-
மனங்கவர் மக்கள்திலகம்;
மக்கள் உள்ளங்களில் தாழம்பூவாக தழைத்து
மணம் வீசிக்கொண்டிருக்கும் மக்கள்திலகம் ஒரு தனிப்பிறவி;
‘’பெற்றால்தான் பிள்ளையா? எங்கள் வீட்டுப் பிள்ளையென
ஏகோபித்த எண்ணங்களின் ஏற்பில், எங்கள் தங்கம் எனப்
பாசத்தோடு போற்றும் பரிமளிப்பைப் பெற்றவர் புரட்சிநடிகர் mgr;
சுவைதரும் இதயக்கனியாக தன்னுடைய இதமான
ஈடற்ற உயர்ந்த உள்ளத்தால் மக்களின் இதயவீணையை
மீட்டிய ஈடில்லா மாமனிதர்;
‘’நம் நாடு பல்லாண்டு வாழ்க என்ற உயர்ந்த லட்சியத்தோடு,
திடமான சீரிய நோக்கத்தில் தன்னுடைய செயல்திறனை
செறிவாக செயல்படுத்திய பொன்மனச்செம்மல்;
தொழிலாளி, விவசாயி போன்ற உழைக்கும் கரங்களை
ஊக்குவித்து, அன்னமிட்ட கையாக அலங்காரங்கொண்ட அற்புத மனிதர்;
தாயைக் காத்த தனயனாக, நம் நாட்டின் பெருமை காக்க
பண்பான பதங்களை படங்களிலும், பாடல்களிலும் பகர்ந்தளித்த
பெருந்தன்மைப் பேராளர்;
நாடோடி, மன்னாதி மன்னன் என்ற பாகுபாட்டு நிலைமை கொள்ளாமல்,
நடுநிலைமைப் பேணி, நீதிக்குப் பின் தான் பாசம்,
நீதிக்குத் தலை வணங்கு என்ற பண்புடைமையே என் கடமை;
என்றும் நல்லவன் வாழ்வான் என்று வாழ்ந்துகாட்டிய வள்ளல்;
தர்மம் தலை காக்கும் என்று, தனக்கென வாழா தன்னிகரற்ற தலைவன்;
அழுகின்ற மழலைகூட அவரின் ஆசைமுகத்தைப் பார்த்தால்
வருகின்ற கண்ணீரும் நின்று குழந்தை குதூகலிக்கும் முகராசி மிக்க எங்கள் தங்கம்;
திக்கற்று திகைப்போர்க்கு வழிகாட்டும் ஆனந்தஜோதியாக, கலங்கரைவிளக்கமாய்த்
திகழ்ந்தவர்; குடியிருந்த கோயிலான தெய்வத்தாய்ப் பெற்றெடுத்த நவரத்தினநாயகன்;
பணக்கார குடும்பமாயினும், பணத்தோட்டத்தையே பகர்ந்தாலும் நியாயங்களுக்காக
உரிமைக் குரல் எழுப்பி, மக்களைக் காக்க களமிரங்கி நினைத்ததை முடிப்பவர் எங்கள்
மன்னாதி மன்னர் பொன்மனச்செல்வர், புரட்சித்தலைவர், ஏழைப்பங்காளர் mgr;
அணையா ஒளிவிளக்காய், குளிர்ச்சிமிகு சந்திரோதயமாய் சாதனையாளராய்
ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க! பொன்மனச்செம்மல் புகழ் ஓங்குக!
முகநூலில் இருந்து
-
நண்பர்களுக்கு வணக்கம்.
நான் வடகிழக்கு, மற்றும் கிழக்கு இந்திய சுற்றுலா பயணத்தின் காரணமாக சென்றதால் 10 நாட்களுக்கு மேல் நமது திரியில் பங்கு கொள்ள இயலவில்லை .
தற்போது நண்பர்களுடன் இணைந்ததில் மிக்க உவகை கொள்கிறேன் .
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
ஆர். லோகநாதன்.
-
http://i66.tinypic.com/2yyza4y.jpg
தற்போது ராஜ் டிஜிட்டல் ப்ளஸில் (இரவு 8 மணி முதல் ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும் " ஒளிபரப்பாகி வருகிறது
-
தினத்தந்தி -14/10/2016
http://i64.tinypic.com/38ymx.jpg
இன்று முதல் (14/10/2016) அகஸ்தியாவில் தினசரி 2 காட்சிகள் (புதிய படம் திரைக்கு
வராத காரணத்தால் -சரியான விளம்பரம் இன்றி ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்
"டிஜிட்டல் ரிக்ஷாக்காரன் " திரையிடப்பட்டுள்ளதாக தகவல் .
-
-
-
http://i64.tinypic.com/34t5rw5.jpg
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு , அகஸ்தியாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
படம் வெளியாவதில் பக்தர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் முறையான, சரியான
விளம்பரம் இன்றி திரையிடப்படுவதில் அதிர்ச்சி.
-
கடந்த வாரம் சென்னை மகாலட்சுமியில் (07/10/2016) வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " கொண்டாட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு
http://i66.tinypic.com/2rf518j.jpg
-
-