I will read and pen my opinion for sure?(What happened to your original request?)
Printable View
Thanks Gopal. It is a long story. Chinna kanan used to read and comment earlier to my short stories . A bit classic comments and useful for my improvement.
On an impulse, I made request to other Kavithaikku kavithai contributors , you and Kalnayak also in this link.
Since I felt a bit embarrassed to request readers to comment, I edited it . As usual, editing is an after thought. I thought it is not fair to request others to read mine! . Each one has a right to ignore. :( Right ?
Honestly I enjoy the comments and unforced reviews ...... and please do pen your opinions. :ty:
முந்தைய கவிதையில் திருத்தம் செய்தேன் -யாரும் கன்பீஸ் ஆயிடக்கூடாதுன்னு!:noteeth:
நானும் ஒரு நவீன கவிதை மதுர கானங்கள்ல போட்டிருக்கேன் :) உங்க கவிதை ஏற்கெனவே புரிஞ்சுடுத்து இன் த ரைட் வே.. அமெரிக்காவா..ஜமாய்ங்க்க...
எனக்கொரு விடை தெரிஞ்சாகணும்.
இந்த அந்தாதி விளையாட்டில் மற்றோர் கவிதையை எல்லோரும் படிக்கிறோமா ? (பங்கு பெறுவோர்)
அல்லது இறுதி வரி மட்டும் படித்து ஜல்லியா?(நான் எல்லாத்தையும் படிச்சு புரிஞ்சிக்கிறேன் சாமி.)
சி.க. -உங்களுக்கு இப்போதாவது என் கவிதை புரிகிறதா?இதற்கு மேலும் என்னால் தரை காண முடியாது.
இதென்ன இப்படி ஒரு சந்தேகம்? அபாண்டமான குற்றசாட்டா இருக்கே! வேண்டாம் கோபால்! நாமெல்லாம் நுனிப்புல் மேய்பவர்கள் அல்ல!
கோபால் உங்கள் இந்தக் கவிதையை இப்போது தான் பார்த்தேன்
//தளமிடுவதோ கனவோ கற்பனையோ அல்ல வாழும் கணம் வாழும் விதம் சூழும் எண்ணம் // இது புரியுது
//உலகை மாற்றி வளம் காணும் வித்தகனாய் விடலை பருவத்தில் இருந்தவன் அதே விடலையாய் // இது புரியுது
//கலக்கி வருகிறேன் மாற்ற மனதுடன் மண் புழுவையும் மாற்ற இயலாமல் அங்கீகரித்து சக வாழ்வில்.// இது புரியலை
ஜெனரலா பார்த்தீங்கன்னா நெத்திச் சுருக்க வச்சு பலவரிகள் புரியாம சிலவரிகள் புரிஞ்சு தான் இருக்குது உங்கள் கவிதைகள், சிந்தனைகள்.. அதைக் கேட்டால் கோபிப்பீர்களோ என்று கேட்பதில்லை..அதற்காகப் படிக்காமலும் இருப்பதில்லை ( சிலசமயம் நெம்ப நெம்ப கோபம் வரும்..அது உண்மை..அந்த திட்டமும் இலக்கும் கவிதை ரொம்ப புரியாமல் எதற்காக இப்படி என்று கோபம் தான் வந்தது..பட் இட்ஸ் யுவர் நேச்சர் யுவர் விஷ்.. உங்களுக்கு வரும் விதமாய் எழுதுகிறீர்கள்)
இப்பவும் கூட ஸேஃபா இதற்கு மேலும் தரையிறங்க முடியாதுஎனச் சொல்லியிருக்கிறீர்கள்.. நான் என்ன கேட்க இயலும் ஐயா :)
//கழிசடை சமூகம் கொள்ளை காரர்களுக்கும் கந்து வட்டியாருக்கும் கற்பழிப்போர்க்கும் கருணை
பொழிந்து கம்பளம் விரிக்கும் திட்டமிடா நடுத்தரர் தூக்கிற்கு தயார் எனினும் அதனிலும் கொடிய
வாழும் தண்டனை அனு தினமும் இன்னுமா வாழ்கிறாய் என்ற ஏளன பார்வை ஆறுதல்
சூழும் கணங்கள் பெற்றோரை இல்லம் சேர்த்த சுற்றம் பேசும் பட்டி மன்றங்கள் முதியோரை மதியுங்கள்//
முதியோரை மதியுங்கள்னு முழுக்க முழுக்க இந்தக் கவிதையில சொல்ல வர்றீங்கன்னு புரியுது...அதுக்காக எதுக்கு சமூகத்தை கழிசடைன்னு திட்டணும் அப்புறம் கற்பழிப்பு இ.டிசி.. எல்லாம் கவிதையில கொண்டு வரணும்.. ஜெனரலா நவீன கவிதைகள்ல செக்ஸ் இஸ் எ ம்ஸ்ட்டா...அல்லது நீங்கள் எழுதுகிற கவிதைகள்ல மட்டும் அப்படியா..
இளம்மனதில்..அப்ப்டின்னா அபிஷேக் ஐஸ்வர்யா ராயை இழுத்துத் தான் ஆகணுமா.. பலப் பல கனவுகள் அபிலாஷைகள்னு போட்டா மத்தவங்களுக்குப் புரியாதா.. பச்சையா கடுமையா செக்ஸ் கலந்து எழுதறது தான் நன்மை பயக்கும் விஷயமா..
மனுஷ்ய புத்திரன் என்பவர் நான் எழுதும் கவிதைகள் புரியவில்லை எனில் அது உங்களுக்காக எழுதப் பட்டது இல்லைஎன்று அர்த்தம் என எழுதியிருந்தார். அதிலிருந்து அவரைப் படிப்பதில்லை. எந்துக்கு?
//இறுதி வரி மட்டும் படித்து ஜல்லியா?// இது எதுக்குங்க.. நாங்க ஜல்லி அடிக்கிறோமா.. நல்லா இல்லையா.. எங்களைப் பற்றி நீங்கள் எதுவுமே சொல்லவில்லையே..திட்டக் கூட இல்லை எனில் வருத்தம் தான்..ஆனால் ஒருவிதத்தில் பச்சையாக நீங்கள் ஜல்லியா என்று கேட்டது கூட உண்மை தான்.. இங்கு இருப்பவர் கள் எல்லாருமே ப்ராக்டீஸ் தான் செய்து கொண்டிருக்கிறோம்.. நான் பி.பிக்கா , கிறுக்கர், தற்போது இணைந்த முரளி, கல் நாயக்.
2011இல் இருந்து மறுபடி எழுத வ்ருமா என யோசித்து இங்கு வந்த போது வாங்க வாங்க என்று வரவேற்றவர் பவளமணிப் பிரகாசம் அக்கா..யாரும் கமெண்ட்ஸ் போடவில்லையே என வருத்தப் பட்டு ஒருமுறை எழுத..எவ்வளவு பேர் படிக்கறாங்க தைரியமா எழுதுங்க தம்பி என உற்சாகமூட்டியவர்..இன்றும் இங்கு கொஞ்சம் மரபு , புதுசில் முயன்று கொண்டிருக்கும் மாணவனாகத் தான் இருக்கிறேன்..எனது குருமார்களில் உங்களையும் சேர்த்துவிட்டேன்..நவீன கவிதைக்கு.. அதிலும் முயலப் போகிறேன்..உங்கள் பாஷையில் ஜல்லி..கொஞ்சம்பார்த்து ப் போட்டு வழி நடத்துங்கள் ஐயா..
சின்ன கண்ணன்,
உங்கள் நேர்மையான பதிலுக்கு மிக நன்றி.
கவிதைகள் சில கூறல்களை தாண்டி, சக வாசகனின் இட்டு நிரப்பும் ஆற்றலை வேண்டுவது. நவீன கவிதை சில சூட்சம தளங்களில் பயணிக்க வேண்டும். சில நேரம் கவிஞனே எண்ணாதவை மற்றோர் மனதில் உதிக்க வேண்டும்.
நீங்கள் கேட்ட வரிக்கு விடை- சிறு வயதில் எல்லாவற்றையும் மாற்ற எண்ணியவர்கள், தங்களால் ஒரு சாதா மண்புழுவை கூட மாற்ற இயலாது என்ற உண்மை புரிந்து, அதை அங்கீகரித்து வாழ்ந்தால் மட்டுமே இளமனது முதுமையிலும் சாத்தியம் என்ற சூட்சும வரிகள்.
நீங்கள் எதை கேட்கவும் அஞ்ச வேண்டியதில்லை.
நகரம் நழுவி நரகமானதோ இல்லை
கண்ணன்களின் ரகளை நரகமாக்கியதோ....
கோபாலின் கவிதையில் எதுகை அருமை! எத்தனை சங்கதிகள்! எவ்வளவு ஆற்றாமை, ஆத்திரம்! ம்ம்ம்ம்....
போய்விட்டு வந்தால் ஏகக் கவிதைகள்..எல்லாமே அழகு.. ஐ திங்க் தி லாஸ்ட் லைன் ஷீட் பி ஆஸ்திகர்.. இதுலருந்து ஆரம்பிக்கணும்..
//கோபாலின் கவிதையில் எதுகை அருமை! // கடைசியில் அயல் நாட்டுக்குப் பார்க்க ப் போன அம்மா பதினெட்டு மாதம் இருந்துவிட்டு சமைத்துப் போட்டுவிட்டு வருகிறார்- இது தான் கருவா.. கொஞ்சம் குழப்பம் தான் எனக்கு..:)
ஆமாம், 'ஆஸ்திகர்' தான் அடுத்த சொல். சி.க.வுக்கு ஏன் குழப்பம்? கோபால் சரியாய்த்தான் வர்ணித்திருக்கிறார் யதார்த்தத்தை. ஆனால் பல பெற்றவர்கள் தெரிந்து, விரும்பி அப்படி இருந்துவிட்டு வருகிறார்கள்!
சி.க,
கவிதையின் அடிநாதம் .... வயதான பிறகு ஆசை அதிகரிக்கும் ஒரு தலைமுறை. இளைய தலைமுறையின் நிழலில் அபிலாஷை நிறைவேறுமா என்று அலைந்தாலும், சொந்தத்தை சுயநலத்துக்கு பயன் படுத்தி தூக்கி எரியும் இளைய தலைமுறையால் ஆசைகள் அறுந்து ,பற்றற்று இருக்க விரும்பினாலும் ,அடுத்த அழைப்புக்காய் ஏங்கும் முடிவில்லா சுழற்சி.
நன்றி கோபால்.. விளக்கத்திற்கு..புரிகிறது இப்போது தெளிவாக..என்னாமாதிரி கரு..நைஸ் அண்ட் தாங்க்ஸ்..சிறுவனுக்கும் புரியும்படி எழுதியதற்கு..
பட் வயசானா அப்படித்தான் ஆகும்னு நினைக்கறேன்கோபால்.( நீங்கள் கூறிய வகையில் இருப்பவர்கள் இந்தக்காலத்தில் மிகச் சிலரே..).என்ன தான் காசு பணம் துட்டு மணி மணின்னு சேர்த்து வச்சாலும்.. இட்ஸ் நாட் மணி.. ஆர் இடம் அப்படியாவது புள்ளையோட பொண்ணுங்களோட சேர்ந்து இருந்துட்டு வரலாம்னு நினைக்கறவங்க அதிகம்..அதுலயும் சில பேர் ( எனக்குத் தெரிந்த) இங்க மஸ்கட்ல கூட பையனோ பொண்ணோ அவங்களோட முதல் ப்ரசவத்துக்கு வருவதோடு சரி..வெளியவா..இந்த ஊர்லயா எதுக்குங்க கண்ணன் சார்..இந்தக் காம்பெளண்ட் இருக்கு வாக் பண்ண..வந்தது குழந்தையைப்பார்த்துக்க.. அவ்ளோ தான்..தென் நமக்கு மடிப்பாக்கம் தான் சாஸ்வதம் எனத் தெளிவாகச் சொன்னவர்களும் உண்டு..அடுத்த பிரசவத்துக்கு அப்பாவைக் கூப்பிடலையாம்மா.. இல்ல அங்க்கிள்..அவருக்கு வெயில் ஒத்துக்கலையாம் பாருங்க.. பையனுக்குத்தங்கத்துல சங்கிலி வாங்கிவச்சுருக்காராம்.. வர்றச்சே போடுவாராம்..யாருக்கு வேணும்.. அவர் வந்து என் கூட இருந்தா போதும் எனச் சொன்ன மகள்களும் உண்டு..
//என்று வேண்டுமானாலும் திருமண பத்திரிகை வரும் மொய்யுடன்
சென்று கண்டு பொய்யுடன் வாழ்த்து தந்து வெறுமையாய் நான்// ச்ச் வருத்தப்படாதீங்க சார்..உங்க நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும் :)
பாவ புண்ணிய கவிதையும் பொருத்தமான படமும் சூப்பர்!!!
//யார்மனதும் புண்படாவண்ணம்
ஆழம் அகலம் புரிந்து
விவரமாகக் கேட்டு
விடைக்காக காத்திருக்க
உணர்த்துவதே
அவ்வளைவும் பணிவும்//
வெங்க்கிராம் தூள்..
பா.ராகவனின் ‘புவியிலோரிடம்’ என்ற நாவல் தான் நினைவுக்கு வருகிறது..ஃபார்வர்ட் கேஸ்ட் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளப்படும் கதானாயகன் சிங்கப்பூர் சென்று பல உயரஙக்லை எட்டுவான்.. அவவவிற்கும் காரணம் பணிவு+கடும் உழைப்பு..ம்ம்
//கோ..
மிக ச் சிறப்பாக இருந்தது கவிதை..ஒரு முறைக்கு இரு முறை படிக்க வேண்டியிருந்தது.. உங்கள் தமிழ் ஆழம் தான்..
ஆனால் எனக்கு ஒரு குறை உங்களிடம் எப்போதும் உண்டு.. எளிமையாக எழுதக் கூடாது என்று கங்கணம் கட்டி, வெறுப்பு, நெகட்டிவ் தாட்ஸ், கொஞ்சம் கூட புன்முறுவல் கூடாது என்று நினைத்த படி ந.தி அல்லாத விஷயங்களை எழுதுவதாகப் படுகிறது எனக்கு..ஏன் இந்த வரையறை..
கொஞ்சம் ஸிம்ப்பிளாக எழுதினால் சர்வ நிச்சயமாக நிறைய ஃபாலோயர்கள் உங்களுக்கு வருவார்கள் (இப்போதும் இருப்பார்கள் இல்லையெனச் சொல்லவில்லை)
கொஞ்சம் ஸாஃப்டாகவும் எழுதலாமே.. சொன்னது தவறென்றால் மன்னிக்க..//
Chinna kannan .//
சின்ன கண்ணன்,
உங்களுக்கு மிக நன்றி. உங்கள் அக்கறை புரிகிறது. என் அன்னை கவிதை புரிய நான் எழுதிய முன்னுரையே போதுமே?
எப்போதுமே உன்னத விஷயங்கள் பிறர் கவன ஈர்ப்பை ஆழமாக கோருபவை. நாம் தர வேண்டிய விஷயங்களை நம் புலமைக்கும்,ஞானத்திற்கும் ,கருத்தியலுக்கும் ஏற்ப தந்தேயாக வேண்டும். நான் எழுத விரும்புபவை ஆழமான விஷயங்களை இன்னும் ஆழமான அழுத்தமான எழுத்துக்களை கொண்டு. புலி வேட்டைக்கு கொக்கு சுடும் துப்பாக்கி எடுத்து போக கூடாது. எல்லாவற்றையும் புன் முறுவலுடன் அணுக முடியாது. அணுகவும் கூடாது.
நான் எழுதிய பதிவுகளில் ஏராள பதிவுகள் குசும்பு,வம்பு,நகைசுவை கொண்டதுதானே? எனக்கு கலப்பு பிடிக்காது. சாப்பிடும் கறிகளில் கூட உருளை,வெங்காயம்,காரட் ,என்று எல்லாம் கலந்தால் பிடிக்காது. நாம் மட்டும் கொடுக்க முடியும் என்பவற்றையே நான் தீவிரத் துவத்துடன் எழுதுவேன். ரசிகர்கள் எவ்வளவு என்பதை எண்ணி பார்த்தது கிடையாது. இன்னும் இருபது வருடம் தள்ளி போற்றுவார்கள். சுஜாதா(கிச்சு கிச்சு மூட்டும் வெகுஜன எழுத்து ) போன்ற சராசரிகளை விட அசோக மித்திரன்,கரிச்சான் குஞ்சு,பா.சிங்காரம் போன்றோர் காலம் கடந்தும் போற்ற படுவார்கள்.
முரளி,
ஒன்பது பெண்களுடன் இணைவது குழந்தைக்காக இல்லை ஏற்கெனெவே குழந்தையை சுமக்கும் மனைவியை துன்புறுத்த வேண்டாமே என்று நன்னோக்கில் செய்ய படும் தியாகம்.
(ஒரு நகைச் சுவை- எவ்வளவு மாதம் வரை உறவு கொள்ளலாம் என்று மருத்துவரிடம் கேட்க, அவர் பதில்- எவ்வளவு மாதம் வேண்டுமானாலும்- ஆனால் குழந்தை வெளியே வர வழி கேட்கும் போது விலகி வழி விடவும்.):-d
Gopal,
I used a quote from Waaren Buffet.
“No matter how great the talent or efforts, some things just take time. You can't produce a baby in one month by getting nine women pregnant.”- Warren Buffet. He is an authority on Investment,finance and Venture Capital.
I tired to emulate his saying in this Pattukku Pattu. I thought it would make an impact on the readers about haste.
I am sorry it kindled different nefarious thoughts in you. I regret for adapting that. However, Brighter side, It is a good lesson to me, what to publish and what not to , in a decent group.
Murali,
I am well aware of the purpose of your poem and Warren Buffet Quote. The best way of appreciation is thru lighter vein humour. I also remember my Math teacher word. He used to explain us in the class that if 50 men can finish the job in 30 days ,100 men can do it in 15 Days and if 1000 men are put it can not be done in a day. Logic and math fail at certain places. Just I want to show my appreciation for your poem in a devious way.
Gopal. Thank you ! Very nice of you to appreciate my average amateurish scribbling. I feel very encouraged. !
மனநோயாளி கவிதை மனதை தொட்டுவிட்டது, முரளிதரன்!
அட பாவமே! அல்வா குடுக்கப்போறது மாதிரி கொஞ்சிட்டு கடைசில புருசன் நெசமாவே அல்வா குடுத்துட்டாரு!
" பாடம் படித்தது பள்ளியறையில்" - நல்ல சிலேடை :-)
சினிமாபாட்டுலயெல்லாம் வந்ததுதானே?
கண்ணதாசனின் கருத்து அற்புதம்!