https://i.postimg.cc/wByqPTJm/1399da...1416157f2e.jpg
கோவை சண்முகா
Printable View
https://i.postimg.cc/RCkv6zkS/fcdc64...d5d17c67be.jpg
வருகிறது
கோவை சண்முகாவில்
https://i.postimg.cc/63yNT9th/IMG-3252.jpg
பக்ரீத் நல்வாழ்த்துக்கள்
புதுச்சேரி,
புதுவை எம்.ஜி.ஆர். பேரவை-பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா புதுவை கடற்கரை காந்தி திடலில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு எம்.ஜி.ஆர். பேரவை நிறுவன தலைவர் முருகு பத்மநாபன் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் பரசுராமன் முன்னிலை வகித்தார்.
விழாவில் எம்.ஜி.ஆரைப் பற்றிய புத்தகங்களை வெளியிட்டு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
32 ஆண்டுகள் கழித்தும் எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்து நிற்கிறது. நான் இந்த நிகழ்ச்சிக்கு காரைவிட்டு இறங்கி நடந்து வந்தபோது எம்.ஜி.ஆர். புகழ் இன்னும் மறையவில்லை என்று 2 பேர் பேசிக்கொண்டு சென்றனர். இன்னும் 320 ஆண்டுகள் ஆனாலும், உலகம் இருக்கும் வரை, கடைசி மனிதன் இருக்கும் வரை எம்.ஜி.ஆர். புகழ் இருக்கும்.
எம்.ஜி.ஆர். என்பது மந்திர சொல். அவர் உலகின் 8-வது அதிசயம். அவர் ஒரு முன்மாதிரி மனிதன், நடிகர், முதல்-அமைச்சர். அவர் தோற்றப்பொலிவு மிக்கவர். காதல் காட்சிகளில் நடிக்க எம்.ஜி.ஆரைப்போல் யாரும் இல்லை. அவருக்கு இணையாக யாரும் பிறக்கவில்லை. இனிமேல் பிறக்கப்போவதும் இல்லை. திரைப்பட உலகில் எத்தனையோ பேர் வந்து செல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பிறகு அவர்களது பெயர் யாருக்கும் தெரிவதில்லை.
நடிகர் நாடாள முடியும் என்பதற்கு முன்மாதிரியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அவர் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். அறியாமையை அகற்றினார். அவர் படங்களின் பாடல்கள் இந்த காலத்துக்கும் பொருந்துவதாக உள்ளது. திரைப் படங்களை தந்து அதன் வாயிலாக நாட்டுக்கு நல்லது செய்தார். எம்.ஜி.ஆர். ஒரு தீர்க்கதரிசி.
ஆட்சிக்கு வந்து ஏழைகள் படும்பாட்டை கண்டு குடிசைகளுக்கு ஒரு விளக்கு தந்தார். அந்த காலகட்டத்தில் சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் சாலைகளில் சென்றால் போலீசார் கைது செய்து விடுவார்கள். அப்படி ஒரு சட்டம் இருந்தது. அதை ரத்து செய்தார். அவர் செய்த சாதனைகள் ஏராளம். குறிப்பாக அவர் பதவிக்கு வந்தபோது ரேஷன் கடைகள் தனியாரிடம் இருந்தன. அதில் கொள்ளை நடந்தது. ஆனால் அதை மாற்றி அரசு மூலம் 22 ஆயிரம் ரேஷன் கடைகளை திறந்தார். ஆதிக்க சக்திகளுக்கு எதிராக வாழ்ந்து காட்டினார்.
அந்த காலகட்டத்தில் மணியக்காரர், கணக்குப்பிள்ளை வைத்ததுதான் சட்டமாக இருந்தது. அதை அவசர சட்டம் மூலம் ரத்து செய்து சமூக மாற்றத்தை ஏற்படுத்தினார். சுயநிதி கல்லூரிகள் என்ற முடிவால் தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகளில் படித்த மாணவர்கள் இப்போது ஐ.டி. துறையில் கொடிகட்டி பறக்கிறார்கள். மேலை நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கிறார்கள். தலைமுறை மாற்றங்களை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்.
காமராஜர் மாணவர்களுக்கு மதிய உணவு தந்தார். எம்.ஜி.ஆர். புத்தகம், ஆடை, காலணி ஆகியவற்றுடன் சத்துணவும் தந்தார். எம்.ஜி.ஆர். ஒருவரே ஆண், பெண் என இருபாலரும் விரும்பும் ஆணழகன். அந்த பேராண்மை யாருக்கும் இல்லை. அவர் ஒரு முன் மாதிரி அவர்போல் வேறு யாரும் உருவாக முடியாது. அவர் ஒரு அவதாரம், ஞானி, சித்தர், தீர்க்கதரிசி. காரல் மார்க்ஸ் தத்துவம் தத்துவஞானிகளுக்கு புரியும். கம்பராமாயணம் தமிழ் அறிஞர்களுக்கு புரியும். மதங்கள் சொல்வதை எளிய வழியில் சொன்னார்.
சமூகத்தை தட்டி எழுப்பினார். நாட்டு மக்களுக்கு பாடம் நடத்தியதால் அவர் வாத்தியார் என்று அழைக்கப்பட்டார். வாரிசு அரசியல் கூடாது என்பதுதான் அவரது எண்ணம். அவரைப்போல் இப்போது யாரும் இல்லை. எந்த பாடல் பயனுள்ளதாக இருக்கிறது என்று போட்டி தேர்வு எழுதும் மாணவர்களிடம் கேட்டால் எம்.ஜி.ஆரின் நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் என்ற பாட்டைத்தான் கூறுகின்றனர். தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அவரது பாடல்கள் உள்ளன.
அவரது ஒப்புதல் இல்லாமல் எந்த பாடலும் படத்தில் இடம் பெறாது. அவர் பாடல்களில் வாழ்வியல் பண்புகளை பார்ப்பார். எல்லா பாடல்களும் தலைமுறை மாற்றத்துக்கான பாடல்கள். அத்தனையும் வாழ்வியல் பண்புக்கான பாடல்கள். அவரது பாடல் வரிகள் வலிமை உள்ளவை. எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிபவர் சித்தர்.
திரைப்படத்தின் வாயிலாக மக்களை மாற்றியவர் அவர். அவர் தன்னிடம் வருபவர்களிடம் சாதி, மதம் பற்றி கேட்பதில்லை.
சம்பாதித்த பணத்தை எல்லாம் வாரிவாரி வழங்கினார். அதை வைத்து சொத்து வாங்கி இருந்தால் பல லட்சம் கோடி மதிப்பிருக்கும். ஆனால் அவர் ஏழைகளின் உள்ளத்தை சம்பாதித்தார். கொடுப்பதில் கடையெழு வள்ளல்களையும் மீறிவிட்டார். வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக திகழ்ந்தார். தனது சொத்தை நாட்டு மக்களுக்காக எழுதி வைத்தார். அவர் என்றும் வாழ்வார். திரைப்படம், பாடல்கள் இருக்கும் வரை அவரது புகழ் இருக்கும். அவர் எல்லா காலத்துக்கும் பொருத்தமான பாடல்களை பாடினார். எம்.ஜி.ஆர். இல்லாவிட்டால் தி.மு.க. வளர்ந்து இருக்குமா?
கருப்பு சிவப்பு உடையணிந்து அவர் திரைப்படங்களில் நடித்து கட்சியை பட்டிதொட்டியெல்லாம் பரப்பினார். தி.மு.க. என்ற கட்சியை எம்.ஜி.ஆர்.தான் வளர்த்தது என்று அண்ணாவே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரை பாராட்டாத மனிதரே கிடையாது. எம்.ஜி.ஆரின் பாடல்களை இன்றைய இளைஞர்களை கேட்க சொல்லுங்கள்........... Thanks...
கலையுலகின் சக்கரவர்த்தி மக்கள் திலகத்தின் சாதனையில்... 1965 ல் எங்கவீட்டுப்பிள்ளை காவியம் 8 அரங்கில் 150 நாளை கடந்து 7 அரங்கில் வெள்ளிவிழா! முதல் சாதனையாகும். 2 வது 1970 ல் பொன்மனச் செம்மலின் மாட்டுக்கார வேலன் தமிழகத்தில் சென்னை 175, மதுரை 177, திருச்சி 150 ,சேலம் 156 ,கோவை 144, நெல்லை 142 ,ஈரோடு 140 ஒடியது. மேலே உள்ள விளம்பரம் 125 வது நாள் . இதுப்போல ஒரு விளம்பரம் 1931 முதல் 1977 வரை தமிழ் சினிமா வரலாற்றில் ( எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்திற்கு பிறகு ) வெளிவந்தது கிடையாது. இந்த மாதிரி இரண்டு விளம்பரங்கள் எதிரணி நடிகருக்கு இருந்தால் தமிழ் சினிமாவே அவர்கள் தான் என்பார்கள். இப்படி சாதனையை இயற்கையாக படைத்தவர் தான் நம் இயற்கை பேரரசு எம். ஜி.ஆர். அவர்கள். மேலும் தொடருவோம். நன்றி! உரிமைக்குரல் ராஜு.......... Thanks...
நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்
தங்களின் கவனத்திற்கு
ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் வெளியீட்டிற்கு பிறகு 2017ம் ஆண்டு முதல்
தமிழகத்தில் வெளியான அரங்குகள் பட்டியல் .
-----------------------------------------------------------------------------------------------------------------------
3/3/17 சென்னை மகாலட்சுமி -தினசரி 3 காட்சிகள் -2 வாரங்கள் .
25/08/17 -மதுரை சென்ட்ரல் - தினசரி 4 காட்சிகள்
17/11/17 -சென்னை கிருஷ்ணவேணி - தினசரி 3 காட்சிகள்
மதுரை - அரவிந்த் -தினசரி 4 காட்சிகள்
23/02/18-சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள்
13/04/18-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்
11/05/18- சென்னை ஸ்ரீநிவாஸா - தினசரி 3 காட்சிகள்
28/12/18-காரைக்கால் பி.எஸ்.ஆர்.டீலக்ஸ் - தினசரி 3 காட்சிகள்
11/01/19 -சேலம் அலங்கார் -தினசரி 3 காட்சிகள் - 2 வாரங்கள்
தூத்துக்குடி -சத்யா - தினசரி 3 காட்சிகள்
19/07/19- மதுரை சண்முகா - தினசரி 4 காட்சிகள்
சாத்தூர் -இ .பி.எஸ். தியேட்டர் -தினசரி 4 காட்சிகள்
26/07/19-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்
02/08/19-பழனி -சாமி தியேட்டர் - தினசரி 4 காட்சிகள்
திண்டுக்கல் -என்.வி.ஜி.பி. - தினசரி 4 காட்சிகள்
புதுவை நண்பர் மூலம் அறிந்த தகவல்
------------------------------------------------------
கடந்த 10/8/19 அன்று புதுவையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அப்போது டிக் டாக் வீடீயோஸ்
கடையில் சில டிவிடிக்கள் வாங்க நண்பருடன் சென்றேன். 2012ல் கர்ணன், வேட்டைக்காரன் டிவிடிக்கள் தலா 200 வந்ததாகவும் அவற்றில் கர்ணன் 30 டிவிடிக்களும் , வேட்டைக்காரன் 150 டிவிடிக்களும் விற்பனை ஆனதாக
தகவல்கள் தெரிவித்தனர் .
புதுவை எம்.ஜி.ஆர். பேரவை-பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் உயர்திரு. முருகு பத்மனபின் அவர்கள் நடத்திய எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா புதுவை கடற்கரை காந்தி திடலில் 10/8/2019 அன்று நடைபெற்றது.
விழா சிறப்பாக நடந்ததாக விழாவில் கலந்துகொண்டவர்கள் சொன்னார்கள் மற்றும் விழாவை நேரடி ஒளிபரப்பு செய்த உயர்திரு. முருகு பத்மநாபன் அவர்களுக்கு நன்றி .
விழாவில் மூன்று புத்தகங்களை வெளியிடப்பட்டது, அதன் விவரம் வருமாறு:
புதுவையின் பாவலர் வடுகை கு.கண்ணன் அவர்களின் :புரட்சித் தலைவரின்பிள்ளை தமிழ்"
திரு. கே.பி.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "என்றும் வாழும் எம்.ஜி.ஆர்" Rs.175/=
மூன்றாவது "ஜானகி எம்.ஜி.ஆர் நாடாண்ட முதல் நாயகி" . இந்த புத்தகம் வந்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது............ Thanks...
தினத்தந்தி -புதுவை -11/08/19
http://i65.tinypic.com/6izlm9.jpg
http://i64.tinypic.com/263hppi.jpg
மறு வெளியீட்டு காவியங்களின் ஒரே வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும் " நல்ல நேரம்" 1972 ம் ஆண்டின் (Blockbuster movie of that year) பிரம்மாண்ட வெற்றி வசூல் சித்திரம்... சென்னை - அகஸ்தியா 70MM அரங்கில் 16-08-2019 வெள்ளிக்கிழமை முதல் தரிசனம்...
சினிமா துறையில் எம்.ஜி.ஆர்., என்ன சாதித்தார் ?
ஒரு ரசிகரை காட்டிலும் , பத்திரிகையாளர்கள் பார்வை காட்டிலும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் நிதர்சனமான உண்மை எம்ஜிஆர் சாதாரண நடிகராக அறிமுகமானாலும் தன்னுடைய திறமைகளால் முன்னேறி கருணாநிதியின் வசனங்களை அழகாக உச்சரித்து மக்கள் மனதில் இடம் பெற்றார் . பிற்காலத்தில் தன்னுடைய தொழிலில் இணையாக வந்த நடிகர் சிவாஜி, ஜெமினி, எஸ் எஸ் ஆர்., படங்கள் வெளிவந்த நேரத்தில் ...எம்ஜிஆரின் "நாடோடிமன்னன் " 1958ல் சாதனை படைத்தது . நாடோடிமன்னன் இதிகாசம் என்று கூறினார்
1958க்கு பிறகு எம்ஜிஆர் பல வெற்றி படங்களை தந்து முதலிடத்தில் தன்னை தக்க வைத்து கொண்டார் .
எம்ஜிஆரின் சிறப்புகள்
கடைசிப்படம் வரை கதாநாயகன் .
அதிக சம்பளம் வாங்கிய நடிகர்
அதிக வெற்றி படங்கள் தந்தவர்
திரை உலக வசூல் சக்கரவர்த்தி .
மரணத்தை வென்ற மக்கள் திலகம்
மறு வெளியீடுகள் - சாதனைகள் தொடரும் படங்கள்
1947 முதல் 2019 வரை 72 ஆண்டுகள் ...தொடர்ந்து திரை அரங்கில் எம்ஜிஆர் படங்கள்
7 தலை முறைகள் தொடரும் எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் மன்றங்கள்
பாரத் பட்டம் -1972 ல் கிடைத்தது
எம்ஜிஆரின் இயற்கையான நடிப்பு , சிறந்த பாடல்கள் , கொள்கை பாடல்கள் தத்துவ பாடல்கள் , காதல் பாடல்கள் இன்றும் மக்களால் ரசிக்கபப்டுகிறது .
எம்ஜிஆரின் பன்முக திறமைகள்... கொண்ட சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன .
எல்லாவற்றுக்கும் மேலாக எம்ஜிஆரின் அழகு முகம் , கட்டுக்கோப்பான உடற்கட்டு , சுறுசுறுப்பு நடிப்பு மறக்க முடியுமா ?
இனி என்ன வேண்டும் ?.......... Thanks...
தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டு மார்ச் 6 ம் தேதி நவீன டிஜிட்டலில் வெளியாகிய மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளிவருவதற்கு முன் 9 மாத இடைவெளி தான் இருந்தது. இப்படம் பார்க்காதவர்களே அதிகம் கிடையாது. அது மட்டுமல்ல... எல்லா தொலைக்காட்சியிலும் எண்ணற்ற முறை திரையிட்ட படமாகும். திரையிடாத திரையரங்குகள் ஆயிரத்தில் ஒருவனுக்கு குறைவு தான். சென்னையில் மட்டும் 60 திரையரங்கில் பல முறை திரையிடப்பட்ட திரைப்படமாகும். அப்படியிருந்தும் சென்னை சத்யம் ( ஸ்டுடியோ 5 ) அரங்கிலும் ஆல்பட் காம்பளக்ஸிலும் டிக்கட் எண்ணிக்கை குறையாது ஒடிய திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன். தினசரி ரிப்போர்ட் வாங்கி பார்த்தால் தெரியும். அது மட்டுமின்றி 50 நாள் 100 நாள் எல்லாம் பெரிய தியோட்டரில் அரங்கு நிறைந்து சாதனையாகும். முதல் வாரத்தில் தேவிபாரடைஸ், சாந்தம், ஆல்பட், எஸ்கேப் திரையிட்ட படமாகும். எந்த இடைவெளியில்லாது சாதனை படைத்த ஆயிரத்தில் ஒருவன் வெற்றியா..... அல்லது முதல் வெளியீட்டிற்கு (1964) பின் தமிழகமெங்கும் சரிவர வெளிவராத கர்ணன் படத்தை யாரும் அறிந்திருக்க முடியாது. சென்னையில் 1987 ல் ஒருமுறையும், 2001 ல் ஒரு முறையும் திரையிட்டபடம். 2012 ல் டிஜிட்டலில் திரையிட்ட இப்படத்திற்கு திவ்யா பிலிம்ஸ் கிட்டதட்ட 1 கோடிக்கு மேல் செலவு செய்தார். புதுப்படம் போல் தான் மக்களுக்கு அறிமுகமானது... மகாபாரத்தின் கதையை மையப்படுத்தி விளம்பரம் செய்யப்பட்டது. ஆந்திர நடிகரான என். டி. ஆர். நடிப்பும் முக்கிய காரணமாகும். 2012 க்கு பிறகு (மூன்று ஆண்டுக்கு பின்) 2016 ல் மீண்டும் வெளியான கர்ணன் படம் வெளியிட்ட அரங்குகளில் எல்லாம் படுத்தோல்வியை தான் தழுவியது.... ஆனால் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் 2017 ல் மீண்டும் சென்னையில் மகாலட்சுமி அரங்கில் இரண்டு வாரம் ஒடி 2 லட்சத்து 50 ஆயிரம் வசூலை தந்தது. 2018ல் மீண்டும் ஒரு வாரம் ஒடி லட்சத்தை பெற்றது. அகஸ்தியாவில் 2017 2018. 2019 மூன்று முறை திரையிட்டு 2019ல் 2 காட்சியில் ஒரு லட்சத்து ஆறாயிரம் பெற்று தந்துள்ளது.
மற்றும் ஸ்ரீனிவாசா கிருஷ்ணவேணி சரவணா பாலாஜி பிராட்வே பாட்சா என இருக்கும் திரையரங்கில் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்துள்ளது. கர்ணன் படநிலவரம் என்ன? இன்னும் முக்கியமான ஒன்று.... சிவாஜி கணேசனின் கர்ணன் வெற்றி என்றால் ஏன் சிவாஜி கணேசனின் மற்ற சரித்திர, பக்தி சமுக, புராணப் படங்களை திவ்யா பிலிம்ஸ் டிஜிட்டலில் வெளியிட முன் வரவில்லை? தயக்கமென்ன அவருக்கு....
பாசமலர் வெள்ளிவிழா படம். டிஜிட்டலில் அப்படம் வெளி வந்து சத்யம் அரங்கில் 3 நாள்தான். சிவாஜிகணேசன் ரசிகர் பூமிநாதன் பல லட்சங்களை இழந்தார். இப்பொழுது அவர் எங்கு இருக்கிறார் ! ஆளே இல்லை... அதன் மர்மம் பல உள்ளது. திருவிளையாடல் டிஜிட்டல் என்ன ஆனது... ? சொர்க்கம் படம் ஒரு சென்டருடன் முடிந்தது...?. ராஜா படம் ஏன் ஆல்பட்டில் ஒரு வாரத்துடன் முடிந்த பின் சென்னையில் எங்கும் வரவில்லை....? ஸ்ரீசினிவாசாவில் அரங்கில் சிவகாமியின் செல்வன் மொத்தமே 100 நாள் ஒட்டப்பட்டு 2000 பேர் கூட பார்க்கவில்லை.... ? ராஜபார்ட் படத்தை ஒட்டிய பின் எங்கும் கண்ணில் படவில்லை.... ஏனே? இப்பொழுது வசந்த மாளிகை படம் மட்டும் ஆல்பட்டில் ஒட்டபடும் ரகசியம் என்ன..... ? பின் எங்கும் திரையிட முடியாது அதனால் தானா? கர்ணன் ஒரு படத்தை வைத்து சில படங்களை நீங்களே வாங்கி செலவு செய்து நீங்களே கைதட்டும் நாள் என்று தான் முடியுமோ... இதற்கு எல்லாம் ஒரே காரணம் என்ன தெரியுமா.... திருவாளர் ( சொக்கலிங்கம்) கர்ணனை டிஜிட்டலில் தயாரித்ததனால் தான்..... அந்த. தொடர்ச்சியால் தான் சிவாஜி கணேசன் ரசிகர்களை டிஜிட்டலில் படம் எடுக்க வைத்து வேதனைக் கடலில் தள்ளியுள்ளார். (எங்களுக்கு எல்லாம்
ஒட்டி விழா கொண்டாடும் பழக்கத்தை எங்கள் தலைவர் அன்றும் இன்றும் என்றும் தந்ததில்லை) உங்களின் நூறு படங்களின் வெற்றிக்கு எங்கள் ஆயிரத்தில் ஒருவர் சமம் ! நாடோடி மன்னன் ரிக்க்ஷாக்காரன் அடிமைப்பெண் எங்கவீட்டுப்பிள்ளை நினைத்ததை முடிப்பவன் .... இப்படங்கள் யாவும் எப்பொழுது திரையிட்டாலும் எங்கும் ஒடும் வெற்றி பெறும். வசூலை அள்ளித்தரும் அட்சய பாத்திரமாகும். பணம் கொடுத்து ஒட்டுவதென்றால் ஆல்பட்டில் நாடோடி மன்னனை 100 நாள் செய்திருக்க முடியாதா.... அன்று திரையில் நடிகர் சிவாஜி கணேசனார் கற்று தந்ததை இன்று சரியாக செய்து வருகின்றார்கள். எங்கள் தலைவரின் சாதனைகள் அமைதியான வெற்றிக்கு அறிகுறியாகும். உங்களை போல ஆர்ப்பாட்டம் , ஆணவம், விளம்பரம் , தம்பட்டம், அகராதி இல்லாத பல வெளியீடுகளை காண்பது , காணுவது தான் எங்கள் வெற்றி! உரிமைக்குரல் ராஜு. ......... Thanks.........
விரைவில் கோவை - சண்முகா dts தினசரி 4 காட்சிகள் வருகை தருகிறார்... கலையுலக காவலர் புரட்சி நடிகர் " குடும்ப தலைவன்".......இதுவன்றோ மறு வெளியீடு கறுப்பு வெள்ளை சாதனை சிகரம்.......
அந்தி மழை மாத இதழ் -ஆகஸ்ட் 2019
http://i68.tinypic.com/2vkg979.jpg
http://i65.tinypic.com/t8rzgi.jpg
http://i66.tinypic.com/2dgouuq.jpg
http://i68.tinypic.com/9949zo.jpg
ஹாத்தி மேரா சாத்தி இந்தியிலும், நல்ல நேரம் தமிழிலும் வெற்றிப்படங்களை எடுத்தார் .எம்.ஜி.ஆரை வைத்து 100 நாள் படங்கள் நிறைய எடுத்தவர் தேவர்.
தேவர் பிலிம்ஸ் பேனரில் வந்த படங்கள் கொட்டிக் குவித்த பணத்தை வைத்து
தண்டாயுதபாணி பிலிம்ஸ் பெயரில் சிறிய பட்ஜெட் படங்களாக தெய்வம்,துணைவன்,,அக்கா தங்கை, ஆட்டுக்கார அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய வெற்றிப்படங்கள் எடுத்தார் .
வரும் வெள்ளி முதல் (16/08/19) சென்னை அகஸ்தியாவில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நல்ல நேரம் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/2cgerrp.jpg
http://i63.tinypic.com/2jcugzn.jpg
http://i65.tinypic.com/33jp94g.jpg
வரும் வெள்ளி முதல் (16/08/19) கோவை சண்முகாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "குடும்ப தலைவன்" தினசரி 4 காட்சிகள் திரைக்கு வருகிறது .
சென்னை தினத்தந்தி -12/08/19
http://i65.tinypic.com/10db6zo.jpg
http://i66.tinypic.com/2mi0qvp.jpg
http://i63.tinypic.com/903ipy.jpg
எஸ்ப்சவுத்தரிராம அய்யா
ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் சென்னயில் சத்யாம் தியெட்டரிலே 160 நாட்களும் ஆல்பட் தியட்டரில் 190 நாட்களும் ஓடி சாதனை செய்தது. அதுபோக இன்னும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்தப்பட்டியல் கீழ உள்ளது. ஓடிய விவரங்கள் அந்தந்த காலகட்டத்தில் எங்கள் திரியில் விவரமாக பதிவு உள்ளது. சந்தேகம் இருந்தால் செக் பண்ணிக் கொள்ளுங்கள். அப்படியும் சந்தேகமா. திவய்ா பிலிம்ஸ் சொக்காலிங்கம் அவர்கள்கிட்ட போன் பண்ணி கேட்கவும். உண்மை தெரியும். தமிழகத்தில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் படம்.
விபரம் இந்தாருங்கள்...
நன்றி நண்பர் லோகநாதன் அவர்களுக்கு.
இந்த மாதிரி தொடர்ந்து ஓடும் உங்கள் நடிகர் படம் உண்டா.
கேட்டாக்க, சிவா சொல்றார். அதிமுக ஆட்சி உருட்டல் மிரட்டலால் உங்கள் நடிகர் படம் தியெட்டரில் வருவது குறைவு என்கின்றார்.
அதிமுக ஆட்சியில் உங்கள் டிஜிட்டல் படங்கள் வருகின்றன. சரி உங்கள் நடிகர் படங்களை அதிமுக தடுக்கிறது என்றே வெச்சுப்போம்.
அதற்கு முன்னாடி கருணாநிதி ஆட்சியில் உங்கள் படங்கள் எவ்வளவு வந்தன. பட்டியல் தந்துவிட்டு பேசுங்கள்.
திமுக ஆட்சியிலும் எங்கள் படங்களை வராமல் தடுத்தார்கள் என்று பொய் சொல்லப் போகிறீர்களா?
இன்னும் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக மக்கள் திலகம் படங்கள் பல ஊர்களில் ஓடுகிறது. வெள்ளிகிளமை முதல் கோயமுத்தூரில் தாய்க்குத் தலைமகன் வருகின்றது.
உங்கள் நடிகர் படம் எந்த ஊரிலாவது வருகிறதா
வெற்றிகரமாக ஓடும் மக்கள் திலகத்தின் படங்கள் ஒடுக்கப்பட்டவை என்றால் உங்கள் நடிகர் படங்கள் 2001 ஜூலை 21-்ம் தேதிக்கு முன்னாடியே மக்களால் ஒதுக்கப்பட்ட படங்களாகிவிட்டன. செல்லாக்காசுதான்.
இன்னும் எத்தன காலத்துக்கு உங்களை நீங்களே ஏமாத்திப்பீர்கள். உங்களுக்காக பரிதாபம் படுகிறோம்.
#ராஜாதிராஜநடை.......... மக்கள் திலகம்...
கண்களை உருட்டிக்கொண்டோ,
நெஞ்சை நிமிர்த்திக்கொண்டா,
மீசையை முறுக்கிக்கொண்டோ,
மூச்சை இறுக்கிக்கொண்டோ (தம் கட்டிக்கொண்டோ) திரைப்படங்களில்
கேமராவின் முன்னால் நடக்கும்
செயற்கைத்தனமான நடையா ராஜநடை...?!?!?!
ரொம்ப கேஷுவலான தோற்றத்தில் அசால்ட்டாக நம் கண்முன்னே இயற்கையாகக் கொண்டுவருவதன்றோ ராஜநடை...
அப்படிப்பார்த்தால் நம்ம வாத்தியாருடைது...
#ராஜாதிராஜ #நடையன்றோ......... Thanks...
ஞாயிற்றுக் கிழமைகளில் எம்.ஜி.ஆருக்கு, காலையில் மட்டும் தான் சிகிச்சை செய்வேன்; "மாலை நேரத்தில் சிகிச்சை வேண்டாம்...' என சொல்லி விடுவார் எம்.ஜி.ஆர்., ஒரு ஞாயிறு காலை, நான் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது, "இன்று மாலை, "டிவி'யில் நான் நடித்த கலர் படம் ஒளிபரப்புகின்றனர்; நீங்கள் பார்த்து, "என்ஜாய்' பண்ணுங்க. வீட்டில் என்ன, "டிவி' வெச்சிருக்கீங்க?' எனக் கேட்டார்; "சாலிடார், ப்ளாக் அண்ட் ஒயிட்' என்றேன்.
"பிளாக் அண்ட் ஒயிட், "டிவி'யில பார்த்தால் நல்லா இருக்காதே...' என்றார்.
பின்னர், உதவியாளரிடம், "இப்போ நல்ல காஸ்ட்லி கலர், "டிவி' எது, என்ன விலை?' என்று கேட்டார். ஒனிடா, "டிவி!' 12 ஆயிரத்து, 500 ரூபாய் என்று தகவல் கிடைத்தது. "டாக்டர் ராஜாமணி வீட்டில், மதியம் இரண்டு மணிக்குள்ளே, ஒனிடா கலர், அன்று "டிவி' இருக்கணும்...' எனக் கூறினார் எம்.ஜி.ஆர்.,
அவர் சொன்னதைப் போல, பிற்பகல், 12:30 மணிக்கே, எங்கள் வீட்டுக்கு புது ஒனிடா, "டிவி' கொண்டு வரப்பட்டு, பொருத்தப்பட்டது. 2:30 மணிக்கு நான் வீட்டுக்குச் சென்ற போது, புது, "டிவி' என்னை வரவேற்றது. எனக்கு கொடுத்ததைப் போல, அவரது பி.ஏ.,க்கள், செக்யூரிட்டி அதிகாரிகள் என, 18 பேருக்கு, அன்று "டிவி' வாங்கி, அன்பளிப்பாக வழங்கினார் எம்.ஜி.ஆர்.,
அந்த, "டிவி'யை பார்க்கும் போதெல்லாம், அதை, பரிசாக அளித்த எம்.ஜி.ஆரின் நினைவு தான் எங்களுக்கு வரும்.
மறுநாள் காலை, எம்.ஜி.ஆரை சந்தித்த போது, அவருக்கு மனமார நன்றி சொன்னேன். "டிவி'யில் ஒளிபரப்பப்பட்ட தன் படத்தைப் பற்றியும், அவர் சில விஷயங்களைப் பேசினார்.
ஜன., 17ம் தேதி, எம்.ஜி.ஆருக்கு பிறந்த நாள்; அன்று தான் எனக்கும் பிறந்த நாள். அன்று, அவருக்கு நான் மாலை அணிவித்தேன்; எனக்கும் அன்று தான் பிறந்த நாள் என அறிந்த எம்.ஜி.ஆர்., அதே மாலையை எனக்கு அணிவித்து, வாழ்த்துக்கள் தெரிவித்தார்; மிகவும் பெருமிதமாக இருந்தது.
இந்திராவின் நினைவாக, பல அரசியல்வாதிகள் பங்கேற்ற பெரிய மீட்டிங், டில்லியில் நடந்தது. சென்னையிலிருந்து, டில்லிக்கு சென்று அந்த கூட்டத்தில் பங்கு பெற்ற எம்.ஜி.ஆர்., இந்திராவைப் பற்றி உணர்ச்சிபூர்வமாக பேசினார். அது, அவருக்கே மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. சென்னைக்கு வந்ததும், ஜானகி அம்மாவிடம், "டில்லி மீட்டிங் கில், முப்பது நிமிடங்கள் பேசினேன்; டாக்டர் ராஜாமணி தான் அதற்கு முழுக் காரணம். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது!' என்றார்.
ஓரிரு நாட்களுக்குப் பிறகு, மதிய வேளையில் என்னை அழைத்த ஜானகி அம்மா, "உங்ககிட்டே ஒரு குட் நியூஸ் சொல்லணும்...' என்றார். எனக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை; இருந்தாலும், என் ஆவலை அடக்கிக் கொண்டேன். "உங்களுக்கு கார் தரச் சொல்லியிருக்காங்க...' என்றார்.
மறுநாளே, பச்சை நிற புது பியட் கார், பட்டினப்பாக்கத்தில் உள்ள என் வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. என் மனைவிக்கும், எனக்கும், இன்ப அதிர்ச்சி; மகிழ்ச்சி.
என் வாழ்க்கையில், எனக்கு சொந்தமாக கிடைத்த கார், எம்.ஜி.ஆர்., எனக்கு கொடுத்த கார் தான்.
என் மருத்துவத் துறை நண்பர்களுக்கு, இந்த கார் பரிசு, ஆச்சரியமாக இருந்தது.
courtesy-(வர்ம சிகிச்சை நிபுணர் எஸ்.ராஜாமணி பேட்டி).......... Thanks...
...
1971 ல் வெளியான மக்கள் திலகத்தின் குமரிக்கோட்டம் திரைப்படம் சென்னை குளோப், பிராட்வே மதுரை சிந்தாமணி சேலம் பேலஸ் 100 நாட்கள் ஒடியது. திருச்சியில் 86 நாளும் கோவையில் 78 நாளும் ஈரோடு 70 நாட்களும் மற்றும் 21 அரங்கில் 50 நாட்கள் ஒடியது. தகவல் திரையுலகம் 1971 மே இதழ் நன்றி : உரிமைக்குரல் ராஜு........ Thanks...
சென்னையில் தலைவரின் பழைய பட வரலாறு சில...... தெரிந்தது வரையில். 1984 ல் மாட்டுக்கார வேலன் சித்ரா ( 4 காட்சி) 2 வாரம். முருகன் அரங்கு 2 வாரம். 1988 மினி மோட்சம் 2 வாரம். அதன் பின் 1991 ல் 1 வாரம். 1991 அபிராமி பகல் காட்சி 28 நாள். அன்னை அபிராமி ( 3 காட்சி) 14 நாள். ஒரே காம்பளக்ஸில் இன்று வரை இப்படமே சாதனை. தேவிபாரடைஸ் 1 வாரம். 1995 காஸினோ 1 வாரம். நாகேஷ் 1988 1991 இரண்டு முறை 1 வாரம். 1995 பைலட் 1 வாரம். மற்றும் பல அரங்கில் சாதனை! 2020 ம் ஆண்டு ( 14.01.1970 - 2020) பொன்விழா காவியம் மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலன். உரிமைக்குரல் ராஜு........ Thanks...
நாளை 15-08-2019 சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் - ரேவதி dts வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் "ஆயிரத்தில் ஒருவன்" திரையீடு...
அனைவருக்கும் மக்கள் திலகம் நல்லாசியோடு, இனிய "சுதந்திர தின" நல்வாழ்த்துக்கள்... வாழ்க... வளர்க...
அதைத்தான் நாங்களும் சொல்றோம்.
ஆயிரத்தில் ஒருவன் மாதிரி உங்கள் நடிகர் படம் எதாவது 190 நாளோ அல்லது தமிழ்நாடு பூரா தொடர்ச்சியாவோ ஓடினால் அப்புறம் பேசுங்கள்.
சென்னையில் டிஜிட்டல் ராஜா படம் 2 பேர் மட்டும் படம் பாக்க வந்ததால் காட்ச்சி ரத்தாகி படம் எடுக்கப்பட்டது. அதை வெள்ளிவிழா கொண்டாடியது என்று நீங்கள் சொன்னால் எங்களுக்கு என்ன வந்துச்ச்சு.
மக்கள் திலகம் பற்றி பொய்யான தகவல் சொன்னதால் உங்கள் திரிக்கி வந்து பதில் சொல்ல வேண்டிதாகி விட்டது. இல்லாட்டி உங்கள் பாகத்தை நிரப்ப எங்களுக்கு என்ன தலை எழுத்தா.
நீங்கள் பணம் கட்டி ஓடிய வசந்த மாளிகை இன்று தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் ஓடவில்லை.
உங்கள் நடிகர் படமே எந்த ஊரிலும் கிடையாது.
எங்களுக்கு அப்படி இல்லை. மக்கள் திலகம் இன்றும் எங்களுக்கு கோவையில் விருந்து கொடுக்க்கிறார்.
ஆனால் எப்பவாசிச்சும் பிச்சக்காரனுக்கு பழைய சோறு கிடைச்ச மாதிரி சந்தோசம் உங்களுக்கு. அதோடு திருப்தி படுங்கள். எங்களை சீண்டாதீர்கள்.
இலங்கையில் ஒலிபரப்ப இன்று வரை தடை செய்யப்பட்டுள்ள பல தலைவர் பாடல்களில் இதுவுமொன்று. கருணாநிதிக்காக பாடிய பாடல் அங்குள்ள தமிழர்களின் உணர்வுகளைத் தூண்டி ஒற்றுமையை நிலைநிறுத்தும் வகையில் அமைந்ததை விட பெரிய சிறப்பு இடையில் வருகின்ற வரிகள்
"பூனைகள் இனம் போலே பதுங்குதல் இழிவாகும்
புலியினம் நீயெனில் பொருந்திட வாராய்.......
ஒரு காலகட்டத்தில் ஈழத் தமிழ் மக்களை எழுச்சியடைய செய்தவை எம்ஜிஆரின் சாகாவரம் பெற்ற பாடல்கள் என்றால் இங்கு நமக்கு வியப்பாக இருத்தலே ஒருவித வெட்கப்பட வேண்டிய விடயம் தான். ஏனெனில் அச்சம் என்பது மடமையடா, ஒரு தாய் மக்கள் நாமென்போம், அதோ அந்த பறவை, ஏன் என்ற கேள்வி போன்ற எண்ணற்ற பாடல்கள் இலங்கையில் ஒலிபரப்ப தடை செய்யப்பட்டவையாகும்.
இன்று ஈழமுமில்லை, புலிகளுமில்லை, சுதந்திரத்திற்கு அவசியமுமில்லை. உணர்ச்சிகளைத் தூண்ட எம்ஜிஆர் பாடல்களும் தேவையில்லை. நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அவர்கள் தங்கள் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பொருளீட்டி, வாழ்ந்து வந்தது தான் தவறோ? அப்படிப்பட்டவர்கள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டு, அவர்களின் எதிர்கால கனவுகள் சிதைக்கப்பட்டு கொடுமையான முறையில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது, நெஞ்சு பதைபதைக்கிறது, கண்கள் பனிக்கின்றன. சமீப காலத்தில் ஒட்டு மொத்தமாக நசுக்கப்பட்ட ஒரு சமுதாயம் உண்டென்றால் அது நமது தொப்புள் கொடி உறவுகளான அப்பாவி இலங்கை தமிழர்கள் தான். மிச்சம், மீதி இருந்தவர்கள் தங்கள் சொத்துக்கள், வீடு வாசல்களை இழந்து எங்கோ கண் காணாத இடத்திலும், அகதிகள் முகாமிலும் உயிர் வாழ்வதற்காக எதிர்கொள்ளும் துயரங்களும், கொடுமைகளும் ஏட்டிலடங்கா......
இன்னொரு எம்ஜிஆர் என்று வருவது? அவர்களின் தேவைகள் மற்றும் சிரமங்களை முற்றிலுமாக அறிந்து அவர்களின் தோளோடு தோள் நின்று அவர்களுக்கு தேவைப்படுகின்ற அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து, துன்பப்படுகின்ற காலகட்டங்களிலெல்லாம் அவர்களை ஊக்கமும் உற்சாகமும் படுத்தி துயரங்களை போக்கி நல்வாழ்வு அமைத்துத் தருவதெப்போது?.............. Thanks...
...
https://i.postimg.cc/cCs5fh2n/7d0421...f874b9c25e.jpg
சண்முகா திரையரங்கு - கோவை
புகைப்படங்கள் - திரு ஹரிதாஸ் & சாமுவேல்
https://i.postimg.cc/sf5Jrb1f/8ac069...5c10562a98.jpg
சென்னை - நத்தமேடு - மக்கள் திலகம் ஆலயம்