Avaru M.P aanadhe periya shock..
Printable View
Avaru M.P aanadhe periya shock..
தி.மு.க.கட்சியின் உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களையெல்லாம், நில அபகரிப்பு வழக்கில் கைது பண்ணி மேட்டரை முடிங்கப்பா.
எதுக்கு தவணை முறையில் கைது பண்ணிக்கிட்டு..?
நடிகர் சிவக்குமாருக்கு எச்சரிக்கை!!
திரு. சிவக்குமார் அவர்களே!
சமீப காலமாக உங்களின் ஆக்ரோஷமான மேடைப் பேச்சை கேட்கையில் எங்களுடைய நாடி நரம்புகளெல்லாம் புடைக்கிறது; தமிழ் மணக்கிறது; உணர்ச்சி பீறிட்டு வருகிறது.
குறிப்பாக பெண்பிள்ளைகள் குழுமியிருக்கும் கல்லூரி வளாகத்தில் உங்கள் சொற்பொழிவு என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு ஆலோசனை தருகிறேன் என்ற சாக்கில் “கழிப்பறை வடிகாலில் 2 டன் கருத்தடைச் சாதனம் புதையுண்டுக் கிடந்ததாக எனக்குத் தகவல் வந்தது” என்று பயமுறுத்தி பெற்றோர்களின் வயிற்றில் புளியைக் கறைக்கிறீர்கள். ஒரு கருத்தடைச் சாதனத்தின் எடை சுமார் ஒரு கிராம் என்று வைத்துப் பார்த்தாலும் நீங்கள் சொன்ன கணக்குக்கு சுமார் இரண்டு மில்லியன் கருத்தடைச் சாதனம் வருகிறது.
எந்த கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் கழிப்பறையில் கருத்தடைச் சாதனத்தை அவர்கள் பணியாளர்களின் உபயோகத்திற்காக இருப்பு வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுக் கூற முடியுமா? உங்களுடைய கூற்றை கேட்கையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எங்கள் குழந்தைகள் அனைவரும் கற்பிழந்தவர்கள் என்ற மாயையை உருவாக்கி இருக்கிறீர்கள்.
இளைய சமுதாயம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் தொடங்கும் உங்கள் மேடைப்பேச்சு, உணர்ச்சிகரமாக உள்ளத்தைத் தொட வேண்டும் என்ற பாவனையில் தொடர்ந்து, தமிழனத்தையும் தமிழ்ப் பெண்களையும் இழிவுபடுத்தும் ரீதியில் வெளிப்படுவது கடுமையான கண்டனத்துக்குரியது.
பராசக்தி, மனோகரா, கந்தன் கருணை திரைப்பட வசனங்களை நீங்கள் பக்கம் பக்கமாக மனனம் செய்து உணர்ச்சிகரமாக மேடையில் பேசுகையில் உங்களிடம் உள்ளத்தை பறிகொடுத்த எங்களுக்கு இதுபோன்ற உங்களின் கருத்து எங்கள் முகத்தைச் சுளிக்க வைக்கின்றது.
“பிளவுபடாத சென்னை ராஜதானியிலே ஒரு பெரிய நடிகர் இருந்தாரு. அவரு நல்ல பாடுவாரு, ஆடுவாரு. நல்ல தேஜஸ். அவர் ஒரு கச்சேரி பண்ணுனா, முடியும்போது குடும்பப் பெண்கள் கேட்பாங்க அவுங்க புருஷன்கிட்ட. ஐயா உங்களுக்கு 3 குழந்தை பெத்தேன். அது வேஸ்ட். இவரு மகா புருஷன். இவருக்கிட்ட போயி ஒரு குழந்தையை பெத்துக்கிறேன். நம்ம வீட்டுலே ஒரு மகா புருஷன் இருக்கோணும்” என்று கூறி தாகத்தை தணிப்பதற்கு தமிழ்ப் பெண்கள் தயாராக இருந்தார்கள் என்ற தீராத பழியை சுமத்தியிருக்கிறீர்கள்.
உங்களுடைய இந்த ஆதாரமில்லாத அபாண்டமான குற்றச்சாட்டு எந்த அளவுக்கு தமிழ்ச் சமுதாயத்தை பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்த்தீர்களா?
இப்படிச் சொல்வதற்கு உங்களுக்கு நா கூசவில்லையா? தமிழ்க் கலாச்சாரம், தமிழர் பண்பாடு என்று வீர வசனம் பேசும் நீங்களா இப்படி பேசுவது?
குடும்பப்பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் இப்படிப்பட்ட கேவலமான செயலுக்கு அனுமதி கேட்டதை நீங்கள் காது கொடுத்து கேட்டீர்களா சிவக்குமார்?
மனைவி கணவனிடத்தில் அந்தரமாக பேசியதை எப்படி நீங்கள் உளவு பார்த்தீர்கள்? அப்படியே யாரவது ஒருத்தி உங்கள் காதுபட பேசியிருந்தால் அவள் நிச்சயம் குடும்பப் பெண்ணாக இருக்க முடியாது. அவளுக்கு அகராதியில் வேறு பெயர். ஒருவேளை சினிமாத் துறையில் நீங்கள் பழகிய பெண்கள் உங்களிடம் இவ்வாறு பேசினார்களோ?
தமிழ்ப் பெண்களை இதைவிட வேறு யாரும் கொச்சைப்படுத்தி பேச முடியாது என்பது என் கணிப்பு. நடிகை குஷ்பு “தமிழ் நாட்டிலே எந்தப் பெண்களும் கற்புடையவளாக இல்லை” என்று சொன்னதற்காக தமிழகமே கொந்தளித்தது.
உங்களை முச்சந்தியில் நிறுத்தி வைத்து கேள்விக் கேட்க ஏன் இன்னும் யாருக்கும் துணிவில்லை? தமிழகத்தில் இருக்கும் மாதர் சங்கங்களுக்கு இந்த செய்தி எட்டவில்லையா? நடிகை குஷ்பு தமிழ்ப்பெண்களை இழிவு படுத்தியபோது வரிந்துக் கட்டிக் கொண்டு வழக்குகள் தொடர்ந்த அரசியல் கட்சிகள் உங்கள் விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏன்?
உங்களின் இந்தச் செயலுக்கு வருந்தி மானமுள்ள மறத் தமிழர்களிடம் நீங்கள் மண்டியிடுவது எப்போது?
Siva Kumar :shock: why ya..
I heard one of his talks in TV nearly a year before.. It went on on these lines.. was a bit shocked and surprised...
he was saying about the call centres... he said the restroom pipes were struck and then it was found it was full of condoms.. and he went on to say, I wont blame " ennarumai kanmanikaL" for this.. night fulla kan muzichu vela paarkurathunaala udambu suudakiduthu..atha thiirka ippadi poka vendi irukku..etc etc.. ". his argument was something like every single girl works in call center has lost her virginity and it is unavoidable.. I was thinking about the parents who would have watched this programme with friends/relatives etc.. enna paadu patruppanga? how the hell can he talk like this?
I had a good respect for this guy until I saw his disgusting speech on Vijay TV. He dont deserve any respect but definitely deserves brickbats.
rendu kisu kisu'va trolley forward pannanum avarukku.. appo than adanguvaaru.. :p
பழமைவாதிகள் கருத்து அப்படித்தானே இருக்கும், இதில என்ன ஷாக்?!? நடக்காததையா சொல்லிட்டாரு?!? நாங்க குடியிருக்கும் அபார்ட்மென்ட் அதே தளத்தில் பேச்சுலர்கள் இருக்கும் வீட்டிற்கு ஒவ்வொரு வீக் எண்டும் 'யாராச்சும்' வந்துட்டு போயிட்டு இருக்காங்க. எதிர் வீட்ல ஆச்சாரமான குடும்பம் இருக்கு. நம்ப முடியுதா?!? யாருக்கும் எந்த தொந்தரவுமில்லை என்பது தான் இங்கு கவனிக்கப்படவேண்டியது. இன்னிக்கு இருக்குற வெலவாசியில, இந்த பசங்க எல்லாம் ஊருக்கு வெளிய தனியா ஸ்மால் ஹவுஸ் ஆ எடுத்து வெச்சிக்க முடியின்?
என்ன சிவகுமார் எக்கசக்கமா exaggerate பண்ணிட்டார். நம்ம தலைமுறை ஆட்களுக்கு நிஜம் தெரியும் தானே! சுடிதார் போட்டவங்க நல்ல பொண்ணுமில்ல ஜீன்ஸ் போட்ட எல்லாருமே கெட்டவங்களும் இல்லெ ந்னு நம்ம லிட்டில் சூப்பர்ஸ்டாரே சொல்லிருக்காரு. உள்ள போன அத்தன பேரும் குத்தவாளியில்லீங்க வெளிய உள்ள அத்தனபேரும் புத்தர்காந்தி இல்லீங்க அப்படின்னு சூப்பர்ஸ்டார் அன்னிக்கே சொல்லிட்டாரு. ஃப்ரீயா வுடு மாமே
கமர்ஷியல் ஸ்ட்ரீட் போனா எனக்கு இப்ப குமட்டிக்கிட்டு தான் வருது, முதலில் அப்படி இல்லை. ஆனால் இதற்கெல்லாம் பழக்கப்படாத பெருசுகள் இதை பார்த்து நம்ம காலத்துல இப்படி எல்லாம் பாக்க முடியலையே என்ற ஏக்கத்தையும் காணமுடியும். எதுவுமே தப்பில்லை, எல்லாரும் ரத்தமும் சதையுமான மனிதர்காள் தான். ஆனா, பேலன்ஸ் இஸ் வாட் யூ நீட்! அம்புட்டுதேன்
அடுத்த தலைமுறை 'இந்த' விஷயத்தில் எப்படி இருக்குமோ, நம்ம பிள்ளைங்க எல்லாம் எப்படி இருப்பாங்களோ என்ற பயம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது. இப்பல்லாம் தெளிவாயிட்டு. ஃப்ரீயா வுடு மாமே
+1 Sakala
Neenggal attanai pErum uttamarthAna sollunggal
Unggal Asai nenjai tottu pArthu sollunggal....