Quote:
மிஸ் சவுத் இண்டியா 2009
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மிஸ் சவுத் இண்டியா 2009 அழகிப் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது.
முதல் இடம் பெற்று கிரீடம் சூடிக்கொண்டவர் பெங்களூரைச் சேர்ந்த தீபிகா. ஜாஸ்மின், சவுமியாவுக்கு அடுத்தடுத்த இடம். நடிகை ரம்யா கிருஷ்ணன் மூவருக்கும் கிரீடம் சூட்டி வாழ்த்தினார்.
கோயமுத்தூர், ஹைதராபாத், கோழிக்கோடு, பெங்களூர் ஆகிய நகரங்களில் 16 வயது முதல் 25 வயதுக்குள் உள்ள மாடல் பெண்களில் 16 பேரை தேர்வு செய்து, அவர்களில் `மிஸ் சவுத் இண்டியா 2009' அழகியை தேர்வு செய்தனர். மிஸ் தமிழ்நாடாக அனுஷாவும், மிஸ் ஆந்திராவாக ஸ்வேதாவும், மிஸ் கேரளாவாக அகான்ஷாவும், மிஸ் கர்நாடகாவாக ஜாஸ்மினும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த அழகிப் போட்டி விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.