மெரினாவில் வந்த சுனாமி
மக்கள் வாழ்வை பறிக்க
தேர்தல் முடிவு சுனாமி
மக்களை வாழ வைக்குமா
இல்லை வீழ்த்தி சிரிக்குமா
என சொல்லுமா மெரினா!!!
--
கிறுக்கன்
Printable View
மெரினாவில் வந்த சுனாமி
மக்கள் வாழ்வை பறிக்க
தேர்தல் முடிவு சுனாமி
மக்களை வாழ வைக்குமா
இல்லை வீழ்த்தி சிரிக்குமா
என சொல்லுமா மெரினா!!!
--
கிறுக்கன்
மெரினா ஒரு மௌன சாட்சி என்றும்
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்
வறுத்த கடலை சோளக்கதிர் மீன்
வகை வகையாய் குடித்து உண்டு
ராட்டினம் கிளி ஜோசியம் ரசித்து
தொடுவானம் வரை நீளும் கனவு
இன்பம் துன்பம் இரண்டும் பகிர்ந்து
கடல் நீரில் கண்ணீரை கரைத்து
புது அத்தியாயம் எழுத எழுந்து
துவக்கமும் முடிவும் அரங்கேற்றி
அமைதியாய் அப்பாவியாய் கிடக்கும்
நீண்ட அதிசய அழகிய மர்மமே
’அழகிய மர் மமே
எனச் சொல்லும்படியாகத் தான்
இருக்கிறது வாழ்க்கை..
அதுவும்
இறுதிக்காட்சி எப்படி என்று
வாழ்ந்தவனுக்குத் தெரியாது
எப்போதும்..
**
அழகிய மர் ம மே
என எல்லாவற்றையும்
கொண்டாட முடியாது..
நாவல்களில், திரைப்படங்களில்
மர்ம்ம் துலங்கினால்
அவ்வளவு தான்..
சுவாரஸ்யம் போய் விடும்..’
‘இப்போது தான் புரிகிறது..
முன்பெல்லாம்
அழகிய மர் ம மே
அழகிய கவிதையே
என்றெல்லாம் புகழ்வீர்கள்..
இப்போதோ பேச்சற்று இருக்கிறீர்கள்..
திருமணமாகி
பலவருடங்கள் கழிந்த தாலா..
‘அசடே..
எவ்வளவு வருடமானால் என்ன
பெண்களின் மனது மர்ம்ம் தான்..
உனக்குத் தெரியுமா
வயதாவதால்
கவிதைக்கு வந்துவிடாது முதுமை..!’
முதுமை ரசிப்புக்கு கூர் தீட்டுமோ
மாயாஜாலெனும் கேளிக்கையரங்கிலே
பறக்கப் பழகாத நீலக்கிளியும்
புத்திசாலி பெட்டை நீலக்கிளியும்
பல வித சாகச அனுபவம் தாண்டி
ரியோ நகரத்து திருவிழா அமளியில்
அனுபவித்த அமர்க்களம் எத்தனை
நண்பர்கள் உவந்து உதவியதில்
தீயவர்களை அதகளம் செய்தே
அரிய அருகிய இனத்து பறவைகள்
காதலில் விழுந்து கனிந்து மகிழ
முப்பரிமாண வேடிக்கையை வியந்து
பேரப்பிள்ளைகளுடன் கண்டு மகிழ்திட
காலம் கனிந்து வந்தது வரமல்லவோ
வரமல்லவா
மக்கள் என்னை மறுபடி
தேர்ந்தெடுத்த்து...
**
ஆரம்பத்தில்
எல்லோரையும் போல
குழந்தைப் பருவத்தில்
நான் சமர்த்து தான்..
நல்ல ஆற்றல் கொண்டவள் தான்..
ஆனால்
சூழ்நிலைகள் அமைய
திரையில் நடிக்க ஆரம்பித்தேன்..
கற்ற பாடங்கள் என்னை
வாழ்க்கையிலும் தொடர வைத்தன
*
அடிபட்டு அடிபட்டு
அனுபவங்கள் பல பட்டு
இருந்த போதில்
குரு பார்வையாலோ
அல்லது
மறைந்த என் குருவின் பார்வையாலோ
சிம்மாசானம்
எனக்கு வ ந்த்து..
உடன் பிறவாமல்
வரக்கூடாத
ஆணவம் அகந்தை
கூட்டுச் சேர
மனம் கட்டுக்கடங்காமல் செல்ல
சிம்மாசனம் கை நழுவ..
மறுபடி முயற்சித்து
அரியணை ஏற
கூடவே உடன் பிறவாதவர்கள் வர
அரியணையிலிருந்து
இறங்கினேன் மக்களால்..
இதோ
இப்பொழுது
பல வருடங்கள்
காய் நகர்த்திப்
போராடி
சிம்மாசனத்தில்
ஒருவராக அமர்வது
கடினம் என நினைத்த போழ்தில்..
நடந்தே விட்ட்து
மெளனப் புரட்சி..
தவறுகள் யார்செய்தாலும்
தாங்க மாட்டோம் எனச்
சொல்லிவிட்டனர் மக்கள்..
என்னைத் தேர்ந்தெடுத்த்து
என் மேல் உள்ள நம்பிக்கையாலா..
அல்ல
நான் தான் ஒரே ஆல்டர்னேட்..
இருந்தாலும்
எஞ்சியிருக்கும் கொஞ்சம் நம்பிக்கையில்
தனிப்பெரும்பான்மையாய்
என்னை அமர வைத்திருக்கிறார்கள்...
பெறுவதற்கான இலவசங்களால்
அவர்கள் கவரப் படவில்லை..
கொஞ்சூண்டு துக்குணியூண்டு
இருக்கும்
என நம்பும் தர்மத்தால் தான்..
நானென்ன செய்ய வேண்டும்..
என் கடமையைச் சரிவரச் செய்வேனா..
எதிரிi களை வசைபாடி
அழிப்பதில் குறியாய் இருப்பேனா..
வடக்கில் சென்று மாறுவேனா..
சுற்றி இருக்கும் கூட் ட்த்தால்
மனம் கலைந்து
சூழ்நிலைக் கைதியாகி
மக்களை மறப் பேனா..
தெரியாது..
ஆனால்
ஒன்று தெரியும்..
நான் செய் த்தை; செய்து கொண்டிருப்பதை;
செய்யப் போவதை
மேலே உள்ள ஆண்டவன்
பார்க்கிறானோ இல்லையோ
அமைதியாகவும் ஆழமாகவும்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
பாமர மக்கள் என
ஒளஒளாக்கட்டிக்காக அதாவது சும்மா
சொல்லப் படும்
புத்திசாலிகள்.....
***
புத்திசாலிகள் ஆவதுண்டு கோமாளிகள்
பூனைகளுக்கு தனித் தனி வாசல் செய்து
வலது இடது பைக்குள் தவளை ரொட்டி மாற்றி
அல்லது அறிவோடு தந்திரம் கொஞ்சம் கலந்து
பணத்தை சேர்த்து பாதுகாத்துப் பெருக்கியும்
புகழை இலகுவாய் கைத்தடிகளால் வளர்த்தும்
உயரங்கள் தொடலாம் வியர்வையின்றி விந்தையில்லை
பெரிய படிப்பும் பட்டமும் வேணா போதும் நல் யோகம்
நல்யோகம் உமக்கு காத்திருக்கிறது
ஆனால் கொஞ்சம்
தன்னம்பிக்கையுடன் முயற்சியும் வேண்டுமென
எஜமான் சொல்வதைக் கேட்டபடி
நெல்மணி எடுத்து உள்செல்கையில்
எழுந்த சிரிப்பு மறித்த்து..
சும்மா பொழுது போகவில்லை என வந்தேன்..
நீ சொல்வது எனக்கே தெரியும்...
எஜமான் மேலும் ஏதோ சொல்ல
எனக்குள் எழுந்த கோபத்தால் சற்றே பறந்து
சிரித்தவன் கையைக் கொத்தப் பார்த்து... பின்
த த் தித் த த் திக் கூண்டில் மேலேறினால்
மறுபடி சிரிப்பு..
பார் நல் யோகம் உன் கிளிக்குத் தான்..
இறகு முளைத்து விட்ட்து..
பறக்கப் போகிறது...
எஜமான் ஆதரவாகக்
கழுத்தைப் பிடித்துத் தடவ
அதில் நான் மெய்மறக்க
சற்றே தூக்கி கீழே வைத்து அழுத்தி
கூண்டினுள் தள்ளி விட்டு
அருகிலிருந்த பையைத் துழாவ
ஆஹா மறுபடி நெல்மணி என
அலகைத் திறக்க, பார்த்தால்
வெளிவந்த்தென்னவோ ஒரு
கத்தரிக் கோல்...
கத்திரிக்கோல் வெட்டியது பட்டை நறுவிசாய்
அளந்து பிசிறின்றி பேசிய வார்த்தைகள்
துல்லியமாய் விளங்கியது எடுத்த முடிவு
தொடர்ந்தே வரும் தண்டவாள இடைவெளி
ஒட்டாத உறவின் மாற்றமில்லா போக்கிது
பறக்க விரும்பியது என் வீட்டு படித்த கிளி
கிளி தானே...
கொஞ்சம் கோணல் மாணலாய்
குண்டாக
கிளையில் இருப்பது போல் தெரிந்ததை
உற்சாகப் படுத்துவதற்காகச் சொன்னால்..
அம்மா இங்கே பாரேன்
புறான்னு தெரியலை அப்பாக்கு எனக்
கைகொட்டிச் சிரிக்கிறது குழந்தை..
அப்பாவுக்கு எதுவுமே தெரியாதுடா
சொன்ன அம்மாவின் முகத்தில்
சின்னப் புன்னகை..
புன்னகை புரியத் தெரிந்திருப்பது
முதல் தகுதி முக்கியத் தேவை
பொதுமக்களின் தொடர்பு சேவைக்கு
மலர்ந்த முகம் தெளிவான ஒப்பனை
பொறுமையான பதில் பணிவு தயவு
அலுக்காதோ எந்திரப் பதுமைகளுக்கு