்படி சொல்பவர்களுக்கு பலாபலன் கிடைக்கும்.
Attachment 6034
Sivaji Ganesan -என்னும் கர்ணன்! கஞ்சனாக மாற்றியவர்கள் யார் ? Jeeva Cinema
https://youtu.be/OM3PCbj5PIg?si=lsXvRsr4URRXPdxs
Thanks Jeeva cinema
சிவாஜி செய்திருக்கிறாரா என்ற கேள்விதான் சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்த கேள்வி.இப்போது பரவலாக பேசப்படும் விஷயங்களில் முக்கியமானதாக இணையதளங்களில் பரவும் செய்தி என்னவென்றால் சிவாஜி அளவுக்கு யாரும் செய்யவில்லை என்பதுதான்.சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த அவருடைய நன்கொடை செய்திகள் விஸ்வரூபமாக எடுத்து நிற்கின்றது.ஏன் பொதுமக்களுக்கு தெரியவில்லை என்பதற்கு இரண்டு காரணங்கள்.
ஒன்று எந்த மீடியாக்களுக்கும் தெரியாமல் தான் சிவாஜி இவற்றை செய்துள்ளார்.இரண்டாவது சிவாஜி செய்ததை மக்களிடம் மறைத்து கழக ஆட்சிகள் பரப்பிய பொய்யுரைகள்.
அவ்வளவு ஏன் சிவாஜி சார்ந்த காங்கிரஸ் கட்சியே இதை பேசியதில்லை .
இவர்கள் எல்லாம் சிவாஜி செய்ததை ஏன் மறைக்க வேண்டும்?
காரணம் அவருடைய வளர்ச்சி .சிவாஜி தன் நடிப்பை தவிர வேறு எதையும் நினைத்து பார்த்ததில்லை .
வளர்ச்சியானது அப்படித்தான் வந்தது.தன் வளர்ச்சிக்காக சிவாஜி ஒன்றும் செய்யாமலேயே அவருடைய புகழ் அப்படி வளர்ந்துள்ளது என்றால் இந்த நன்கொடைகள் விஷயங்களும் மக்களிடம் சேர்ந்தால் இன்னும் எப்படி புகழ் சேரும் என்ற கணக்கை போட்டவர்கள் தான் கழக ஆட்சியாளர்கள்.இது நேரிடையாக அவர்களின் நெஞ்சில் எழுந்த எண்ணங்களும் ,மறைமுகமாக செயலாற்றி மக்களுக்கு மறைத்த உண்மைகளும் ஆகும்.முக்கால்வாசி பத்திரிக்கைககள் கழக சார்ந்தவையாக இருந்ததால் அவர்கள் தெரிந்திருந்தாலும் அதை இருட்டடிப்பு செய்வதையே குறிக்கோளாக கொண்டவர்கள்.சிவாஜியின் வளர்ச்சியை காங்கிரஸ்காரர்களே விரும்பாத போது அவர்களை சொல்லி என்ன பயன்?
சிவாஜி மட்டும் அவர்கள் பாணியிலேயே இதை அரசியல் ஆக்கி இருந்தால் இந்த கருத்துகளுக்கு இடமே இருந்திருக்காது.ஆனால் அவ்வாறு விளம்பரம் செய்து தான தர்மங்களை செய்து அதனால் வரும் பெயரை சிவாஜி என்றும் விரும்பியதில்லை என்பதுதான் மிக மிக முக்கிய காரணம்.
தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கேற்ப அந்த விஷயங்கள் உலகிற்கு தெரிய வருகின்றன.
நல்லது மறைந்து போனால் அதற்கு அர்த்தமே இல்லையே!
சமீபகாலங்களில் சிவாஜி செய்த தான தருமங்கள் பற்றிய செய்திகளும் வீடியோக்களும் பெரும்பான்மையாக சொல்லப்பட்டு வருகின்றன.
அவர்களுக்கெல்லாம் இதுநாள் வரை தெரியாமல் இருந்த செய்திகள் இப்போது தெரியும் போது அது மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுப்பதாக இருக்கிறது.இத்தனை காலமும் இந்த விஷயங்களை எப்படி மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதை அதிர்ச்சியாகவே சொல்கிறார்கள்.
கூட்டிக் கழித்து பார்த்தால் சிவாஜி செய்ததை பார்க்கும்போது சிவாஜியளவுக்கு மற்ற யாரும் அந்த அளவுக்கு செய்யவில்லை என்ற உண்மை வெளிவந்து கொண்டு இருக்கின்றது.
செந்தில்வேல் சிவராஜ்.
Thanks செந்தில்வேல் சிவராஜ். Face book
நடிகர் திலகத்தின் பெயரால் அமைந்துள்ள சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இந்தக் கட்டிடம் எங்கு அமைந்துள்ளது.......?
இந்த கட்டிடம் என்ன உபயோகத்தில் உள்ளது.....?
நடிகர் திலகத்திற்கு இந்த பெருமையை வழங்கியது யார்?
Attachment 6035
Thanks G .Laksmanan (sivaji murasu)
மதுரை ராமேஸ்வரம் சாலையில் விரகனூர் என்ற இடத்தில் அமைந்துள்ள வேலம்மாள் பொறியியற் கல்லூரியில்
அமைந்துள்ள கட்டிடம் என்பது சரியான பதில்.....இதனை அமைத்தவர் வேலம்மாள் கல்விக்குழு தலைவர்
வி எம் முத்துராமலிங்கம் அவர்கள்....
நடிகர் திலகத்திற்கு இந்த அளவுக்கு பெருமையை தந்த காரணம்........
தேவர் மகன் படத்தில் வரும்
வசனம் போல்.......
விதை நடிகர் திலகம் போட்டது......
முதன் முதலில் சென்னை நகரில் வேலம்மாள் நர்சரி பள்ளி ஆரம்பிக்க அன்றைய முதல்வர் எம் ஜி ஆர் அவர்களிடம் சொல்லி அனுமதி பெற்றுத் தந்தவர் நடிகர் திலகம் தான்...
நடிகர் திலகம் போட்ட விதை இன்று ஆலமரமாய் வளர்ந்து பல லட்சக்கணக்கான பொறியியல் மருத்துவ மாணவர்களை உருவாக்கி தந்து கொண்டிருக்கிறது.............
பதிவில் கலந்து கொண்டு விடையளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.......
என்றும் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் உங்களோடு நானும் ...நன்றி
Attachment 6036
Thanks G .Laksmanan (நடிகர் திலகம் சிவாஜி ரசிக நந்தவனப் பூக்கள்)
Attachment 6037
படம் சொல்லும் கதை..............
சிவாஜி கணேசன் தன் துணைவியாரோடு தஞ்சைக்கு வருகிறார்........
காரில் போய்க் கொண்டு இருக்கும் போது ஒரு தெரு முனையில் வண்டியை நிறுத்தச் சொல்லி கட்டளையிடுகிறார்................
வாகனம் செல்ல முடியாத அளவுக்கு அது மிகவும் குறுகிய அளவுள்ள தெரு (சந்து). எனவே
வண்டியிலிருந்து இறங்கி தெருவில் நடந்து செல்கிறார் தன் துணைவியாருடன்...............
ஒரு சாதாரண குடிசை முன் நிற்கிறார்.......
சிவாஜி வந்ததையறிந்து தெருவில் மக்களின் ஆரவாரங்கள்........
ஏதோ சத்தம் கேட்கிறதே என எண்ணி வீட்டிற்குள் இருந்து ஒருவர் எட்டி பார்க்கிறார்......
தன் வீட்டின் வாசலில் வந்து நிற்கும் நடிகர் திலகத்தையும் அவர் மனைவியையும் பார்த்து வார்த்தைகள் வராமல் தவிக்கிறார்.....
கண்களில் ஆனந்தக் கண்ணீர்........
"அண்ணே வாங்கண்ணே" என்கிறார்........
அதற்குள் வீட்டிற்குள் இருந்து பத்து நாட்களுக்கு முன் மணமுடித்த தம்பதியினர் வருகிறார்கள்...
அவர்கள் இருவரும் காலில் விழுந்து வணங்குகிறார்கள்....
தம்பதி சகிதம் ஆசி வழங்குகிறார்கள்.......
டிரைவர் இரண்டு பைகளை கொண்டு வந்து தருகிறார்...அதனை மணமக்கள் கையிலே கொடுக்கிறார் கமலாம்மாள்...........
இரண்டொரு வார்த்தை பேசி விட்டு நகர்கிறார்கள்.......
அப்பொழுது குடிசை வீட்டின் உரிமையாளர் நடிகர் திலகத்திடம் "அண்ணே ஏதாவது சாப்பிட்டு விட்டு போங்க" என்று சொல்கிறார்... ............
உடனே தன் மனையாளை பார்க்கிறார்.......
தண்ணீர் வாங்கி கைகளை அலம்பி விட்டு குனிந்து குடிசைக்குள் நுழைந்து தரையில் அமர்கிறார்கள்.............
வீட்டில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் சாப்பிட அழைத்து விட்டோமே என்று பதட்டத்தில் அழைத்தவர் முழிக்க "பரவாயில்லை இருப்பதை சாப்பிடுகிறேன்" என்று சொல்லி அவர்களால் உள்ளன்போடு பரிமாறப்பட்ட பதார்த்தங்களை ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்கள்...................
தன் மகனின் திருமண விழாவிற்கு தனக்கு அழைப்பிதழ் அனுப்பிய ஒரு சாதாரண ரசிகனை ஞாபகத்தில் வைத்து தஞ்சை வந்த நேரத்தில், அவர்களின் இல்லம் சென்று ஆசி வழங்கியதோடு மட்டுமில்லாமல், தரையில் அமர்ந்து சாப்பிட்டு ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய பாசமிகு சிவஜி கணேசனும் கமலாம்பாளும் ....................
(இந்த ரசிகர் ஒரு சலவை தொழிலாளி என்று கூடுதல் தகவல் அளிக்கிறார்....மதிப்புக்குரிய கொடிக்குறிச்சி முத்தையா அவர்கள்)
THANKS TO
இதயக்கனி எஸ். விஜயன்
Thanks Devakottai Dolphin AR Ramanathan (nadigarthilagam fans)
Attachment 6038
சிவாஜி அவர்கள் திமுகவிற்காக
பட்டி தொட்டியெங்கும் பிரச்சாரம் செய்து,
நிதி வசூலித்து கொடுத்து, கட்சி வளர்ச்சிக்காக உழைக்கிறார்.
சிவாஜி செல்லும் இடமெல்லாம்,
மக்கள் வெள்ளமென திரண்டனர். சிவாஜியின் பேச்சை கேட்க இளைஞர்கள் தவம் கிடந்தனர்.
அதன்பிறகு, 1956ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது,
1962 ல் நடைபெற்ற தேர்தலில், திமுக 50 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது,
ஆனாலும், முதல்வர் வேட்பாளர், அண்ணாதுரை அவர்களோ, அவரது சொந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் தோல்வியடைந்தார்.
முதன்முதலாக, திமுக ஆட்சியை கைப்பற்றியது
1967ல், மேலும், முதல்வர் வேட்பாளர் அண்ணாதுரை அவர்கள் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1949ல் ஆரம்பித்த திமுக ஆட்சியை பிடிக்க
18 ஆண்டுகள் ஆனது...
ஆனால், சிவாஜி மட்டும் அரசியலில் தோற்றார், என்று பேசும் மேதாவிகளே,
சிவாஜி அவர்கள் மட்டும், கட்சி ஆரம்பித்து, 6 மாத காலத்தில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று, ஆட்சியை பிடிக்க வேண்டும்...
இது என்ன நியாயம்.
சிவாஜி மட்டும் தான் அரசியலில் தோற்றார் என்பது போல் ஒரு மாயையை, இன்றைய அரசியல்வாதிகளும்,. மேலும், ஊடகங்களும் தவறான தகவல்களை மக்களிடத்தில் பரப்புகின்றனர்.
Thanks Thilak Ganesan ( சிவாஜி சாம்ராஜ்ஜியம் Fb)
Attachment 6039
ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டின்னு சொல்வார்கள். நடிகர்களில் பலர் அரசியல் சாக்கடையில் குதித்து இருக்கிறார்கள். அனைவருக்கும் ஒரு இலக்கு. தான் முதல்வராக வேண்டும். விதிவிலக்காக தனக்கென்று இல்லாமல் மக்கள் சேவை ஒன்றே இலக்காக எனக்கு தெரிந்து இறங்கியவர் சிவாஜி கணேசன் ஒருவரே. சிவாஜி கணேசனுக்கு இந்நிலை ஏற்பட்டதற்கு அவரை சுற்றி அன்றிருந்த ஒரு சிலரே காரணம். பணத்தாசை இல்லாமல் திரை உலகிலேயே பயணித்த ஒரே நடிகர் இவராகத்தான் இருக்க முடியும்.
அரசியல் மேடைகளில் சிவாஜி கணேசன் பேசியதை கொஞ்சம் நினைவு கூறுவோம்.
' என்னை எதிர்த்து போட்டியிடும் தம்பி துரை சந்திரசேகர் பண்புடையவர். என்னிடம் மரியாதையுடன்தான் பேசுகிறார். என்னை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்பது திமுக எடுத்த முடிவு. தம்பியை குறை கூறுவதில் நியாயமில்லை.'
' என்னை எனது ஆருயிர் அண்ணன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் அரசியலில் தாயை பிரிந்து நிற்க வேண்டியதாயிற்று. நானும் காங்கிரஸ் இயக்கமும் வேறு வேறாக இருக்க முடியுமா ? இன்றைய நிலை அதுதான். தேவையற்ற கூட்டுக்கு என்னையும் தூண்டியது, என்னுடைய தம்பிகளை கேவலப்படுத்துவதாக நான் எண்ணி இந்த கட்சியை துவங்கினேன். பாதை தெளிவாக தெரிகிறது. பயணம் துவங்கி இருக்கிறேன்.'
' ஜெயலலிதாவை நான் எதிர்ப்பதாக நினைக்காதீர்கள். அரசியலில் அவர் நிதானமிழந்து செயல்பட துவங்கி இருக்கிறார். இன்றுவரை அவர் நான் மதிப்பவர்தான். அரசியல் நிலைப்பாடு வேறு.'
' ஏன் கண்கள் கலங்கவேண்டும் எனக்கு. ? கண்ணியத்தை எனக்கு கற்றுக்கொடுத்த அந்த தெய்வம் இல்லையே. எனக்கு என்ன தெரியும் ? நிலைமை சரியில்லை என்பது மட்டும் புரிகிறது. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கூற பெரும் தலைவர் இல்லையே.'
நேரடியாகவே கேட்கிறேன். பொது அரசியல் மேடையில் இத்தனை கண்ணியத்துடன் இயங்கிய ஒரு தலைவரை அடையாளம் காட்ட முடியுமா ? அந்த தோற்ற கட்சிக்குதான் என்றென்றும் நான் தலைவணங்குவேன். விரும்பியது சிவாஜியின் வெற்றியை அல்ல. அவருடைய அபிலாஷையை புரிந்துகொள்ளவேண்டியவர்கள் அன்று புரிந்து நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே. அவருக்கு அன்று முதல் துணைநின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
நன்றி.
Thanks Thilak Ganesan ( சிவாஜி சாம்ராஜ்ஜியம் Fb)
அரசியல் வரலாறு தெரியாமல், சிவாஜி - யை விமர்சிப்பவரே....
உங்களுக்கெல்லாம் அரிப்பெடுத்தால் சொறிவதற்கு
என் தலைவன் சிவாஜி - யின் சாமானதான் வேண்டுமா...??
1949, செப்படம்பர் 18ம் தேதி திமுக, அண்ணாதுரை தலைமையில் உதயமாகிறது.
1952ல் அதாவது, பராசக்தி வருவதற்கு முன் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிடவில்லை.
பராசக்தி திரைப்படம் வெளிவந்ததற்கு பின்,
சிவாஜி அவர்கள் திமுகவிற்காக
பட்டி தொட்டியெங்கும் பிரச்சாரம் செய்து,
நிதி வசூலித்து கொடுத்து, கட்சி வளர்ச்சிக்காக உழைக்கிறார்.
சிவாஜி செல்லும் இடமெல்லாம்,
மக்கள் வெள்ளமென திரண்டனர். சிவாஜியின் பேச்சை கேட்க இளைஞர்கள் தவம் கிடந்தனர்.
அதன்பிறகு, 1956ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது,
1962 ல் நடைபெற்ற தேர்தலில், திமுக 50 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது,
ஆனாலும், முதல்வர் வேட்பாளர், அண்ணாதுரை அவர்களோ, அவரது சொந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் தோல்வியடைந்தார்.
முதன்முதலாக, 1967-ல் திமுக ஆட்சியை கைப்பற்றியது ,
அண்ணாதுரை வெற்றி பெறவில்லை ...!! ஆனால்
M L C - யாகி முதல்வர் ஆனார்.
இப்படி .....
1949ல் ஆரம்பித்த திமுக ஆட்சியை பிடிக்க
18 ஆண்டுகள் ஆனது...
ஆனால், சிவாஜி மட்டும் அரசியலில் தோற்றார், என்று பேசும் மேதாவிகளே,
சிவாஜி அவர்கள் மட்டும், கட்சி ஆரம்பித்து, 6 மாத காலத்தில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று, ஆட்சியை பிடிக்க வேண்டும்...
இது என்ன நியாயம்..???
சிவாஜி மட்டும் தான் அரசியலில் தோற்றார் என்பது போல் ஒரு மாயையை, இன்றைய அரசியல்வாதிகளும்,. மேலும், ஊடகங்களும் தவறான தகவல்களை மக்களிடத்தில் பரப்புகின்றனர்.
Cl Joe
Thanks Thilak Ganesan ( சிவாஜி சாம்ராஜ்ஜியம் Fb)
23/02/2024 முதல் சென்னை ஆலபுர்ட் அரங்கில்
வெற்றி விஜயம் வசந்த மாளிகை.
Attachment 6040
Attachment 6041
Attachment 6042
Attachment 6043
தித்திக்கும் செய்தி.
Attachment 6044
23/02/2024 சென்னை ஆல்பர்ட் அரங்கில் திரையிடப்பட்ட
வசந்த மாளிகை சின்ன ஜமீன்தாரை தரிசிக்க வந்த மக்கள் கூட்டம்.
Attachment 6045
Attachment 6046
Attachment 6047
Attachment 6048
Attachment 6049
வசந்த மாளிகை வெற்றி நடை....
Attachment 6050
Attachment 6051
Attachment 6052
வசந்த மாளிகை இரண்டாவது வாரம்....
Attachment 6053
வாராவாரம் ஆரவாரம்!
ஆனந்தமான இரண்டாம் வாரம்!!
ஆனந்தம் நீடிக்கும் இரண்டாம் வாரம்!
நாளை முதல் (02.03.2024)
#திருச்சி_பேலஸ் (தினசரி 4 காட்சிகள்)
Attachment 6054
நடிகர் திலகத்தின் உயரிய பண்பு
நன்றி தினத்தந்தியின் மூத்த ஊழியர் சொன்னது
புதிய பறவை யின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நேரம் நடிகர் திலகம் அங்கேயே தங்கி நடித்துக் கொண்டிருந்தார் ஒரு நாள் அவருடைய விலை உயர்ந்த கெடிகாரம் திருட்டுச் போய் விட்டது . கெடிகாரம் போய் விட்டதே என்று நடிகர் திலகம் வருந்தவில்லை. நன்பர் ஒருவரின் நினைவாக அணிந்திருந்த பொருளை இழந்து விட்டோமே என்று வருந்தினார்.சில மணி நேரங்களில் அந்த கெடிகாரம் கிடைத்து விட்டது! அதை எடுத்து ஒளித்து வைத்திருந்தவர் ஸ்டூடியோவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி. அவனை மற்ற தொழிலாளர்கள் கையும் களவு மாகப் பிடித்து, நடிகர் திலகம் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். நடிகர் திலகம் ஏதோ பெரிய தண்டனை கொடுக்கப் போகிறார், அல்லது போலிசாரிடம் ஒப்படைக்கப் போகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். பிடிபட்ட தொழிலாளியும் அவ்வாறுதான் நினைத்தான். அவன் உடல் வெடவெ என்று நடுங்கிக் கொண்டிருந்தது .
அவனை நடிகர் திலகம் தன் அருகே அழைத்தார். " ஏம்பா இப்படி செய்தே! உனக்கு பணக் கஷ்டம்னா என்னிடம் சொல்லியிருக்கலாமே! என்று கூறியபடி, தன் சட்டைப் பைக்குள் கையை விட்டு 2 ஆயிரம் ரூபாயை எடுத்தார். " இந்தா இதை வைத்து கொள் இனி திருடமாட்டேல்ல!" என்று கூறியவாறு, அந்த பணத்தை தொழிலாளியிடம் கொடுத்தார்.தன்னைப் போலீசில் ஒப்படைக்கப் போகிறார்கள் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அந்த தொழிலாளி, நடிகர் திலகம் 2 ஆயிரம் ரூபாயை கொடுத்து பரிவுடன் பேசியதைக் கண்டு திகைத்து, அவர் காலில் விழுந்தான்.
" இனி செத்தாலும் சரி, நான் திருட மாட்டேன்.இது சத்தியம்" என்று கண்ணீர் மல்க தழுதழுத்த குரலில் கூறினான். கூடியிருந்தவர்கள் இக்காட்சியை கண்டு மெய் சிலிர்த்து போனார்கள் தினத்தந்தியின் மூத்த ஊழியர் மூலம் இந்த நிகழ்ச்சியை அறிந்த நானும் உள்ளம் நெகிழ்ந்தேன் .நடிகர் திலகத்தின் இளகிய நெஞ்சத்தை மனித நேயத்தை உணர்த்த இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமானதாகும்
Thanks Devakottai Dolphin AR Ramanathan நடிகர்திலகம் ரசிகர்கள் குழு international shivaji fans
அன்பு நண்பர்களே, இந்தியாவின் மாபெரும் இதிகாசம் மகாபாரதத்தின் பிரம்மாண்ட அடையாளம் கர்ணன் 60 ஆண்டு வைர விழா நிறைவை முன்னிட்டு
இன்று முதல் (08.03.2024) உதயம் 70 mm A/c dts கர்ணன் குதூகல ஆரம்பம் தினசரி 4 காட்சிகள்.
Divyafilms Chokkalingam
Attachment 6055
வசந்த மாளிகை வெற்றி நடை....
Attachment 6056
வசந்த மாளிகை வெற்றி நடை....
Attachment 6057
Attachment 6058
Attachment 6059
வசந்த மாளிகை வெற்றி நடை....
Attachment 6060
Attachment 6061
சிவாஜி கணேசன் ரசிகர்களுடன் ஒரு நீயா நானா!
9 years ago
https://youtu.be/FQgfTMSl9MM?si=HsurGMXNbJVRiR5u
Thanks
Vijay Television
ஆறாவது முறையாக திரையிடப்பட்ட ஆல்பர்ட் திரையரங்கில்
மூன்றாவது முறையாக நான்காவது வாரம்!
வசந்த மாளிகை.
Attachment 6062
25 வது நாள் வசந்த மாளிகை.
Attachment 6063
Attachment 6064
ஆனந்த விகடன்.
52 வருடங்கள் ஆன பின்பும்
வசந்த மாளிகை பற்றி கட்டுரை.
ஒரு மணிமகுடம்.
Attachment 6065
Attachment 6066
Thanks Chandrasekaran Veerachinnu (Nadigarthilakam fans / Facebook)
வெற்றிகரமான 25வது நாள்!
டிஜிட்டல் வெளியீட்டடில்
சென்னை மாநகரில்
மூன்றாம் முறையாக
25 வது நாள் வசந்த மாளிகை.
Attachment 6067
Thanks Vannila Vijayakumaran ((Nadigarthilakam fans / Facebook)