Will try today. Meanwhile something I wrote yesterday:
ஈர்ப்பும் பரிவும் இருவேறு ஒன்றாமோ
ஆர்ப்பும் அமைதியும் தான்
Printable View
Will try today. Meanwhile something I wrote yesterday:
ஈர்ப்பும் பரிவும் இருவேறு ஒன்றாமோ
ஆர்ப்பும் அமைதியும் தான்
தளை தட்டவில்லை (இதைப் போய் ஒரு விஷயமாக ஒவ்வொரு தடவையும் சொல்லிக்கொண்டிருக்கிறானே என்று நினைக்கவேண்டாம். எனக்கு இது பெரும் முயற்சியாக இருப்பதால் சொல்லத் தோன்றுகிறது!)Quote:
Originally Posted by bis_mala
சாய்வு - incline என்ற பொருள் தான் பரிச்சயம்.
முதலடியில் பொழிப்பு மோனை (1-3 சீர்கள்) வருகிறது.
'உங்கள் மனத்திலே' என்று இரண்டாம் அடியை படிப்போமானால், உங்கள்/உள்ளுணர்வு என்று பொழிப்பு மோனை வருவதாகக் கொள்ளலாம்.
Quote:
Originally Posted by bis_mala
சீரும் சிறப்புமுடை பாணர் கவிகுறையைச்
சீரும் அடியுமென கற்கும் சிறுவனிவன்
கூறத் தயங்குவதில் ஏதும் வியப்பிலையே:
யாரும் முழுதுணரா ஈசன் முனிந்ததனால்
கீரன் கதிநினைவில் உண்டு
"கவிகுறையை" (கூறுதல்) என்பதற்கும் "கவியில்குறை" (கூறுதல்) என்பதற்கும் பொருள் நுட்ப வேறுபாடு ஏதேனும் தென்படுகின்றதா?
மேலும் "கவிக்குறை" என்பதும் "கவிகுறை" என்பதும் ஒரே பொருள் தருமா?
மற்றவை நிற்க.
Just for discussion...
உள்ளத்தில் உண்டு கள்ளமாய்க்கவிபாடும் கிடக்கை
வெள்ளத்தில் மிதக்கும் சந்தனத்தின் மரங்களுடன்
பள்ளத்தில் நிதம் வீழும் பாண்டியரின் சங்கக்கவியருவி
வெள்ளமொத்த உங்கள் கவி கண்டக்கால்.
தப்பிருந்தால் சொல்லவும். திருத்திக்கொள்வான் வெற்றிவிநாயகன்.
Quote:
Originally Posted by jaiganes
இது பாவினத்தில் அடங்கும் கவி.
நல்ல முயற்சி; நன்று.
chAyvu 1. slope, declivity, side of a hill; 2. bias, partiality; 3. defect, deficiency; 4. straitened circumstances; 5. going obliquely; turning aside, obliquity, divergency; 6. inclination, bent of mind; 7. death; 8. gradientQuote:
சங்கப் புலவரின் சாய்வில்லா வெண்பாவென்
கவிதையில் வந்த "சாய்வு" என்ற சொல்லின் பொருள், மேலே தடித்த எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளது.
Quote:
ஈர்ப்பும் பரிவும் இருவேறு ஒன்றாமோ
ஆர்ப்பும் அமைதியும் தான்
இரு வேறு ஒன்றாமோ = இருவே றொன்றாமோ. தளை தட்டியது.
இறுதி அசை (அசைச்சீர்), தாம் என்று முடிதல் வேண்டும்.
தான் , ஒருமை; தாம் - பன்மை.
இருவேறு, ஒன்றாமோ என்பவை, ஒருபொருளனவாம். கூறியது கூறல் எனலாமோ? You may try explaining.
கவிக்குறை என்றுதான் வந்திருக்கவேண்டும்.Quote:
Originally Posted by bis_mala
கவியில்குறை மேலும் சிறப்பான சொல். கவியின் (கவிஞரின்) குறை என்ற பொருள்படுபடி இருப்பதை மாற்றி கவியில் குறை என்று தெளிவாக்குகிறது.
மற்றபடி மொத்த உள்ளடக்கமும் எனக்கு அவ்வளவு திருப்தியில்லை. 'குறைகண்டவரை பொசுக்கிய இறையனாரும் சங்கப்புலவர் தானே, எதற்கு வம்பு' என்று பொருள்படும்படி எழுத முயன்றேன். சரியாக வரவில்லை.
ஆம் அதனால் தான் பிரித்து எழுதினேன்.Quote:
Originally Posted by bis_mala
இருவேறே - என்று மாற்றினால் தட்டாது.
ஒ..நன்றி. திருத்திக்கொள்கிறேன்.Quote:
இறுதி அசை (அசைச்சீர்), தாம் என்று முடிதல் வேண்டும்.
தான் , ஒருமை; தாம் - பன்மை.
இல்லை.Quote:
Originally Posted by bis_mala
ஒன்றா(கு)மோ என்பது "ஆர்ப்பையும் அமைதியையும்" பற்றிய சொல்
உரைநடையில் சொல்வதானால்:
ஆர்ப்பும் அமைதியும் ஒன்றாகுமா? (அதுபோல தான்) ஈர்ப்பும் பரிவும் இரு வேறு (உணர்ச்சிகளே).
ஈர்ப்பும் பரிவும் இருவேறே ஒன்றாமோ
ஆர்ப்பும் அமைதியுந் தாம்.