வாசு சார்
நடிகர்திலகத்தின் பிறந்த நாளை வித்தியாசமாக சிறப்பு சேர்த்து பெருமைப்படுத்தியமைக்கு நன்றிகள்!
செந்தில்
Printable View
வாசு சார்
நடிகர்திலகத்தின் பிறந்த நாளை வித்தியாசமாக சிறப்பு சேர்த்து பெருமைப்படுத்தியமைக்கு நன்றிகள்!
செந்தில்
http://i1146.photobucket.com/albums/...pscsfmjigb.jpg
http://i1146.photobucket.com/albums/...psybzajdse.jpg
கோவை அர்ச்சனா குழு நண்பர்கள் நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி வெளியிட்ட போஸ்டரின் நிழற்படம். நன்றி திரு பிரபு, கோவை.
எனது இனிய சகோதரர் திரு. குமுதம் மேஜர் தாசன் அவர்களை தலைவராக கொண்டு செயல் பட்டு வரும் "சினிமா பத்திரிகையாளர் சங்கம்" அதன் 60வது ஆண்டு விழாவை, நேற்று (02-10-2015 வெள்ளிக்கிழமை) மாலை சென்னை சர் பி. டி. தியாகராயர் அரங்கில், வெகு விமர்சையாக, சீரும் சிறப்புமாக கொண்டாடியது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் திரு. கமலஹாசன், சிவகுமார் மற்றும், நடிகை மனோராமா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த இதர கலைஞர்கள் - இயக்குனர் - நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனர் - ஏ. ஆர். முருகதாஸ், நடிகை நமீதா, நடிகை எஸ். என். பார்வதி, நடிகை ஜெயசித்ரா மற்றும் நடிகைகள் ஜோதிலட்சுமி - ஜெயமாலினி சகோதரிகள் . விழாவில் மூத்த பத்திரிகையாளர்கள் ஐவர் திருவாளர்கள் நாகை தருமன், பேசும்படம் சம்பத்குமார், பொம்மை சாரதி, பிலிம் நியூஸ் ஆனந்தன், ராண்டார் கை கவுரவிக்கப்பட்டனர். இயக்குனர் திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள் இந்த ஐந்து பத்திரிகையாளர்களுக்கும் தலா ரூபாய் 50,000/- வழங்குவதாக மேடையில் அறிவித்தார். உலக நாயகன் திரு. கமலஹாசன் அவர்களும் தன் சார்பாக தலா ரூபாய் ஒரு லட்சம் வழங்குவதாக பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
இந்த விழாவினையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரிலிருந்து , சில பகுதிகள் - திரி அன்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் கவனத்துக்கு :
http://i60.tinypic.com/2epk4mb.jpg
http://i57.tinypic.com/ea4eq9.jpg
காண்போர் வியக்கும் வண்ணம், சிறப்பு மலரை அற்புதமாக வடிவமைத்த திரு. மேஜர் தாசன் அவர்களுக்கும், அவருக்கு தோளோடு தோளாக நின்று கடுமையாக உழைத்த செயலாளர் திரு. கிருஷ்ணன் குட்டி அவர்களுக்கும் பொருளாளர் திரு. பாலேஷ்வர் மற்றும் இதர அன்பர்களுக்கும், இத்தருணத்தில் பாராட்டுக்கள் கலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..
பல அரிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும் இந்த சிறப்பு மலர், சினிமா ரசிகர்கள் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். இந்த மலருக்கு நன்கொடை ரூபாய் 200 மட்டும்.
மலர் வேண்டுவோர் நாட வேண்டிய தொலைபேசி எண் : 044-23720943.
,
சினிமா பத்திரிகையாளர் சங்க ஆண்டு விழா மற்றும் மலர் பற்றிய தகவலுக்கு நன்றி திரு செல்வகுமார் அவர்களே.
https://scontent.fdel1-2.fna.fbcdn.n...58&oe=568CD835
Courtesy: Our dear FB friend R.S.Sivaji - from his FB page.
தூத்துக்குடி மாவட்டத்தில், நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
http://img.dailythanthi.com/Images/A...day_SECVPF.gif
Read at:
http://www.dailythanthi.com/News/Dis...n-Birthday.vpf
Vasu- Amazing.Wish I participated.
Murali- Awaiting further on 1st Oct.
Chandra- What about your planned one with Congress?Awaiting details.
Dear Ragavendhar,
Congrats for the recognition and accolades you received from the Family.I am proud of it though I don't see eye to eye with you on many matters. If the family recognizes sivaji peravai and Mr.Chandrasekar , It will be a good stepping stone towards the unity of our worshipper fans to have our flags flying high. But your untainted devotion and love for sivaji is never questioned. Congrats again.
கோபால்
பாராட்டுக்களுக்காகவோ அல்லது வேறேனும் ஆதாயம் எதிர்நோக்கியோ நான் எந்தக்காலத்திலும் நடிகர் திலகத்தின் புகழ்பாடும் பணியில் ஈடுபடவில்லை. இதை நான் ஆத்மார்த்தமாக செய்கிறேன். நீங்களெல்லாம் ஒரு மூன்று நான்கு வருடங்களாகத் தான் என்னைப் பார்க்கிறீர்கள். கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பணியில் ஈடுபட்டுள்ளேன். நீங்கள் யாரைப் பாராட்ட வேண்டுமென நினைத்தாலும் பாராட்டுங்கள். அதை யாரும் கேட்க முடியாது. மன்றங்களைக் குறை சொல்ல வேண்டாம். முதன் முதலில் மன்றம் ஆரம்பித்த காலத்தில் பிறந்தே இருக்காதவர்களெல்லாம் நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதை அறிய மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அதற்காக சிவாஜி மன்றங்களைக் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள். அதைக் குறை சொல்லும் தகுதி உங்களுக்கு உள்ளதாக நான் நினைக்கவில்லை. குறை சொல்லி விட்டாலே நீங்கள் சொல்வதெல்லாம் சரியாகி விடாது. இதனை கவனம் வைத்துக்கொண்டு பாராட்டும் பதிவுகளை மட்டும் போட்டு விட்டுப் போங்கள். மீண்டும் மீண்டும் இங்கு சர்ச்சைகளை உருவாக்குவதே வேலையாக வைத்திருக்க வேண்டாம். உங்களுக்கு எத்தனையோ அலுவல்கள் இருக்கலாம், டென்ஷன் இருக்கலாம். அதைப் போக்கும் மருந்து நடிகர் திலகம் மட்டுமே. அவர் புகழைப் பாடுங்கள், அவருக்கு தொண்டாற்றுவோரைப் பாராட்டுங்கள், குறை சொல்லும் வேலை மட்டும் வேண்டாம். இன்றைக்கு சிவாஜி ரசிகர்கள் லட்சக்கணக்கில் இன்னும் அப்படியே உள்ளனரென்றால் அது நடிகர் திலகமே அங்கீகரித்து வழிகாட்டி நடத்திய சிவாஜி மன்றங்களினால் என்பது மறுக்க முடியாத உண்மை. நேரம் வரும் போது மன்றங்களின் முக்கியத்துவம் தெரிய வரும்.
இதற்கு மேல் விவாதங்களை வளர்க்க வேண்டாம்.
நடிகர் திலகத்தின் புகழ் பாடவும் அவருக்குத் தொண்டாற்றுவோரைப் பாராட்டவும் மட்டுமே இத்திரியை நாம் பயன்படுத்துவோம். எதிர்மறையான விமர்சனங்கள் வேண்டாம் என மீண்டும் மீண்டும் தாங்கள் உட்பட எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.