வாசு..காலங்காலையில் நல்ல பாட்டு.. நன்றி. ஆனால் லிங்க் தான் என் நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றாம் என்ன காரணமோ தெரியவில்லை..
ஆனாலும் விட்ருவோமா..தேடிக் கண்டு பிடிச்சுட்டோம்ல..
https://youtu.be/bKINB9Q8SPE
இருளும் ஒளியும் ஒரு இரண்டு வருடங்களுக்கு முன் சோம்பலான ஒரு வெள்ளி காலை விட்டுப்போனபடமாச்சே எனப் பார்த்த நினைவு..இப்போ கேட்டால் சுத்தமாக கதை எல்லாம் நினைவில்லை..இரண்டு வாணிஸ்ரீ.
.
வானிலே மண்ணிலே வழியிலே விழியிலே எல்லாம் நீதானம்மா.செல்வம் நீதானம்மா..என் மார்பிலே உன்னைத் தாலாட்டம்மா என் மடியிலே உன்னைச் சீராட்டம்மா என பி சுசீலா குரலில் இயற்கை அன்னையைத் தாவிக்குதித்துப் பாடும் அடக்க ஒடுக்க வாணி(ஆரம்பக் காட்சி என நினைவு)
பின் ச்சூயிங்கம் ப்ளஸ் சுடிதார் மின்ன அன்சகிக்கபிள் மேக்கப்புடன் பபுள் கம் மின்னும் வாணிஸ்ரீ.. இன்னொன்று.. ஏ.வி.எம் ராஜன் (ம்ம்) அடுத்த ஹீரோவே நினைவிலில்லை என்றால்..எவ்வளவு ஸ்ட்ராங்கான கதை என த் தெரியும்..கடைசியில் கெட் வாணி டை ஆக நல் வாணி நல்ல கணவனுடன் சேர்ந்து லிவ்ட் ஹாப்பிலி எவர் ஆஃப்டர் என முடியும் இல்லியோ..
இயக்கிய மஹானுபாவன் யாரென்று தேடிப்பார்ததில்…(படம் பார்த்தபோது இதையெல்லாம் பார்க்காததால்) :
படத்தை இயக்கியிருப்பவர் புட்டண்ணா கனகல் என்ற கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர். கன்னடத்தில் இருபது படங்களுக்கு மேலும் ஹிந்தியில் ஓரிரு படங்களும் இயக்கியிருக்கிறார்.
தமிழில் இருளும் ஒளியும், டீச்சரம்மா, சுடரும் சூறாவளியும் என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார்
கன்னடத்தில் இவர் இயக்கிய 23 கன்னடப்படங்களும் தரமானவையாம்.. நான் அறிகிலேன்..
இனி பாடல் வரிகளைப் பார்க்கலாமல்லவா..!
*
திருமகள் தேடி வந்தாள்
என் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
தேவி மருமகளாக வந்தாள்
// என்னைத் தேடி அருள்புரிய வந்த செல்வச்சீரின் அதிபதியான லஷ்மியாகவே உன்னைக் காண்கிறேன்..அதுவும் நீ எப்படி வந்திருக்கிறாய் வெகு எளிமையாக..தமிழில் சொல்வதானால் வெகு ஸிம்பிளாக அதுவும் நார்மல் ஹவுஸ்வைஃப் போல என் வீட்டில் என் தாய்க்கு டாட்டர் இன்லாவாக வந்தாயடி..ஸாரி வந்தாயம்மா//
மஞ்சள் தந்தவள் விசாலாட்சி
நல்ல மலர்களைத் தந்தவள் மீனாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி
எங்கள் குடும்பத்தில் தேவியும் அரசாட்சி
// பெண்ணுக்கு மங்களம் வழங்குவதான மஞ்சள் தந்தவள் தருபவள் விசாலாட்சி,
அழகிய மல்லிகை இருவாட்சி மரிக்கொழுந்து போன்ற மலர்கள் மலரும் மதுரைக்குச் சொந்தக்காரியான மீனாட்சி,
வந்து வணங்கும் எல்லாவயதுப் பெண்களுக்கும் சகல செளபாக்கியங்கள் நிலைத்து நிற்க குங்குமப் பிரசாதம் வழங்குபவள் காமாட்சி..
இந்த எல்லாவித தெய்வங்கள் காசி மதுரை காஞ்சி என ஆட்சி செய்வது போலவே தேவியே, அழகிய சுருண்ட நுதலும் துள்ளும் கரு நாவற்பழக் கண்களும், மின்னும் செஞ்சாயம் பூசாத இயற்கையான முறையில் பயிரிடப்பட்டுச் செவ்வண்ணமாய்ச் சிரிக்கும் ஆப்பிளின் நிறத்தில் உதடும், பொசுபொசுவென பருத்திப்பூவில் வெடித்துச் சிதறும் பஞ்சைப் போன்ற மென்மையான கன்னங்களையும், சரியாகக் கவனிக்காததினால் ஒழுங்காக சதைப்பற்றுடன் வளராமல் ஒல்லியாக வளர்ந்திருக்கும் முருங்கைக்காயின் குறுக்குவாட்டைப் போன்ற இடையையும், சந்தனம்,வெண்ணை இரண்டையும் கலந்தாற்போன்ற பொன்னிறக் கால்களையும் இன்னும் இன்ன பிற அழகுகளையும் கொண்ட எழிலணங்கான பெண்ணே!
– என் வீட்டில் உன் அரசாட்சி தான்!//
திருமலை திருப்பதி பால் பழங்கள்
உயர் தென்திருப்பழனியின் தேன்குடங்கள்
கனிவாய் மொழி தரும் வாசகங்கள்
என் காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்
காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்
//
அடி கட்டழகுக் கள்ளியே…
திருமலை திருப்பதியில் கிடைக்கும் பால் பழங்கள் சுவையில் கூடியதாக இருக்கும் என ஜஸ்ட் லைக்தட் சொல்ல முடியாது.. பலமணி நேரக்காத்திருப்பு முடிந்து திருமாலைத் தரிசித்துக் கோவிலின் வெளியில் வரும் போது –அதுவும் அதிஅதி காலையில் சுப்ரபாத சேவை- சில பல பால் கடைகள் (அந்தக்காலத்தில்) பித்தளை வேம்பா எனச்சொல்லப்படும் வென்னீர் போட்டுவைத்திருக்கும் பாத்திரம் பளீரென்று சிரிக்க அருகில் கேஸ் ஸ்டவ்வில் நீலவண்ணச்சுடராய் நெருப்பும் அதன் மேல் வைக்கப்பட்டுக் கொதிக்கும் பால் பாத்திரத்திலிருந்து ஒரு காஃபி அல்லது டீ அதற்கு முன் முன்பசிக்காக இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிட்டிருக்கிறாயா.. வெகு அபார ருசியாக இருக்கும்..
பழனி பஞ்சாமிர்தத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை.. நான் ஊரிலுள்ள நண்பர்களுக்குக் கொடுப்பதற்காக வாங்கிவந்திருந்த நான்கு டப்பாக்களையும் பறித்துக் கொண்டுவிட்டாய்.. உனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று.. எனில் அதன் டேஸ்ட் சொல்லவேண்டியதில்லை..
உன் கனிவான அழகிய ஆரஞ்சுச் சுளை போன்ற உதடுகள் பிரித்து என்னருகில் வந்து (யாருமில்லாத போழ்தில்) காதில் கிசுகிசுப்பாய் “டேய் என்ன செண்ட் டா போட்டிருக்க.. ஒரு மாதிரி இருக்குடா” என ஒருபோதில் சொன்னாயல்லவா.. அதுபோல பல பேச்சுப் பேசியிருக்கிறாய் தானே.. அவையெல்லாம் இனிய ஒன்றுமில்லாதவைகள்..புரியாமல் உன் விழி அகலுவதும் ஒரு அழகு..சரி தமிழிலேயே சொல்கிறேன்.. ஸ்வீட் நத்திங்க்ஸ்..
எதற்காக இந்தமூன்றுபாரா விளக்கம் அன்பே..எனக் கேட்கிறாயா
(திருமலை திருப்பதி பால் பழங்கள்
உயர் தென்திருப்பழனியின் தேன்குடங்கள்
கனிவாய் மொழி தரும் வாசகங்கள்)
இந்த மூன்று வரியுமே உனது உயர் குணங்களைச் சொல்கின்றன..புரியவில்லைஎனில் திருமணத்திற்குப் பின் விளக்கமாய்ச் சொல்கிறேன்..ஓ.க்கேயா//
*
வாசு.. உங்களைப் போல ஹம்மிங்க் எல்லாம் ரசித்து ருசித்துஎழுத வராது.. எனவே எனக்குத் தெரிந்த மொழி பெயர்ப்பு (?!) செய்திருக்கிறேன்!
அப்புறம் நடுவில் வரும் பெண்குரல் ஹம்மிங்க்..பி.வசந்தாவாம்.. இவரது ஹம்மிங்கில் இன்னொருபாட்டு அதுவும் எஸ்.பி.பி தான்.. மூன்றாம் பாகத்தில் போட்டிருக்கிறேன்..மறுபடி போடவேண்டுமானால் போடுகிறேன்..!
*
பின்ன வாரேன்…:)