வாசு,
கார்த்திக் ஒருவரின் request உன்னை படம் போட வைத்தது.
இங்கு, கார்த்திக்,கோபால்,ராகவேந்தர் மூவரின் combined request .இங்கும் வந்து போடு. welcome.
Printable View
வாசு,
கார்த்திக் ஒருவரின் request உன்னை படம் போட வைத்தது.
இங்கு, கார்த்திக்,கோபால்,ராகவேந்தர் மூவரின் combined request .இங்கும் வந்து போடு. welcome.
ராகவேந்தர் சார் சொன்னது போல இவர் படங்களுக்கு கிடைத்த opening ABC மூன்று centres இலும், இரு திலகங்களுக்கு மட்டுமே சாத்திய பட்ட ஒன்று. (மற்ற குட்டி நடிகர்கள் குட்டி தயாரிப்பாளர்களை வைத்து 25000 முதல் போட்டு குட்டியூண்டு collection கொண்டு திருப்தி அடைந்தனர்.) இவர் உச்சத்திலிருந்த போதும் ஜெமினி முதலிய சீனியர் கலைஞர்களோடும்,சில குட்டி ஜூனியர் கலைஞர்களோடும் ஈகோ பார்க்காமல் நடித்து கொடுத்துள்ளார். தேனீ.மா. அன்பழகன் என்ற கே.பீ. உதவியாளர் ,நான்கு சுவர்கள் படபிடிப்பில்,இவர் சக தொழிலாளர்களோடு அடித்த ஜாலி லூட்டி பற்றி விவரித்துள்ளார்.
longevity என்பது planning சம்பத்த பட்டது. அதை தக்க வைத்து கொண்டு,உடலை நன்கு பராமரித்திருந்தால் பிற்காலத்தில் கமல்-ரஜினியோடும் சில காலம் ஹீரோ ஆகவே தொடர்ந்திருப்பார்.
சில சமயம் discipline ,Public Relations (முக்கியமாக பத்திரிகையாளர்களை "குஷி" படுத்துவது) என்று இவருக்கு கீழே இருந்தவர்கள் கூட, இவர் மதிப்பிழந்து போன பிறகு, சில காலம் தொடர முடிந்தது.
// ஆனால், ஒரு புதையலை குப்பை தொட்டியில் வீசுவது போல ,சராசரிகளுக்கு இடமளித்து விட்டு, ரவி தன் ஸ்தானத்திலிருந்து தன்னை தானே இறக்கி கொண்டார். தயாரிப்பாளர் மற்று சக கலைஞர்களோடு ஒத்து போகாமல் ,குடித்து தொழிலில் போதிய கவனமின்றி,படங்களை சரியாக தேர்வு செய்யாமல், சறுக்குவதை உணர்ந்து சரியான நேரத்தில் விழித்து கொள்ளாமல் தான் வெட்டிய பள்ளத்தில் தானே விழுந்தார். //
கிட்டத்தட்ட இதே வழியில் சென்று தனக்குத் தானே குழிபறித்துக் கொண்ட இன்னொருவர் நடிகர் கார்த்திக். இவரும் தனக்கிருந்த அபார மக்கள் மற்றும் ரசிகர் செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ளத் தவறியவர்.
தேங்க்ஸ் கார்த்திக் சார். கிட்டத்தட்ட கார்த்திக் கதை போலத்தான். ஆனால் கார்த்திக்கிற்கு கொஞ்சம் அவாளோட support இருந்ததால் பிழைத்து கொண்டார்.(மணி, பாலசந்தர் போன்றோர்)ஆனால் கார்த்திக் உச்சம் செல்லும் வாய்ப்பை ,அவர் பழக்கங்களினால் இழந்தார். ரவி உச்சம் தொட்டு வீழ்ந்தார்.
ராமராஜன் கதை வேறு. இளைய ராஜா தன்னை நிறுத்தி, தான் எந்த நட்சத்திரத்தையும் நம்பியிருக்கவில்லை என்று காட்ட ஒரு பொம்மைக்கு உயிர் கொடுத்து இரண்டு வருடம் தற்காலிக உயரம் கொடுத்தார் கட்டி கொடுத்த சோறு போல ஸ்டாக் தீர்ந்து கதை முடிந்தது.
நேற்று நினைவில் நின்றவள் பார்த்து ரசித்தேன். தம்பி வாடா அடிச்சது யோகம்.
எனக்கு குமாரின் இசையில் மிக பிடித்த பாடல்களில் ஒன்றான பறவைகள் சிறகினால் அணைக்க கண்டேனையா இந்த படம்தான்.(எல்.ஆர்.ஈஸ்வரி ) யாரிடமாவது இருந்தால் பதிக்கவும்.
வேறு பட்ட பல நடிகர்களை நினைவில் வைத்திருப்பதில் வட இந்தியர்களை நாம் மிஞ்ச முடியாது. ஷம்மி ஒன்றும் பெரிய நடிகர் இல்லை. பார்க்கவும் சுமார். ஆனாலும் எப்படி கொண்டாடுகிறார்கள்? நாம் அதை விட பல மடங்கு சிறந்த ரவி சந்திரனை கொண்டாட வேண்டாமா? பதிவர்கள் அனைவரும் தங்கள் impression எழுதும் படி அன்பு கோரிக்கை விடுகிறேன்.
சாரதா மேடம்,கார்த்திக் சாருக்கு ரவி ரசிகர்கள் கடன் பட்டவர்கள்.
ONE OF MY FAVOURITE RAVI SONG FROM ''NAhttp://youtu.be/PfoaGs2muHcNAGU SUVARGAL''-1970
நம் உறவை ஊரறிய நான் தரவா? நீ தரவா?
எனக்கு இந்த பாடலை பார்க்கும் போது வாழ்க்கையில் இன்பமும் ,துன்பமும் ஒன்று சேர்ந்து வரும் என்று தோன்றும்.(ஆனால் இரு பெரும் இன்பங்கள், ஒரு மாபெரும் துன்பம்)
கோபால்,
இந்தாருங்கள் தங்கள் மனம் கவர்ந்த பாடல். தங்களுக்கு மட்டுமல்ல. தங்களைவிட எனக்கு மிக மிக மிக மிக பிடித்த பாடல். (ராட்சஷப் பாடகியின் வெகு அலட்சியமான குரலில்)
https://www.youtube.com/watch?featur...&v=VSsqzU1JCoU
தேங்க்ஸ் வினோத் சார்.
நீங்கள் தந்த பாடலை மிகுந்த சிரமங்களுக்கிடையில் தரவேற்றியது யார் தெரியுமா? நமது அருமை ரசிகவேந்தர் சார்தான். அவருக்கும் என் நன்றி!