தகவலை பதிவிட்டதற்கு நண்பர் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.
http://i66.tinypic.com/2qkngq0.jpg
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையில் சென்ற ஆகஸ்ட் மாதம் 19ம் தேதிதான் அலங்கார் தியேட்டரில் ரகசியபோலீஸ் 115 படம் வெளியானது.
மண் மணக்கும் எங்கள் மதுரையில் இதுவரை எந்த மறுவெளியீட்டுப் படமும் செய்யாத சாதனையாக (ஒரு வாரத்தில்) ரூ.1, 60,000/- (ரூபாய் ஒரு லட்சத்து அறுபதாயிரம்) வசூல் செய்து மறுவெளியீ்ட்டுப் படங்களில் இந்த அளவு எந்தப் படமும் வசூல் செய்ததில்லை (ஒரு வாரத்தில்) என்ற வரலாறு படைத்தது.
இரண்டு மாதங்களே ஆன நிலையில் மீண்டும் எங்கள் மதுரையில் ரகசிய போலீஸ் 115 படம் திரையிடப்படுகிறது என்றால் மக்கள் திலகத்தின் படங்களுக்கு மக்களிடம் கிடைக்கும் அமோக வரவேற்பை புரிந்து கொள்ளலாம்.
21ம் தேதி முதல் (நாளை முதல்) மீண்டும் சரித்திரம் படைக்க ஜமீந்தார் பூபதியாக வரும் ரகசிய போலீஸ் ராமு எங்கள் மதுரையின் அரவிந்த் தியேட்டருக்கு நாளை முதல் வருகிறார்.
ஏற்கனவே சொன்னபடி மதுரை சென்ட்ரலுக்கு தீபாவளி அன்று கோடீஸ்வர ஜேபி வருகை தர உள்ளார்.
இதிலே ஒரு சுவாரசியமான விசயம். இப்போது ஏங்க வைக்கும் விசயமும்தான்.
இந்த இரண்டு வெற்றிப் படங்களும் (ரகசிய போலீஸ் 115 மற்றும் அன்பே வா) இப்போது இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிந்தாமணி திரையரங்கத்தில்தான் முதல் வெளியீட்டில் ரிலீஸ் ஆகி அமோக வெற்றி பெற்றன. மாட்டுக்கார வேலன் படமும் சிந்தாமணியில் வெள்ளிவிழா கொண்டாடியது.
இதிலே இன்னொரு சுவாரசியம் இந்த மூன்று வெற்றிப் படங்களுமே பொங்கல் பண்டிகையின்போது வெளியானவை.