http://i65.tinypic.com/2rm1kw2.jpg
Printable View
'அன்பே வா' படப்பிடிப்பு சிம்லாவில்...
சிம்லாவுக்கு 13 மைல் தூரத்தில் 'குஃப்ரி’ என்றோர் இடம் இருக்கிறது. 8,600 அடி உயரத்தில் உள்ள அந்த மலை உச்சியில் போய் நின்று பார்த்தால், தூரத்தில் உயர்ந்து நிற்கும் இமய மலைச் சிகரங்கள் வெள்ளைப் பனி ஆடை போர்த்தியபடி உறைந்துகிடப்பது தெரிகிறது. அந்த இயற்கை எழிலில் மயங்கிப் பரவசத்தில் நின்ற எம்.ஜி.ஆரிடம் ''என்ன பார்க்கிறீர்கள்?'' என்று அருகிலிருந்தோர் கேட்க...
''இமயத்தைக் காணும்போது நாம் எவ்வளவு சிறியவர்களாகிவிடுகிறோம் பார்த்தீர்களா...?'' என்றார்.
அந்தச் சமயம் திடீரென்று அந்த இடத்தை நோக்கி இரண்டு மூன்று ஜீப்புகள் வேகமாக வந்தன. அவற்றில் இருந்து இறங்கிய ராணுவ வீரர்கள் பரபரப்புடன் ஓடி வந்து ''வணக்கம் அண்ணே'' என்று புரட்சி நடிகரைப் பார்த்து வணங்கினர்.
''அடடே..! நம் ஊர்க்காரர்களா? வாங்க... வாங்க... வணக்கம், வாழ்க... எல்லோரும் சாப்டீங்களா..
தமிழ்நாட்டில் உங்க சொந்த ஊர் எது..?நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டைவிட்டு வந்து எத்தனை வருஷமாச்சு..? சௌக்கியமா இருக்கீங்களா..? இடையில எப்பவாவது ஊருக்குப் போய் வந்தீங்களா.. ஊரிலிருந்து கடிதம் வந்ததா.. ?'' என்று அன்புடன் விசாரித்தார்.
எம்.ஜி.ஆரைக் கண்டதும் தமிழ்நாட்டையே நேரில் பார்த்தது போன்ற உற்சாகம் அந்த வீரர்களுக்கு... எம்ஜிஆர் அக்கறையுடன் முன்பின் தெரியாத தங்களின் நலம் விசாரித்ததும் நெகிழ்ந்து போயினர்...!
மக்கள் திலகத்தின் கையைப் பிடித்துக் குலுக்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிலர் மார்போடு எம்ஜிஆரைத் தழுவிக்கொண்டார்கள். கடைசியில், எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டதும் தங்கள் இஷ்ட தெய்வத்தை நேரில் தரிசனம் பெற்ற திருப்தியுடன் ''போய் வருகிறோம்'' என்று கூறிப் புறப்பட்டனர்.
மக்கள் திலகம் அவர்களைக் கையைத் தட்டி அழைத்து, ''ஆமாம், விலாசத்தைக் கொடுக்காமல் புறப்பட்டுவிட்டீர்களே... இப்போது எடுத்துக்கொண்ட போட்டோவை உங்களுக்கு அனுப்ப வேண்டுமே..?'' என்று கேட்டபோது, அந்த வீரர்கள் நன்றிப் பெருக்குடன் பரவசமாயினர்.. ஒவ்வொரு சின்ன விசயத்தையும் உன்னிப்பாகக் கவனித்ததை எண்ணி வியப்படைந்தபடி.. தங்கள் விலாசங்களை எழுதிக் கொடுக்க அதை தன் உதவியாளரிடம் கொடுத்தார் எம்ஜிஆர் .. ஒரு சல்யூட் அடித்து ராணுவ வீரர்களுக்கு விடை கொடுத்தார்..!
நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர் வீரர்கள்..!!.... Thanks wa.........
#வாத்தியார் #என்ற #ஆயிரங்காலத்துப் #பயிர்
(செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் எழுதிய அமரர் எம்ஜிஆர் குறித்த இந்தக் கட்டுரை மலேசியாவில் கடந்த 10 செப்டம்பர் 2017-இல் கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக் கழகத்தில் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் இடம் பெற்றது)
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 1987-இல் மறைந்தபோது, அடுத்து வரும் பத்தாண்டுகளில் அல்லது இருபது ஆண்டுகளில் அவரது புகழும், செல்வாக்கும் தமிழக மக்களிடையேயும், சினிமா இரசிகர்களிடையேயும், மெல்ல மெல்ல மங்கி, ஒரு காலகட்டத்தில், அவர் மறக்கப்பட்டு விடுவார் என நினைத்தவர்களில் நானும் ஒருவன்.
ஆனால், அதற்கு நேர்மாறாக, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னரும், எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில், அவரது புகழ் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டு, நீடித்து நிலைத்திருப்பதற்கும், தொடர்வதற்கும் என்ன காரணம் என பல தருணங்களில் நான் சிந்தித்ததுண்டு.
கீழ்க்காணும் மூன்று முக்கிய அம்சங்கள் காரணமாக அவரது புகழ் இன்றும் தொடர்ந்திருக்கிறது – நிலைத்திருக்கிறது – என்பது எனது சிந்தனையின் முடிவு:
தமிழக அரசியலில் தொடர்ந்து அதிமுக கட்சி ஜெயலலிதாவின் ஆளுமையாலும், திறனாலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதோடு, முக்கிய மாற்று அரசியல் சக்தியாகவும் திகழ்ந்ததால், அவர்களால் எம்ஜிஆரின் புகழை ஒரு வாக்கு வங்கியாக மாற்றி மக்களிடையே அவரது பெயரை நிலைத்திருக்கச் செய்ய முடிந்தது.
இரண்டாவதாக, எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் விஸ்வரூபமெடுத்து இல்லம்தோறும் இன்று பரவிக் கிடக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள் எம்ஜிஆரின் புகழ் நிலைத்திருப்பதற்கு இன்னொரு காரணமாகும். தனது சொந்தத் திரைப்படத் தயாரிப்புகளைக் கூட தொலைக்காட்சிகளுக்கு உரிமம் கொடுக்காமல் பாதுகாத்தவர் எம்ஜிஆர். ஆனால், நாளடைவில், அவரது திரைப்படங்களும், காட்சிகளும், குறிப்பாகப் பாடல் காட்சிகளும் அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளியேறி வர இதன் மூலம் அவர் காலத்து இரசிகர்கள் அவரை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டாட முடிந்தது என்பதோடு, அடுத்த தலைமுறையின் புதிய, இளம் இரசிகர்களும் அவரது இரசிகர்களாக இணைந்தார்கள். எம்ஜிஆரின் தீவிர இரசிகர்கள் பலர் அடிக்கடி எம்ஜிஆர் படங்களை தொலைக்காட்சிகளில் பார்க்க, அவர்களோடு அந்தப் படங்களைப் பார்த்த அவர்களின் பிள்ளைகளும் எம்ஜிஆரை இரசிக்கத் தொடங்கினார்கள் என பல குடும்பங்களில் நானே சொல்லக் கேட்டிருக்கிறேன். இது மற்ற எந்த நடிகருக்கும் நேராத அதிசயம்.
மூன்றாவதாக எம்ஜிஆர் மிகவும் கவனமுடன் கடைப்பிடித்த ‘இமேஜ்’ எனப்படும் அவரது வெளித்தோற்ற நடவடிக்கைகள், மனித நேயத்தை மையமாகக் கொண்டு அவர் கடைப்பிடித்த பொது உறவுப் பண்பாடுகள் இன்றுவரை பலராலும் பெருமிதத்துடனும், ஆச்சரியத்துடன் பேசப்பட்டு வருவதால், அந்த விவரங்கள் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்பட்டு, எம்ஜிஆர் இப்படியெல்லாம் நடந்து கொண்டாரா, எம்ஜிஆர் அவ்வளவு நல்லவரா என இன்றைய மக்களும் அதிசயப்படும் வண்ணம் அவரது புகழ் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மேற்கூறிய மூன்றாவது அம்சத்தை மையமாகக் கொண்டதுதான் இந்தக் கட்டுரை.
எம்ஜிஆரைப் பொறுத்தவரை என்னை மட்டுமின்றி பலரையும் இன்றுவரை ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால்,
"ஒரு கூட்டத்தினரிடையேயும், கோடிக்கணக்கான மக்களிடத்திலும் அவர் தனது தோற்றத்தையும், தனது பிம்பத்தையும் பாதுகாத்து வந்த அதே நேரத்தில் மிகச் சாதாரண தனி மனிதர்களிடத்திலும் சரிசமமாக உண்மையாக அவர்களுக்கு
மரியாதை கொடுத்து நடந்து
கொண்டார் என்பதுதான்................ Thanks wa.,
கடந்த 68 வருடங்களுக்கு முன்பு, 02-02-1951 அன்று வெளியான, மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் “மர்மயோகி” பற்றிய சிறப்புக்கள் : :
1. தமிழ்த்திரையுலகில், முதன் முதலில் பஞ்ச் டயலாக் (PUNCH DIALOGUE) இடம் பெற்றது இந்த காவியத்தில்தான். அந்த பஞ்ச் டயலாக் : குறி வைத்தால் தவற மாட்டேன் தவறுமாயின் குறி வைக்க மாட்டேன் .
2. முதன் முதலில், திகில் காட்சிகளுக்காக மட்டுமே (வன்முறை, ஆபாசம் போன்ற காட்சிகள் இல்லை என்பது கவனத்தில் கொள்ளவும்) வயது வந்தவ ர்களுக்கு மட்டும் என்று தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைக்காவியம்.
மக்கள் திலகத்தின் அறிமுக காட்சி :
போட்டிகள் பலவற்றில் வெற்றி பேற்ற வீராங்கனுக்கு (எஸ். வி. சகஸ்ரநாமம்) ராணியாக வரும் அஞ்சலிதேவி பரிசு வழங்குவார் என்று அறிவிக்கப்பட, “ வேண்டாம்” என்ற குரல் கணீரென்று ஒலிக்கும். அவையினர் அனைவரும் குரல் வந்த திசையில், ஆச்சரியத்துடன், அதிசயத்துடன் பார்க்க அங்கே குதிரை மீது வேகமாக சவாரி செய்தபடி அரண்மனை மைதானத்துக்குள் நுழைவார் நம் மக்கள் திலகம். இந்த அறிமுக காட்சியில் ரசிகர்களின் பலத்த கைதட்டல் எதிரொலிக்கும். பின், யார் நீ என்று அரசன் வினவ, அதைப்பற்றி உங்களுக்கென்ன என்று நம் பொன்மனச்செம்மல் அவர்கள் திரும்ப பதிலளிக்க, திரையரங்கே அதிரும் அளவுக்கு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புதான். வேண்டுமானால், வீராங்கன் என்னோடு போட்டியிடட்டும் என்று சவால் விட்டு, பின்பு போட்டியில் வெற்றி பெற்ற கரிகாலனாகிய நம் மக்கள் திலகத்தை ராணியின் கரங்களால் பரிசு வாங்க அழைக்கப்படும் போது, “ ராணி, என்று அலட்சியமாக கூறி. மனதிலே ஈரமின்றி மக்களை கசக்கி பிழியும் இவள் கையால் பரிசு வாங்க மாட்டேன்” என்று, கரிகாலனாக நடிக்கும் நம் கலைப்பேரரசர் எம். ஜி. ஆர். அவர்கள் கூறிய பின், ராணி “பிடியுங்கள் அவனை” என்று கூக்குரலிடும் பொழுது, நம் நடிகமன்னன், தனக்கே உரிய இயல்பான நடிப்பால், குதிரை மீது ஏறி அரண்மனையை விட்டு வெளியேறும் காட்சியை, கூடியிருக்கும் மக்கள் கூட்டம் கரிகாலனுக்கு ஜே என்று முழங்கும் போது, படத்தை பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் ஜே என்று முழங்குவதை மறக்க முடியாது.
நம் நிருத்தய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்கள் பட்டத்து ராணியை எதிர்த்து ஆக்ரோஷமாக பேசும் வசனக்காட்சிகள் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள். பின்னாளில் இது போன்ற கதையமைப்பு கொண்ட படங்களுக்கு, நம் இதய தெய்வத்தின் இந்த காவியம் தான் முன்னோடி என்றே கூறலாம். அரண்மனை அவைக்குள் தனி ஒரு நபராக, சாரவிளக்கு ஊஞ்சலை பிடித்தபடி நுழைந்து சவால் விட்டு பேசி மீண்டும் திரும்பும் போது புரியும் சண்டைக்காட்சிகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
இப்படத்தில் நம் மக்கள் திலகம் அவர்கள்; காட்டில் வாழும் ஏழை கூட்டத்திற்கு தலைவராகவும், எவர் உதவி என்று நாடி வந்தாலும் உதவி செய்பவராகவும் நடித்துள்ளார். கணீர் என்று ஒலிக்கும் குரல், பேசிக் கொண்டிருக்கும் போதே அம்பை விடும் வேகம், இயற்கையான நடிப்பு ஆகியவையெல்லாம் பொருந்திய இந்த காவியத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தப்படும். .குதிரையின் மீது அமர்ந்து கொண்டே சண்டையிடும் காட்சியும், அரண்மனைக்குள் வந்து ராணியின் முன்பு அம்பு விடும் காட்சியும், திரைச்சீலைகளை கொண்டு தாவித் தாவி வரும் காட்சியும் அற்புதமானவை.
மக்கள் திலகத்தின் துள்ளல் நடிப்புக்கும், அட்டகாசமான சாகச சண்டை காட்சிகளுக்கும், ரசிகர்களிடமிருந்து கிடைத்த எழுச்சி மிகு ஆரவாரமும், வரவேற்பும், கைதட்டல்களும், நம் பொன்மனசெம்மலை யோசிக்க வைத்தது. ரசிகர்கள் தன்னிடம் எதை விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து, அவர்களின் இதய வேட்கையை தணிக்கும் வண்ணம் தனக்கென்று ஒரு பார்முலாவை வகுத்து கொண்டது இந்த காவியத்தின் வெற்றி மூலம்தான்.
ஏழைகளுக்கு இரங்கும் ராபின்ஹுட் பாணி படம் என்று அந்த நாட்களில் பேசப்பட்டது. ஆனால் அதிலும் தனது தனித்துவத்தைக் காட்டி இருப்பார், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்.
எம்.ஜி.ஆர் குதிரையில் ஏறி நடிக்கும் காட்சிகளை தவிர்ப்பார் என்று சிலர் கதை விட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில், இந்தப்படத்தில் பல காட்சிகளில் குதிரையில் லாவகமாக அதே நேரத்தில் மிக வேகமாக ஓட்டி நடித்திருப்பதோடு சண்டை செய்யும் காட்சியும், குதிரையின் மீது அமர்ந்து வேகமாகப் பாய்ந்து சண்டை செய்யும் காட்சியும் மிக அருமை. (பின்னாளில், ஜெனோவா, குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும், ராஜா தேசிங்கு, ராணி சம்யுக்தா உட்பட பல படங்களில் குதிரையேற்றத் திறமையை வெகு அழகாகக் காட்டி அற்புதமாக நடித்திருப்பார். .
கரிகாலன் ராணியை அவருடைய தர்பாரில் சந்திக்கும் அந்த காட்சி பிற்காலத்தில் படையப்பா படத்தில் கதைக்கு ஏற்றார் போல் கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்டது என்றும் கூறலாம்.
பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள், கம்பீரமான நடிப்பு, அழுத்தமான, ஆழமான நடிப்பு, இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
வசனக்காட்சிகளில் அவரது குரல்வளம் அற்புதம். நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் குண்டடி பட்ட பின்பு பேசும் வசனக்காட்சிகளை மிமிக்ரி செய்யும் கலைஞர்கள் இந்த காவியத்தில் இடம் பெறும் வசனக் காட்சிகளை மிமிக்ரி செய்ய முடியாமல் திண்டாடுவர் என்பது நிச்சயம்.
என்ன ஒரு நேர்த்தியான நடிப்பு. டூப் போடாமல் தானே தாவித்தாவி பாய்ந்தோடும் காட்சி அசரவைத்தது.
நம் வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களுக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகவும், அவர் ஒரு தலைசிறந்த சண்டை நடிகர் என்றும் நிருபித்த காவியம்.
மொத்தத்தில், இன்றைய தலைமுறை ரசிகர்களையும் காந்தம் போல் கவர்ந்திழு க்கும் காவியம் “மர்மயோகி” என்று சொன்னால் அது மிகையாகாது.
இதே கதை தெலுங்கு மொழியில் பின்னர் என்.டி.ராமாராவ் அவர்களை கதாநாயகனாக கொண்டு தயாரிக்கப்பட்டு, 1964ல் வெளியிடப்பட்டது. .
புரட்சித்தலைவரின் 2 3 வது காவியம் "மர்மயோகி" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்த்கத்தின் முன் அட்டை தோற்றம் :....... Courtesy : FB...
சாதனை, சாதனை என வாய் கிழிய அரற்றுவோருக்கு வசூல் சாதனை என்பதே இதுதான்... கடந்த வாரம் மதுரை - சென்ட்ரல் dts திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் குறுகிய இடைவெளியில் 4 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் திரும்ப மிக சுமாரான பிரிண்ட் வடிவில் திரையிட்டும் ஒரு வாரத்தில் மட்டும் ரூபாய் 125000.00 கடந்து பிரமாண்ட வசூல் பிரளயம் உண்டு பண்ணிய என்றும் திரையுலக சக்கரவர்த்தி மக்கள் திலகம் எப்பொழுதும் பிரகாசிக்கும் " ஒளிவிளக்கு" காவியம் வேறெந்த நடிகர்களும் எண்ணி, நினைத்து பார்க்கவே இயலாத விஷயமாகும்...👍 👌👌👌👌